சனி, 30 மார்ச், 2013

மாணவர்கள் போராட்டங்களே திமுகவை வெளியேற்றியது: பழ.நெடுமாறன்

மாணவர்கள் நடத்திய தொடர் போராட்டங்களே மத்திய அரசிலிருந்து திமுகவை வெளியேற்றியது: பழ.நெடுமாறன்

தமிழகத்தில் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக மாணவர்கள் நடத்திய தொடர்போராட்டம் காரணமாகவே மத்திய அரசிலிருந்து திமுக வெளியேறியது என தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறன் கூறினார்.
மதுரையில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: ஈழத் தமிழர்களுக்காக தமிழக சட்டப்பேரவையில் முதல்வர் ஜெயலலிதா நிறைவேற்றிய தீர்மானம் வரலாற்று சிறப்புமிக்கது. தனி ஈழம் அமைய பொதுவாக்கெடுப்பு நடத்தவேண்டும் என்ற தீர்மானம் இதுவரை சட்டபேரவையில் இல்லாதது. ஆனால், டெசோ மாநாடு தீர்மானமே சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ளதாக கருணாநிதி கூறுவது சரியல்ல. தீர்மானம் நிறைவேறும் போது திமுக உறுப்பினர்கள் சட்டப்பேரவைக்குள்ளிருந்து வாக்களிக்கவில்லை. வாக்களிக்கவேண்டிய இக்கட்டான நிலையைத் தவிர்க்கவே திமுக வெளிநடப்புச் செய்துள்ளது. இதன்மூலம் திமுக ஈழத்தமிழர்களுக்கு துரோகம் இழைத்துள்ளது.மாணவர்கள் போராட்டம் ஏற்படுத்திய நிர்பந்தமே திமுகவை மத்திய அரசிலிருந்து விலகவைத்துள்ளது.
மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் ஈழத்தமிழர் பிரச்னைக்கு தமிழகத்தை தவிர வேறு மாநிலங்களில் ஆதரவில்லை என்கிறார். பாலஸ்தீனத்துக்கு மத்திய அரசு ஆதரவளித்தது, கிழக்கு வங்காளதேசம் உருவாக ஆதரவளித்தது உள்ளிட்டவற்றுக்கு மற்ற மாநிலங்களுடன் ஆலோசித்த பிறகா மத்திய அரசு முடிவெடுத்தது? ஆகவே வரலாறு தெரியாமல் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சல்மான்குர்ஷித் பேசுகிறார்.வரும் நவம்பரில் இலங்கையில் காமன்வெல்த் மாநாடு நடத்த இந்தியா ஆதரவளித்துள்ளது. அங்கு மாநாடு நடந்தால் காமன்வெல்த் அமைப்பின் தலைவராக இலங்கை அதிபர் ராஜபட்சே இருப்பார். அதன்பின் அவரை சர்வதேச நீதிமன்றத்தில் போர்க் குற்றவாளியாக நிறுத்தமுடியாது. ஆகவே மாநாட்டை இலங்கையில் நடத்தக்கூடாது என முதல்வர் ஜெயலலிதா கூறியிருப்பது வரவேற்கத்தக்கது. மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன் அக்கருத்தை வலியுறுத்தியிருப்பது வரவேற்கத்தக்கது.
இலங்கை தூதர் பிரசாத் கரியவலம் இலங்கை சிங்களவர் இந்திய வம்சாவளியினர் என்கிறார். அப்படி எனில் அவர்களுக்குத் தனிநாடு எதற்கு?  மேலும், சீனப் போரின்போது இந்தியாவுக்கு ஆதரவு தெரிவிக்காத இலங்கை, கிழக்கு வங்காளதேசம் விடுதலைப் போரின்போது பாகிஸ்தான் ராணுவ விமானத்துக்கு எரிபொருள் நிரப்பிடவும் அனுமதித்தது சரியா? மத்திய அரசுக்கான ஆதரவை திமுக, திரிணாமுல் கட்சிகள் விலக்கிக்கொண்டுள்ளன. சரத்பவாரும் விலகப் போவதாக கூறிவருகிறார். ஆகவே மத்திய அரசு பதவியில் நீடிக்க தார்மீக உரிமையில்லை. ஈழத் தமிழர் பிரச்னையில் காங்கிரஸ் தானாகவே மக்களிடமிருந்து தனிமைப்பட்டுவிட்டது. மாணவர் போராட்டம் யாராலும் தூண்டப்படவில்லை. மக்களவையில் எதிர்க்கட்சிகள் ஈழத்தமிழருக்கு ஆதரவாகவே குரல்கொடுக்கின்றன. மாணவர் போராட்டத்தை நீர்த்துப் போகச்செய்ய மத்திய உளவுத்துறையும், காங்கிரஸும் முயற்சிப்பது வெற்றிபெறாது என்று கூறினார்.

இசுடெர்லைட்டு ஆலையை மூட எடுத்த முடிவு: முதல்வருக்கு வைகோ பாராட்டு

இசுடெர்லைட்டு ஆலையை மூட எடுத்த முடிவு: முதல்வருக்கு வைகோ பாராட்டு

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்கு உத்தரவிட்டு தமிழக அரசு எடுத்த முடிவுக்கு வைகோ பாராட்டு தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில்,
தூத்துக்குடியில் அமைக்கப்பட்ட ஸ்டெர்லைட் தாமிர உருட்டு ஆலை எனும்  நச்சு ஆலை, நிலம், நிலத்தடி நீர், நிலத்தின் மேல் தேங்கும் நீர், காற்று மண்டலம் அனைத்தையும் நஞ்சாக ஆக்கி, மனித உயிர்களுக்கும், கடல்வாழ் உயிரினங்களுக்கும், விவசாய விளைநிலங்களுக்கும் பெரும் கேட்டினை, ஆபத்தை ஏற்படுத்தும் என்பதால், ஸ்டெர்லைட் ஆலையை தூத்துக்குடியில் இருந்து அகற்றக்கோரி, கடந்த 17 ஆண்டுகளாக போராடி வந்தோம்.
விவசாயிகள், மீனவர்கள், வியாபாரப் பெருமக்கள், தொழிலாளர்கள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் அனைவரும் ஸ்டெர்லைட்டை எதிர்த்து வந்தனர்.
1994 ஆம் ஆண்டு மராட்டிய மாநிலத்தில் உள்ள இரத்தினகிரி மாவட்டத்தில் அமைக்கப்பட்ட ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்து, விவசாயிகள் போராடி, ஒரு கட்டத்தில் உடைத்து நொறுங்கினார்கள். அன்றைய மராட்டிய மாநில சரத்பவார் அரசு, லைசென்சை இரத்து செய்தது.
குஜராத் கோவா மாநிலங்கள், ஆலையை நிறுவ அனுமதிக்காததால், அதன் பின்னர் தமிழ்நாட்டில் தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை நிறுவப்பட்டது.
மதிமுக ஸ்டெர்லைட் ஆலைiயை எதிர்த்து உறுதிமிக்க எண்ணற்ற போராட்டங்களை தொடர்ந்து நடத்தியது.
1996 மார்ச் 5 இல் தூத்துக்குடியில் உண்ணாவிரதப் போராட்டம்.
1996 மார்ச் 12 இல் கடையடைப்பு கருப்புக்கொடி போராட்டம்.
1996 ஏப்ரல் 1 இல் ஸ்டெர்லைட் எதிர்ப்புப் பேரணி.
1996 டிசம்பர் 09 இல் தூத்துக்குடியில் உண்ணாவிரதப் போராட்டம்.
1997 பிப்ரவரி 24 இல் மாவட்ட ஆட்சித் துணைத்தலைவர் அலுவலகம் முற்றுகை, மறியல் ஆயிரக்கணக்கானோர் கைது. ஜூன் 2, 3, 4 தேதிகளில் திருவைகுண்டத்தில் இருந்து நூற்றுக்கணக்கான கிராமங்கள் வழியாக ஸ்டெர்லைட் எதிர்ப்புப் பிரச்சார நடைப்பயணம்.
1997 ஆகஸ்ட் 30 ஆம் தேதி, பத்து ஆயிரத்துக்கு மேற்பட்டோர் பங்கு ஏற்ற ஸ்டெர்லைட் முற்றுகைப் போராட்டம், கைது என, மறுமலர்ச்சி தி.மு.கழகம் எனது தலைமையில் தொடர் போராட்டங்களை நடத்தியது. ஆகஸ்ட் 30 முற்றுகைப் போராட்டத்தின்போது, ஸ்டெர்லைட் ஆலையில் இரண்டு தொழிலாளர்கள் விபத்தில் இறந்ததற்கு விடுதலைப்புலிகளின் சதி என்று நிர்வாகம் பொய்யாக பழி சுமத்தியது.
உயர்நீதிமன்றத்தில் சுற்றுச்சூழல் பாதுகாக்கும் அமைப்பின் சார்பில், ஏற்கனவே ஸ்டெர்லைட்டை எதிர்த்து ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டு இருந்தது. நீதிமன்றத்தின் மூலம் ஸ்டெர்லைட்டை அகற்றப் போராடுவோம் என முடிவு எடுத்து, நானும் ரிட் மனு தாக்கல் செய்தேன்.
1998 நவம்பர் 23 இல் ஸ்டெர்லைட் ஆலையை மூடும்படி, சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால ஆணை பிறப்பித்தது.
1998 டிசம்பர் 9, 10, 11 தேதிகளில் சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி லிபரான் அமர்வில், ஸ்டெர்லைட்டை எதிர்த்து நான் வாதாடினேன். வழக்கு, சென்னை உயர்நீதிமன்றத்தின் வேறு அமர்வுக்கு மாற்றப்பட்டதால், டிசம்பர் 14 ஆம் தேதி அன்றும் அங்கும் வாதாடினேன்.
1999 பிப்ரவரி 23 இல், ஆலை மீண்டும் திறக்கப்பட்டது. தொடர்ந்து உயர்நீதிமன்றத்தில் போராடி வந்தோம்.
2010 ஆம் ஆண்டு செப்டம்பர் 28 ஆம் தேதி, சென்னை உயர்நீதிமன்றத்தின் நீதியரசர் எலிபி தர்மாராவ் அமர்வு ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடச்சொல்லி தீர்ப்பு அளித்தது. அதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் ஆலை நிர்வாகம் அந்தத் தீர்ப்புக்கு இடைக்காலத் தடை பெற்றது.
2012 அக்டோபர் வரையில் உச்சநீதிமன்றத்தில் ஏறத்தாழ 20 அமர்வுகள் வாய்தா நடைபெற்றது. உச்சநீதிமன்றத்தின் ஒவ்வொரு வாய்தாவிலும், நான் தவறாமல் பங்கு ஏற்றேன். உச்சநீதிமன்ற ஆணைப்படி, ஸ்டெர்லைட் ஆலையில் நாக்பூர் நீரி நிறுவனம் 2011 ஏப்ரல் 6, 7, 8 தேதிகளிலும்,  19, 20, 21, 22 தேதிகளிலும் ஏழு நாட்கள்நடத்திய ஆய்விலும் நான்  பங்கு ஏற்றேன். 2012 அக்டோபர் 1 ஆம் தேதியும், 9 ஆம் தேதியும் உச்ச நீதிமன்றத்தில் இருதரப்பின் நிறைவு வாதங்கள் எடுத்து வைக்கப்பட்டன.
ஸ்டெர்லைட் ஆலையை அகற்ற வேண்டும் என்று நான் மிகவும் முயற்சி எடுத்துத் திரட்டிய பல்வேறு ஆதாரங்களை முன்வைத்து, இரண்டரை மணி நேரம் வாதாடினேன். ஸ்டெர்லைட் ஆலை சுற்றுவட்டாரத்தில் சேகரிக்கப்பட்ட மண், தண்ணீர், ஸ்டெர்லைட் கழிவுகளின் மாதிரிகளை, அமெரிக்காவில் உள்ள உலகப் புகழ்பெற்ற சுற்றுச்சூழல் விஞ்ஞானி டாக்டர் மார்க் செர்னை ஆய்வுக்கு அனுப்பி வைத்து, அவர் தந்த அறிக்கையை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்தேன்.
விளைநிலங்கள் அடியோடு நாசம் ஆகும்; கால்நடைகள் நச்சுத் தண்ணீர் குடித்து இறந்துபோகும். மனிதர்களுக்கு நுரையீரல் புற்றுநோய், சரும நோய் உள்ளிட்ட நோய்கள் ஏற்பட்டு, ஆயுள் காலம் குறையும் என்பது அறிக்கையின் முக்கிய அம்சம் ஆகும். உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு, ஏப்ரல் 2 ஆம் தேதி வர இருக்கிறது. ஸ்டெர்லைட் ஆலை நிரந்தரமாக மூடப்படும் தீர்ப்பு வரும் என்று நம்புகிறேன்.
இந்நிலையில், மார்ச் 23 ஆம் தேதி அதிகாலையில், ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து வெளியேறிய நச்சுப் புகையால், தூத்துக்குடியின் பல பகுதிகளில் மக்கள் மூச்சுத் திணறல் ஏற்பட்டு, சுவாசிக்கச் சிரமப்பட்டு, இன்னலுக்கு ஆளானார்கள். பல இடங்களில் மரங்களின் இலைகள், செடிகள், பூக்கள் நிறம் மாறி கருகிப்போயின.
ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் போராட்டக்குழு சார்பில், மார்ச் 28 ஆம் தேதி ஸ்டெர்லைட் ஆலையை அகற்ற போராட்டத்திற்கு அழைப்பு விடுத்தோம். தூத்துக்குடி வியாபாரிகள் சங்கமும், தமிநாடு வணிகர் சங்கங்களின் பேரவையும் கடைகளை அடைக்கக் கோரிக்கை விடுத்தன. தூத்துக்குடி மாநகரத்தின் அனைத்துக் கடைகளும் மூடப்பட்டன. மீனவர்கள், விவசாயிகள், தொழிலாளர்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரும் ஆயிரக்கணக்கில் 28 ஆம் தேதி ஸ்டெலைட் முற்றுகை போரில் பங்கு ஏற்றனர்.
ஆலையை உடனடியாக மூட தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, தமிழக முதல்வருக்கு போராட்டக் களத்தில் கோரிக்கை விடுத்தோம்.
ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் போட்ட முதலீட்டை விட 40 மடங்கு கொள்ளை இலாபம் அடித்து இருப்பதால், இந்த ஆலையில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு உரிய நிவாரணத் தொகை வழங்க வேண்டும்.
பொதுமக்கள் நலனைக் காக்க, சுற்றுச்சூழலைப் பாதுகாக்க, ஸ்டெர்லைட் ஆலையை மூடிட மிகச் சரியான நடவடிக்கையை மேற்கொண்ட தமிழக முதல்வருக்கு, தூத்துக்குடி மாநகர மக்கள், சுற்றுவட்டாரப் பொதுமக்கள் சார்பிலும், 17 ஆண்டுகளாக ஸ்டெர்லைட்டை எதிர்த்துப் போராடி வரும் மதிமுக சார்பிலும் மனம் நிறைந்த பாராட்டுக்களையும், நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
- என்று கூறியுள்ளார்.

இந்த பகுதியில் மேலும்

கருத்துகள்(4)

. . . . . , . , 25 , , , . ... . .
இதற்கு முழு காரணம் வைகோவே; வைகோ மற்றும் தூத்துக்குடி மக்களின் இடைவிடாத போராட்டமே , இன்றைய அறிவிப்பிற்கு காரணம். மீண்டும், மீண்டும் "மக்கள் தலைவர்" என்றால் அது வைகோ என்று நிலை நாட்டி இருக்கிறார். "நீதி வேண்டும் என்றால், வீதிக்கு வந்தால்தான் கிடைக்கும் ", என்பதை நேற்று முன்றைய நாள் (28.03.2013) போராட்டம் தெளிவு படுத்தி இருக்கிறது. வைகோவுக்கு கோடானுகோடி நன்றிகள். பொன்னம்பலம்.
Dear தினமணி Readers & Politicians I am a former employee of Sterlite copper. I had worked in sterlite copper smelter for 14 years and I grow with sterlite, since 1993. Tody I am one of the recognised person because of Sterlite copper. The decision of TPCB is very unfortunate and it is sad news. In India Birla copper smelter is running since 1996 in Gujarat. There is no political dye over smelter and Birla copper is producing 350,000 Tone of copper cathode/ Annum. Hats off to the honourable Chief Minister MR.Modi. I worked in good time with Mopani copper smelter owned by Glencore Zambia. I spent good time in Xstrata copper smelter in Australia. I spent good time in BHP Olympic dam Copper smelter in Australia. I spent good time in Phelps Dodge copper smelter in Miami USA. I can say STERLITE COPPER SMELTER is one of best clean environmental smelter among above mentioned copper smelters. Zambia is mining
இந்த ஆலையை யாரும் அசைக்க முடியாது. வெறும் கண் துடிப்பு. ஒவ்வொரு முறையும் சம்திங் வாங்கி கொண்டு விட்டு விடுகிறார்கள். நீங்கள் பார்க்கத்தான் போகிறீர்கள்.
பதிவுசெய்தவர்  03/30/20

SL military operatives attack ITAK meeting in Ki'linochchi, 20 wounded

SL military operatives attack ITAK meeting in Ki'linochchi, 20 wounded

[TamilNet, Saturday, 30 March 2013, 08:04 GMT]
Four Tamil National Alliance (TNA) parliamentarians, Mavai Senathirajah, S. Sritharan, E. Saravanapavan and MA Sumanthiran, who visited Ki'linochchi Saturday for a meeting at Sritharan MP's office, were besieged by a Sinhala mob, numbering more than 100, that attacked the meeting at 11:00 a.m. The alleged SL military intelligence operatives, carrying Lion flags, were shouting slogans against the TNA and were pelting stones on the public meeting. 20 people have sustained injuries. The public providing security to the TNA parliamentarians caught two of the Sinhala attackers. However, the SL police, who came to the site 75 minutes after the report of the attack, allowed the two alleged military personnel to walk free without detaining them for investigations. The brutal assault has been carried out in a similar fashion as the attack reported at Thellippazhai in Jaffna in June 2011.

Five of the injured people have been admitted at Ki'linochchi hospital.

The attacking group, stormed the site from all the four directions, started to pelt stones at the meeting and at the vehicles parked outside.

The SL Police came to the site only after 12:15 p.m.

TNA Spokesperson Suresh Premachandran MP, who convened a press conference at Jaffna Press Club, immediately after the initial reports, blamed SL military intelligence for the attack.

The meeting by TNA parliamentarians are continuing their meeting from 1:00 p.m. to 2:00 p.m.

Chronology:

TN resolution needs to be legally and politically binding: SP Udayakumar

TN resolution needs to be legally and politically binding: SP Udayakumar

[TamilNet, Saturday, 30 March 2013, 02:53 GMT]
Recognizing the significance of the resolution passed in Tamil Nadu state assembly recently calling for a UN referendum among the Eezham Tamils, TN grassroots activist SP Udayakumar emphasised that the resolution needs to be made politically and legally binding. “Tamil Nadu resolutions are only resolutions right now. We need to make them legally binding,” he said in a video interview to TamilNet from Idinthakarai. Likewise, speaking on the student protests in Tamil Nadu, Mr. Udayakumar, who is at the heart of the peaceful struggle against the nuclear reactor in Koodangku’lam, further said that it was too early for the students to give up the protests unless “the Tamil Nadu resolution is accepted by the Indian parliament and if the India government is willing to act on it”.
S.P. Udayakumar
S.P. Udayakumar
“The Tamil students here in Tamil Nadu have a very clear understanding about the emptiness of the American resolution because the resolution doesn’t talk about genocide, it talks about human rights violation. What happened in Lanka was not human rights violation, people understand that very well.

“And also it gives authority to the Colombo government to deal with the genocidal issues. That is also not acceptable because it makes the criminal the police. Tamil Nadu students have a very clear understanding about the exact wordings of the American resolution and the ground reality, so they rightly opposed the resolution. In fact, in many places they burnt copies of that. In Idinthakarai also we burnt copies of the US resolution.
Student upsurge in Tamil Nadu
Activists at Idinthakarai burning the copies of the draft proposal tabled by the USA at the UNHRC at a recent protest


“That obviously puts moral pressure on international organizations and governments of many countries. It is too soon to say anything about the exact impact of all the Tamil Nadu students agitations. It will take some more time to put more pressure on the Indian government to react and the other international powers to react. Right now, all these agitations and demonstrations are putting moral pressure on the international community.

“If we should rely on the people’s struggles or international diplomacy, I would say we should concentrate on both. Because diplomacy alone cannot bring the desired results. People need to react. People need to express their opinions and grievances and Tamil Nadu civil society is very much articulate on this issue. So we have to act on both levels I think.

“The resolutions passed by the Tamil Nadu assembly are very important, but I am not sure how binding they are, either legally or politically. Because the Tamil Nadu government that passed a resolution in our struggle is against the struggle on Koodangku'lam nuclear power plant. But then, at their own whims and fancies, they decide on the resolutions that don’t have any legal binding.

“I would rather have a resolution that has legal and political binding. Tamil Nadu resolutions are only resolutions right now. We need to make them legally binding.

“The Tamil Nadu Chief Minister has asked the students to give up the agitations. I would differ on that. I think it is too soon for the students to give up the struggle. It is only in the early stages. If the Tamil Nadu resolution is accepted by the Indian parliament and if the India government is willing to act on it, then maybe we can ask the students to give up. But if the students give up at this point right now, nothing good will come out of it.

“But at the same time I am also concerned about the semester examination of the students. So they should also take care of their personal interest without damaging the public interest. They should concentrate on their exams, finish their exams satisfactorily, and then take up the struggle, with more vigour and power.

“As an activist I do repose much faith in people’s power, people’s struggle, either if it is for the Koodangku'lam power plant or the Tamil Eelam issue, I believe in people’s struggle. More people should come together, join hands, without succumbing to divisive forces of casteism, religious issues, communalism and so forth.

“Overcoming all these barriers, internal domestic walls, people should join hands with each other as Tamils and struggle for justice for the Eelam Tamils. That is the only way.”
Student upsurge in Tamil Nadu


Chronology:

இலங்கையில் முசுலிம்களுக்கு எதிராகப் புத்தமதத்தினர் கலவரம்

இலங்கையில் முசுலிம்களுக்கு எதிராக ப் புத்தமதத்தினர் கலவரம்
இலங்கையில் முஸ்லிம்களுக்கு எதிராக புத்தமதத்தினர் கலவரம்
கொழும்பு, மார்ச் 30-

உலகத்திற்கே அமைதியைப் போதித்த புத்தரின் கோட்பாடுகளைப் பின்பற்றும் புத்த மதத்தினர், தற்போது வன்முறையில் ஈடுபடத்துவங்கியுள்ளனர். மியான்மரில் முஸ்லிம் மக்களுக்கு எதிரான வன்முறைகள் தற்போது அதிகரிக்கத் துவங்கியுள்ளன.

இந்நிலையில், வியாழன் அன்று இரவு, இலங்கையின் தலைநகரான கொழும்புக்கு அருகே உள்ள பெப்பிலியானா என்ற இடத்தில், முஸ்லிம் ஒருவரின் கடை அடித்து நொறுக்கப்பட்டு தீக்கிரையாக்கப்பட்டுள்ளது. இதில் பலர் காயமடைந்துள்ளதாகவும், பல வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டதாகவும் செய்தி வெளியாகி உள்ளது.

பொது பால சேனா என்ற புத்தப்படைப் பிரிவினர், முஸ்லிம் மக்கள் ஹலால் என்ற முத்திரையை உணவுப்பொருட்களின் மீது பயன்படுத்துவதைத் தடைசெய்யக் கோரி வந்தனர். 20 மில்லியன் மக்கள்தொகையில் 10 சதவிகிதத்தினரே முஸ்லிம் என்பதால் மற்றவர்களை இது அவமதிப்பதாகும் என்பது இப்பிரிவினரின் கருத்தாகும்.

எனவே, இந்த சம்பவத்தில் அவர்கள் ஈடுபட்டிருக்கலாம் என்ற யூகங்கள் எழுந்தன. ஆனால், ஞானசேகரா என்ற இப்பிரிவின் தலைவர் இதனை மறுத்துள்ளார்.முஸ்லிம்களின் தீவிரப்பற்றினைத்தாம் தாங்கள் எதிர்ப்பதாகவும், மக்களை அல்ல என்றும் தெரிவித்தார்.

இது எதேச்சையாக நடந்த ஒரு விஷயம் என்றும், மற்றொரு இனக்கலவரத்தைத் தாங்கள் விரும்பவில்லை என்றும் அவர் கூறினார்.  இலங்கையின் காவல்துறையினரும், சிறப்புப் படைப்பிரிவினரும் நிலைமையைக்கட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர்

கடல் கண்காணிப்பு ப் பணியில் எந்திர மீன்

கடல் கண்காணிப்பு ப் பணியில் எந்திர  இழுது மீன்: இந்திய  மரபு அறிவியலாளர்  அருந்திறல்
கடல் கண்காணிப்பு பணியில் 'ரோபோ' ஜெல்லி மீன்: இந்திய வம்சாவளி விஞ்ஞானி சாதனை
வாசிங்டன், மார்ச் 30-
 
கடல் கண்காணிப்பு பணியில் 'ரோபா' ஜெல்லி மீனை ஈடுபடுத்தி இந்திய வம்சாவளி விஞ்ஞானி சாதனை படைத்துள்ளார்.
 
அமெரிக்காவைச் சேர்ந்த இந்திய வம்சாவளி விஞ்ஞானி ஷசாங் பிரியா. பிளாக்ஸ்பர்கை சேர்ந்த இவர் விர்ஷினியா தொழில் நுட்ப கல்லூரியில் மெக்கானிக் என்ஜினீயரிங் பேராசிரியராக பணிபுரிகிறார்.
 
இவர் தலைமையிலான குழுவினர் ரோபோ எந்திர ஜெல்லி மீன் தயாரித்துள்ளனர். 5 அடி 7 இஞ்ச் நீளமும், 170 பவுண்ட் எடையும் கொண்டது. இதற்கு சைரோ என பெயரிட்டுள்ளனர்.
 
எந்திரத்தினால் தயாரிக்கப்பட்ட இந்த ஜெல்லி மீன் தானாக சுதந்திரமாக இயங்க கூடியது. இதன் மூலம் கடல் பகுதியை மிகவும் துல்லியமாக கண்காணிக்க முடியும். இது உளவாளியாக செயல்படுவதால் கடலுக்குள் புதிதாக நுழைபவர்கள் பற்றியும், கடல்வாழ் உயிரினங்களின் வாழ்க்கை முறை, கடல் மட்டத்தின் அளவு போன்றவற்றை அறிந்து கொள்ள முடியும்.

தலை கீழாக நின்றாலும் தமிழ் தமிழ்தான்!

இப்படத்தை தலைகீழாகவும் பார்க்கவும்! நன்றி