சனி, 8 அக்டோபர், 2016

இலக்கியப் பெருவிழா 2016, மியான்மர்




இலக்கியப் பெருவிழா 2016, மியான்மர்

நந்தவனம் பீடம்

தமிழ்க்கல்வி வளர்ச்சி மையம், மியான்மர்

புரட்டாசி 29, 2047 / அட்டோபர் 15, 2016 சனிக்கிழமை

காலை 9.30 முதல் மாலை 6.00 வரை

வரவேற்புரை : நந்தவனம் சந்திரசேகரன்

தொடக்கவுரை: நீதிபதி வள்ளிநாயகம்

வாழ்த்துரை : மு.க.முனியாண்டி

சிறப்புரை : இலக்குவனார் திருவள்ளுவன்

நான்கண்ட மியான்மர்‘ நூல் வெளியீடு
கலைநிகழ்ச்சிகள்
கவியரங்கம்
தலைமை : முனைவர் கீரைத்தமிழன்

விருது வழங்கல் &

நிறைவுரை : மேனாள் அமைச்சர் நல்லுசாமி

நன்றியுரை : ஆர்.ஏ.செல்வக்குமார்
அழை-மியன்மார், இலக்கியப்பெருவிழா01 ; azhai_myanmar_ilakkiyaperuvizhaa01 அழை-மியன்மார், இலக்கியப்பெருவிழா02 ; azhai_myanmar_ilakkiyaperuvizhaa02

நந்தவனம் சந்திரசேகரன்
ஆர்.ஏ.செல்வக்குமார்
ஆறுமுகம் செல்லத்துரை
பருமா குமார்

Landless Tamils in Maanthai West should be given new lands

Landless Tamils in Maanthai West should be given new lands: senior grassroots activist

[TamilNet, Thursday, 06 October 2016, 16:25 GMT]
Various acts enacted by the colonial British rulers before 1948 had brought the public lands in the entire island into the domain of the Colombo-based State structure and its constitution, which was enacted without the democratic mandate of the nation of Eezham Tamils in the North-East. It was the so-called ‘Crown Lands Encroachment Ordinance’ that brought these lands, for which private ownership could not be documented, into Crown property in 1840. Later, in 1972, after the Sinhalese unilaterally enacted the genocidal State of ‘Sri Lanka’, amidst protests and without the democratic mandate of Eezham Tamils, a series of ‘land reforms’ were introduced by Colombo. Even these reforms brought after 1972 are now being violated by the SL State itself in seizing the lands of Tamils, says Seemanpillai Sountharanayakam, the deputy chairman of Maanthai West Divisional Council.


The 76-year-old grassroots activist says those claiming to be stakeholders in alienating the public lands in Maanthai division should first know the history.

Resettling Tamils should be given lands. But, the SL officials are alienating public lands to others, he said.

Under the Land Reform Law of 1972, no private person could own more than 50 acres of highland and 25 acres of paddy lands. But, the divisional secretary and other officials have allocated hundreds and even thousands of acres to private owners while uprooted Tamils are not given lands to properly resettle and commence their livelihoods, Mr Southaranayakam told TamilNet in a video interview on Thursday.

Maanthai West Divisional Council has been tasked to look after a large area including Madu. Mr Sountharanayakam has been calling for separate Divsional Councils (Piratheasa Chapais) to be established for Madu administrative division. But, there has been no positive response to the request even though everyone seems to agree with the idea, he said.

Maanthai West, the largest administrative division in Mannaar is also the division that has suffered most during the times of war, he said.

The war-affected people have not been allocated housing-schemes and there has been no proper reparations or assistance provided to the people of Maanthai West. The village infrastructures were completely destroyed in the last war and the people were on constant displacement since 1990 to 2009.

The psychological scars of the kith and kin of the persons who have been subjected to forced disappearances are yet to be healed, he said.

Chronology:

Journalist threatened inside police station in Sri Lanka

Journalist threatened inside police station in Sri Lanka

The International Federation of Journalists (IFJ) joins its affiliate the Free Media Movement (FMM) in condemning the inaction of the police while a TV journalist was threatened inside a police station in Sri Lanka on September 27. The IFJ demands that the authorities immediately investigate the incident.
Ranjith Karunaweera, a journalist with Hiru TV in Mahiyanganaya of Badulla District in Uva Province of central Sri Lanka, was threatened over a news story by a group of people when he arrived at the Hasalaka police station to give his statement in a case filed against him.
Local sand miners had filed a complaint at the police station after Karunaweera’s news report on illegal sand mining in the Mahaweli river bed and how it threatened the environment and stability of Weraganthota bridge. His story showed visuals of heavy machinery being used for sand mining although the use of heavy machinery is prohibited.
The police summoned Karunaweera for a statement and upon his arrival, a group of nearly two dozen sand miners used abusive language and threatened to kill him. Other journalists who accompanied him and were waiting outside the police station led him to safety. Following the intimidation, Karunaweera filed a complaint at the Mahiyanganaya Police Station against the Hasalaka police for not acting upon the death threats.
FMM convener Seetha Ranjanee and secretary C. Dodawaththa in a statement said, “The police officers in the station did not take any action to stop the threats. The FMM expresses its displeasure over the police for not taking appropriate action against the violent behavior of the sand miners and for acting in favor of them.”
The FMM requested the Inspector General of Police to order an unbiased investigation into the incident and demanded necessary action to ensure personal safety of journalists. The FMM added, “Instead of inquiring into the threats, the police supported the creation of a threatening environment for the journalist.”
Condemning the sand mining lobby for threatening and intimidating a journalist from carrying out his duty, and the Sri Lanka police for allowing such intimidation within the police precincts, the IFJ said, “Such incidents undermine journalists’ safety and their ability to report without fear. The IFJ demands immediate investigation into the case and appropriate punishment to those found guilty.”
For further information contact IFJ Asia-Pacific on +61 2 9333 0946 
The IFJ represents more than 600,000 journalists in 140 countries
Find the IFJ on Twitter: @ifjasiapacific
Find the IFJ on Facebook: www.facebook.com/IFJAsiaPacific 

 International Federation of Journalists (IFJ)

The Global Voice of Journalists

வெள்ளி, 7 அக்டோபர், 2016

இந்தியாவில்தான் இருக்கிறோமா…! – அன்வர் பாலசிங்கம்





தலைப்பு - இந்தியாவில்தான் இருக்கிறோமா?02 : thalaippu_indiaavilthaan-irukkiroamaa_anwarbalasingam-02

இந்தியாவில்தான் இருக்கிறோமா…! – அன்வர் பாலசிங்கம்

  காவிரி நீர்ச் சிக்கல் தீவிரமெடுத்ததிலிருந்து தமிழகப் பதிவெண் கொண்ட ஊர்திகள் கருநாடக மண்ணில் எங்கு பார்த்தாலும் தாக்கப்படுவதும்…எரிக்கப்படுவதும்…வண்டிஓட்டுநர்கள் அம்மணமாக்கப்படுவதும்...நாம் இந்தியாவில்தான் வாழ்கிறோமா என்ற பேரச்சத்தை எனக்குள் எழுப்பியுள்ளது.
  2011-இல் முல்லைப்பெரியாற்றுச்சிக்கல் தீவிரமெடுத்ததிலிருந்து  தொடர்புடைய இடுக்கிமாவட்டத்தில் மட்டுமல்ல, கேரளத்தின் எந்த மாவட்டத்திற்கும் நீங்கள் தமிழக பதிவெண்கொண்ட ஊர்தியில் போனாலும்,   அலட்சியப் பார்வையை மலையாளிகள் உங்கள் மீது வீசுவதை தவிர்க்க முடியாது. கேரளத்தில் உள் பகுதிகளான கண்ணூர், மலப்புரம், கோழிக்கோடு, பகுதிகளில் தமிழகப் பதிவெண் கொண்ட ஊர்திகளில்  பயணம் செய்தவர்கள் நன்றாகவே உணர்ந்திருப்பார்கள். அதைவிட ஒரு சிறந்த  எடுத்துக்காட்டு: கேரள எல்லைப்புற மாவட்டமான தேனி மாவட்டத்தில் கம்பம், கூடலூர் பகுதிகளில் தமிழகத்தைச் சேர்ந்தவர்களின் பெரும்பாலான  மலையுந்துகளில்(ஈப்புகள்) கேரளப் பதிவெண் கொண்டதாகவே இருக்கும். இந்தக்கணக்கில் போடி, சின்னமனூரையும்  சேர்த்துக்கொள்ளலாம்.
  எதற்காக இவர்கள் கேரளப் பதிவெண்ணை வைத்திருக்கிறார்கள்? காரணமிருக்கிறது. கேரள மாநிலத்தின் பதிவெண்ணைத் தனது வண்டிகளுக்கு வாங்கியிருப்பவர்களுக்குக் கண்டிப்பாக இடுக்கி மாவட்டத்தில் ஏலக்காய்த் தோட்டமிருக்கும். கம்பம் நகரிலிருந்து  ஏலக்காய் தோட்ட முதலாளி  ஒருவர் அன்றாடம், வண்டன் மேட்டிலோ, உடும்பஞ்சோலையிலோ, இராசகுமாரி, இராசாக்காட்டிலோ உள்ள ஏலக்காய்த் தோட்டத்திற்குச் சென்றுவர அவருக்குக் கேரளப் பதிவெண் கொண்ட வண்டிதேவைப்படுமென்றால், என்ன  சிக்கல் அவருக்கு? ஏன் தமிழகப் பதிவெண் கொண்டவண்டியில் போனால், குமுளி அல்லது கம்பம் மெட்டு, போடிமெட்டு ஆகிய கேரள சோதனைச்சாவடியில்  இசைவளிக்க மாட்டார்களா?
  இந்திய ஒருமைப்பாட்டையும் ஒற்றுமையையும் உரத்து முழங்கும் மானமனிதர்களே! இங்கே கொஞ்சம் வந்து விட்டுப்போங்கள்.
  தமிழகப் பதிவெண் கொண்ட ஊர்தியில் நீங்கள் குமுளியிலுள்ள கேரள ஆய்வுச்சாவடிக்குச் செல்லும்போது இந்த வண்டிகளுக்கென்று ஒரு தனிக்கவனிப்பு இருக்கும். மேலாக 2011 முல்லைப்பெரியாற்றுச் சிக்கலுக்குப் பிறகு கேரள எல்லையோர மாவட்டங்களில் முளைவிட்டிருக்கும் மார்க்சிய குண்டாயிசமுமே இதற்கான காரணங்கள்.
  தமிழகப் பதிவெண் கொண்டவண்டியில் போனால் தேவையில்லாத  சிக்கல் எதற்கு என்ற தமிழர்களின் இயலாமையே இதற்கான மூலதனம். இந்தக் கொடூரப்போக்கைத் தொடங்கி வைத்த  பெருமை, கம்பம் பள்ளத்தாக்கையே  அடக்கிவைத்திருக்கும் கன்னட ஒக்கலிக பெரு முதலாளிகளையே சாரும். அவர்கள்தான் தங்களுடைய வண்டிகளில் மலையாளப் பதிவெண்ணோடு பெருமையாகச் சுற்றிவரத் தொடங்கியவர்கள். பின்னர் இந்த நோய் நமது ஆட்களையும் தொற்றிக்கொண்டது. இப்போது கம்பம் பள்ளத்தாக்கில் ஓடும் வண்டிகளில் பாதி வண்டிகள் கேரளப் பதிவெண் கொண்டவையே! எந்த மலையாளியாவது தமிழகப் பதிவெண் கொண்ட வண்டியில் தன் குடும்பத்தோடு வருவதைப் பார்த்திருக்கிறீர்களா? குமுளி,  வண்டிப்பெரியாறு, பீர்மேடு, உடும்பஞ்சோலை, கட்டப்பனை, மூணாறு போன்ற ஊர்களில் வாழும் மலையாள முதலாளிகள்  நாள்தோறும் தேனி வரை வந்து செல்கிறார்கள். ஐயோ தமிழ்நாட்டுக்கு நாம்  நாளும் போகிறோம்.  எந்தத் தமிழனாவது  நம் வண்டியை அடித்துவிட்டால் என்னாவது என்று பயந்தானா? அவன் தமிழகப் பதிவெண் கொண்டவண்டியை ஏன் வாங்கவில்லை? அவனுக்கில்லாத அச்சம் தமிழனுக்கு வரக்காரணம் என்ன? 2011- திசம்பரில் முல்லைப்பெரியாற்றுச் சிக்கலையொட்டி இடுக்கி மாவட்டம் புளியமலையில்  எரிநெய் நிலையம் அடித்து நொறுக்கப்பட்டது. மலையாள இனப்பற்றாளர்கள் இந்த வேலையைச்செய்தார்கள். அந்த  எரிநெய் நிலைய உரிமையாளரிடம் சென்று அதாவது கம்பத்திலுள்ள அவருடைய வீட்டிற்குச் சென்று, “இப்படி யாரோட  நிலையம் என்று தெரிந்திருந்தும்  உடைத்திருக்கிறார்களே!   என்று சொல்லி வழக்கு போட வேண்டும்” என்று சொன்னதும்,  தமிழகச் சட்டமன்ற உறுப்பினரான அந்த  எரிநெய் நிலைய உரிமையாளர் சொல்கிறார்:
“நம்ம உடன்பிறப்புமாருதான உடைத்தாா்கள். போகட்டும். இதற்குப் போய்ப் புகார் கொடுத்தால் நாளைக்கு அங்கே நம்முடைய தோட்டம் இருக்க வேண்டுமா? வேண்டாமா” என்று சமாளித்து வன்முறை வெறியாட்டத்தை நடத்திய மலையாளிகளுக்குக் கொம்பு சீவி விட்டார்.
அவர்தான்  கம்பம்  இராமகிருட்டிணன்
திமுக ச.ம.உ, கம்பம் சட்டமன்றத் தொகுதி
இனம்-கன்னட ஒக்கலிகக் கவுடர்.
இந்தக் கன்னட மக்கள் தங்கள் சொத்துகளைப் பாதுகாக்கப் போடும் இந்த வேடத்தால், மலையாளிகளுக்குத் துணிவு வருவதோடு “தமிழ்நாட்டு வண்டியா? அடிடா!” என்கிற நிலை வந்துவிட்டது…
ஐயப்பன் கோவிலுக்குச் செல்லும் தமிழகப் பதிவெண் கொண்ட வண்டிகள் படும்பாட்டைச் சொல்லித்தீராது. இஃது இடுக்கி எல்லையில் நடக்கும் அநாகரீகம். இதுவேதான் இன்று ஒசுர் தாண்டித் தமிழக எல்லையான  சீசீவாடியிலும் நடக்கிறது.   தமிழகப் பதிவெண் கொண்டவண்டிக்குக் கருநாடகாவில் நுழைய  இசைவில்லை.
 அப்படி என்றால், கருநாடகப் பதிவெண் கொண்ட வண்டியில் தமிழர்கள் செல்லலாமா? செல்லலாம்.ஆபத்தில்லை.
ஒருமைப்பாட்டில் தீயை வைக்க!
 அன்வர் பாலசிங்கம்

மாணிக்கவாசகம் பள்ளியில், ஓவியப்போட்டியில் வென்றவர்களுக்கும் பங்கேற்றோருக்கும் பாராட்டு

 அகரமுதல154, புரட்டாசி 16,2047 / அட்டோபர் 02, 2016


மாணிக்கவாசகம்பள்ளி, ஓவியப்போட்டி, பாராட்டு01 ; manickavasakampalli_licparisu01 மாணிக்கவாசகம்பள்ளி, ஓவியப்போட்டி, பாராட்டு02 ; manickavasakampalli_licparisu02

மாணிக்கவாசகம் பள்ளியில், ஓவியப்போட்டியில் 

வென்றவர்களுக்கும் பங்கேற்றோருக்கும் பாராட்டு

தேவகோட்டை,  பெருந்தலைவர் மாணிக்கவாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில்  வாணாள் காப்பீட்டுக் கழகம் சார்பாக நடைபெற்ற போட்டிகளில் பங்கேற்று முதலிடம் பெற்ற மாணவர்களுக்குப் பாராட்டு விழா நடைபெற்றது.
 விழாவிற்கு வந்தவர்களைப் பள்ளி மாணவர்  இராசேசு வரவேற்றார். பள்ளித்தலைமை ஆசிரியர்  இலெ. சொக்கலிங்கம் தலைமை தாங்கினார்.  வாணாள் காப்பீட்டுக்கழகம்(எல்.ஐ.சி.) சார்பாக நடைபெற்ற ஓவிய போட்டிகளில் பங்கு பெற்று முதலிடம் பிடித்த 3 ஆம் வகுப்பு மாணவர் பாலமுருகன்,  மற்றும் 4 ஆம் வகுப்பு மாணவர் கிசோர்குமார் ஆகியோர்க்குப் பரிசுகளும்,பாராட்டுச் சான்றிதழ்களும் வழங்கப் பெற்றன.
பங்கு பெற்ற  பிற மாணவர்களுக்கு வாழ்த்து தெரிவிக்கபட்டது. பயிற்சி அளித்த ஆசிரியர்களுக்கும் வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.
நிறைவாக மாணவி அல்நிசுமா நன்றி தெரிவித்தார்.
தனியார் பள்ளி மாணவர்களுடன் போட்டியிட்டு மாணவர்கள் முதலிடம் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
jeyamchok@gmail.com 
http://www.kalviyeselvam.blogspot.in/

எப்படி வளரும் தமிழ்? 2/3 : கவிஞர் முடியரசன்




தலைப்பு, எப்படி வளரும் தமிழ், முடியரசன்thalaippu_eppadivalarum_thamizh_mudiyarasan

எப்படி வளரும் தமிழ்?  2/3

கல்வித் துறையில்
  இயல்பாகவும் எளிமையாகவும் அறிவு வளர்ச்சி பெறத் தாய்மொழி வாயிலாகவே கற்பிப்பதுதான் சிறந்த நெறி என்பதை உணர்ந்த ஒவ்வொரு நாடும் கல்விக் கூடங்களில் அதனதன் தாய்மொழியையே பயன்படுத்தி, அறிவுத் துறையில் முன்னேறி வருவதைக் காண்கிறோம். ஆனால், விடுதலை பெற்ற பின்னரும் தமிழ்நாடுதான் இயல்புக்கு மாறாகச் சென்று, அறிவுத் துறையில் முழுமை பெறாது திண்டாடிக்கொண்டிருக்கிறது. பாலகர் பள்ளிமுதல் பல்கலைக்கழகம்வரை பயிற்று மொழி வேறாக இருக்கிறது. ஆங்கிலம், இந்தி என்ற மொழிகள்தாம் ஆட்சி செய்கின்றன. இந் நிலையில் தாய்மொழியுணர்வு தலை தூக்குமா? பிஞ்சு நெஞ்சங் களிலேயே மொழியுணர்வு வேரோடு கல்லியெறியப் படுகிறதே! அப்பேசும் பொற்சித்திரங்கள், தம் பெற்றோரை அம்மா, அப்பா என்றழைக்கும் இன்னொலி, நம் செவியில் தேனாக வந்து பாய வில்லையே! அயன்மொழி வேரூன்றிய அவ்விளைய உள்ளங்களிலே ‘என் மொழி தமிழ், நான் தமிழன்’ என்ற உணர்வுகள் எப்படி யரும்பும்? நாட்டின் எதிர்காலச் செல்வங்களாகிய இவர்கள் வளர்ந்து உயர்நிலைப் பள்ளிகள், பல்கலைக் கழகங்கள்வரை அயன் மொழியிலேயே பயில்வாராயின், தாய் மொழியில் அறிவியலை எவ்வாறு வளர்ப்பர்? இரண்டுங் கெட்ட நிலையிற்றானே தடுமாறுவர். அத்தி பூத்தாற் போல ஆங்கொருவர் ஈங்கொருவர், தமிழில் அறிவியல் வளங் காட்டுவார் உளரேயெனில், விதிவிலக்காக அவர் காணப்படுத லன்றி மற்றொன்றில்லை.
  அரியணையில் அமர்ந்திருப்போர் தமிழ், தமிழ் என்று வாய்ப்பறை சாற்றினும் கல்வித் துறையிலிருந்து வெளிப்படும் ஆணைகள், அறிக்கைகள் எம்மொழியில் வருகின்றன? தமிழிலா வருகின்றன? அவ்வாணைகள், மாவட்டக் கல்வி அலுவலர்க்கே தெளிவாக விளங்காமல் தடுமாறச் செய்வதும் உண்டு. ஒரு மாவட்ட அலுவலர் ஒருவகையாகப் பொருள் கொள்ளுவார். அடுத்த மாவட்டத்தவர் வேறுவகையிற் பொருள்சொல்வார்; இறுதியில் தணிக்கைக்கு வருவோர், ‘இரண்டுந் தவறு’ என்று மற்றொரு புதுப் பொருள் தருவார். மொழி வளர்க்கும் பண்ணை யாகிய கல்வித் துறையே சீர்குலைந்திருக்கும்போது தமிழ் எவ்வாறு வளரும்?
அரசியல் துறையில்
  புதிய கல்விக் கொள்கையிலும் தமிழ் புறக்கணிக்கப்படுகிறது. உண்மை நிலையை ஆய்ந்து, நடுவு நிலைமையுடன் கல்விக் கொள்கையை வகுத்து, அவ்வவர் தாய்மொழிக்கு ஆக்கந் தந்து, சிந்தனையில் ஒற்றுமையுணர்வு காண விழையாது, ஒரு மொழியால் ஒருமைப் பாட்டை வளர்த்துவிடலாம் என எண்ணுகின்றனர். இவ்வெண்ணம் பன்மைப் பாட்டை வளர்க்குமே தவிர, ஒற்றுமை யுணர்வை வளர்க்காது. இக் கொள்கையில் அரசியல் நோக்கம் பொதிந்துளதே அன்றி அறிவு நோக்கம் காணப்படவில்லை. பல மொழிகள் வழங்கி வரும் ஒரு துணைக் கண்டத்தில் ஒரே மொழி கோலோச்ச விரும்பினால் சிறிதளவேனும் காணப்படும் ஒற்றுமையும் கருகி விடும் என்பதை உணராத அரசியலாலும் தமிழ் இரண்டாம் நிலை மூன்றாம் நிலைக்குத் தள்ளப்படுகிறது.
மதத் துறையில்
  தமிழ்நாட்டு மக்கள், வந்து புகுந்த இந்து மதம், இசுலாம் மதம், கிறித்துவ மதம் என்று பல்வேறு மதங்களைத் தழுவி வருகின்றனர். தாம் தாம் விரும்பிய மதங்களை ஏற்றுக்கொண்டு, ஒழுகி வருவது அவ்வவர்க்கமைந்த உரிமை. தமக்குச் சிறந்ததாகத் தோன்றிய ஒன்றை வழிபாட்டுக்காக ஏற்றுக் கொண்டதுடன் அமையாது, அவ்வந் நாட்டுக்குரிய மொழிகளுக்கும் அடிமைப்பட்டு விட்டனர். தமிழர் என்ற உணர்வை அடியோடு மறந்து விட்டனர்; இழந்து விட்டனர்.
  இந்து மதம் புகுந்தோர் சிரீநிவாஃசன், (ஞ்)சகந்நாதன், விருத்த கிரீஃசுவரன், பங்க(ஞ்)சாட்சி, பிரேமலதா, புஃட்பவல்லி என்ற பெயர்களைச் சூட்டிக்கொண்டு, வடமொழிக்கு வால்பிடித்தனர். இசுலாம் மதத்தைச் சார்ந்தோர் ஃகாசா ஃகமீது, இசுமாயில், இரஃகீம், (ஞ்)சுமீலா, இரஃசீதா என்று அரபுமொழிக்கு மண்டியிட்டனர். கிறித்துவத்தை நம்பியோர் டேனியல், விக்டர், சார்சு, அனவுன் சியா, டெய்சி என்று ஆங்கிலப் பெயர்களுக்கு அடிமையாகினர். எம் மதம் பற்றினும் தமிழராக நின்று, தமிழ்ப் பெயர் களைச் சூட்டிக் கொள்வதால் வரும் குறையென்ன?
  ஈண்டு உண்மை நிகழ்ச்சியொன்றைச் சுட்டிக் காட்டுவது பயன்தரும். மதுரையில் வாழ்ந்துகொண்டிருக்கும் பொறியியல் வல்லுநர் ஒருவர், ஈரான் ஈராக்கு முதலிய நாடுகளுக்குச் சுற்றுப் பயணம் மேற்கொண்டு, ஆங்குத் தங்கியிருந்தபொழுது, அந் நாட்டவர் இவரை நோக்கி, ‘உங்கள் பெயரென்ன?’ என்று வினவினர்.
‘அப்துல்லா’ இவர் தந்த மறுமொழி.
‘ஏன் எங்கள் மொழியில் பெயர் வைத்துள்ளீர்?’ அவர்கள் வினா.
‘நான் முசுலிம்’ இவருடைய விடை.
‘அது தெரியும்; எங்கள் மொழியில் நாங்கள் பெயர் வைத்துக் கொள்கிறோம்; எங்களுக்கு அதன் பொருள் தெரியும்; உங்களுக்குப் பொருள் விளங்குமாறு உங்கள் மொழியில் அல்லவா பெயர் வைத்துக்கொள்ளுதல் வேண்டும்? நீங்கள் தமிழ்நாட்டுக்காரரா யிற்றே! தமிழிலல்லவா பெயர் வைத் திருத்தல் வேண்டும்?’ என்று வினவ, மறுமொழி தர வாயில்லாமல் இவர் பேசாதிருந்துவிட்டார்.
(இராசபாளையம் திருவள்ளுவர் மன்ற ஆண்டு விழா மலரில் வெளியிடப் பட்டது)
கவிஞர் முடியரசன்
(தொடரும்)