சனி, 7 ஆகஸ்ட், 2010

கவுகாத்தி:அசாம் மாநிலத்தில், ஒரு குறிப்பிட்ட வழிபாட்டில் பெண்களுக்கு விதிக்கப் பட்டிருந்த தடையை மீறி, அவர்களை அந்த வழிபாட்டில் கலந்து கொள்ள அசாம் கவர்னர் வழிகாட்டியுள்ளார்.அசாம் மாநிலத்தில் கி.பி.,15ம் நூற்றாண்டில், சங்கரதேவர் என்பவரால் உருவாக்கப்பட்ட வைஷ்ணவ சம்பிரதாயத்தில், அதன் வழிபாட்டிடத்தில் பெண்களுக்கு பல நூற்றாண்டுகளாக அனுமதி மறுக்கப்பட்டு வந்தது. அதன் வழி பாட்டிடத்தில் பெண்கள் நுழைவதில்லை.
சமஸ்கிருத மொழியில் வல்லுனரான, அசாம் கவர்னர் ஜே.பி.பட்நாயக், மாநிலத்திலுள்ள பல 'சாத்ரா' என்ற வழிபாட்டு அரங்கில் வழிபட்டுள்ளார். அவர் கடந்த 4ம் தேதி, பார்பேட்டா என்ற இடத்திலுள்ள சாத்ராவுக்குச் சென்றபோது, அந்த இடத்துக்கு வெளிப்புறத்தில் பெண்கள் கூட்டமாக நின்று கொண்டிருப்பதைக் கண்டார்.பின்னர் அதற்கான காரணத்தைத் தெரிந்து கொண்ட அவர், சாத்ராவின் உயர்மட்ட அதிகாரியைச் சந்தித்து, வைஷ்ணவ சம்பிரதாயத்தை நிறுவிய சங்கரதேவரோ அவரது சீடர் மாதவதேவரோ, இவ்விதம் வழிபாட்டு அரங்கில் பெண்களுக்கு அனுமதி மறுக்கப்படுவதை குறிப்பிட வில்லை என்று தக்க சான்றுகளுடன் எடுத்துக் காட்டினார்.
சாத்ரா அதிகாரியும் அதை ஏற்றுக் கொண்டார். ஆனால், கடந்த சில ஆண்டுகளுக்கு முன் அனுமதி வழங்கப் பட்டப்போதும் கூட, பெண்களே இந்த வழிபாட்டு அறையில் நுழையாமல் இருந்தனர் என்று கூறினார். பின்பு கவர்னருடன் 20 பெண்கள் உள்ளே சென்று வழிபட்டனர்.மறுநாள், ஐந்து பெண்கள் உள்ளே சென்று வழிபட்டனர். அதில் ஒருவர் 51 ஆயிரம் ரூபாயையும், அமெரிக்காவில் வசிக்கும் மற்றொரு பெண் நாலாயிரத்து 800 ரூபாயையும் காணிக்கையாக அளித்தனர்.
அசாமின் பிரபல இலக்கியவாதியும், ஞானபீட விருது பெற்றவருமான மமோனி ரைசன் கோஸ்வாமி, கவர்னரைச் சந்தித்து வரலாற்றுச் சாதனை புரிந்ததற்கு வாழ்த்து தெரிவித்தார்





நகல் எடுக்க         |    எழுத்தின் அளவு: Decrease font Enlarge font   | 
  மின்னஞ்சல்  |   RSS  |  Bookmark and Share


`
வாசகர் கருத்து

 மா தவம் ( பெருந்தவம்) செய்தவன் மாதவன்; சங்கு அறுக்கும் தொழில் புரிபவன் சங்கரன். எனவே, இவை நல்ல தமிழ்ச் சொற்களே. தேவர் என்பதும் நல்ல தமிழ்ச் சொல். தேவர் அனையர் கயவர் என்கிறார் தெய்வப்புலவர் திருவள்ளுவரும். தேவர்கள் ஆட்சிப் பொறுப்பில் இருந்தனர். எனவே, சமயத் தலைமைப் பொறுப்பில் தேவர்கள் இருந்ததில் வியப்பில்லை. இந்தியா என்பது ஆங்கிலேயர் வந்த பின் அமைந்த அரசியலமைப்பு. நாம் மொழியாலும் இனத்தாலும் நாட்டாலும் தமிழர்களே. ஆனால், அரசமைப்பால் இந்தியர்கள். இன்றைய சூழலில் இந்த அரசமைப்பு சிதைவு படக் கூடாது என்பது உண்மைதான். அதே நேரம் நாம் தமிழர்கள் என்பதும் வரலாறு சொல்லும் உண்மை.எனவே, நண்பரே உண்மையைப் புரிந்து கொள்க. அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்  
by I. Thiruvalluvan,chennai,India    15-04-2010 20:19:15 IST

 சரியான வழிகாட்டு முறை... நன்றி... 
by H நாராயணன்,Hyderabad,India    15-04-2010 20:03:52 IST

 திருவள்ளுவன் சொல்வது மிகவும் சரி நான் முஸ்லிம் மதத்தை சேர்ந்தவன். ஆனாலும் தமிழ் எங்கள் உயிர்  
by pms அப்துல்ரகுமான் ,dubai,India    15-04-2010 14:23:35 IST

 ஹலோ mr திருவள்ளுவன்,என்ன சொல்றிங்க மாதவா அண்ட் சங்கரா இந்த ரெண்டு பெரும் தமிழ் பேர் இல்லையே! 2000 வருஷத்திற்கு முன்ன திருக்குறள் ' ஆதி பகவன் முதற்றே உலகு ' என கூறுகிறது ! தமிழ் என் தாய்மொழி, ஹிந்து என் மதம்! தெரிந்துகொள்! இந்தியன் என்று சொல்வோம் ! ஜெய் ஹிந்த்! 
by ka விஜயகுமார்,singapore,India    15-04-2010 09:40:15 IST

 சங்கரத் தேவர் , மாதவத் தேவர் என்னும் பெயர்கள் 15 ஆம் நூற்றாண்டு வரையிலும் தமிழர்கள் அசாமில் செல்வாக்குடன் வாழ்ந்தமையைக் காட்டுகின்றது. இந்தியக் கண்டம் முழுவதும் பரவியிருந்த தமிழ் மொழியும தமிழ் இனமும் அழிவைச சந்தித்ததன் காரணம் பிற மொழிச் சொற்களைக்கலந்து மொழிக் கொலை புரிந்து புதிய மொழிகள் உருவாக வழி வகுத்ததே! இனியேனும் மொழிக் கொலையைத் தடுப்போம்! நம மொழி காப்போம்! நம் இனம் காப்போம்!  
by I. Thiruvalluvan,chennai,India    15-04-2010 03:10:32 IST

தலையங்கம்: கேள்விக்கு ஒருவரில்லை!

First Published : 07 Aug 2010 12:17:50 AM IST

Last Updated : 07 Aug 2010 12:29:04 AM IST

பால் விஷவாயு மரணங்களும், வாரன் ஆண்டர்சன் தப்பிச்சென்ற விவகாரமும், இப்போது அதே வழக்குத் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனுவை சி.பி.ஐ.  தாக்கல் செய்திருப்பதும் என்று விவகாரங்கள் ஒருபக்கம் நடந்து கொண்டிருக்க, இன்னொரு பக்கம் போபால் நகரில் யூனியன் கார்பைடு விட்டுச் சென்ற நச்சுக் கழிவுகளை அகற்றும் பணியைத் தொடங்கியுள்ளது மத்திய அரசு. இதற்காக ஏற்கெனவே | 200 கோடி நிதி ஒதுக்கப்படும் என்று அரசு அறிவித்திருந்தது.இந்த நச்சுக் கழிவுகளின் அளவு 300 டன் என்று தோராயமாகக் கணக்கிடப்பட்டுள்ளது. பாதரசம் முதலாக சயனைடு வரையிலான பல்வேறு நச்சுக்களின் கலவைதான் இந்த நச்சுக் குப்பை. 1984-ல் விபத்து நடந்த பின்னர் கைவிடப்பட்ட ஆலையில் இருப்பவை இந்தக் கழிவுகள் என்று நினைக்கத் தோன்றும். ஆனால், அது உண்மையல்ல. 1969 முதல் 1984-ம் ஆண்டு வரை-ஆலை செயல்பட்ட சுமார் 15 ஆண்டுகளாகச் சேர்ந்த நச்சுக் கழிவுகள்தான் இவை. அப்போதும் அரசும் மாசுகட்டுப்பாட்டு வாரியமும் கண்டுகொள்ளவில்லை. விபத்து நடந்து 25 ஆண்டுகள் ஆன பின்னாலும்கூட அதை அகற்றாமல் அப்படியே பார்த்துக்கொண்டிருந்தது அரசு.தேசிய சுற்றுச்சூழல் பொறியியல் ஆய்வு நிறுவனம் (சஉஉதஐ) ஜூலை முதல் வாரம் வெளியிட்ட அறிக்கையில், 1984-ம் ஆண்டு நடந்த விஷவாயுக் கசிவால் ஏற்பட்ட மரணங்களுக்கும், ஆலையில் குவிந்துள்ள நச்சுக் கழிவுகளுக்கும் தொடர்பில்லை. ஆனால், இந்த நச்சுக் கழிவுகள் இந்த ஆலையில் 1969-ம் ஆண்டு முதலாகவே குவிக்கப்பட்டு வந்துள்ளன. இவற்றால் போபால் நகரின் மண்ணும் நீரும் நச்சுத்தன்மை அடைந்தன என்பது மறுக்க முடியாத உண்மை என்று கூறியுள்ளது.குவிக்கப்பட்டுள்ள நச்சுக் குப்பையை இன்சினரேட்டர் கருவி மூலம் எரிக்க வேண்டும் என்பதோடு, மேற்பரப்பில் நச்சுக் கலந்திருக்கும் 11 லட்சம் டன் மண் அகற்றப்பட்டு, வேறிடத்தில் புதைக்கப்பட வேண்டும். முற்றிலும் விஷமாகிவிட்ட மூன்று கிணறுகளை மூட வேண்டும், நச்சுக் கலந்துள்ள நிலத்தடி நீரை மின்னேற்றி மூலம் இரைத்து வெளியேற்ற வேண்டும் என்று இந்த ஆய்வு நிறுவனம் அரசுக்குப் பரிந்துரை செய்துள்ளது. மண்ணை அகற்றுவதற்கு | 117 கோடி செலவாகக்கூடும். நிலத்தடி நீரை வெளியேற்றும் மின்னேற்றிகள் அமைக்க | 30 லட்சம் செலவாகும். இதன் பராமரிப்புச்  செலவு ஆண்டுக்கு | 15 லட்சம் ஆகலாம்.தற்போது போபால் அருகே பீதாம்பூர் என்ற இடத்தில் நிறுவப்பட்டுள்ள மத்தியப்  பிரதேச நச்சு மற்றும் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தில், இக்கழிவுகளை எரிக்கும் பணிக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள ஹைதராபாத் நிறுவனத்திடம் நச்சுக் கழிவுகளை எரிக்கப் போதுமான நவீன கருவிகள் இல்லை என்று கூறப்படுகிறது. நச்சுக் கழிவுகளை எரிக்கும் வெள்ளோட்டத்தின்போது, 6 பணியாளர்களுக்குக் கண்பார்வை பாதிக்கப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வந்துள்ளன.மக்கள்தொகை அதிகம் உள்ள இடத்தில் இத்தகைய ஆபத்தான நச்சுகளை எரிக்கும் பணியை நடத்தக்கூடாது, இவற்றை வேறிடத்தில் செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது. அப்படிச் செய்யும்போது இன்னும் பல கோடிகள் செலவு கூடும்.இந்தச் செலவுகளை ஏன் இந்திய அரசு ஏற்க வேண்டும்? என்பதுதான் மிக முக்கியமான கேள்வி. 1969 முதலாகவே நச்சுக் கழிவுகளைக் குவித்து வைத்த யூனியன் கார்பைடு நிறுவனம்தானே இதற்குப் பொறுப்பு? இத்தனை காலமாக இதைக் கண்டுகொள்ளாமல் இருந்த ஆலை அதிகாரிகளும் அரசு அதிகாரிகளும்தானே இதற்குப் பொறுப்பு?தற்போது யூனியன் கார்பைடு நிறுவனத்தை டௌ நிறுவனம் வாங்கியுள்ளது. எங்களுக்கும் நச்சுக் கழிவுகளுக்கும் எந்தத் தொடர்பும் கிடையாது என்று சொல்கிறது டெü. "எல்லா இழப்பீடுகளையும் யூனியன் கார்பைடு செய்து முடித்த பின்னர்தான் அந்த நிறுவனம் எங்கள் கைக்கு மாறியது. ஆகவே, நாங்கள் இந்த நச்சுக் கழிவுக்குப் பொறுப்பேற்க மாட்டோம்' என்று சொல்கிறது டெü.யூனியன் கார்பைடு நிறுவனம் நீதிமன்றத்தில் அளித்த இழப்பீட்டுத் தீர்வைகள் யாவும் 1984 டிசம்பர் மாதம் நடந்த விஷவாயுக் கசிவு மரணங்களுக்கு மட்டும்தானே அல்லாமல், நச்சுக் கழிவை அகற்றும் பணிகளுக்கும் சேர்த்து அளிக்கப்பட்ட இழப்பீடு அல்ல.மேலும், டௌ நிறுவனத்துக்கு விற்கும் முன்பாக, யூனியன் கார்பைடு நிறுவனம் கேட்டுக்கொண்டதன் பேரில் தேசிய சுற்றுச்சூழல் பொறியியல் ஆய்வு நிறுவனம் இந்த நச்சுக் கழிவுகள் பற்றி ஆய்வு நடத்தி, 1994-ல் அறிக்கை அளித்துள்ளது. மண்ணும் நிலத்தடி நீரும் நச்சுக் கழிவால் பாதிக்கப்பட்டிருக்கிறது என்று கூறப்பட்டுள்ள இந்த அறிக்கை குறித்து 1996-ம் ஆண்டு தங்களுக்குத் தெரிய வந்ததாக டௌ நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வழக்குரைஞர் ஒப்புக்கொண்டிருக்கிறார்.நிலைமை இதுவாக இருக்க, நச்சுக் கழிவுகளை அகற்றுவதில் தனக்குப் பொறுப்பே கிடையாது என்றும் யூனியன் கார்பைடு செய்யாமல் விட்டதற்குத் தான் ஏன் பொறுப்பேற்க வேண்டும் என்றும் டெü நிறுவனம் கேள்வி எழுப்புவது வேடிக்கையாக இருக்கிறது. மத்திய அரசும் மக்கள் பணம் | 200 கோடியை ஒதுக்கி, அவர்கள் போட்டுவிட்டுப்போன நச்சுக் குப்பையை அகற்றவும், மண்ணையும் நிலத்தடி நீரையும் தூய்மையாக்கவும் நடவடிக்கை மேற்கொள்வது அதைவிட வேடிக்கை.யாரோ அன்னிய வியாபாரி இங்கே வந்து தொழில் தொடங்கி லாபம் ஈட்டினார். அந்தத் தொழிற்சாலையில் கசிந்த விஷவாயுவால் போபால் நகர மக்கள் பல தலைமுறைகள் பாதிக்கப்படுகிறார்கள். அவர்கள் விட்டுச்சென்ற நச்சுக் கழிவுகள் மண்ணையும், நிலத்தடி நீரையும் மாசுபடுத்திவிட்டிருக்கின்றன. அவர்கள் செய்த தவறைத் தட்டிக் கேட்டு நியாயம் தேட வேண்டிய இந்திய அரசுதான் மக்களின் வரிப்பணத்தில் பொறுப்பேற்கிறது. பாரதியின் வரிகளில் சொல்வதானால், "கேள்விக்கு ஒருவரில்லை- (எம்மை) கீழ்மக்கட்கு ஆளாக்கினான்'.
கருத்துக்கள்

தினமணியின ஆழமான ஆசிரிய உரைக்கும் மதுரைக்காரனின் சரியான கேள்விக்கும் பாராட்டுகள். 
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
8/7/2010 5:17:00 AM
இதில் என்ன ரகசியம் இருக்கிறது? போபால் விபத்தில் பாதிக்கப்பட்டவர்களின் சார்பாக இந்திய அரசு மட்டும் தான் வழக்கு நடத்தும் என்று நாடாளுமன்றத்தில் சட்டம் இயற்றி, ரூ.600 கோடி நிவாரணம் வாங்கி வந்தது காங்கிரஸ் அரசு. மேஜைக்கு கீழே எத்தனை கோடிகள் வாங்கினார்கள் என்பது காங்கிரஸ்காரனுக்குத்தான் தெரியும். இப்போ போயி கழிவுகளை Union Carbide /Dow Chemicals கிட்ட அகற்ற காசு கேட்டா, பழைய வண்டவாளங்கள் எல்லாம் தண்டவாளம் ஏறிடுமே? அதான் மக்கள் வரிப்பணத்தை எடுத்துகொடுத்து விஷயத்தை கமுக்கமா முடிக்கப் பார்க்கிறாங்க. மத்தியில் ஆட்சியில் மிச்சமிருக்கிற நாலு வருசத்துக்கு இந்த விஷயத்தை கொஞ்சகொஞ்சம மறைக்க பார்க்கிறானுங்க. போபால் மக்களுக்குப் பண்ணின துரோகத்தும், ஈழத்தமிழனை கழுத்தறுத்ததற்கும் காங்கிரஸ் என்ன விலைடா கொடுக்கப் போறீங்க? மதுரைக்காரன்.
By மதுரைக்காரன்.
8/7/2010 1:10:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்
+++++++++++++++++++


இரோசிமா நினைவு  நாள்: யு.எஸ். பிரதிநிதி பங்கேற்பு


ஹிரோஷிமா, ஆக. 6: ஜப்பானில் ஹிரோஷிமா நகர் மீது அணுகுண்டு வீசப்பட்டதன் 65-வது ஆண்டு நினைவு தினம் வெள்ளிக்கிழமை அனுசரிக்கப்பட்டது. இதில், முதன்முறையாக அமெரிக்க பிரதிநிதி பங்கேற்றார்.இந்நகரில் ஆண்டுதோறும் நடைபெறும் நினைவு நிகழ்ச்சியில் பல்வேறு நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்று வருகின்றனர். ஆனால், ஒருமுறைகூட அமெரிக்க பிரதிநிதி பங்கேற்றது இல்லை.ஹிரோஷிமாவில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நினைவு நிகழ்ச்சியில் அமெரிக்க தூதர் ஜான் ரூஸ் கலந்து கொண்டார். இதேபோல், பிரிட்டன், பிரான்ஸ் நாடுகளின் தூதர்களும் முதன்முறையாக நினைவு தினத்தில் பங்கேற்றனர்.
கருத்துக்கள்

கொலைகாரர்கள் கூடிக் கொல்லப்பட்டவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கும் நாடகம் எப்போது நிற்கும்? உண்மையிலேயே இரங்கலைத் தெரிவிப்பதென்றால் கொல்லப்படும் நிகழ்வுகளை உடனே நிறுத்த வேண்டும். சப்பான் முதலான நாடுகள் ஈழத்தில் கொத்தணிக்குண்டுகளைப் பயன்படுத்திப் பேரினப் படுகொலை புரிந்ததற்கு வருத்தம் தெரிவிக்க வேண்டும்.அதற்குக் காரணமான தலைவர்கள், அதிகாரிகள், படை யினர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையேல் இந்த நாடகததையாவது நிறுத்த வேண்டும். வேதனையுடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
8/7/2010 5:01:00 AM
உலகின் ஜனநாயகத்தின் பாதுகாவலன் என்று தன்னைத்தானே கூறிக்கொள்ளும் அமெரிக்காவின் கடந்துவந்த பாதைகளை கண்ணுற்றால் அவை அந்நாட்டின் கோரமுகத்தை காட்டும் கண்ணாடியாக விளங்குவதை காணமுடியும். இராண்டாம் உலகப் போரின்போது ஜப்பான் நகரங்களான ஹிரோஷிமா மற்றும் நாகசாகி மீது அணு ஆயுத குண்டுகளை வீசி அழித்தது. அமெரிக்காவின் இந்த அணுஆயுத தாக்குதலில் முதலில் ஹிரோஷிமா மீது வீசப்பட்ட 'லிட்டில் பாய்' என்ற குண்டின் மூலம் ஒரு லட்சத்து நாற்பதாயிரம் பேர் உயிரிழந்தனர். பல்லாயிரம் பேர் கதிர்வீச்சால் பாதிக்கப்பட்டனர். இரண்டாவதாக நாகசாகி மீது 'பேட்மேன்' என்ற அணுகுண்டை அமெரிக்கா வீசியதில் அந்த நகர் நிர்மூலமாக்கப்பட்டதோடு, கதிர்வீச்சால் சுமார் இரண்டு லட்சத்து முப்பதாயிரம் பேர் மாண்டதாக கூறப்படுகிறது. அமெரிக்காவின் அத்தகைய மோசமான மனிதப்படுகொலையின் நினைவு நாள் இன்று அனுஷ்டிக்கப்படுகிறது. அன்று அமெரிக்காவுக்கு ஒரு ஹிரோஷிமா- நாகசாகி; இன்று ஒரு ஈராக்-ஆப்கானிஸ்தான். அமெரிக்க பயங்கரவாதத்தின் முடிவு நாள் எப்போது....? வேண்டாம் அணு ஆயுதம்; வேண்டும் அன்பு எனும் ஆயுதம்.
By nilal
8/7/2010 12:04:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்
வதந்திகளை நம்பவேண்டாம்: மு.க. அழகிரி அறிக்கை


மதுரை, ஆக. 6: இட்டுகட்டி எழுதப்படும் வதந்திகளை யாரும் நம்பவேண்டாம் என்று மத்திய அமைச்சர் மு.க.அழகிரி கேட்டுக்கொண்டுள்ளார்.இது தொடர்பாக மத்திய அமைச்சரும், தென்மண்டல திமுக அமைப்புச் செயலருமான மு.க.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கை:ஒரு சில வாரப்பத்திரிகைகள் தொடர்ந்து இட்டுகட்டி, நினைத்துக்கூட பார்க்கமுடியாத அளவுக்கு அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் நடுநிலை பத்திரிகைகள் என்ற பெயரில் தென்மாவட்டத்தைச் சேர்ந்த கழக பொறுப்பாளர்கள் மற்றும் முன்னணியினர் மீது அவதூறான, ஆதாரமில்லாத செய்திகளை வெளியிட்டு வருகின்றன.இவ்வாறு அவதூறாக செய்தி வெளியிடும் பத்திரிகைகள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.எனவே, இதுபோன்ற அவதூறான, வதந்திகளைப் பரப்பும் செய்திகளை யாரும் நம்பவேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன்.
கருத்துக்கள்

என்ன புரளி என்றே யாருக்கும் தெரியாத சூழலில் இந்தச் செய்தி எதற்கு? அல்லது புரளி என்னவென்றாவது குறிப்பிட வேண்டும். ஒருவேளை அவர்கள் கட்சி மாறுவதாகக் குறிப்பிடுவதைக் குறித்த செய்தியாக இருக்கலாம் எனில் அரசியலில் இதுவெல்லாம் இயற்கைதானே!அதிமுகவினர் கட்சி மாறுவதாக வந்த செய்திகள் உண்மையாயின போல் இப்புரளிகளும் உண்மையாக இருக்கலாம் அல்லவா? இப்படி யெல்லாம் எண்ணாமல் இருக்க வீண் குழப்பம் தரும் செய்தி எதற்கு? 
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
8/7/2010 4:48:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *
தோத்திர கல்வெட்டு திறப்பு



காஞ்சிபுரம், ஆக. 6: காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் ஆலயத்தில் சங்கராச்சாரிய  ஜயேந்திர  எழுதிய அம்மன் தோத்திரக் கல்வெட்டு வெள்ளிக்கிழமை திறக்கப்பட்டது. காஞ்சிபுரத்தில் பிரசித்தி பெற்ற காமாட்சி அம்மன் ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தில் உள்ள காமாட்சி அம்மனை பிரார்த்திக்கும் விதமாக சரஸ்வதி சுவாமிகள் 5 தோத்திரங்களை உருவாக்கியுள்ளார். இந்த தோத்திரத்துடன் ஆதிசங்கரரை பூஜிக்கும் 2 ஸ்தோத்திரங்களையும் படைத்துள்ளார். இவை கல்வெட்டில் பொறிக்கப்பட்டு காமாட்சி அம்மன் ஆலயத்தில் பதிக்கப்பட்டுள்ளன. இதனை சரஸ்வதி சுவாமிகள் திறந்து வைத்தார். அதற்கு முன் அவர் காமாட்சி அம்மன் ஆலயத்துக்குள் சென்று அம்மனை பூஜித்தார். ஆலயத்தில் பூர்ணகும்ப மரியாதை அளித்து அவரை வரவேற்றனர்.
கருத்துக்கள்

மத்திய அரசின் கட்டுப்பாட்டிலுள்ள கோயில்களில் சிறு மாற்றத்திற்குக் கூட இசைவு தராமல் பழைமையைப் பேணுகிறார்கள். எனவேதான், தஞ்சாவூர் பெரிய கோயிலில் அதனை எழுப்பிய இராசஇராச சோழனின் திருவுருவப் படிமத்திற்கு இசைவு தரவில்லை. அதைப்போல் தமிழக அரசும் கோயில்களின் பழமைக்கு முரணாகக் கொலைக் குற்றாளிகள் உட்பட யாராக இருந்தாலும் புதிய கல்வெட்டைப் பதிக்க இசைவு தரக்கூடாது. உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும். கோவிலின் தூய்மை (புனிதம்) காப்பாற்றப்படவேண்டும். இறையன்ப்ர்களின் மனததைப் புண்படுத்தும் இத்தகைய செயல்களை அரசு ஊக்குவிக்கக் கூடாது. 
இறைநெறிமன்றம் சார்பில்
இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
8/7/2010 4:38:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

வெள்ளி, 6 ஆகஸ்ட், 2010

காங்கிரஸ்-திமுக கூட்டணி வலுவாக உள்ளது: கே.வீ. தங்கபாலு



சென்னை, ஆக. 6: காங்கிரஸ் -  திமுக கூட்டணி வலுவாக உள்ளது என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.வீ. தங்கபாலு தெரிவித்தார்.
சென்னையில் அவர் இன்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் இவ்வாறு தெரிவித்தார்.
எங்கள் கூட்டணியை யாராலும் பலவீனப்படுத்த முடியாது. கூட்டணியின் வலிமைக்கு கவசமாகவும், வலிக்கு நிவாரணமாகவும் காங்கிரஸ் கட்சி இருக்கும் என்றார் தங்கபாலு.
 
கருத்துக்கள்

வலியை ஏற்படுத்துபவன் காங்கிரசுக்காரனாம்.அதனை நீக்குவது (அதற்கு நிவாரணமாக இருப்பது )காங்கிரசுக்கட்சியாம். வலியை உண்டாக்குபவனுக்கு வலியை ஏற்படுத்தி வலிமைகூட்டுவோம் எனச் சொல்ல முடியுமா?எந்த அதிகாரமும் இல்லாத அடிமைகள் எதற்குப் பேசுகின்றார்கள் என்றே தெரியவில்லை. 
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
8/6/2010 8:38:00 PM
Yes. Thankabalu is taking all steps to keep the alliance in tact. If the alliance goes, not only DMK, Thankabalu also will be in trouble. So his desire is to keep the alliance in tact.
By karunakaran
8/6/2010 8:22:00 PM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *
கூட்டணியை தலைவர்கள் விமர்சித்தால்... : முதல்வர் "வலி'க்கு காங்., நடவடிக்கை
அமெரிக்கா, பிரிட்டனுக்கு ஆலோசனை கூற தகுதியில்லை: இலங்கை அமைச்சர்


கொழும்பு, ஆக.6- ஆப்கானிலும் ஈரானிலும் 11 லட்சம் மக்களை கொன்ற அமெரிக்காவுக்கும் பிரிட்டனுக்கும் இலங்கைக்கு ஆலோசனை கூற தகுதியில்லை அமைச்சர் சம்பிக்க ரணவக்க கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஜாதிக ஹெல உறுமய கட்சி சார்பில் கொழும்பில் நேற்று நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பு நிகழ்ச்சியில் அக்கட்சியின் பொதுச்செயலரும் அமைச்சருமான சம்பிக்க ரணவக்க இவ்வாறு தெரிவித்ததாக இலங்கைத் தமிழ் இணையதளங்களில் செய்தி வெளியாகியுள்ளது.
மேலும், ஐ.நா. அமைப்பில் அமெரி்க்காவுக்கும் பிரிட்டனுக்கும் எதிரான அணியை உருவாக்குவதற்கான ராஜதந்திர நடவடிக்கைளை மேற்கொள்ளப் போவதாக அக்கட்சியின் எம்.பி. அத்துரலியே ரத்னதேரர் தெரிவித்தார் என்றும் அந்த இணையதளங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துக்கள்

இந்த உண்மையைக் கூறுவதன் மூலமாகவாவது அமெரிக்கா, இங்கிலாந்து முதலான நாடுகளின் நிலைப்பாட்டில் மாற்றம் ஏற்பட்டு விரைவில் தமிழ் ஈழத்திற்கு அறிந்தேற்பு கிடைப்பின் நனறு. வெல்க தமிழ் ஈழம்! முன்னதான வாழ்த்துகளுடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
8/6/2010 8:30:00 PM
WHY SRILANKA MINISTER HAS SPEAKE LIKE THAT BECAUSE ON THEIR BACK CHINA HAS GIVING SUPPORT TO SRILANKA USELESS CONGRESS GOVERNEMNT ALSO SUPPORT TO SRILANKA IN FUTURE SRILANKA WILL ATTACK ONEDAY INDIA LIKE NOW PAKISTAN ATTACK DONT HELP SRILANKA OTHERWISE INDIAN GOVERNMENT ORDERED TO SRILANKA TO SOLVE THE TAMILANS FACING THE PROBLEMS IN SRILANKA CHINA, SRILANKA BASICALLY BUDDHIST RELIGION COUNTRY SO SRILANKA EXPOSE HIS OBJECTION AGAINST AMERICAAND BRITAIN
By v.ramesh
8/6/2010 5:51:00 PM
what he said is 100% true.
By Mohamed N Ismail
8/6/2010 5:07:00 PM
இன்றைய ஒரு செய்தி- சீரி லங்கா மந்திரி ஒரு அராசாங்க ஊழியரை மரத்தில் காட்டிவைத்து தண்டனை கொடுத்தார் ஏனென்றால் அரசாங்க ஊழியர் சொன்ன வெலையை செய்யவிலை. இதுதான் சீரீ லங்கா. இந்த இடத்தில் நீதி, ஞாயம், தர்மம் .. எல்லாம் எடுபடாது. காட்டு மிராண்டிகள் போல் நடக்கிரார்கள். இந்திரா கந்தி காலத்தில் இந்தியா அமெரிக்காவை இந்த சீரீ லங்க காட்டுமிராண்டிகள் போல் எதிர்த்து. பயன் என்ன தெரியுமா -இந்தியாவின் பொருளாதாரம் சரிந்தது. உலகளவில் இந்தியா ஒதுக்கப்பட்டது. எந்த ஒரு தலைவரும் நாடு குறித்து சிந்தித்து செயல் பட வேண்டும். அதை மன்மோஹன் சிங் செய்கிரார். அவருக்கு வாழ்த்துக்கள். ஆனால் இவரின் ஈழ செயல்களை ஏற்றுக்கொள்ள முடியாது.
By அப்பாவி தமிழன்
8/6/2010 4:37:00 PM
இந்த இலங்கைக்காரனும், பாகிஸ்தான்காரனும் எவ்வளவு தைரியமாக அமெரிக்காவை எதிர்த்து பேசுகிறார்கள். ஆனால் மன்மோகன்சிங் அமெரிக்காவுக்கு சலாம் போடுகிறான். தைரியமற்ற காங்கிரஸ் கோழை. அமெரிக்காவுக்கு சலாம் போட்டு நாட்டை கேவலப்படுத்துகிறான். வெளிநாட்டு வெள்ளைக்காரி சோனியாவும் இதற்கு உடந்தை. இந்த இரு கேவலமான பிறவிகளையும் நாடு கடத்தணும். அப்போதான் நாடு உருப்படும்.
By பிறவி
8/6/2010 4:12:00 PM