வெள்ளி, 10 நவம்பர், 2017

வகுப்பறையில் தொடங்கும் நல்ல மாற்றங்களே மன்பதையையும் மாற்றும் ஆற்றல் படைத்தது! – மு.முருகேசு

வகுப்பறையில் தொடங்கும் நல்ல மாற்றங்களே   மன்பதையையும் மாற்றும்  ஆற்றல் படைத்தது!

– கவிஞர் மு.முருகேசு


 வந்தவாசி.நவ.05. வந்தவாசி அரசுக் கிளை நூலகத்தின் நூலக வாசகர் வட்டம்,  எசு.ஆர்.எம்.இன்போடெக்கு கணிணிப் பயிற்சி மையம்ஆகியன இணைந்து நடத்திய கல்வி நூல் வெளியீட்டு விழா, நூலகத்திற்கான அதிக உறுப்பினர்களைச் சேர்த்த ஆசிரியர்களுக்குப் பாராட்டு விழா, நூலகத்திற்கான தளவாடப் பொருட்கள் வழங்கும் விழா ஆகிய முப்பெரு விழாவில், வகுப்பறைச் சூழலில் குழந்தைகளின் மனநிலையில் ஆசிரியர்கள் உண்டாக்கும்  நல்ல மாற்றங்களே நாளைய சமூகத்தையும் மாற்றும் ஆற்றல படைத்தது என்று நூலக வாசகர் வட்டத்தின் தலைவர் கவிஞர் மு.முருகேசுபேசினார்.
  இவ்விழாவில் பங்கேற்ற அனைவரையும் கிளை நூலகர் பூ.சண்முகம்வரவேற்றார்.
 வந்தை வட்டக்  கோட்டைத் தமிழ்ச் சங்கத் தலைவர் அ.மு.உசேன், எசு.ஆர்.எம். இன்போடெக்கு முதல்வர் எ.தேவா ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
  விழாவில், ஆசிரியர் சசிகலா உதயகுமார் எழுதிய ‘இது எங்கள் வகுப்பறை’ என்னும் கல்வி நூலினை பாரத  அரசு வங்கி வந்தவாசிக் கிளை முதன்மை மேலாளர் பி.மகேந்திரவர்மன் வெளியிட, இராமலிங்கம்  குழுமம் உரிமையாளர் இரா.சிவக்குமார்பெற்றுக்கொண்டார்.
   விழாவிற்குத் தலைமையேற்ற  நூலக வாசகர் வட்டத் தலைவர் கவிஞர் மு.முருகேசு பேசும்போது,
   “ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்குமான உறவென்பது நட்பு முறையாக  இருக்கும்போது, அங்கு கற்றல் என்பதே மிகவும் இனிப்பான ஒன்றாக மாறிவிடும். இன்றைய தலைமுறை மாணவர்கள் மிகவும் விழிப்புணர்வோடும் அறிவியல் கருவிகளைச் சிறப்பாக கையாள்பவர்களாவும் இருக்கிறார்கள்.
  அவர்களிடம் ஆசிரியர்கள் அன்பாக பழகும்போது மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்குமான இடைவெளி என்பதே இல்லாமல் போகிறது. ஓர் ஆசிரியரின் வகுப்பறை  பட்டறிவுகள் அவ்வப்போது முகநூலில் இடம்பெற்று, அஃது இன்று ஒரு நூலாகவும் வெளிவருவது, அறிவியல் தொழில்நுட்பத்தை ஆக்கச் செயல்பாடுகளுக்கு எப்படியெல்லாம் பயன்படுத்தலாம் என்பதற்கான மிகச் சிறந்த எடுத்துக்காட்டாகும்.
   ஒவ்வொரு நாளும் வகுப்பறைக்குள் நுழையும் ஆசிரியர், தன்னை மாணவர்கள் விரும்பும்  ஓர் ஆசிரியராக ஆக்கிக் கொள்வதற்கு என்னவெல்லாம் செய்ய வேண்டுமென்பதை நூலாசிரியர் சசிகலா, வெகுஎளிமையாகப் பதிவு செய்துள்ளார். குமுகாய(சமூக) மாற்றத்திற்கு வித்திடுபவர்களாக ஆசிரியர்கள் இருந்திருக்கிறார்கள். அந்த வகையில் இந்த நூலும் ஆசிரியர்கள் மத்தியில் நல்ல பல விளைவுகளை உண்டாக்குமென்று உறுதியாக நம்புகின்றேன். வகுப்பறைச் சூழலில் குழந்தைகளின் மனநிலையில் ஆசிரியர்கள் உண்டாக்கும் நல்ல மாற்றங்களே, நாளைய குமுகாயத்தையும் மாற்றும் ஆற்றல் படைத்தது என்பதை உணர்ந்து ஆசிரியர்கள் செயல்படும்போது, குமுகாயம் இன்னும் மேம்பட்ட குமுகாயமாக மாறுவது உறுதி.”
என்று குறிப்பிட்டார்.
  விழாவில், உரூ.10,500/- மதிப்புள்ள இரும்பு நெடும் பேழை ஒன்று வந்தவாசி  அரசு வங்கியின் சார்பாக நூலகத்திற்கு  இலவசமாக வழங்கப்பட்டது.  உரூ.1,000/- செலுத்தி நூலகப் புரவலராக இணைந்த ஆசிரியர் சி.துரை, வந்தவாசி வட்டத்திலுள்ள அரசு- தனியார் பள்ளிகளைச் சேர்ந்த  2598 மாணவர்களை நூலக உறுப்பினர்களாகச் சேர்த்த பள்ளியினர்  பாராட்டப் பெற்றனர்.
  விழாவில், அத்திப்பாக்கம் அரசு உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் பெ.வேதபிரகாசு,  ஆசிரியர்கள் மீனாட்சி,  செ.திவாகர் ஆகியோரும் ஏராளமான பள்ளி மாணவ- மாணவியரும் கலந்துகொண்டனர்.
           நிறைவாக, ஊர்ப்புற நூலகர்  சா.தமீம் நன்றி கூறினார்.
  • வந்தை அன்பன்

வியாழன், 9 நவம்பர், 2017

நமது தேவை நவோதயா பள்ளி அல்ல! தாய்த்தமிழ்ப்பள்ளிகளே! – இலக்குவனார் திருவள்ளுவன்

பெட்டகம்

நமது தேவை நவோதயா பள்ளி அல்ல! தாய்த்தமிழ்ப்பள்ளிகளே!

இந்தியா என்பது இன அடிப்படையிலோ மொழி அடிப்படையிலோ இயற்கையாய் அமைந்த நாடன்று. அயலவர் ஆட்சி நலனுக்காக உருவாக்கப்பட்ட செயற்கை அரசமைப்பு. இந்த அமைப்பு அனைத்துத் தேசிய இனங்களின் கூட்டமைப்பாகச் செயல்பட்டால் வலிவும் பொலிவும் மிக்கதாக விளங்கும். மாறாக ஒரே மொழி ஒரே நாடு என்ற அடிப்படையில் இன அழிப்பு முயற்சியில் ஈடுபட்டால் சிதைவுண்டு போகும்
  ஆனால் இந்தியாவிற்கு அமைந்த நலக்கேடு என்னவெனில் மத்திய அரசு எப்பொழுதும் நாட்டு ஒற்றுமையைப் பேசிக் கொண்டே ஆரிய அரசாகச் செயல்படுவதுதான். அதன் இந்தித் திணிப்பு முயற்சிகளும் ஆரிய ஆட்சிக்குப் படிக்கட்டுகளாகத்தான் கருதி மேற்கொள்ளப்பட்டு வருகின்றன
  இந்தியத் துணைக் கண்டத்தின் விடுதலைக்கும் ஒற்றுமைக்கும் தென்னாட்டவரும் குறிப்பாகத் தமிழ் நாட்டவரும் பெரிதும் உயிரும் உடைமையும் ஆட்சியும் மாட்சியும் இழந்து பாடுபட்டு உள்ளனர்; இருப்பினும் இந்திய வரலாறு என்றாலேயே வடவர் வரலாறு என்னும் போக்கிலும் இந்திய நிலப்பகுதி மொழி எனில் சமசுகிருத மேலாண்மைக்கு வழி விடுவதற்கான இந்தி என்றும் நடந்து கொள்வதுதான் காங்கிரசு எனப்படும் பேராயக் கட்சியின் மாறாக் கொள்கையாக உள்ளது. எனவேதான் விடுதலைக்கு முன்பிருந்தே சமசுகிருதத்தையும் இந்தியையும் திணித்து வந்தது; குடியரசாக நம் நாட்டு அரசியலமைப்பு அமைந்த பின்னும்   செயற்கையான ஒரு வாக்கு வேறுபாட்டில் இந்தியைத் திணித்தது. இந்தி ஒன்றுதான் நாட்டு மக்களின் தேசிய மொழி என்னும் தவறான பரப்புரையையும் எக்காலத்தும் மக்களின் பேச்சு மொழியாக இல்லாத சமசுகிருதத்திற்கு மிக மிகக் கூடுதல் நிதி ஒதுக்கீட்டையும் வழங்கி மக்களின் வரிப்பணத்தை வீணடித்து வருகிறது.
  அவற்றின் ஒரு பகுதிதான் இந்தியைத் திணிக்க வில்லை எனக் கூறிக் கொண்டே இந்தியைத் திணித்து வருவது. இந்தித் திணிப்பால் 1967 இல் தமிழ் நாட்டில் ஆட்சியை இழந்த பின்னும் தன் தவறான பரப்புரையால்  தேசிய மொழி பற்றிய தவறான விதைகளை விதைத்துவிட்ட செருக்கில் நவதோயா பள்ளிகள் மூலம்  தமிழை அழிக்க மூக்கை நீட்டிப் பார்க்கிறது.
  தமிழக அரசின் மொழிக் கொள்கை இரு மொழித் திட்டம் எனத் திட்டவட்டமாக அறிவித்து நவோதயா பள்ளிகளுக்குத் தமிழ் நாட்டில் இடம் இல்லாமல் செய்து விட்டதைக் காங்கிரசால் தாங்கிக் கொள்ள இயலவில்லை. மத்தியில் தற்போதைய ஆட்சி அமைந்தது முதல் நவோதயா பள்ளிகளைத் தமிழ்நாட்டில் தொடங்க வலியுறுத்தி வருகிறது. மத்திய அமைச்சர் கபில் சிபல் வெளிப்படையாகவும் பன்முறை பேசி உள்ளார். இருந்தும் தமிழ்நாட்டின் அரசு அசையாமையால் தேர்தல் சூழலைப் பயன்படுத்தித் தன் முயற்சியில் வெற்றி பெறலாம் எனக் கருதிக் காங்கிரசுச் சட்ட மன்ற உறுப்பினர்கள் மூலம் கோரிக்கை வைத்துக் கொண்டிருக்கிறது.
  நவோதயா பள்ளிகளில் தமிழ்வழியில் படிக்கலாம்; இந்தித் திணிப்பு இல்லை; பள்ளி ஒன்றிற்கு இருபது கோடி உரூபாய் வீதம் மாவட்டத்திற்கு ஒரு நவோதயா பள்ளி நடத்துவதன் மூலம் தாழ்த்தப்பட்டவர்களும் பிற்படுத்தப்பட்டவர்களும் சிற்றூர்ப் பகுதியினரும் மிகுதியாய்ப் பயன் பெறுவர்; இவைதான் இந்திக்கு வால்பிடிப்போர் கூற்று. சட்டமன்றத்திலேயே பொய்யான தகவல்களைக் கூறும் இவர்களை என்னவென்று சொல்வது?
  நவோதயா பள்ளி என்பது 6 ஆம் வகுப்பில் இருந்து உள்ள மேனிலைப்பள்ளியாகும். எடுத்த உடன் ஆங்கில வழியையும் இந்தி வழியையும் திணிக்க வேண்டாம் என்பதற்காக 6 ஆம் வகுப்பிலும் 7 ஆம் வகுப்பிலும் மாநில மொழிகளில் பாடம் கற்பிக்கப்படலாம். ஆனால் மெல்ல மெல்ல மாணவர்களை அயல்மொழிக் கல்விக்கு ஆயத்தப்படுத்தி 7 ஆம் வகுப்பு அரையாண்டுத் தேர்விற்குப் பின் ஆங்கில வழிக்கு  மாறும் வகையில்தான் கல்வித் திட்டம் உள்ளது. 9 ஆம் வகுப்பில் இருந்து அறிவியல் பாடமும் கணக்குப் பாடமும்  ஆங்கிலத்திலும் சமூக அறிவியல் பாடம் இந்தியிலும் இருக்கும்.
  பின்னர் ஆங்கில வழியாகவும் இந்தி வழியாகவும் படிக்க இருப்பதால் முதலில் இருந்தே அந்த மொழிகளில் படிக்கத்தான் யாவரும் விரும்புவர். இருப்பினும் முதலில் கூறிய பின்பு தொடக்க ஆண்டுகளில் தாய்மொழி வாயிலாகவும் சொல்லித் தருகின்றனர். எனவே இதனைத் தாய்மொழி வாயிலான கல்வி என்றோ தமிழ்நாட்டில் தமிழ்மொழி வாயிலாகக் கற்பிக்கப்படும் என்றோ கூறுவது தவறாகும்.
  தமிழ்நாட்டில் நவோதயா பள்ளிகளைத் தொடங்கினால் வடக்கே மும்மொழித் திட்டத்தின் கீழ்த் தமிழ் கற்பிக்கப்படும் வாய்ப்பு கிட்டும் என்றும் அடுத்த பொய் மூட்டை அவிழ்த்துவிடப்படுகிறது.
  1985 இல் நவோதயா பள்ளி அறிமுகப்படுத்துவதற்கு முன்பிருந்தே மும்மொழித்திட்டம் உள்ளது. ஆனால் இது வரை எந்த ஓர் ஆண்டிலும் மும்மொழித்திட்டத்தின் கீழ் வட நாட்டில்  தமிழோ பிற தென்னிந்திய மொழிகளோ கற்பிக்கப்படவில்லை என்பதை நிதிநிலை அறிக்கைகள் தெளிவாகக் காட்டுகின்றன.  நவோதயா பள்ளியை இங்குத் தொடங்கினால் வடக்கே தமிழ் கற்பிக்கப்படும் எனக் கூறும் மேதையர் புதுச்சேரியில் நவோதயா பள்ளிகள் இருக்கின்றனவே! ஏன் அம்மாநில மக்கள் மொழியான தமிழ் வடக்கே கற்பிக்கப்படவில்லை என்பதை விளக்குவார்களா?
  புதுச்சேரி நவோதயா (வித்யாலயா) பள்ளியின் பாடத்திட்டங்களைப் பார்த்தால் தமிழுக்கான பாட நேரம் குறைவாகத்தான் உள்ளது. அது மட்டுமல்ல! இந்தி முதலான பிற துறைகளின் ஆசிரியர்கள் முழு நேர ஆசிரியர்களாக உள்ளனர். ஆனால் தமிழுக்கு அவ்வாறு இல்லை.
  இந்தியா முழுவதும் 600 நவோதயா பள்ளிகள் உள்ளன. எவற்றிலுமே (இந்தி நீங்கலான) மாநிலத்தாய்மொழி முதன்மையாக  இல்லை. எனவே, பாட மொழி பற்றிய கருத்தையும் தவறாகவே பரப்பி வருகின்றனர்.
 கல்வித்துறை என்பது மாநிலப் பட்டியலில் இருக்கவேண்டும். அவ்வாறு இல்லாமல் பொதுப்பட்டியலுக்கு மாற்றியதால்தான் இந்த அவலங்கள் தொடருகின்றன. நவோதயாவிற்கு வால் பிடிக்காமல் பேராயக் கட்சியினர் அதற்கான நிதி ஒதுக்கீட்டைத் தமிழ் நாட்டில் தமிழ் வழிப் பள்ளிகளுக்குப் பெற்றுத்தர ஏற்பாடு செய்ய வேண்டும். மாவட்டத்திற்கு ஓர் அரசு புத்தியல் பள்ளி என மாவட்டந்தோறும் பள்ளிகள் தொடங்க மத்திய அரசின் பொருளுதவி கிடைத்தால் தமிழ்வழிக்கல்வி வளம் பெறும்; அறிவியல் அறிஞர்களும் பிற துறை அறிஞர்களும் தமிழ் நாட்டில் பெருகுவர்.
  அரசு மருத்துவமனைக்குத் தங்கள் தலைவர் பெயர் வைத்ததாலேயே அரசு இதற்கும் உடன்படும் எனப் பேராயக் கட்சியினர் தப்புக் கணக்கு போடக் கூடாது. எனவே, நவோதயா வித்யாலயா நிதியுதவியைத் தமிழ்நாட்டின்  தமிழ்வழி அரசு பள்ளிகளுக்குப் பெற்றுத்தராமல் இந்திப்பள்ளியை இறக்குமதி செய்யச்சதி செய்தால் அடியோடு காணாமல் போக நேரிடும் என்பதை அவர்கள் உணர வேண்டும்.
 பேராயக்கட்சியானது தமிழர்கள் இளிச்சவாயர்கள், மானங்கெட்டவர்கள், கொத்தடிமைகள் என எண்ணிக்கொண்டு தன்னுடைய தேர்தல் அறிக்கையிலேயே நவோதயா பள்ளியைத் தமிழகத்தில் திறப்பதைக் கொள்கையாக அறிவித்துள்ளது. இந்த ஒரு காரணத்திற்காகவாவது நாம் அக்கட்சியை அரசியலில் இருந்து அகற்ற வேண்டும். நவோதயா பள்ளிக்கான நிதி நல்கைகளைத் தாய்த்தமிழ்ப் பள்ளிகளுக்கு வழங்க வகை செய்ய வேண்டும். மாவட்டத்திற்குக் குறைந்தது ஒரு தமிழ்வழிக் கல்வியான  கல்விக்கூடத்தையாவது அனைத்து வசதிகளுடனும் கட்டணமின்றியும் சிறப்பான முறையில் உருவாக்க வேண்டும்.
தமிழ்வழிக் கல்வி நமது பிறப்புரிமை!
பிற மொழித் திணிப்பு எதிர்ப்பு நமது காப்புரிமை!
– இலக்குவனார் திருவள்ளுவன்
  • நட்பு, மீனகம் இணையத்தளங்கள், பங்குனி 2042 / ஏப்பிரல் 2011

MCC should not insult Tamils by inviting ‘Sri Lankan’ envoy: Deputy CM of Penang

MCC should not insult Tamils by inviting ‘Sri Lankan’ envoy: Deputy CM of Penang


The Deputy Chief Minister of Penang state in Malaysia Professor P. Ramasamy, who is a long time advocate of the rights of Eezham Tamils, on Wednesday condemned the Malaysian Ceylonese Congress (MCC) for inviting the SL High Commissioner to Malaysia to grace a biennial dinner, which is being organised on November 25, 2017. The Chief Minister of Penang has also been invited to deliver a keynote address at the dinner. “I am not sure whether the Chief Minister of Penang would be accepting this invitation. However since the Penang state government has taken a strong stand against the Sri Lankan government for its abuse of human rights among Tamils, it is unlikely that he will attend,” the Deputy CM said. 


Professor P Ramasamy
Professor P Ramasamy

“It is a terrible shame that the members of the MCC have no feelings towards the sufferings of Tamils” in the island from which they emigrated during the times of British colonisation, Professor Ramasamy said. 

“This is not an ordinary invitation for dinner,” he said. 

“Such an invitation to Sri Lankan official would gives the impression that that the government there has played its part in restoring normalcy to affected Tamil areas due to civil war,” Professor Ramasamy added. 

The Deputy Chief Minister is a former professor of politics at the University of Malaysia. 

He participated as a member of Eezham Tamils Constitutional Affairs Committee during the internationally mediated talks between the LTTE and the GoSL and was instrumental in working out the blueprint of the proposals for an Interim Administration for the Northeast (ISGA) along with other Tamil legal experts in 2003. 

Further extracts from his comments follow:

“The reality is that hundreds and thousands of Tamils have not returned to their homes. In the north, the Sri Lankan army continues to occupy houses belonging to Tamils. 

“Individuals and families disappeared during the civil war have not been accounted for.

“To date, despite international outcry, human rights abuses amounting to genocide have yet to be investigated and perpetrators brought to justice.

“Given this situation in Sri Lanka it is completely irresponsible for MCC to work closely with the Sri Lankan government or even think of inviting its officials to participate in their functions.

“I am sure many close relatives of those in the MCC were affected by the civil war that was thrust upon on Tamils in the name of defeating the Tamil Tigers.”




Related Articles:

Colombo's NGO coordinator issues threats to freedom of association in Batticaloa

Colombo's NGO coordinator issues threats to freedom of association in Batticaloa


SL Government-operated NGO Secretariat is again threatening the local civil groups, NGOs and Community-Based Organisations (CBOs) in Batticaloa district against taking part in the protests being organised by the kith and kin of the enforced disappeared, civil activists in the district said. Mr P.S. Sylvester, the chairman of the so-called Federation of Civil Organisations in Batticaloa District, an outfit recently launched by SL Minister Mano Ganesan's NGO Secretariat, is behind the intimidation. Colombo regime wants to completely dismantle the already functioning federation, which is known as I'naiyam. 

Sylvester has also suspended the secretary of the group Mr T. Sivaloganathan from his duties until further notice. 

In the meantime, he has sent a letter to SL Government Agent in Batticaloa urging the GA to officially scrap other umbrella groups such as I'naiyam. 

Sinhala Government Agent of Trincomalee is currently serving as the acting GA for Batticaloa. 

There are 54 registered NGOs operating in Batticaloa district. Of these, 7 NGOs are branches of International NGOs and 3 come under the UN System.

36 of these organisations are already organised under the independent I’naiyam.

The SL Government-run ‘federation’ of civil groups started to operate since 31 May, 2017. 

Many of the CBO activists were involuntarily coerced to take part in the ‘federation’ move as they the move was coming from the ‘National Secretariat’, which regulates registration of NGOs, CBOs and civil groups.

The National Secretariat of NGOs was initially created as an advisory body in 1988 and was placed under the SL Ministry of Health and Social Services. It was defunct for a long time. 

During the times of genocidal war, the SL State, especially former SL Defence Secretary Gotabhaya Rajapaksa took over the control of registration and the provision of permissions for NGOs to operate in the North-East.

Even the Rajapaksas didn’t go to the extent of drafting constitutions and running State-operated federations of local NGOs, CBOs and civil groups at the district-level of the occupied country of Eezham Tamils.




Related Articles:


Chronology:


புதன், 8 நவம்பர், 2017

தொலைத்தகவல் (Telematics) பயன்பாடு-சிறப்புப் பார்வை 1/3 சிறுமி பேரரசி முத்துக்குமார்

தொலைத்தகவல் (Telematics) பயன்பாடுசிறப்புப் பார்வை 1/3


முன்னுரை
  உலக நாடுகளின் அறைகூவல்களை(சவால்களை) எதிர்கொள்ள ஒவ்வொரு நாடும்   புது உத்திகளைத் தகவல் தொழில் நுட்பத்துறையில் மேற்கொண்டு வருகிறது. இந்த உத்தியின்  உயிர்நாடி  தகவல் தொழில் நுட்பத்தில் தொலைத்தகவல் பயன்பாடாகும். 2017 மலேசிய உலகத் தமிழ் இணைய மாநாட்டில் மலர்ந்த குறள் வெண்பா இணையக்குறளான
உளம்புகு முதுமொழியே நின்தன் ஆளுமை
இணையத் தளம்புகுவே மாமகுடம்
(வெண்பா இணையக்குறள், 2017)
எப்படித் தமிழ் இணையமொழியாக களம் புகுந்ததோ அப்படி தொலைத்தகவல் பயன்பாடும் பல துறைகளில் பீடு நடை போட புயலெனப் புறப்பட்டுள்ளது. உலக நாடுகளைப் போலவே மலேசிய நாட்டில் தொலைத்தகவல் பயன்பாடு அதிகரித்துள்ளது. இதில் குறிப்பிடத்தக்கது கல்வித்துறையாகும். தொலைத்தகவல் உதவி பல படிநிலைகளில் துணைபுரிகிறது. குறிப்பாக மின்னஞ்சல், கலைக்களஞ்சியம், மின் நூலகம் ஆகியனவற்றைக் குறிப்பிடலாம்.

தகவல் தொழில் நுட்பத்தில் தொலைத்தகவல் (Telematics) நுட்பம்
 பொதுவாகத் தகவல் தொழில்நுட்பம் இரண்டு முதன்மை அடிப்படைக்கூறுகளைக் கொண்டுள்ளது. ஒன்று பரந்த ஒருங்கிணைந்த தொழில்நுட்பம் தொழிற்துறைக்கு முதன்மை த்துவம் வாய்ந்ததாகவும் மற்றொன்று கணிணி தொலைத்தொடர்பு தொழில்நுட்பமாகவும் உலக மானிட வாழ்க்கைக்கு அரிய சேவைகளை வழங்கி வருகிறது. கணிணி தொலைத்தொடர்பு தொழில்நுட்பம் உலகத் தொடர்புத்துறையின் தொலைவைக் குறைத்து பயன்பாடுகளை அதிகரித்திருக்கிறது.
     தொலைத்தகவல் (Telematics) தொழில்நுட்ப மாற்றத்தை அதன் பயன்பாட்டிலிருந்தே உருமாற்றம் செய்துள்ளது. அஃதாவது தொலைபேசியின் ஒலியைக் குரல், தரவுகள், கருத்து, படங்கள் ஆகிய வடிவில் உருமாற்றம் செய்வதோடு மட்டுமல்லாமல் கணிணி என்ற பண்பணியை மேற்கொள்ளும் ஓர் இயந்திர வடிவிலான செயலியை இயக்கம், சேமிப்பு, தரவுகள் பயன்பாடு, கருத்துகள், படங்கள், ஒலி ஆகிய கூறுகளைக் கொண்டு தகவல்களைப் பரிமாறிக்கொள்ள துணைபுரிகிறது என்பது தெளிவு. எனவே கணிணியின் இவ்வனைத்துத் தகவல்களும் ஒன்றிலிருந்து மற்றொரு கணிணிக்கு அனுப்பப்படுகிறது. இந்தத் தகவல் பரிமாற்றமானது நுண்மின்னணு புத்தாக்கக் கண்டு பிடிப்பாக உருவெடுத்துள்ளது.
இன்றைய தொலைத்தகவல் நுட்பங்கள்
  தொலைத்தகவல் நுட்பங்கள், கல்வி தொலைத்தகவல்(Educational Telematics), வாகனத் தொலைத்தகவல் (Vehicle Telematics) காப்புறுதித் தொலைத்தகவல்  (Insurance Telematics) நல்வாழ்வுத் தொலைத்தகவல்(Health Telematics) மனிதநேயத் தொலைத்தகவல்  (Human Telematics) சமூகத் தொலைத்தகவல்(Social Telematics) என்று வகைப்படுத்தப்பட்டிருக்கின்றன.
 கல்வியில் தொலைத்தகவலியல் (Educational Telematics)
   தொலைத்தொடர்பு, தகவல் தொடர்பு சொற்களின் ஒரு கலவையாக ‘தொலைத்தகவல்’ விளங்குகிறது. [“Telematic is a Telecommunicating combined with informatics, constitutive part of ICT and Emerging Telecommunication and Informatics Application”]
      ஆகவே தொலைத்தகவல், விரிந்த பரந்த உலகில், தகவல் தொடர்பு தொழில் நுட்பத்துடன் தேவையான தொலைத்தொடர்புகளின் ஒருங்கிணைந்த பயன்பாடாக மிளிருகிறது. (Telematics technology – Dog pile Web Search.html). உலகக் கல்வித்துறையில் தொலைத்தகவல் என்பது புதிய வரவாகும். கணிணி மூலம் மனிதர்கள் வெவ்வேறு இடங்களில் ஒருவர் ஒருவரோடு, ஒருவர் சிலரோடு அல்லது பலர் பலரோடு தொடர்பு கொள்ளலாம். சில நாடுகளில் அறிமுகம் ஆகியிருந்தாலும் இன்னும் பல நாடுகளில் தொலைத்தகவல் பயன்பாடு மழலைப் பருவத்திலே தவழ்ந்து கொண்டிருக்கிறது.
     ‘’தொலைத்தகவலியல் பயன்பாடு முன்னேற்றமடைந்த அமெரிக்கா, கனடா போன்ற நாடுகளில் தகவல் தொடர்புத் துறையில் புரட்சியை ஏற்படுத்தினாலும் வளரும், வளர்ந்து கொண்டிருக்கும் நாடுகளிலோ(மலேசியா, இந்தியா) வகுப்பறைப் பயன்பாட்டில் குறைவான பங்கினையே வழங்குகிறது. இதற்குச் சான்றாக அமைவது பள்ளிகளில் அதிகமாகப் புத்தகப் பயன்பாட்டே கற்றலுக்கு பயன்படுத்தப்படுவதாகும் (கங்காதரன், 2017).
    தொ3/T3, (1999) ஆய்வின்படி தொலைத்தகவல்பயன்பாட்டில் முதன்மைப் பங்கை வகிக்கும் அறிவியல், கணிதம், மொழி ஆகியன சில பகுதிகளாக வகுக்கப்படுகின்றன. அவை முறையே பாட வகை, பயிற்சித் தலைப்பு, ‘தொலைத்தகவல்’ முதல் உருவாக்கம், முதல் உருவாக்க நாடு ஆகியனவாகும்.

.கா: 1
கவனம் செலுத்தும் பாடம்பயிற்சித் தலைப்புதொலைத்தகவல் முதல் உருவாக்கம்முதல் உருவாக்க நாடு
மொழிதொழில்நுட்ப ஒருங்கிணைப்புwww._________இங்கிலாந்து
.கா: 2
தொடக்கப்பள்ளி குழந்தைகளுக்கான ஆவணம்-தகவல் மையம்(CEDK – Centre of Documentation and information on the child) hppt://www.icc.ominho.pt/cedia
(தொடரும்)
பேரரசி முத்துக்குமார் (ஐந்தாம் ஆண்டு)
(Pehrarasi Muthukumar)
 மகா கணேசா வித்தியாசாலை தமிழ்ப்பள்ளி 32000 சித்தியாவான்,
பேராக்கு.

Floods displace uprooted Valikaamam North families in Jaffna

Floods displace uprooted Valikaamam North families in Jaffna


75 of 125 displaced families (60%) so far displaced due to floods caused by intermittent monsoon rains in Jaffna are people who have been uprooted from Valikaamam North three decades ago and who have been residing in the so-called welfare camps, District Secretariat civil sources in Jaffna said. While the occupying military of genocidal Sri Lanka has refused to consider further release of lands from the ‘military zone’ surrounding the Palaali army cantonment, around 100,000 people have been uprooted from their houses, fertile soil for agriculture and the coast with access to the fish-rich seabed. The most deprived among the uprooted live in 34 so-called welfare camps. One of the camps, located at Polika'ndi in Vadamaraadchi North, has been severely affected by the floods. They are now sheltered at the Multi Purpose Cooperative Society building, the sources further said. 


Uprooted people affected by floods in Jaffna

Almost all the ‘welfare camps’, including the one SL President Maithiripala Sirisena visited early last year promising speedy resettlement, have been affected by the floods. 

Mr Sirisena didn't fulfil what he pledged. Only a few pockets, and that too as planned under the Rajapaksa regime, have been released. 

Now, the SL military has stated that there would be no further release of even the pockets of lands for a two-year period. 

The SL military stopped the process of releasing further lands when the SL State was given two-years postponement in Geneva, commented Suntharam Subramaniam, the chairman of Mayiliddi Uprooted Peoples’ Organisation.

In the meantime, occupying SL military and the officials employed by the unitary State have been trying to deceive the uprooted people to opt for alternative lands elsewhere. 


Uprooted people affected by floods in Jaffna



The Provincial Council doesn't have enough powers to intervene in the process of resettlement or land issues. 

It is under these circumstances the uprooted people from Vasaavi'laan and Palaali South took to the streets on Sunday demanding answers from SL President who is also the Commander-in-Chief of the occupying Sinhala armed forces. 

The occupying military is doing farms and is housing its family members from South in their occupied properties, the protesting people told media amidst pouring rains. 


Data from District Secretariat in Jaffna on uprooted landowners in the district
Data from District Secretariat in Jaffna on uprooted landowners in the district



The extent of private lands occupied by the military of genocidal Sri Lanka in Vali North stands at 4,589 acres, according to the data from the District Secretariat. 

There are at least 7,900 private landowners, still uprooted from Valikaamam North in Jaffna division, according to the data from Jaffna District Secretariat from April 2017. 

However, in reality, the number is at least two to three times high, as the figure of landowners doesn't count the number of current family units within the concerned lands. 


Uprooted people affected by floods in Jaffna
Uprooted people affected by floods in Jaffna
Uprooted people affected by floods in Jaffna



Related Articles:


Chronology: