செவ்வாய், 29 டிசம்பர், 2020

இராமநாதபுரம் தமிழ்ச் சங்கத்தில் இலக்கிய விழா

 அகரமுதல



 


இராமநாதபுரம் தமிழ்ச் சங்கத்தில் இலக்கிய விழா மார்கழி 12, 2051 / 27.12.2020 ஞாயிற்றுக்கிழமை காலை அரவிந்து அரங்கத்தில் நடந்தது. இந்த விழாவானது தமிழ்ச்சங்க முன்னாள் துணைத் தலைவர் அமரர் த. குழந்தை(ச் செட்டியார்) அவர்களின் 27 ஆம் ஆண்டு நினைவு இலக்கிய விழாவாக நடந்தது.

இந்த விழாவுக்குச் செயலாளர் மரு. பொ. சந்திரசேகரன் தலைமை வகித்தார்.

தொடக்கமாக இறைவாழ்த்து, தமிழ்த்தாய் வாழ்த்துகளை இலதா சேசாத்திரி பாடினார். விழா அறிமுகத்தையும் வரவேற்பையும் தலைவர் பேராசிரியர் மை. அத்துல் சலாம் கூறினார்.

மகளிர் அணித்தலைவி மரு. திருமதி மதுரம் அராவிந்தராசு அமரர் த. குழந்தை(ச் செட்டியார்) படத்தைத் திறந்து வைத்தார்.

சாத்தூர் மரு. த.அறம் சிறப்புச் சொற்பொழிவு நிகழ்த்தினார்.

பார்த்திபன், சந்தக் கவிஞர் நா.வேலுச்சாமி துரை, இரா. இராம்மோகன், கே. செந்தில் குமார் முதலனாோர் உரை நிகழ்த்தினர்.

தமிழக அரசின் ‘தமிழ்ச் செம்மல்’ விருது பெற்ற தமிழ்ச் சங்கத் தலைவர் பேராசிரியர் மை. அத்துல் சலாம் நினைவுப் பரிசு வழங்கிச் சிறப்பிக்கப்பட்டார்.

வழக்கறிஞர் ஆ. இரவிச்சந்திர இராமவன்னி, அ. அபீபா அத்துல் சலாம், கா. இராமகிருட்டிண சுவாமிகள், பாத்திமா சின்னத்துரை, தமிழரசி உதயக்குமார் முதலானோர் அவரவர் துறைகளில் சிறந்து விழங்கியதற்காக விருது வழங்கிச் சிறப்பிக்கப்பட்டனர். விருதாளர்களைக் கு.விவேகானந்தன் அறிமுகம் செய்து வைத்தார்.

கு. இளங்கோவன் நன்றியுரை நிகழ்த்தினார்.  காளீசுவரி சுகுமார் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார். துணைத்தலைவர் மு.ச. கருணாநிதி, பொருளாளர் கா. மங்கள சுந்தரமூர்த்தி ஆகியோர் விழாவை ஒருங்கிணைத்தனர்.

நிகழ்ச்சியில் பொற்கிழிக் கவிஞர் இளையான்குடி மு. அதாயத்துல்லா, ஊடகவியாளர் முதுவை இதாயத்து, இலக்கிய ஆர்வலர் பெருமாள், கவிஞர் குத்துபுதீன் ஐபக்கு முதலானோர்  ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.

– முதுவை இதாயத்து

சனி, 26 டிசம்பர், 2020

நாளைய தமிழுக்கு இன்றைய தேவைகள்!-த.விசயகுமார்

 அகரமுதல




நாளைய தமிழுக்கு இன்றைய தேவைகள்!

இந்தத் தலைமுறையில் தமிழ் மன்பதை மக்களிடம் தமிழை வளர்க்க, பாதுகாக்க ஒவ்வொரு தமிழனுக்கும் தலையாய கடமையாக உள்ளது

1) தொலைக்காட்சி, வானொலி

இன்றைய காலத்தில் தமிழை வளர்க்க முதல் கடமை தொலைக்காட்சி நடத்துபவர்களுக்கு உண்டு. அதுவும் தமிழர்கள் நடத்தும் தொலைக்காட்சிக்கு முதன்மைப் பங்கு உண்டு. தமிழ் சார்ந்த கல்வெட்டு, கோயில், இலக்கியம், இசை, விளையாட்டு, நாடகம், தற்காப்புக் கலை,  வேளாண்மை, பண்பாடு, சித்த மருத்துவம், வரலாறு இது போன்ற தலைப்பில் நிகழ்ச்சி நடத்துதல், விவாதம் செய்தல், நேரடி ஒளிபரப்பு செய்தல், நீண்ட தொடர்களை எடுத்தல் வேண்டும். ஏனென்றால் தொலைக்காட்சியில் நீங்கள் காட்டும் நிகழ்ச்சி பார்க்கும் பெண்கள், இளைஞர்கள், குழந்தைகள் மனத்தில் உடனே பதிகிறது. எடுத்துக்காட்டாக அரைகுறை ஆடையுடன் ஆபாசமாக வரும் பெண்களைப் பார்த்து நாமும் இது போல் ஆடை அணிவதால் எந்தத் தவறும் இல்லை என்று மனநிலை உருவாகிறது. இது அடுத்த தலைமுறைக்கு மிகவும் கவர்ச்சியாக ஆபாசமாகவும் உடை அணிந்தால் தவறில்லை என்று பிம்பத்தை உருவாக்குகிறது.

2) நாளேடுகள், இதழ்கள், நூல்கள்

தமிழ் நாட்டில் வெளிவரும் நாளேடுகள் பெயரில் மட்டும் தமிழ் வைத்துக்கொண்டு தமிழ் எழுத்தில் கலப்படத்தை ஏற்படுத்தி அழிக்கும் முயற்சியில் ஈடுபடுகின்றன. எப்படி என்றால் ” விவசாயி காரிலிருந்து இறங்கி டோரை லாக் செய்துவிட்டு வாட்ச்மேனிடம் தன் கீ கொடுத்து பார்க் செய்து சொன்னான். டேபிளில் உட்கார்ந்து பேப்பர் படித்துக்கொண்டு டிபன் ஆர்டர் செய்தான்” இதில் பாதி எழுத்துகள் தமிழ் அல்ல. அதுபோல் நூறு சொற்களுக்கு 50 சொற்கள் ஆங்கிலம், சமற்கிருதம் போன்ற பிறமொழிகளில் எழுதினால் இன்னும் 50 ஆண்டுகளில் தமிழ் எழுத்துகள் முழுவதும் கலப்படமாக மாறிவிடும். நாளேடுகள், இதழ்கள் உரிமையாளர்கள் தமிழ் மீது பற்று இருந்தால் இதை மாற்ற முயலலாம். மேலும், புதிய நூல்கள் எழுதும் அறிஞர்கள், எழுத்தாளர்கள் அனைவரும் பிறமொழிகள் கலப்பு இல்லாமல் தூய தமிழ் சொற்களால் எழுதினால் மிகவும் நன்றாக இருக்கும்.

3 ) திரைப்படங்கள்

இன்றைய தமிழ் திரைப்படத்தில் வரும் பாடல்களில் ஒரு வரி கூடத் தமிழ்ச் சொல் வரவில்லை. படத்தலைப்பில் கூடத் தமிழ்ப் பெயர் வைப்பதில்லை. தமிழ்த் திரைப்படத்தில் ஆங்கிலம், சமற்கிருதம், இந்தி , மலையாளம், தெலுங்கு போன்ற பிற மொழிகளில் உரையாடல், பாடல் வரிகளே அதிகமாக இடம் பெறுகின்றன. கேட்டால் தமிழ் வளர்ச்சி என்று பெருமையாக சொல்வது, ஒரு சில பாடல் வரிகளுக்கு உலகில் எந்த ஒரு மொழி அகராதியிலும் பொருள் காண முடியவில்லை. அந்த அளவிற்குத் தமிழ் எழுத்தைக் கொச்சைப்படுத்துகிறார்கள். இதைத் தடுக்க “தமிழ்த் திரைப்படத் தணிக்கைக்குழு” என்று உருவாக்கி இதன்மூலம் திரைப்படத்தில் வரும் பிற மொழி உரையாடல்கள், பாடல்கள் நீக்கப்பட வேண்டும். தமிழ்ப் பண்பாட்டைப் பாதிக்கும் அளவில் காட்சிகள் இருந்தால் கண்டனத்தையும் தெரிவிக்க வேண்டும். பிறமொழி கலந்து எடுக்கப்படும் தமிழ்த் திரைப்படத்திற்குத் தமிழக அரசு எவ்வகையிலும் நல்கைகள், சலுகைகள், விருதுகளை வழங்கக் கூடாது. இதுபோன்ற படத்தைத் தமிழ் மக்கள் புறக்கணிக்க வேண்டும்.

4 ) தமிழில் பெயர் வைத்தல்

தமிழ் மொழியின் தன்மையைப்பற்றித் தெரிந்து கொள்ளாமல் இருப்பது அவமானம். நம் இளைய தமிழ்க் குமுகாயம் பிறமொழியில் கலந்து பேர் வைப்பதைப் பெருமையாகக்  நினைக்கிறார்கள். கிரந்த எழுத்துகள்(ஜ, ஷ, ஸ, ஹ, க்ஷ, ஸ்ரீ போன்றவை) தமிழ் எழுத்துகள் அல்ல. தூய தமிழில் நம் குழந்தைக்குப் பெயர் வைக்க வேண்டும். இது போலக் கடைகளுக்கும் தமிழில் பெயர்ப் பலகைகள் வைக்க வேண்டும். நாம் வாங்கும் வாகனங்களில் தமிழ் மொழி வரலாறு பெருமைப்படுத்தும் விதமாக ஓவியம், வரைபடங்கள், எழுத்துகள் இடம்பெறச் செய்ய வேண்டும். சிறு வயதிலேயே தமிழில் கையெழுத்திடச் சொல்லிக் கொடுக்க வேண்டும்.

5 ) நூலகம்

ஒரு நாடின் வளர்ச்சி, முன்னேற்றம் அந்த நாட்டிலுள்ள நூலகங்களின் எண்ணிக்கையைப் பொறுத்தே அமைகிறது. ஆனால், தமிழ்நாட்டில் நூலகத்தை விட அதிக எண்ணிக்கையில் மதுபானக் கடைகள் உள்ளன. இப்படி இருந்தால் தமிழ் வளர்ச்சி அடையாது. ஒவ்வொரு ஊருக்கும் நூலக வசதிகளை ஏற்படுத்தித் தரவேண்டும். அதில் அதிக  தமிழ் நூல்களை இடம்பெறச் செய்ய வேண்டும். ஆயிரம் கோடி உரூபாய்  கடலில் முழுகினால் அல்லது தொலைந்தால் மீண்டும் அதைவிடப் பன்மடங்குப் பணத்தாள்களாக அச்சடிக்கலாம். ஆனால், ஒரு நூலை அழித்தால் மீண்டும் அதை உருவாக்க முடியாது. இதுவரைக்கும் தமிழ்நாட்டில் சிறப்புவாய்ந்த பல ஆயிரம் தமிழ் நூல்கள் அழிக்கப்பட்டுவிட்டன. ஒரு சிறு நூலகம் தீவிபத்தால் பாதிக்கப்பட்டுள்ளது. கடல்கோள்(சுனாமி) வந்தாலும், நிலநடுக்கம் வந்தாலும், தீ நேர்ச்சி(விபத்து) ஏற்பட்டாலும் நூலகம் பாதிக்காத அளவுக்கு (ஓலைச்சுவடி , பழைய நூல்கள்) இரும்புப் பெட்டகத்தில் வைத்துப் பாதுகாக்க வேண்டும். பல நூலகங்களில் தீ நேர்ச்சியை(விபத்தை)த் தடுக்க எந்த ஒரு பாதுகாப்புக் கருவியும் இல்லை.

6 ) தமிழர் உணவு

இப்போது உள்ள உணவுப் பழக்கவழக்கங்கள் செயற்கை உணவாகும், மரபணு மாற்றப்பட்ட உணவாகவும், கலப்பட உணவாகவும் உள்ளன. தமிழருடைய உணவு முற்றிலும் மாறிவிட்டது. மீண்டும் தமிழருடைய உணவு முறையை இயற்கை சார்ந்து பின்பற்ற வேண்டும். நமது முன்னோர்கள் எழுதிவைத்த  உணவு  பழக்கவழக்கங்களை வரும் தலைமுறைக்கு எடுத்துச் சொல்ல வேண்டும். சமையலுக்குப் பயன்படுத்தும் பாத்திரங்கள் செப்புப் பாத்திரம், மண் வகை சார்ந்த பாத்திரங்களை மட்டும் பயன்படுத்துவது உடலுக்குச் சிறந்தது.

7) தமிழர் நாள்காட்டி

தமிழர்கள் அனைவரும் ஒவ்வொரு வருடமும் ஆங்கில புத்தாண்டு தொடங்கும் நாளை முன்னிட்டு நாள்காட்டி அச்சடித்து கொடுக்கிறார்கள். இதற்கு மாற்றாக எப்போது தமிழ்ப் புத்தாண்டு தொடங்குகிறதோ அன்றைய நாளில் இருந்து தமிழ் நாள்காட்டிகளை வெளியிட வேண்டும். ஆங்கிலத்தைத் தவிர்த்துத் தமிழ் மாதத்தைக் கணக்கிட்டு, நேரத்தையும் கணக்கில் வைத்து புதிய தமிழ் நாள்காட்டி உருவாக்க வேண்டும்.

8) அரசின் கடமைகள்

உலக அளவில் உள்ள திறமையான தமிழறிஞரைக் கொண்டு “தமிழ் அகராதி வளர்ச்சிக்குழு ” என்று ஆரம்பித்து அதன் மூலம் உலகில் எந்த நாட்டிலும் எந்த மூலையிலும் ஒரு புதிய பொருளைக் கண்டுபிடித்தால் அந்தப் பொருளுக்கு நிகரான தமிழ்ச் சொற்களை உருவாக்க வேண்டும். டூ வீலர் என்ற வார்த்தைக்கு மட்டும் இருசக்கர வாகனம் என்று தமிழ்ச் சொற்களை உருவாக்கி உள்ளோம். ஆனால், இருசக்கர வாகனத்தில் ஆயிரம் உதிரிப்பாகங்களும் உள்ளன. அதற்கு நிகரான தமிழ்ச் சொற்களை இதுவரை உருவாக்கவில்லை. ஒவ்வொரு வருடமும் பிறமொழி புதிய சொற்களுக்கு நிகரான தமிழ்ச் சொல் உருவாக்கித் தமிழ் அகராதி வெளியிட வேண்டும். மேலும், இந்திய அரசு, தமிழ்நாடு அரசு வெளியிடும் திட்டங்கள், உத்தரவுகள்,  அரசாணைகள், சட்டங்கள், சட்டமன்ற உரைகள், ஆய்வறிக்கைகள் போன்ற முதன்மை நிகழ்வுகளைத் தமிழ் மொழியில் மொழிபெயர்ப்பு செய்து வெளியிட வேண்டும். இதற்குத் “தமிழ் மொழிபெயர்ப்புக் குழு” என்று உருவாக்கி உடனுக்குடன் நூலாக வெளியிடுவதுடன்  இணையத்தளத்திலும் வெளியிட வேண்டும். கலப்படமில்லாமல் முழுக்க முழுக்கத் தமிழ்ச் சொற்களைக் கொண்டு உருவாகும் நூல்களுக்கு மட்டும் உதவித்தொகை, விருதுகள் வழங்க வேண்டும். தமிழ் படித்தால் மட்டும் தமிழ்நாட்டில் அரசு வேலை என்பதைக் கட்டாய நடைமுறைக்குக் கொண்டு வர வேண்டும். தமிழில் கையெழுத்திடச் சட்டம் கொண்டு வரவேண்டும். தமிழில் கையெழுத்து இடும் அரசு ஊழியர்களுக்கு ஊக்கத்தொகை வழங்க வேண்டும். தமிழக அரசு வெளியிடும் எந்த இணையத் தளத்திலும் பெயரளவு மட்டும் தமிழ் உள்ளது. முழுக்க முழுக்க தமிழில் இணையத் தளம் அமைக்க வேண்டும். மத்திய அரசு வேலைவாய்ப்பில் இ.ஆ.ப., இ.கா.ப.  போன்ற உயர் பதவிகளில் இடம்பெறச் செய்ய தமிழ் மக்கள் தொகைக்கு ஏற்ப இட ஒதுக்கீடு ஏற்படுத்த வேண்டும்.

த.விசயகுமார், இ.இ.படையணி, புதுச்சேரி மாநிலம்.

கைப்பேசி – 7845500777, மின்னஞ்சல் – kumar051431@gmail.com 

வெள்ளி, 25 டிசம்பர், 2020

வ.அ.தமிழ்ச்சங்கப் பேரவையின் இணைய இசைவிழா

 அகரமுதல


மார்கழி 12, 2051 ஞாயிறு 27.12.2020
காலை 8.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை (கிழக்கு நேரம்)

வ.அ.தமிழ்ச்சங்கப் பேரவையின் இணைய இசைவிழா

இசைக்கடல் பண்பாட்டுக் கடல் அறக்கட்டளை 16ஆம் ஆண்டு விழா

பேரன்புடையீர், வணக்கம். வரும் மார்கழி 12, 2051 திசம்பர் 27, ஞாயிற்றுக்கிழமை இரவு 8 மணிக்கு (கிழக்கு நேரம்) வட‍அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவையின் 8-ஆம் ஆண்டு தமிழிசை விழா இணையவழி நிகழ்ச்சி நடைபெற உள்ளது. www.valaitamil.tv  என்னும் தளத்தின் வழியாக இணைந்து கண்டுகளிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

 






வியாழன், 24 டிசம்பர், 2020

குவிகம் இணைய அளவளாவல், 27.12.2020

 அகரமுதல


மார்கழி 12, 2051 ஞாயிறு 27.12.2020

   மாலை 6.30

 குவிகம் இணைய அளவளாவல்

திருப்பூர் கிருட்டிணன் பங்கேற்கும்

கிருட்டிணா இராமா



 


வெள்ளி, 18 டிசம்பர், 2020

தமிழ்க்கூடல், 22.12.2020

 அகரமுதல

உலகத்தமிழ்ச்சங்கம்,மதுரை

மார்கழி 07, 2051 செவ்வாய் 22.12.2020

முற்பகல் 11.00

உலகத்தமிழ்ச்சங்கப் பெருந்திட்ட வளாகம், மதுரை

கூடலுரை :

‘திருக்குறளும் திருவள்ளுவமாலையும்’ : முனைவர் மு. அருணகிரி

‘புதுநெறி காட்டிய புலவன்’ :

முனைவர் கோ.இரேவதி சுப்புலட்சுமி



 


குவிகம் மின்னிதழ் – ஓர் அலசல், 20.12.2020

 அகரமுதல

மார்கழி 05, 2051 ஞாயிறு 20.12.2020

மாலை 6.30

குவிகம் அளவளாவல்

குவிகம் மின்னிதழ் -ஓர் அலசல்

கூட்ட எண் / Zoom  Meeting ID: 619 157 9931
கடவுக்கோடு / Passcode: kuvikam123   

 நிகழ்வில் இணைய:

https://us02web.zoom.us/j/6191579931?pwd=OFpIdWZxczdqUHRGY2JQb09ET0sydz09

நிகழ்ச்சி தொடங்குவதற்கு 15 நிமிடங்களுக்கு முன்பாகவே நிகழ்வில் இணைய இயலும்

 



திங்கள், 14 டிசம்பர், 2020

தேசியமொழிகள் பாதுகாப்புப் பன்னாட்டுக் கருத்தரங்கம், தை 2052

 அகரமுதல




தமிழ்க்காப்புக் கழகம்

தேசியமொழிகள் பாதுகாப்புப் பன்னாட்டுக் கருத்தரங்கம்

சமற்கிருதம், இந்தி ஆகிய மொழிகளின் பன்முகத் திணிப்புகளால் இந்தியத் துணைக் கண்டத்திலுள்ள தமிழ் முதலிய தேசிய மொழிகள் அழிவுப்பாதைக்குத் தள்ளப்படுகின்றன.

தமிழ் முதலிய தேசிய மொழிகள் நசுக்கப்படுவதால்,  தேசிய மொழியினர் உரிமைகள் பறிக்கப்பட்டு ஒடுக்கப்படுகின்றனர். இது குறித்த விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்தித் தேசிய மொழிகள் அனைத்தையும் பாதுகாக்கும் முயற்சியில் அனைவரும் ஈடுபடவேண்டும்.  இதற்கிணங்கத் தமிழ்க்காப்புக்கழகம் தேசியமொழிகள் பாதுகாப்பு இணைய வழிப் பன்னாட்டுக் கருத்தரங்கத்தை வரும் தைத்திங்களில்(2052) நடத்த உள்ளது. நாள் முதலான விவரங்கள் பதிவாளர்கள் எண்ணிக்கைக்கேற்ப முடிவெடுத்துப் பின்னர் அறிவிக்கப்படும்.

தமிழ் நாட்டில் உள்ளவர்கள் மட்டுமல்லாமல் பிற மாநிலத்தவரும் தமிழ்மொழியுடன் தத்தம் மாநிலத் தேசிய மொழிகளுக்கு இந்தி, சமற்கிருதத்திணிப்பால் ஏற்படும் அழிவுகளைக் குறிப்பிட்டுக் கட்டுரைகள் அளிக்க வேண்டுகிறோம். பிற நாட்டினரும் இதேபோல் தேசிய மொழிகள் உரிமைக் காப்பு குறித்த கட்டுரையை அனுப்பி வைக்கலாம்.

அகரமுதல மின்னிதழுக்குக் கட்டுரை அளிக்க விரும்புபவர்கள்/ பார்வையளார்களாகப் பங்கேற்க விரும்புபவர்கள், தத்தம், பெயர், மின்வரி, பேசி எண் முதலிய விவரங்களை உடள் 

thamizh.kazhakam@gmail.com

என்னும் மின்வரிக்கு அனுப்ப வேண்டுகிறோம்.

கட்டுரை ஒவ்வொன்றும் பத்து நிமையம் வாசிக்கப்படும் அளவில் இருக்க வேண்டும்.

கட்டுரைகள் தமிழில் இருக்க வேண்டும்.

பிற மொழிச்சொற்களைத் தவிர்த்து எழுத வேண்டுகிறோம்.

கட்டுரைகள் அகரமுதல மின்னிதழில் <www.akaramuthala.in    > வெளியிடப்படும். எனினும்,  பத்து நிமையத்திற்கு மேல் அமையக்கூடிய் விரிவான கட்டுரைகளையும் அகரமுதல மின்னிதழுக்கு அனுப்பி வைக்கலாம். அஃதாவது பேசுவதற்குக் கால வரம்பு உள்ளது. இதழில் வெளியிடப் பக்க வரம்பு இல்லை.

கட்டுரைகளை,  தை 1, 2052 / 14.01.2021 ஆம் நாளுக்குள் மேற்குறித்த

thamizh.kazhakam@gmail.com

மின்வரிக்குக் கட்டுரையாளர் குறிப்புரை, ஒளிப்படத்துடன் இணைத்து அனுப்ப வேண்டுகிறோம். யும்thamizh.kazhakam@gmail.com

அன்புடன்

இலக்குவனார் திருவள்ளுவன்  thiru2050@gmail.com

சனி, 12 டிசம்பர், 2020

திருக்குறளுக்குத் தடையா? வலையரங்கம்

 அகரமுதல


கார்த்திகை 28, 2051 ஞாயிறு

13.12.2020 இரவு 7.00

கூட்ட எண் : 477-589-6897

கடவுச்சொல் : தேவையில்லை

திருக்குறளுக்குத் தடையா?

திருக்குறள் பரப்புரைச் செயலாக்கக் குழு நடத்தும் வலையரங்கம்

நோக்கவுரை : பேரா.மறைமலை இலக்குவனார்

தொடக்கவுரை :  முனைவர் பொன்.கோதண்டராமன்

கருத்துரை : திருக்குறள் அறிஞரகளும் ஆன்றோர்களும்

நிறைவுரை : பேரா.கண.சிற்சபேசன்




இசை வடிவில் தமிழ்த்தாய் அந்தாதி

 அகரமுதல




இசை வடிவில் தமிழ்த்தாய் அந்தாதி

தமிழ் மீது தாழா நேசம் கொண்ட உங்களுக்கு வணக்கம்

மொழி ஓர் இனத்தின் ஆன்ம அடையாளம். தமிழினத்தின் இருப்புக்கு மொழி சார்ந்த, வீச்சுரம் கொண்ட செயற்பாடுகள் தொடர்ந்து இடம்பெறுவது அவசியமாகும். அப்படியான இலக்கை நோக்கிய ஒரு வேலைத்திட்டம் இது.

தமிழ் மொழியின் சிறப்பை எடுத்துக்கூறும் விதமாகச் செறிவான சொற்களில், அணி அழகு துலங்கும்படி பாவலர் தவ சசிதரன் புனைந்திருக்கும் போற்றிப்பாடல் தமிழ்த்தாய் அந்தாதி ஆகும் (YouTube காணொளி)  (YouTube  காணொளி  காண்க). கேட்கும்தோறும் மனத்தை ஈர்க்கும் மந்திரத்தன்மை கொண்ட ஒரு படைப்பு.

பேராசிரியர்கள், கலைஞர்கள், அறிஞர்கள் முதலானோர் இதனைப் பெரிதும் விதந்து பாராட்டியிருக்கிறார்கள். (தொடர்புடைய பதிவுகள்: https://tinyurl.com/y63445yy)

முத்தமிழில் முதலாவதான இயற்றமிழில் அமைந்த அந்தாதி இப்போது இசையாகவும் நாடகமாகவும் முகிழ இருக்கிறது. இலண்டன் மொழியகம் இந்த வேலைத்திட்டத்தை முன்னெடுத்திருக்கிறது.

முதலாவது காணொளி உயர் தரத்துடன் வெளிவந்து பெருவரவேற்பைப் பெற்றுள்ளது – பார்வையாளர்கள் இந்தப் படைப்பின் சிறப்பை எவ்விதம் போற்றிப் பேசியிருக்கிறார்கள் என்பதை ( YouTube comments) YouTube comments வழியாகக் காணலாம்.

இதே தரத்தில் மீதம் இருக்கும் அந்தாதிப் பாடல்களுக்கான காணொளிகளும் வெளிவருவதற்கு உங்கள் மேலான உதவி / கொடை தேவைப்படுகிறது.

இந்த இணைப்பின் வழியாக நீங்கள் நிதி நல்கலாம்.

இது தொடர்பான மேலதிகத் தகவல்களை அறிய  sajitharan@moliyagam.org  என்ற மின்னஞ்சல் வழியாகவோ +447428631805 என்ற பகிரி (WhatsApp) எண் வழியாகவோ நீங்கள் எம்மைத் தொடர்பு கொள்ளலாம்.

என்றும் இதயத்தன்பும் நன்றியும்

மொழியகம்

இலண்டன்

அந்தாதிக்கு உதவ