புதன், 4 நவம்பர், 2009

என்கேகேபி.ராஜாவின் பண்ணை வீட்டு காவலாளி கைது



ஈரோடு, நவ. 2: முன்னாள் அமைச்சர் என்கேகேபி.ராஜாவுக்கும், கல்லாங்குத்து தோட்டம் சிவபாலனுக்கும் நிலப்பிரச்னை இருந்து வந்தது. இந்நிலையில் கடந்த அக். 21-ம் தேதி நள்ளிரவு காஞ்சிகோயில் பண்ணை வீட்டில் இருந்த தன்னையும் மனைவி உமா மகேஸ்வரியையும் சிவபாலன் அரிவாளால் வெட்டியதாக ராஜாவும், தன்னை தாக்கியதாக சிவபாலனும் புகார் தெரிவித்தனர். இவ்வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்ட பிறகு, ராஜாவின் உதவியாளர் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர். இதற்கிடையில் தலைமறைவாக இருந்த, பண்ணை வீட்டு காவலாளி காளியப்பனை (55) சிபிசிஐடி போலீஸôர் திங்கள்கிழமை கைது செய்தனர். ஈரோடு குற்றவியல் நீதித்துறை நடுவர்மன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட காளியப்பனை, 15 நாள் காவலில் வைக்க நீதிபதி பிரபாவதி உத்தரவிட்டார். அதன்படி அவர் கோவை சிறைக்கு கொண்டு செல்லப்பட்டார். தலைமறைவாக உள்ள ராஜாவும், உமாமகேஸ்வரியும் வெளிநாட்டுக்கு தப்பிச் செல்லாமல் இருப்பதற்காக, பாஸ்போர்ட்டை முடக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் ராஜாவின் துப்பாக்கி உரிமத்தை ரத்து செய்யுமாறு ஈரோடு மாவட்ட ஆட்சியருக்குக் கடிதம் எழுதப்பட்டுள்ளதாக சிபிசிஐடி டிஎஸ்பி சாம்பசிவம் தெரிவித்தார்.
கருத்துக்கள்

இராசாவைத் துரத்தி விட்டு அவரது மாவட்டக் கட்சிப் பொறுப்பில் அவர் தந்தையைத்தானே நியமித்து உள்ளார்கள்? குற்றவாளியுடன் எவ்வகைத் தொடர்பும் வைக்கக் கூடாது என்று இல்லாமல் அவரைப் பாதுகாக்க அவரது தந்தைக்குப் பொறுப்பு கொடுக்கும் பொழுது அவரை எப்படித தளையிட / கைது செய்யமுடியும்? அடிமட்டப் பணியாளர்களைச் சிறையிலிட்டு ஏமாற்றத்தான் முடியும். பாவம் பணியாளர்கள். உண்மையிலேயே இவரைப் பிடிக்க வேண்டும் என்று அரசும் காவல்துறையும விரும்பினால் உடனே அவரின் தந்தைக்குரிய பொறுப்புகளை எடுத்து விட்டு அவரையும் விசாரணைக்கு உட்படுத்த வேண்டும். அச்சமின்றி உண்மைகள் உலாவரும். ஏழை எளியவரைப்பிடிக்க அவர்களது குடும்பத்தினரையே சித்திரவதை செய்யும் காவல்துறைக்கு இதைச் சொல்லித் தர வேண்டிய தேவையில்லை. எனினும் மாயாவி போல் காட்டி அவரைப்பற்றிய செய்திகள் வருவதால் எழுதாமல் இருக்க முடியவில்லை. ஒன்று பிடியுங்கள். அல்லது தேடுவது போல் நடிக்காமலாவது இருங்கள். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
11/4/2009 3:27:00 AM

AS far as I know, Raja is in Chennai and try to meet CM. It seems CM refused to meet last week. He tries to go for Andaman now. Oh Police dont search him in TN better to alert the Interpol ASAP as he's having permanet citizenship in US and he got it by inveting 200 crores in US! See how Indian tax payers money are going outside India. Not even this guy eve, Actor Napolean MP running Jeeavn Technologies inveted 200 crores and got USA citizenship! If that's the case how come he's a MP? its unlawful and cheating both govts. What's our inteligence doing?

By Sivakumar
11/3/2009 9:36:00 PM

காவலாளி கைது! What about ராஜா?

By Ramji
11/3/2009 2:56:00 PM

yanaikkum adi sarukkum sattam than kadamai seyum iam saluti our tamil nadu police

By rahman alg
11/3/2009 11:24:00 AM

அட, நல்லாருக்கே!

By நந்தன்
11/3/2009 6:21:00 AM

எங்கே அந்த கேடிப் பயல்? என்பதன் சுருக்கம்தர்ன் என்.கே.கே.பி.யா?

By எரித்திரியன்
11/3/2009 6:18:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக