சனி, 22 செப்டம்பர், 2018

குவிகம் இல்லம் – அளவளாவல்: ஆர்.கே.இராமநாதன்

அகரமுதல

குவிகம் இல்லம் – அளவளாவல்: ஆர்.கே.இராமநாதன்

 புரட்டாசி 07, 2049 / 23.09.2018 / 05.00

இல்லம் அடைய


களி மண்ணும் கையுமாக…, அண்ணா



களி மண்ணும் கையுமாக…


இன்று (செட்டம்பர் 15) அறிஞர் அண்ணாவின் 110ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா  – 60ஆம் ஆண்டில் அடி எடுத்து வைப்பதற்குள்ளாகவே தனது இறுதிப் பயணத்திற்கு அடி எடுத்து வைத்தது – தமிழர் நல கண்ணோட்டத்தில் மிகப் பெரிய இழப்பு.
அண்ணா என்றால் அவர் முதலமைச்சர், திமுகவின் நிறுவனர் என்கிற அளவில்தான் இந்தத் தலைமுறையினர் தெரிந்து வைத்துள்ள ஒரே தகவலாகும். அண்ணாவின் சிந்தனை எத்தகையது?  விநாயக சதுர்த்தி, விநாயகர் ஊர்வலம் நடக்கும் இந்தக் காலக் கட்டத்தில் அண்ணாவைப் பேச விடுவோமா?
“களி மண்ணும் கையுமாக நாம் ஏன் இருக்கிறோம்?” என்று நான் வீரனைக் கேட்டேன். “கைவண்ணம் காணத்தானே போகிறாய், திங்கட்கிழமை நமது தீராதி தீரர்களின் வேலை என்னவாக இருக்கும் தெரியுமோ! களி மண்ணும் கையுமாக இருப்பர், வினாயக சதுர்த்தி அப்பா – அன்று வீட்டுக்கு வீடு களிமண்ணும் கையுமாக இருப்பர், யானை முகத்தானை, மத்தள வயிற்றானை, மகேசுவரன் மைந்தனை ஈரக் களி மண்ணால் செய்து எள் உருண்டையும், அப்பமும், கொழுக்கட்டையும், அவல், பொரியும் படைத்து குட்டிக் கொண்டு தோப்புக் கரணம் போட்டு, விநாயக சதுர்த்தி பூசை செய்வர் என்று வீரன் விளக்கிய பிறகே, “அடடே! அதையா சொன்னாய்? வேடிக்கைதான், களிமண்ணும் கையுமாகத்தான் இருப்பர்” என்று கூறிக் கொண்டே நான் சிரித்தேன். “கையில் மட்டுமல்ல களிமண்! மண்டையிலும் அதுவேதான்” என்றான் நண்பன் கோபத்தோடு. “திட்டாதே! தேவ நிந்தனை செய்யாதே. ஏதோ பழைய வழக்கம் நடக்கிறது” என்று நான் அடக்கினேன். அவனா அடங்குபவன்!
“வினாயகருடைய உருவத்தைக் கவனி! மனித உடல், யானை முகம், மத்தள வயிறு, ஒற்றைத் தந்தம் – நமது கடவுளின் உருவம் இதுவென்று கூறிப் பார் நாகரிக மக்களிடம். வயிறு குலுங்க நகைப்பர். அவருக்கு வாகனம் பெருச்சாளி! இது கேட்டால் எவன் தான் இந்த மக்கள் தன்னாட்சிக்கு இலாயக்குள்ளவரென்று கூறத் துணிவான்? உலக மக்களின் சார்பாளர்கள் கூட்டம் ஒன்று நடந்தால் அதற்கு உச்சியில் குடுமியுடையோனும், கழுத்திலே மண்டையோட்டு மாலையுடையோனும், காட்டெருமை முகத்தோனுமாகப் பலர் சென்றால், மற்ற நாகரிக உருவங்கள் நகைக்காவா? நீயே கூறு! சுந்தரிகள் பலர் சொகுசாக ஆடிப்பாடும் வேளையிலே மந்தி முகவதி வந்தால், கைகொட்டிச் சிரிக்க மாட்டார்களா? உண்மையிலே கூறு. ஏசுவின் உருவம் எத்தகைய கருணை பொழியுங் கண்களைக் காட்டக் காண்கிறோம். புத்தர் உருவின் முகப்பொலிவையும், சாந்தியையும் நோக்கு: பக்கத்திலே பெருச்சாளி வாகனனின் உருவத்தை நிறுத்திப்பார்! கடவுள்களின் காட்சி எனும் கூத்திலே கணபதி, ஒரு கோமாளியாகவே – விதூசகரராகவே – பாவிக்கப்படுவார்” என்று வீரன் உரைத்தான்.
இவையும் இவை போன்றவையும் வெறும் ஆரிய மதச்சேறு! தமிழர்கள் இந்த ஊளைச் சேற்றிலே உழலு மட்டும், முன்னேற்றம் ஏது? வாழ்வு ஏது?
திராவிட நாடு‘ – (12.9.1942).
தரவு :  மயிலாடன்
ஒற்றைப்பத்தி, விடுதலை 15.09.2018

கணியம் கட்டின்மை நாள் (Software Freedom Day), புதுச்சேரி

அகரமுதல

புரட்டாசி 07, 2049 ஞாயிறு 23.09.208

காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை

பெடிட் செமினார்(Petit Seminaire)  மேல்நிலைப்பள்ளி,

மகாத்மா காந்தி சாலை, புதுச்சேரி

கணியம் கட்டின்மை நாள்

15 இற்கும் மேற்பட்ட விளக்க அரங்குகள் உள்ளன.


வழிப்படம்: www.openstreetmap.org/way/457662096
விவரங்களுக்கு:
-கட்டற்ற கணியம்/கருவியம் அமைப்பு (FSHM)
புதுச்சேரி

-சீனிவாசன்

வெள்ளி, 21 செப்டம்பர், 2018

10-ஆம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு, சிகாகோ, 2019

அனைத்துலகத் தமிழ் ஆய்வு மன்றத்தின் (IATR)

10-ஆம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு, சிகாகோ

[32 ஆம் பேரவைத்தமிழ் விழா,

 சிகாகோ தமிழ்ச்சங்கப் பொன்விழா]

ஆனி – 18-22, தி.பி. 2050 / புதன் – ஞாயிறு / சூலை 3 – 7, 2019

விவரங்களுக்கு :  icsts10.org   / www.iatrnew.org  / iatr2019@fetna.org

பெஞ்சமின் இலெபோவிற்குப் பாராட்டு விழா, பிரான்சு

அகரமுதல


புரட்டாசி 07, 2049 / 23.09.2018 மாலை 03.00

உலகத் தமிழ்ச்சங்க இலக்கண விருது பெற்ற

பெஞ்சமின் இலெபோவிற்குப்

பாராட்டு விழா, பிரான்சு

பிரெஞ்சு இந்தியச் சங்கங்கள்

எளிமைச் செல்வர் சா.கணேசன் நினைவேந்தல், சென்னை

அகரமுதல


புரட்டாசி 07, 2049 – ஞாயிறு – 23.09.2018 மாலை 5.30

அண்ணா பொதுநல மன்றம்

108, ஆர்காட்டுச்சாலை, வடபழனி, சென்னை 26

எளிமைச் செல்வர் சா.கணேசன்

நினைவேந்தலும் படத்திறப்பும்

தமிழ் எழுத்தாளர் கழகம்

புதன், 19 செப்டம்பர், 2018

பெண்ணுக்கு மட்டும் ஏன் இந்தச் சோதனை? – மறைமலை இலக்குவனார், தினத்தந்தி


அகரமுதல

பெண்ணுக்கு மட்டும் ஏன் இந்தச் சோதனை?

2018-ஆம் ஆண்டு பிறந்தது முதல் அடுக்கடுக்காகப் பெண்கள் படும் துன்பங்களைக் காணும்போது, “பெண்ணுக்கு மட்டும் ஏன் இந்தச் சோதனை?” என்னும் கேள்வியே மனத்தில் எழுகின்றது.
பாலியல் வன்முறை, வரதட்சணைக் கொடுமை, காதலராலும் கணவராலும் கொடுமை, படுகொலை, நாத்தனார், மாமியார் கொடுமைக்கு ஒரு படி மேலாகப் பெற்ற மகனாலே கொலை செய்யப்படும் கொடூரம், பணம் கேட்டு மிரட்டும் பேரனால் சாவு, காவல்துறைக் கெடுபிடியால் சித்திரவதை, அலுவலகத்தில் அவமானம், சக ஊழியரால் துன்பம் என்று எண்ணற்ற சோதனைகள் பெண்களை நிம்மதியாக வாழவிடாமல் பாழாக்குகின்றன.
சிறுமியைப் பாலியல் வன்முறை செய்து கொன்றவன் கைதாகிப் பிணையில் வெளிவந்தவுடன் தாயாரைக் கொன்ற பாதகச் செயலும், காவலர் இரு சக்கர வாகனத்தை உதைத்ததால் விழுந்து திருவெறும்பூர் உசா இறந்த கொடுமையும், சென்னை மாணவி அசுவினி தன் காதலனால் கத்தியால் வெட்டப்பட்ட கோரமும் நம் கண்களில் இரத்தம் வரவழைக்கும் காட்சிகளாகத் தொலைக்காட்சியில் பார்த்ததை மறக்கமுடியுமா?
ஏன் இந்தச் சோதனை? இந்த விபரீதங்களை எப்படித் தடுக்கலாம்? என்னும் வினாக்கள் குறித்துச் சிந்திக்க இதுவே தக்க தருணம்.
பால்மணம் மாறாச் சிறுமிகள் பாலியல் வன்முறைக்காளாவதை உடனே தடுக்க வேண்டுமெனில் அந்தப் பிஞ்சுகளுக்குத் தற்காப்பு பற்றி எளியமுறையில் எடுத்துச் சொல்ல வேண்டுமல்லவா? யார் செய்வது? அம்மாவையும் அப்பாவையும் மிஞ்சிய ஆசிரியர்கள் உண்டா?
அம்மாவும் அப்பாவும் முதலில் குழந்தைகளுடன் நாள்தோறும் ஒரு மணிநேரமாவது செலவழிக்க வேண்டும். தொலைக்காட்சி முன் கண்கள் இமைக்காமல் பார்த்துக்கொண்டிருப்பதை உடனே நிறுத்த வேண்டும். இன்றைக்குப் பள்ளியில் என்ன நடந்தது என்னும் வினாவை நாள்தோறும் கேட்கவேண்டும். அவர்கள் படிக்கும் பாடம் நமக்குப் புரியாது என்றாலும் இக்கேள்வியைக் கேட்டு அவர்கள் கூறும் விடையைப் பொறுமையாகக் காதுகொடுத்துக் கேட்கவேண்டும்.
இதனால் இரண்டு நன்மைகள் ஏற்படும். அன்றன்று நடத்திய பாடம் பற்றிப் பிள்ளைகள் நாள்தோறும் கூறும்போதே அவர்களின் பிஞ்சு மனத்தில் ஆசிரியர் நடத்திய பாடம் அழுத்தமாய்ப் பதிந்துவிடும். இரண்டாவதாக நாள்தோறும் இப்படி உரையாடுவதால் பெற்றோர்க்கும் பிள்ளைகளுக்கும் இடைவெளி குறைந்து மனம்விட்டுப்பேசும் சூழல் நிலவும்.
யாரேனும் குறும்போ தொல்லையோ செய்தால் குழந்தை தயக்கமின்றிக் கூற முன்வரும். அதனால் பெற்றோர் உடனே நடவடிக்கையில் ஈடுபட முடியும். வருமுன் காப்பதே சிறந்தது அல்லவா?
அலுவலகத்தில் பெண்களுக்கிடையே ஒற்றுமை முதன்மையானது. பெண்கள் ஒருவருக்கொருவர் பாதுகாப்பாக இருந்தால் யார்தான் வாலாட்டமுடியும்?
இருசக்கர வாகனம் இருக்கிறதென்ற தைரியத்தில் இரவில் பெண்கள் தனியேசெல்லவேண்டா. அதுவும் இரவுப்பணிபுரியும் பெண்கள் நள்ளிரவில் இருசக்கர வாகனத்தில் செல்வது வம்பை விலைக்கு வாங்குவது போல்தான்.
குடும்ப உறவில் விட்டுக்கொடுக்கும் பண்பு வளர வேண்டும். வேலைக்குப் போகும் பெண்களை ‘நடமாடும் பணம் எடுக்கும் (ஏடிஎம்)’ இயந்திரங்களாகக் கருதும் கொடுமை தொலைய வேண்டும். கணவனும் மனைவியும் யாராலும்அசைத்துப் பார்க்கமுடியாத அசாத்திய ஒற்றுமையுடன் வாழவேண்டும். கணவனைப்பற்றி மனைவியிடமும் மனைவியைப்பற்றிக் கணவனிடமும் கோள்சொல்லிப் பயனில்லை எனப் பிறர் கருதும் நிலை குடும்பவாழ்வின் அச்சாணியாகும்.
பிள்ளைகளிடம் பேசும்போது எச்சரிக்கையாகப் பேசவேண்டும். பெற்றோர் நடந்துகொள்ளும் முறையே பிள்ளைகளின் பண்புகளை வளர்க்கும் நாற்றங்கால் என்பதை மறந்துவிடக்கூடாது. அப்பாவைப் பற்றி அம்மாவும் அம்மாவைப்பற்றிஅப்பாவும் குறைகூறும் பழக்கமுடைய குடும்பங்களில்தான் குற்றவாளிகள்உருவாகின்றனர்.
காவல்துறையினர் இன்னும் மென்மையான போக்கைக் கடைப்பிடிக்க வேண்டும். குற்றவாளிகளை நீதிமன்றத்தில் நிறுத்துவதே காவல்துறையின் கடமை. அவர்களே நேரடியாகத் தண்டனை வழங்க ஆரம்பித்துவிட்டால் சமூகம் நிம்மதியில்லாமல் நிலைகுலைந்து விடுமல்லவா?
தொலைக்காட்சி, செய்தித்தாள், பொழுதுபோக்குப் பத்திரிகைகள் என்னும் ஊடகங்கள் தங்கள் கடமையை மறந்துவிடக்கூடாது. பெண்ணினத்தின் மென்மையையும் மேன்மையையும் வெளிப்படுத்தும் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் முதன்மை வழங்கவேண்டும்.
நல்ல முன்மாதிரியான ஆளுமைகளைப்பற்றிய செய்திகளை அவ்வப்போது வெளியிட்டுவந்தால் பெண்களைத் துச்சமாகக் கருதும் ஆடவர் மனம் மாறுமல்லவா? படிப்பறிவில்லாக் குடும்பங்களுக்குத் தேவையான அறிவுரைகளையும் வழிகாட்டுதல்களையும் ஊடகங்கள்தானே பரப்பவேண்டும்?
எல்லாக் குடும்பங்களிலும் பெண்தான் அச்சாணியாகமையப்புள்ளியாகஒன்றுபடுத்தும் ஆற்றலாக விளங்குகிறாள் என்பதைச் சொல்லவும் வேண்டுமா? வெளியிடங்களுக்கும் சுற்றுலாவுக்கும் அலுவல் நிமித்தமாகவும் பயணம் மேற்கொள்ளும் பெண்கள் மிகவும் முன்னெச்சரிக்கையாகவும் திட்டமிட்டும் செயற்பட வேண்டும்.
விமானம் ஓட்டுவதிலும் செயற்கைக்கோள் இயக்குவதிலும் பெண்கள் ஈடுபட்டு வெற்றியுலா வரும் காலம் இது. ஆனாலும் மலையேற்றம், குதிரையேற்றம், வான்குடை(பாராசூட்டு) இயக்குதல் போன்ற செயல்களில் ஈடுபடும்போது இத்துறையில் முத்திரை பதித்த முன்னோடிகளின் துணையுடன் ஈடுபட வேண்டும்.
வேறு யார் முன்வந்து காப்பாற்றுவதையும் விடப் பெண் தன்னைத்தான் காத்துக்கொள்ளத் தவறவே கூடாது. அதே நேரத்தில் அளவுக்கு மீறியதன்னம்பிக்கை அதிக ஆபத்து என்பதையும் உணர வேண்டும். படிப்பில் ஆணுக்குப் போட்டி போட்டுச் சாதனை நிகழ்த்திவரும் பெண்கள் இவற்றையெல்லாம் கருத்தில்கொண்டு மேலும் பல சாதனைகள் படைக்க வேண்டும்.
எல்லா வகையிலும் இன்னல்களைக் கடந்து தொல்லைகளைத் தகர்த்தெறிந்து சமூகத்தின் வலுவான உறுப்பாகப் பெண்ணினம் உயர்வு பெறும் நாள் விரைவில் மலரும்.
– முனைவர் மறைமலை இலக்குவனார்
தினத்தந்தி 18.03.2018


சிறார் இலக்கிய(பால சாகிதி) நிகழ்ச்சி, சென்னை

அகரமுதல

புரட்டாசி 11, 2048 வியாழன் 27.09.2018 மாலை 5.30

மாலை 5.00 தேநீர்

சாகித்திய அகாதமி, குணா வளாகம் இரண்டாம் தளம்

443,அண்ணாசாலை, தேனாம்பேட்டை, சென்னை 18


சாகித்திய அகாதமி நடத்தும்

சிறார் இலக்கிய(பால சாகிதி) நிகழ்ச்சி


தலைமை: பாரதிபாலன்

 பங்கேற்போர்:

(இ)யூமா வாசுகி

சி.இராசாராம்

கி.மஞ்சுளா