சனி, 15 ஆகஸ்ட், 2020

குவிகம் இணைய அளவளாவல், 16.08.2020

 அகரமுதல

ஆடி 32, 2051 / 16.08.2020 ஞாயிறு மாலை 6.30

குவிகம் இணைய அளவளாவல்

நிகழ்ச்சி தொடங்குவதற்கு 15 நிமிடங்களுக்கு முன்பாகவே நிகழ்வில் இணைய இயலும்.  நிகழ்வைச்  சரியாக 18.30 மணிக்குத் தொடங்கி 19.30 மணிக்கு முடிக்க விரும்புகிறோம் .
நிகழ்வில் இணைய
கூட்ட எண்  86837331552  – (கடவுக்குறியீடு தேவையில்லை)    பயன்படுத்தலாம் அல்லது 

https://us02web.zoom.us/j/86837331552

இணைப்பைச் சொடுக்கலாம்.

உலகத் தமிழ்ச் சங்கம், மதுரை, இணையத் தமிழ்க்கூடல் – 13 ‘முத்தொள்ளாயிரம் காட்டும் தமிழர் வாழ்வியல்’

 

ஆடி 31, 2051 / 15.08.2020 சனி

காலை 10.00

உலகத்தமிழ்ச்சங்கம், மதுரை

 இணையத் தமிழ்க்கூடல் 13

கூடலுரை : முனைவர் மீனா சுந்தர்

‘முத்தொள்ளாயிரம் காட்டும் தமிழர் வாழ்வியல்’

தலைமை : முனைவர் ப.அன்புச்செழியன்

பதிவுப்படிவம்
https://tinyurl.com/y632qkk3

இணைப்பு

https://tinyurl.com/ybkpa3oj

பின்னூட்டப்படிவம்

https://tinyurl.com/y3vd6vj9  

திங்கள், 10 ஆகஸ்ட், 2020

நிலச்சரிவில் மாண்ட தமிழர்களை மீட்பதில் பாகுபாடுஏன்? பெ.மணியரசன் கண்டனம்

 அகரமுதல

மூணாறு நிலச்சரிவில் இறந்த தமிழர்களை மீட்பதில்

கேரள அரசு பாகுபாடு காட்டுவது ஏன்?

தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ. மணியரசன் கண்டனம்!

கேரள மாநிலத்தில் தேயிலைத் தோட்டத்தில் பணியாற்றிய 20 தமிழ்க் குடும்பங்களைச் சேர்ந்த 78 பேர் பெருமழையினால் மலை இடிந்து விழந்ததில் சிக்கி, பலர் உயிரிழந்தது பெரும் துயரச் செய்தியாகும். உயிரிழந்தோர் குடும்பங்களுக்குத் தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவர்கள் தமிழ்நாட்டின் தூத்துக்குடி மாவட்டம் – கயத்தாறு பகுதியிலிருந்து பல ஆண்டுகளுக்கு முன் கேரளத்திற்குப் பணிக்குச் சென்று அங்கேயே குடும்பத்தோடு வசித்து வந்தவர்கள். மூணாறு அருகே உள்ள பெட்டிமுடி ஊராட்சிப் பகுதியிலுள்ள தேயிலைத் தோட்டத்தில் பணியாற்றிய இவர்களின் வீடுகள், அந்தத் தேயிலைத் தோட்டத்திலேயே மலைச் சரிவுக்குக் கீழே இருந்தன.

கடந்த 07.08.2020 அன்றிரவு பெய்த பெருமழையினால், மலைப் பகுதி இடிந்து இந்த 20 வீடுகளையும் மூடிவிட்டது. இதில் சிக்கிக் கொண்டவர்களில் மூன்று பேர் மட்டும் தப்பித்து வெளியே வந்திருக்கிறார்கள். இவர்கள் தகவல் தெரிவித்ததன் பேரில் மீட்புப் படையினர் 16 பேரை படுகாயங்களுடன் மீட்டு உள்ளார்கள். இன்றுவரை (09.08.2020) 42 உடல்கள் எடுக்கப்பட்டுள்ளன.

இந்த மீட்புப் பணிகள் போர்க்கால வேகத்தில் முழுவீச்சில் நடைபெறவில்லை என்ற ஐயம் ஏற்பட்டுள்ளது. 20 குடியிருப்புகளில் சிக்கிக் கொண்டோரை உயிராக அல்லது உடலாக மீட்பதற்கு 2 நாட்களுக்கு மேல் தேவைப்படுவது வியப்பாக உள்ளது.

மேலும், 08.08.2020 அன்று மீட்கப்பட்ட 27 உடல்களை உறவினர்கள் கேட்டும், அவர்களிடம்  ஒப்படைக்க மறுத்து, அத்தேயிலைத் தோட்டத்தில் ஒரே குழிக்குள் அனைத்து உடல்களையும் புதைத்திருக்கிறது கேரள அரசு. இவர்கள் மகுடை(கொரோனா) நோயாளிகள் அல்லர்; ஊர் பேர் தெரியாத வழிப் போக்கர்களும் அல்லர்! வீடுகளில் தங்கி வேலை பார்த்து குடும்பம் நடத்திய மக்கள். அப்பகுதியிலுள்ள மற்ற குடியிருப்புகளில் இவர்களின் உறவினர்களின் குடியிருப்புகள் இருக்கின்றனர். அவர்கள் தங்கள் உறவினர்களின் உடல்களை இறுதி மரியாதை செய்து அடக்கம் செய்ய வசதியாக, தங்களிடம் ஒப்படைக்குமாறு மன்றாடிக் கேட்டுள்ளனர். ஆனால், கேரள அரசு அதிகாரிகள் உடல்களை ஒப்படைக்க மறுத்து விட்டனர்.

கேரள அரசு தமிழர்களின் மனித மாண்புகளை துச்சமாகக் கருதி, இழிவு செய்துவிட்டதாகவே கருதுகிறோம்.

இதே கேரளத்தில், 08.08.2020 அன்று கோழிக்கோட்டில் நடந்த விமான நேர்ச்சியில்(விபத்தில்) 19 பேர் உயிரிழந்துள்ளார்கள். பலர் படுகாய மடைந்துள்ளனர். இது மிகவும் கொடுமையான துயரச் செய்தி! இவ்விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஆனால், இந்த இரண்டு விபத்துகளையும் கேரள அரசு கையாண்ட முறையிலும் துயர்துடைப்புப் பணிகளிலும் பாகுபாடு இருக்கிறது. விமான விபத்தில் இறந்தவர்களுக்கு கேரள அரசு தலைக்கு 10 நூறாயிரம் உரூபாய் இழப்பீடு அறிவித்துள்ளது. ஆனால், அதே கேரள அரசு நிலச்சரிவில் குடும்பத்தோடு மடிந்த தமிழர்களுக்குத் தலைக்கு 5 நூறாயிரம் உரூபாய் மட்டுமே அறிவித்துள்ளது. கேரள முதலைமச்சர் கோழிக்கோடு மருத்துவமனைக்குச் சென்று விமான விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெறுவோரை நேரில் சென்று பார்வையிட்டார். ஆனால், மூணாற்றில் சிகிச்சைப் பெற்று வரும் தமிழ்த் தொழிலாளிகளைப் பார்க்க முதலமைச்சர் செல்லவில்லை.

பாட்டாளி வருக்கத்திற்காகவே கட்சி நடத்தக்கூடிய கேரளத்தின் மா.பொ.க.(சி.பி.எம்.) முதலமைச்சர், இவ்வாறான பாகுபாடுகளுக்கு இடம் கொடுத்திருப்பது அதிர்ச்சியாக இருக்கிறது. இச்செயல்  இனப்பாகுபாடு காட்டுவதாக அமைகிறது. முதலமைச்சர் பினராயி விசயன் அவர்கள் தமிழ்நாட்டின் குரலுக்குச் செவிமடுத்து, இறந்தவர்களின் குடும்பத்திற்கு  25 நூறாயிரம் உரூபாய் வீதம் இழப்பீடு வழங்குமாறும், ஒரே புதைகுழியில் போட்டு அனைத்து உடல்களையும் புதைக்கச் செய்த அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறும் தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.

இடுக்கி மாவட்டத்திலுள்ள தேயிலைத் தோட்டங்களில் பணியாற்றும் தொழிலாளிகளில் 90 விழுக்காட்டுக்கும் மேற்பட்டோர் தமிழர்கள்! இதுபோன்ற நேர்ச்சிகள்(விபத்துகள்) இதர குடியிருப்புகளில் நடைபெறாமல் தடுப்பதற்கு, ஆபத்தான குடியிருப்புப் பகுதிகளைக் கண்டறிந்து, அவர்களுக்கு இடைக்கால மாற்று ஏற்பாடு செய்து பாதுகாக்குமாறு கேரள முதலமைச்சர் அவர்களை கேட்டுக் கொள்கிறேன்.

 

=====================================

தலைமைச் செயலகம்,

தமிழ்த்தேசியப் பேரியக்கம்

=====================================

பேச: 9443918095, புலனம் : 9841949462

முகநூல் : www.fb.com/tamizhdesiyam

ஊடகம் : www.kannottam.com

இணையம் : www.tamizhdesiyam.com

சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam

காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam

=====================================

 


பன்னாட்டுக் கவிதைப் போட்டி

 , அகரமுதல,

திருநெல்வேலி மாவட்டம் கல்லிடைக்குறிச்சி தேசியக் கல்வி அறக்கட்டளை  நடத்தும் மாணவ, மாணவியருக்கான மாபெரும் விடுதலைநாள் கவிதைப் போட்டி

 
தலைப்புகள்
  1. தன்னம்பிக்கை
  2. மனித நேயம்

சிறந்த கவிதைகளுக்கு, முதல் மூன்று பரிசுகளும் சிறப்பு பரிசுகளும் வழங்கப்படும்.

கலந்து கொள்ளும் அனைவருக்கும் மி-சான்றிதழ் வழங்கப்படும்

மாணவர்களுக்கான மாபெரும் இணையவழிக் கவிதைக் களம்

கலந்துகொள்ள விரும்பும் பள்ளி,கல்லூரி மாணவர்கள் பெயரைப் பதிவு செய்யவும்.

கவிதைகள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் : ஆடி 31, 2051  15.08.2020

குறிப்பு :

கவிதை சொந்தப் படைப்பாக இருக்க வேண்டும்.

போட்டிக்கு அனுப்பப்படும் கவிதைகளில் இருந்து தேர்வு செய்யப்படும் கவிதைகள் தேசியக் கல்வி அறக்கட்டளை வெளியிடும் நூலில் இடம் பெறும்.

நடுவரின் தீர்ப்பே இறுதியானது.   https://forms.gle/zP9Er8L8qpYeRvhk8

தேசியக் கல்வி அறக்கட்டளை, திருநெல்வேலி
தகவல் : முதுவை இதாயத்து