திமுக 10- ஆவது மாநில மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களின் விவரம்:

Dmk conference01
சேதுக்கால்வாய் திட்டம்
உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கினை விரைவுபடுத்தி முடித்து, சேதுக்கால்வாய்த் திட்டப்பணிகளை மீண்டும் தொடங்கிட இணக்கமான சூழ்நிலையை உருவாக்கி, தென்னக வளர்ச்சிக்குத் துணை புரிய வேண்டும்.
கச்சத்தீவு
சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்டுள்ள வழக்கில், கச்சத்தீவில் தமிழக மீனவர்களுக்கு மீன்பிடி உரிமை இல்லை என்று தமிழக மீனவர்களின் மரபுரிமைக்கு மாறாக மத்திய அரசு எதிர் ஆவணம் கண்டனத்துக்கு உரியது.
ஈழத் தமிழர்  
வருகின்ற மார்ச்சு மாதம் நடைபெறவிருக்கும் ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில், இலங்கை அரசின் Dmk conference04Dmk conference02நோக்கத்திற்கு எவ்விதத்திலும் துணை போகாமல், இலங்கை அரசுக்கு எதிராக அமெரிக்க அரசு முன்மொழிய உள்ள தீர்மானத்தை ஆதரிப்பதோடு,  கட்டுப்பாடற்ற பன்னாட்டு உசாவல் விசாரணை வேண்டுமென்றும், ஈழத் தமிழர்கள் விரும்பும் அரசியல் தீர்வினை அவர்களே தேர்ந்தெடுத்துக் கொள்வதற்கு ஏதுவாக ஐ.நா. மன்றத்தின் மேற்பார்வையில் பொது வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டுமென்றும்; இந்திய அரசே தனியாகவும் ஒரு தீர்மானத்தை ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் முன்மொழிந்து நிறைவேற்றுவதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டுமென்றும் இந்திய அரசுக்கு வலியுறுத்தப்படுகின்றன.
நதிகள் தேசிய மயமும் இணைப்பும்

இந்திய நாட்டில் உள்ள அனைத்து நதிகளையும், தேசிய மயமாக்கிட வேண்டும்.
காவிரி மேலாண்மை வாரியம், காவிரி ஒழுங்குமுறை குழுவை உடனடியாக அமைக்க வேண்டும்
.
சில்லரை வணிகத்தில் அயலவர் முதலீடு
 சில்லரை வணிகத்தில், அயலவர் முதலீடு என்பதை மத்திய அரசு முற்றிலும் தடுத்திட வேண்டும்.
தூக்குத் தண்டனையை ரத்து செய்க
தூக்குத் தண்டனையை அறவே நீக்கிட மத்திய அரசு சட்டத்திருத்தம் கொண்டு வர முன் வர வேண்டும்.
காவிரி நதிநீர்ப் பங்கீட்டுப் பிரச்சினை
காவிரி மேலாண்மை வாரியம், காவிரி ஒழுங்குமுறை குழுவை உடனடியாக அமைக்க வேண்டும்.
விலைவாசி உயர்வு
இன்றியமையாப் பொருள்களின் விலையேற்றத்தைக் கட்டுப்படுத்தி மக்கள் மன அமைதியுடன் வாழ்க்கை நடத்துவதற்கான வழிவகை காணத் தவறியதற்காக, மத்திய, மாநில அரசுகளுக்கு இம்மாநில மாநாடு கடுமையான கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறது.
கல்விக் கடன்களை தள்ளுபடி செய்க!
வங்கிகள் மாணவர்களுக்கு வழங்கிய கல்விக் கடன்கள் முழுவதையும் தள்ளுபடி செய்ய மத்திய அரசு வழி வகை காண வேண்டும்.
தமிழக மீனவர்கள்
மத்திய அரசே இலங்கை அரசோடு பேச்சு  நடத்தி, தமிழக மீனவர்களைப் பாதுகாப்பதற்குரிய விரைவான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
நெசவாளர் துயர் துடைத்திடுக
நெசவாளர்களிடம் பன்மடங்கு மின்கட்டணம், வரி  பெறும் அதிமுக அரசை மாநாடு வன்மையாகக் கண்டிக்கிறது.
நெல்லுக்கும், கரும்புக்கும், தேயிலைக்கும் உரிய விலை
நெல், கரும்பு, பச்சைத் தேயிலை ஆகியவற்றின் கொள்முதல் விலையை உயர்த்தி வரையறுக்க வேண்டும்.
மக்கள் நலப் பணியாளர்களுக்கு மீண்டும் பணி
தி.மு. கழக ஆட்சியில் நியமனம் செய்யப்பட்டவர்கள் என்பதால், மக்கள் நலப் பணியாளர்கள் மீது அ.தி.மு.க. அரசு கொண்டிருக்கும் பழி வாங்கும் போக்கைக் கைவிட்டு உயர்நீதி மன்றம் தீர்ப்பளிக்கும்வரை காத்திருக்காமல், மக்கள் நலப் பணியாளர்களையும், அவர்களுடைய குடும்பத்தினரையும் காப்பாற்றிடத் தாமாகவே முன் வரவேண்டும்.
கோதுமைக்கு உள்ள சலுகை, அரிசிக்கு ஏன் இல்லை?
மத்திய நிதித்துறை அமைச்சகம் கடந்த 27-12-2013 அன்று ‘நிதிச்சட்டம் பிரிவு 65 (பி) எசு’ என்றொரு புதிய சட்டப் பிரிவை உருவாக்கியது. அதில் அரிசி வேளாண் விளைபொருள் இல்லை என்பதால், மத்திய, மாநில அரசுக் கிடங்குகளில் அரிசியை இருப்பு வைத்திருந்தால், இருப்பு வைக்கப்படும் அரிசிக்கு கிட்டங்கிகளுக்கான மாத வாடகையோடு, சேவை வரியும் விதிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
இந்தச் சட்டம் முன் நாளிட்டு 1-7-2012இல் இருந்தே நடைமுறைக்கு வருகிறது என்று கூறி 18 மாதங்களுக்கு உண்டான சேவை வரியையும் சேர்த்துக் கட்ட வேண்டுமெனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
அரிசிக்குச் சேவை வரி விதித்தது போலவே பருத்திக்கும் மத்திய அரசு இந்தச் சட்டத்தின் மூலம் சேவை வரி விதித்துள்ளது. அரிசிக்கும், பருத்திக்கும் சேவை வரி விதித்துள்ள மத்திய அரசு கோதுமைக்கு மட்டும் சேவை வரியிலிருந்து விலக்கு அளித்திருக்கிறது.
மத்திய அரசு கோதுமையை அடிப்படை உணவாகக் கொள்ளும் வட மாநிலங்களைச் சார்ந்த மக்களுக்கு ஒரு நீதி, அரிசியை அடிப்படை உணவாகக் கொண்டிருக்கும் தென்னக மக்களுக்கு ஒரு நீதி என்ற பாகுபாடு காட்டாமல், அனைவருக்கும் சமநீதி வழங்கக்கூடிய வகையில் அரிசிக்கு மட்டும், விதிக்கப்பட்டிருக்கும் சேவை வரியையும், ஏற்கெனவே பஞ்சாலைத் தொழில் நலிந்த காரணத்தால் அல்லல்படும் நெசவாளர்களை மேலும் பாதித்திடும் பருத்திக்கான சேவை வரியையும் உடனே நீக்கிடவேண்டுமென மத்திய அரசை வலியுறுத்துகிறோம்.
தமிழக சட்டம் – ஒழுங்கு
சட்டம் ஒழுங்கு நிலைமை அழுகிப் போய் விட்டதைச் சிறிதும் உணராமல், தமிழகம் அமைதிப் பூங்கா என்று சொல்லிக் கொண்டே வருவதை இம்மாநில மாநாடு வன்மையாகக் கண்டிக்கின்றது.
இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.