சனி, 17 அக்டோபர், 2009

Front page news and headlines today

தமிழக மரபுக் கலைகளுள் தெருக்கூத்தும் ஒன்று. இயல், இசை, நாடகம் ஆகிய முத்தமிழும் ஒருங்கே இணைந்தது இக்கலை. கடலூர், வேலூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, சேலம், தர்மபுரி மாவட்ட கிராம கோயில் திருவிழாக்களில் தெருக்கூத்து நிகழ்த்தப்படுகிறது. தெருக்கூத்து கலைஞர்கள் கூத்து நடத்த ஊரில் தங்கும்போது மக்களே உணவு வழங்குவர்.



தெருக்கூத்தில் கட்டை கட்டி ஆடுவது சிறப்பு. இதை "கட்டைக்கூத்து' என்பர். சில இடங்களில் கட்டை இல்லாமல் மேடை நாடகங்களில் அணியும் "ஜிகினா' ஆடை அணிந்து ஆடும் வழக்கம் உண்டு. கட்டை கட்டி ஆடுவோர் தோள்களில் பெரிய புஜக்கட்டைகள், கிரீடம், குச்சிப்புடி, மரத்தாலான மார்புப்பட்டை, கன்னக்கதுப்பு அணிந்திருப்பர். ஒவ்வொரு வேடத்திற்கு ஏற்ப அரிதாரத்தின் நிறம் வேறுபடும். காளி, சூரன், அரக்கன் வேடத்திற்கு முத்து வெள்ளையுடன் செந்தூரத்தை எண்ணெயில் குழைத்துப் பூசுவர். துரியோதனனுக்கு சிவப்பு, துச்சாதனனுக்கு மஞ்சள் அல்லது இளஞ்சிவப்பு, பீமனுக்கு மேகவண்ணம், கிருஷ்ணனுக்கு பச்சை, திரவுபதிக்கு இளஞ்சிவப்பு, அர்ச்சுனனுக்கு நீலம், புருவங்களுக்கு மை தீட்டுவர். மீசை பெரிதாக வைத்துக் கட்டப்படும். கூத்து வேடம் கட்டிய கலைஞர் மேடையில் தோன்றும் முன் திரைக்குப் பின்னிருந்து, தாம் ஏற்கப்போகும் பாத்திரத்தைப் பற்றி கூறுவார். பின் திரையை விலக்கி பார்வையாளர் முன் தோன்றுவர். டோலக் அல்லது மிருதங்கம், ஜால்ரா, ஆர்மோனியம், புல்லாங்குழல் கொண்டு இசைப்பவர்கள் மேடையில் தோன்றும் கலைஞர்கள் பாடும் பாட்டுக்கேற்ப உரத்துப் பின்பாட்டுப்பாடுவர்.



முதலில் அரங்கில் நுழைபவர் கட்டியங்காரன் அல்லது பபூன். இவர் கூத்தை துவக்கி காட்சிகளை விளக்கி, கதையை தெளிவுபடுத்துவார். மகாபாரதம், ராமாயாணம், கோவலன், வீரபாண்டிய கட்டபொம்மன், நளாயினி கதைகள், வள்ளி திருமணம் நாடகம், வன்னியூர் புராணம், திரவுபதி கல்யாணம், குறவஞ்சி, கிருஷ்ணன் தூது, அபிமன்னன் சண்டை, கர்ண மோட்சம் தெருக்கூத்திற்கு அடிப்படைக் கதைகளாக அமைகிறது. தற்கால கலை வடிவங்களின் உருவாக்கத்திற்கு தெருக்கூத்து அடிப்படையாக உள்ளது. சங்கரதாஸ் சுவாமிகள் தெருக்கூத்து முறைகளை பின்பற்றியே நாடக வடிவை உருவாக்கினார். சினிமா, "டிவி'க்களின் தாக்கத்தால் அரிதாகிவரும் கிராமிய கலைகளுள் தெருக்கூத்தும் ஒன்று. சில சினிமாக்களில் மட்டுமே இக்கூத்தை கண்டு அதுவா? இது? எனக் கேட்கும் அளவிற்கு உள்ளது. தெருக்கூத்து கலைஞர்கள் மாற்றுத் தொழிலை நாடிச் செல்கின்றனர். அரசு, பள்ளி, கல்லூரி விழாக்களில் இத்தகைய அரிய கலைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்தால்தான் நமது பண்பாட்டு அடையாளங்களை மீட்டெடுக்க முடியும்.

ஈழத் தமிழரின் போராட்ட வரலாறு- 138:
வல்வெட்டித் துறை படுகொலை!



இந்திய அமைதிப் படையின் செயல்பாடுகளில் கடும் கண்டனத்துக்கு ஆளான சம்பவம் வல்வெட்டித் துறைப் படுகொலை ஆகும். இந்தப் படுகொலை நிகழ்ச்சிகளை, இந்திய சுதந்திரப் போராட்டத்தின் போது நடைபெற்ற ஜாலியன் வாலாபாக் சம்பவத்துடனும், அமெரிக்காவின் வியட்நாம் போர்க் காலத்தில் நடைபெற்ற மயிலாய் சம்பவத்துடனும் உலகப் பத்திரிகைகள் ஒப்பீடு செய்கின்றன. பல நூற்றுக்கணக்கானோர் படுகொலை செய்யப்படவும், 123 வீடுகள் அடியோடு நாசமாக்கப்படவும், 45 கடைகள் எரித்து சாம்பலாக்கப்படவும், 62 வாகனங்கள், 12 மீன்பிடிப் படகுகள், 176 மீன்பிடி வலைகள் எரிக்கப்படவும், தங்க நகைகள், பெருந்தொகையான பணம், மின்னணுப் பொருள்களை அப்பகுதி மக்கள் இழக்கவும் காரணமான சம்பவத்தின் ஆரம்பம் என்பது வல்வெட்டித்துறை சந்தைப் பகுதியில் புலிகளுக்கும், ராணுவத்தினருக்கும் நடந்த மோதல்தான். இந்த மோதல் காரணமாக அமைதிப் படையைச் சேர்ந்த 6 படைவீரர்கள் இறந்தனர். 11 பேர் காயமுற்றனர். இதனால் கொதிப்புற்ற, வல்வெட்டித்துறையைச் சுற்றியிருந்த மூன்று முகாம்களிலும் முடங்கியிருந்த ராணுவத்தினர், வல்வெட்டித் துறையைச் சுற்றி வளைத்துக் கொண்டனர். அந்தப் பகுதியில் 3 நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதன் காரணமாக ஊரில் உள்ள ஆண்களும், பெண்களும் வீட்டினுள்ளேயே முடங்கிக் கிடந்தனர். சிலர் மினி தியேட்டரில் படம் பார்த்துக் கொண்டிருந்தனர். இவ்வாறு ஊரடங்கு காரணமாக வீட்டிலும், மற்ற இடங்களிலும் முடங்கிக் கிடந்தவர்களை வீட்டினுள் புகுந்தும், அவர்களை வெளியே இழுத்து வந்து போட்டும், சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்ட பின்னர், அவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். காயம்பட்டவர்களுக்கு சிகிச்சையளிக்க அங்கு முகாமிட்டிருந்த பிரான்ஸ் நாட்டு மருத்துவக் குழுவினருக்கு அனுமதி மறுக்கப்பட்டது. ஊர்ச் சந்திப்பில், பொது இடங்களில் கும்பல், கும்பலாக சுட்டுக் கொல்லப்பட்டவர்கள் சிதறிக் கிடக்க, அவர்களது உடல்கள் மீது பெட்ரோல் ஊற்றி எரிக்கப்பட்டது. இந்தச் சம்பவம், "அமைதிப் படைக்கும் விடுதலைப் புலிகளுக்கும் நடைபெற்ற மோதலில் எதிர்பாராதவிதமாக பொதுமக்கள் 24 பேர் கொல்லப்பட்டனர்; புலிகளின் தாக்குதல் விளைவாக வீடுகளும், கடைகளும் சேதமடைந்தன. மோதலில் 6 விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டனர்' என்று இந்திய வானொலியிலும், தொலைக்காட்சியிலும் செய்தி ஒலி, ஒளி பரப்பானதுடன் முடித்துக் கொள்ளப்பட்டது. ஆனால் இச் சம்பவம் பூதாகரமான நிகழ்ச்சியாக மாறியது எப்போது என்றால் இந்தப் படுகொலைகளும், சேதங்களும் குறித்து லண்டன் நாளிதழான "த சன்டே டெலிகிராப்' 13.8.1989-இல் அதன் தில்லி நிருபர் ஜெரிமி காவ்ரன் மற்றும் லண்டன் வெளியீடான "ஃபைனான்ஸியல் டைம்ஸி'ன் தில்லி நிருபர் டேவிட் ஹவுஸ்கோ, இந்தியப் பத்திரிகையான "த ஸ்டேட்ஸ்மன்' (18-8-1989) நாளிதழ்களில் தலையங்கம் மற்றும் செய்திகள் வெளியிட்டதன் காரணமாகவே வெளியுலகுக்குத் தெரியவந்தன. இந்தியன் எக்ஸ்பிரஸ் (24.8.1989) தலையங்கம் தவிர, அதன் கொழும்பு நிருபர் ரீட்டா செபஸ்தியான் அரைப்பக்க அளவில் மிகப்பெரிய செய்திக் கட்டுரை ஒன்றினை ‘ஐடஓஊ ஹற்ழ்ர்ஸ்ரீண்ற்ண்ங்ள் ர்ய் ஸ்ரீண்ஸ்ண்ப்ண்ஹய்ள்: ஙஹள்ள்ஹஸ்ரீழ்ங் ஹற் டர்ண்ய்ற் டங்க்ழ்ர் என்ற தலைப்பில் வெளியிட்டு அதிர்ச்சியூட்டியிருந்தார். ஹிந்து நாளிதழ் (2.8.1989) இந்தச் செய்தியை ஆறே வரிகளில் புலிகள் -அமைதிப் படை மோதலில் 23 பேர் மரணம் என்று தெரிவித்தது. அதே பத்திரிகையின் தில்லி நிருபர் கே.கே. கட்டியால் 12.8.1989 தேதியிட்ட செய்தியில், மோதலின்போது புலிகள் மக்களை மனிதக் கேடயங்களாகப் பயன்படுத்தினர் என்று செய்தி வெளியிட்டார். ஹிந்து நிறுவனத்தின் துணைப் பத்திரிகையான ஃப்ரண்ட்லைனில் (ஆக. 19-செப்.1, 1989) ஈரோஸ் இயக்கத் தலைவர் வி. பாலகுமார் கூறியதாக வந்த செய்தியில், மோதலில் பொதுமக்கள் 70 பேருக்கு மேல் இறந்ததாகவும், ஆயிரக்கணக்கான மக்கள் அகதிகளாக்கப்பட்டதாகவும், அங்கு நேரில் சென்று பார்த்தபோது அந்த நிகழ்ச்சி படுபயங்கரமாக இருந்ததாக அவர் தெரிவித்ததாகவும், அதன் செய்தியாளர் டி.எஸ். சுப்ரமணியன் வெளியிட்டிருந்தார். மேற்கண்ட செய்திகளின் நறுக்குகள் (ஸ்ரீன்ற்ற்ண்ய்ஞ்ள்) மூலம் அந்தந்தப் பத்திரிகைகளின் பார்வைகள் வெளியாகின்றன. ஆனால், அச் செய்திகளின் மூலம் தெரியவருவது என்னவென்றால், உண்மைகளை அவர்களால் மறைக்க முடியவில்லை என்பதுதான். இந்த நிகழ்வுகளின்போது நடந்த, தாக்குதலில் மக்கள் நலன் புரியும் குழுவின் செயலாளராக இருந்து வந்த ஆனந்தராஜாவும் மிகவும் கடுமையாகப் பாதிக்கப்பட்டார். அவரைக் குற்றுயிரும், குலையுயிருமாகக் கொண்டுவந்து மருத்துவமனையில் போடப்பட்டபின்னர், அமைதிப் படைத் தளபதிகளான பிரிகேடியர் சங்கர் பிரசாத், கர்னல் அவுஜியா, கர்னல் சர்மா மற்றும் டாக்டர் கேப்டன் சவுத்ரி முதலானோர் அவரை நன்கு அறிந்திருந்த நிலையிலும், ஒப்புக்கு மட்டுமே அனுதாபம் தெரிவித்து விசாரித்தனர். முடிவில் அவர்கள் ஒவ்வொருவரும், ""விடுதலைப் புலிகளின் ஆயுதக் கிடங்கு மற்றும் அவர்கள் ஒளிந்திருக்கும் இடங்களைக் காட்டுங்கள். நீங்கள் இதற்காகப் பயப்பட வேண்டாம், உங்கள் முகத்தில் கருப்புத் துணி போர்த்திதான் நாங்கள் அழைத்துச் செல்வோம், அதன்பின்னர் நீங்களும், உங்கள் குடும்பமும் இந்தியாவுக்குக் கொண்டு செல்லப்படுவீர்கள். உங்கள் பாதுகாப்புக்கு நாங்கள் உறுதி தருகிறோம்'' என்று வற்புறுத்தியும் அவர் மசியவில்லை. பின்னர் மறுநாள் மயக்கம் தெளிந்ததும் "காங்கேயன்துறை முகாமுக்குப் போவதைத் தவிர்க்க விரும்பினால் உண்மைகளைச் சொல்லி விடுங்கள்' என்று மிரட்டினர். (காங்கேயன்துறை முகாம் என்பது கொடிய சித்ரவதை முகாம் ஆகும்.) அப்படியும் அவர் பதிலளிக்கவில்லை. இதனிடையே அவர் மருத்துவமனையை விட்டு வெளியே வந்ததும், இலங்கையின் இந்தியத் தூதுவர் எல்.எல். மெஹ்ரோத்ராவுக்கு (அதுவரை தூதுவராக இருந்த ஜே.என். தீட்சித் விடுவிக்கப்பட்டிருந்தார்) வல்வெட்டித்துறைக் கொடுமைகள் குறித்து எழுதி, "இந்த அவலங்களை இந்தியப் பிரதமருக்கு தெரியப்படுத்துங்கள். இவ்வகையான சம்பவங்கள் உலகில் எங்குமே நடக்கக் கூடாது என்றும் சொல்லுங்கள்' என வற்புறுத்தி எழுதினார் (21.8.1989). அதேபோன்ற கடிதம் ஒன்றை, இலங்கை அதிபர் பிரேமதாசாவுக்கும் எழுதினார். தொடர்ந்து அவர் இந்தியாவுக்கு ரகசியமாக வந்து தமிழகத் தலைவர்கள், இந்தியத் தலைவர்களைச் சந்தித்து வல்வெட்டித் துறை படுகொலைச் சம்பவத்தை விவரித்தார். இதில் முகம் கொடுத்து ஒத்துழைத்த வட இந்தியத் தலைவர்களில் ஒருவரான ஜார்ஜ் பெர்னாண்டஸ் இந்தச் சம்பவத்தை "இந்தியாவின் மயிலாய்' என்று விவரித்து, இந்தக் கொடுமைகளை நூல் வடிவில் அதாவது, இந்தி, ஆங்கிலம், தமிழ் ஆகிய மொழிகளில் தனது முன்னுரையுடன் வெளியிட்டார். இதன் பின்னரே இந்தச் சம்பவம் குறித்து, இந்தியா மட்டுமன்றி உலகம் முழுவதும் செய்தி பரவி, அமைதிப் படை செயல்பாடுகளுக்குக் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. இதன் பின்னர் இந்தியாவிலும் அமைதிப் படை இலங்கையை விட்டு வெளியேற வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. திமுக உள்ளிட்ட கட்சிகள் பொய்ச் செய்தி வெளியிடும் தொலைக்காட்சி நிலையச் செய்திகளைக் கண்டித்து "டிவி பெட்டி உடைக்கும்' போராட்டத்தை நடத்தினர்.நாளை: வி.ஆர்.கிருஷ்ணய்யரின் குற்றச்சாட்டு!
கருத்துக்கள்

India destroyed tamils life, Indian Army was useless army and they killed tamils people. Indian army can't fight against Pakistan or China. Indian Army trained to kill only civilians.

By yoga
10/17/2009 1:42:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *
இன்று அ.தி.மு.க. 38-வது ஆண்டு விழா



சென்னை, அக். 16: அ.தி.மு.க. தொடங்கப்பட்டதன் 38-வது ஆண்டு விழா சனிக்கிழமை (அக். 17) தமிழகமெங்கும் கொண்டாடப்படுகிறது. சென்னை ராயப்பேட்டை, அவ்வை சண்முகம் சாலையில் உள்ள அ.தி.மு.க. தலைமையகத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில், அக்கட்சி பொதுச் செயலாளர் ஜெயலலிதா கலந்து கொள்கிறார். அங்குள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவிக்கும் ஜெயலலிதா, பின்னர் கட்சி கொடியேற்றுகிறார். நிகழ்ச்சியில் அ.தி.மு.க. தொடக்க நாள் விழா சிறப்பு மலரை வெளியிட்டு, தொண்டர்கள் மத்தியில் உரையாற்றுகிறார். இதேபோல் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் 38-வது ஆண்டு விழாக் கொண்டாடப்படுகிறது. அக்டோபர் 19, 20, 21 ஆகிய 3 தினங்கள் தமிழகமெங்கும் கட்சியின் 38-வது ஆண்டு விழா பொதுக்கூட்டங்களை நடத்தவும் அ.தி.மு.க.வினர் ஏற்பாடுகளைச் செய்து வருகின்றனர்.
கருத்துக்கள்

கொத்தடிமை நீங்கவும் தமிழ் ஈழத்திற்காகப் போராடி வெற்றிகாணவும் மக்கள் நலன் பேணவும் எதிரிக் கட்சியாக இல்லாமல் எதிர்க்கட்சியாக மட்டும் செயல்படவும் ஊழலைப் புறந்தள்ளவும் இக்கட்சியினர் உறுதி எடுப்பார்களாக! (கனவுதான் காணமுடியும். என்றாலும் ஊதுகின்ற சங்கை ஊதி வைப்போமே!)

வாழ்த்துகளுடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
10/17/2009 3:28:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *
மீண்டும் எம்.ஜி.ஆர். ஆட்சி!



சென்னை, அக். 16: தமிழகத்தில் மீண்டும் எம்.ஜி.ஆர். ஆட்சியை உருவாக்க அதிமுகவினர் பாடுபட வேண்டும் என அக் கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயலலிதா கேட்டுக் கொண்டுள்ளார். கட்சியின் 38-வது ஆண்டு தொடக்கம் சனிக்கிழமை (அக்.17) வருவதை ஒட்டி வெள்ளிக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை: "அ.தி.மு.க.வை எம்.ஜி.ஆர். தொடங்கியதில் இருந்து தொடர்ந்து வெற்றிகளைப் பெற்று வந்தார். 1977 தேர்தலில் தமிழகத்தில் ஆட்சியைப் பிடித்தார். 1980-ல் ஆட்சி கலைக்கப்பட்ட போதிலும் மீண்டும் மக்கள் ஆதரவுடன் ஆட்சிக்கு வந்தார். ஏழைக் குழந்தைகளுக்கும், முதியோருக்கும் சத்துணவு திட்டத்தை அமல் செய்தவர் எம்.ஜி.ஆர். 1984-ல் எம்.ஜி.ஆர். உடல்நலம் குன்றி அமெரிக்காவில் சிகிச்சைபெற்ற நேரத்தில் தமிழக சட்டப்பேரவைக்கும், மக்களவைக்கும் பொதுத் தேர்தல் வந்தது. எம்.ஜி.ஆரால் பிரசாரத்துக்கு வர முடியாத நிலையில், தமக்கு வாக்களித்தால் எம்.ஜி.ஆர். திரும்பி வரும்போது ஆட்சியை அவரிடம் ஒப்படைப்பதாக கருணாநிதி தேர்தல் பிரசாரம் செய்தார். அந்த அளவுக்கு எம்.ஜி.ஆரின் செல்வாக்கு உயர்ந்திருந்தது. எம்.ஜி.ஆர். பிரசாரத்துக்கு வர முடியாத நிலையில் தமிழகம் முழுக்க நான் (ஜெயலலிதா) சுற்றுப் பயணம் செய்து பிரசாரம் செய்தேன். முன்பு நடந்த தேர்தல்களில் கிடைத்ததைவிட அதிக இடங்களில் அதிமுக அப்போது வெற்றி பெற்றது. எம்.ஜி.ஆர். மறைவுக்குப் பிறகு, அதிமுகவை உடைக்கவும், எம்.ஜி.ஆரின் இரட்டை இலை சின்னத்தை முடக்கவும் முயற்சி நடந்தது. அதை முறியடித்து, பிரிந்துபோன கட்சியை ஒன்று சேர்த்து 1991-ல் அதிமுக வென்று என் தலைமையில் ஆட்சி அமைந்தது. அப்போது திமுக சார்பில் கருணாநிதி மட்டும்தான் வெற்றி பெற்றார். உண்மையில் அவர் தோல்வி அடைந்தார் என்றும், திமுகவிற்கு ஒரு இடம் கூட கிடைக்காமல் போனால் அவமானமாகிவிடும் என்று கூறி, அதிகாரிகளை வற்புறுத்தி நிர்பந்தத்தின் பேரில்தான் கருணாநிதி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது என்றும் அப்போதே பரவலாக அரசல் புரசலாகப் பேசப்பட்டது. வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்ட உடனேயே அவர் ராஜிநாமா செய்துவிட்டார். 1996-ல் திமுக ஆட்சிக்கு வந்தது. அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக என் மீது வழக்குகள் தொடரப்பட்டன. அதில் 12-க்கும் மேற்பட்ட வழக்குகளில் வெற்றி பெற்றேன். ஒரு வழக்கு அவரது அரசாலேயே திரும்பப் பெறப்பட்டது. தடைக் கற்களை படிக்கற்களாக மாற்றி, மக்கள் ஆதரவுடன் 2001-ல் மீண்டும் முதல்வராகப் பொறுப்பேற்றேன். எனது 10 ஆண்டு கால ஆட்சியில் தொட்டில் குழந்தை திட்டம், அனைத்து மகளிர் காவல் நிலையம் உள்ளிட்ட மக்கள் நலத் திட்டங்கள் நடைமுறைபடுத்தப்பட்டன. 2006 தேர்தலில் பொய்யான வாக்குறுதிகளை அளித்து திமுக ஆட்சியைப் பிடித்தது. இந்த ஆட்சியில் தமிழகம் அழிவுப் பாதையில் வேகமாகச் செல்கிறது. ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும், மக்கள் நலப் பணி ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு செயல்படும் இயக்கம் அ.தி.மு.க. தமிழகத்தை அமளிக்காடாக மாற்றிய, விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தத் தவறிய, அடிப்படை வசதிகளை நிறைவேற்றித் தராத இந்த ஆட்சி மீது மக்கள் கடும் கோபத்தில் உள்ளனர். வரும் சட்டப்பேரவை பொதுத் தேர்தலில் அதிமுகவுக்கு வாக்களிக்க மக்கள் தயாராகிவிட்டார்கள். நரகாசுரன் என்ற அரக்கன் வதம் செய்யப்பட்ட நாள் தீபாவளித் திருநாள். இந்த ஆண்டு தீபாவளித் திருநாளும், அதிமுக தொடங்கிய நாளும் ஒரே நாளில் வருவதால், இரண்டையும் ஒன்றாகக் கொண்டாடும் நல்ல வாய்ப்பு நமக்குக் கிடைத்துள்ளது என்றார்.
கருத்துக்கள்

தமிழ் ஈழ மக்களுக்காக உண்மையான குரல் கொடுக்காதவரை தமிழர் தாயகம் அமைவதற்கான போராட்டத்தை நடத்த உறுதுணையாய் இருந்து வெற்றி காணாத வரை பொன்மனச் செம்மலின் பெயரைச் சொல்லி ஏமாற்றாமல் இருப்பதே சாலச் சிறந்தது. அரசியல் வாதிகள் தங்களுடைய ஆட்சியை அமைப்பதாகக் கூறாமல் இறந்தவர்களின் பெயரால் ஆட்சி அமைப்பதாகக் கூறுகின்றார்களே! பேசாமல் மேலுலகம் சென்று ஆட்சி அமைக்க வேண்டியதுதானே! தன்னம்பிக்கையின்றிப் பிறர் பெயரால் ஆட்சி அமைப்பதாகக் கூறும் எல்லா அரசியல்வாதிகளையும் புறக்கணிக்க வேண்டும். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
10/17/2009 3:21:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *
தொலைபேசி ஒட்டுக்கேட்பு: மம்தா பானர்ஜி திடீர் புகார்



கோல்கத்தா, அக். 16: தனது தொலைபேசி உரையாடல் ஒட்டுக்கேட்கப்பட்டுள்ளதாக திரிணமூல் காங்கிரஸ் தலைவரும், ரயில்வே அமைச்சருமான மம்தா பானர்ஜி குற்றம்சுமத்தியுள்ளார். மேற்கு வங்க அரசே இதுபோன்ற செயலில் ஈடுபட்டுள்ளதாகவும் அவர் அதிரடியாகப் புகார் தெரிவித்துள்ளார். கோல்கத்தாவில் வெள்ளிக்கிழமை செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியின் போது மம்தா பானர்ஜி இதைத் தெரிவித்தார். மேலும் அவர் கூறியது: எனது தொலைபேசி ஒட்டுக்கேட்கப்பட்டதுடன் எனது குறுந்தகவல்கள் (எஸ்எம்எஸ்), இ-மெயில் தகவல்களும் திருடப்பட்டுள்ளன. எனது உதவியாளர்களின் தொலைபேசியும் கடந்த மூன்று ஆண்டுகளாக ஒட்டுக்கேட்கப்பட்டுள்ளது. இதற்கு நிச்சயம் மத்திய அரசு அனுமதி அளித்திருக்காது என்பதை அறிவேன். மாநில அரசுதான் இதுபோன்ற செயலில் ஈடுபட்டுள்ளது. நான் மத்திய அமைச்சராகப் பொறுப்பேற்ற பின்னர் அரசு சார்பில் அளிக்கப்பட்ட தொலைபேசிகூட ஒட்டுக்கேட்கப்பட்டுள்ளது. மத்திய அரசில் நான் முக்கியமான பொறுப்பை வகிக்கிறேன். இதனால் முக்கியமான தகவல்களை பரிமாறும் நிலை உள்ளது. மாநில அரசு இவ்விதம் நடந்து கொண்டால் நான் எவ்விதம் செயல்பட முடியும்? அமைச்சரவை சகாக்களுடனும், எனது உதவியாளர்களுடனும் எப்படி ரகசியமாகத் தகவலை பரிமாறிக்கொள்வது? இந்த விவகாரத்தில் பிரதமர் மன்மோகன் சிங் தலையிட வேண்டும் என்றார் மம்தா பானர்ஜி. மேற்கு வங்கத்தை ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியினர் தன்னை காரில் ஏற்றி கொலை செய்ய முயற்சித்ததாக மம்தா பானர்ஜி சமீபத்தில் குற்றம் சுமத்தினார். இதுகுறித்து கோல்கத்தாவில் காவல்நிலையத்திலும் புகார் அளித்தார். இந்நிலையில் தனது தொலைபேசியும், தனது உதவியாளர்களின் தொலைபேசியும் ஒட்டுக்கேட்கப்பட்டுள்ளதாக அவர் புகார் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
கருத்துக்கள்

தொலை பேசி ஒட்டுக்கேட்பு என அவ்வப் பொழுது மாநிலங்கள் அளவிலும் மத்திய அளவிலும் கூக்குரல்கள் வருவது வழக்கமாக உள்ளது. தனக்கு வேண்டியவன், உறவினன், பகைவன், என்று இல்லாமல் அனைத்துத் தரப்பாரையும் ஒற்று மூலம் அறிவது தவறே யல்ல. மடியில் கனமிருந்தால்தானே அஞ்ச வேண்டும்.எனவே, இச் செய்தி உண்மையாக இருந்தால் உளவுத்துறையைப் பாராட்ட வேண்டியதுதான். ஆனால், இவ்வாறு அறியும் செயதிகளைத் தன்னுடைய கட்சி நலனுக்காக ஆளும் கட்சி பயன்படுத்தக் கூடாது. நாட்டு நலன் கருதி அரசு என்ன செய்தாலும் சரிதான்.

எல்லார்க்கும் எல்லாம் நிகழ்பவை எஞ்ஞான்றும் வல்லறிதல் வேந்தன் தொழில். (திருக்குறள் 582)

வினை செய்வார் தம்சுற்றம் வேண்டாதார் என்றாங்கு அனைவரையும் ஆராய்வது ஒற்று.(திருக்குறள் 584)

(இரண்டும் ஒற்றாடல் அதிகாரத்தில் உள்ளவை)

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
10/17/2009 3:11:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்
தருமபுரம் சுவாமிநாதன் மறைவுக்கு மதுரை ஆதீனம் இரங்கல்



சென்னை, அக். 16: இசைப் பேரறிஞர் தருமபுரம் சுவாமிநாதன் மறைவுக்கு மதுரை ஆதீனம் அருணகிரி தேசிக பரமாச்சர்ய சுவாமிகள் இரங்கல் தெரிவித்துள்ளார். ""இசைப் பேரறிஞரும், ஓதூவா மூர்த்தியுமான தருமபுரம் சுவாமிநாதனின் மறைவு திருமுறை இசைவாணர்களுக்கும், சைவ உலகுக்கும் ஈடு செய்ய முடியாத இழப்பாடும். திருமுறைகளை அழகாகவும், கம்பீரமாகவும் பாடி சைவ சமயத்தைப் பரப்பியவர்'' என்று அவர் தனது இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
கருத்துக்கள்

தமிழிசை வாணரின் மறைவிற்குத் தினமணி வாசகர்கள் சார்பில் ஆழ்நத இரங்கல்கள்! வருத்தத்துடன் இலக்குவனார் திருவள்ளுவன்.

By Ilakkuvanar Thiruvalluvan
10/17/2009 2:53:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *
ஜூன் 24 முதல் கோவையில்
உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு



சென்னை, அக். 16: உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டை கோவையில் வரும் ஜூன் 24-ம் தேதி முதல் 27-ம் தேதி வரை (4 நாள்கள்) நடத்த தமிழறிஞர்கள் கூட்டத்தில் வெள்ளிக்கிழமை முடிவு செய்யப்பட்டது. உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டுப் பணிகள் குறித்து முதல்வர் கருணாநிதி தலைமையில் சென்னையில் வெள்ளிக்கிழமை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. சென்னையில் உள்ள செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் மொழி அறிஞர்கள், ஆய்வாளர்கள், கல்வியாளர்கள், எழுத்தாளர்கள், கவிஞர்கள் பங்கேற்றனர். இந்தக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் விவரம்: உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டிற்காக ஆய்வுக் கட்டுரைகளை தயாரிக்கவும், பயணத் திட்டங்களை வகுத்துக் கொள்ளவும் எழுந்த கோரிக்கையை ஏற்கப்பட்டு, 2010-ம் ஆண்டு ஜூன் இறுதியிலோ அல்லது ஜூலை முதல் வாரத்திலோ மாநாடு தள்ளிவைக்கப்பட்டது. இந்த முடிவைக் கூட்டம் வரவேற்கிறது. மழைக்காலம் தொடங்குவதற்கு முன்பும், வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களில் கோடை விடுமுறை நிறைவடையும் முன்பும், தமிழகத்தில் சட்டப் பேரவைத் தேர்தல் பணிகள் தொடங்குவதற்கு முன்பும் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு நடத்தப்பட வேண்டும் என்று முதல்வர் கருணாநிதிக்கு இந்தக் கூட்டம் வேண்டுகோள் விடுத்தது. அதற்கு இணங்க, வரும் ஜூன் 24-ம் தேதி முதல் ஜூன் 27-ம் தேதி வரை நான்கு நாள்களுக்கு கோவையில் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டை நடத்தலாம் என்று இந்தக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. இலங்கைப் பிரச்னைக்கு அரசியல் தீர்வு: தி.மு.க., காங்கிரஸ் எம்.பி.க்கள் குழுவிடம் தெரிவித்தபடி, முள்வேலிகளுக்குள் அடைக்கப்பட்டிருந்த தமிழர்கள் அவரவர் வாழ்விடங்களுக்கு அனுப்பி வைக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது. இதற்காக முதல்வர் கருணாநிதிக்கும், இந்திய அரசுக்கும் இந்தக் கூட்டம் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறது. முகாம்களில் அடைக்கப்பட்டுள்ள எஞ்சியுள்ள தமிழர்களும் இத்தகைய மகிழ்ச்சியினைப் பெறுவதற்குரிய வாய்ப்பினை இலங்கை அரசு உருவாக்கிட வேண்டும்; அதற்கு இந்தியா ஆவன செய்திட வேண்டும் என்று கேட்டுகொள்ளப்படுகிறது. இலங்கையில் எல்லா மக்களும் இன உரிமை, மொழி உரிமை பெற்றிடும் வகையில் அந்த நாட்டில் அரசியல் தீர்வு காண்பது ஒன்றே சிறந்த வழி. இதை உணர்ந்து அதற்குரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள இந்திய, இலங்கை அரசுகள் முன்வர வேண்டும் என்று இந்தக் கூட்டம் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது.கூட்டத்தில்... இந்தக் கூட்டத்தில் நிதியமைச்சர் க. அன்பழகன், துணை முதல்வர் மு.க. ஸ்டாலின், உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி, ஐம்பெருங்குழு, எண்பேராயம் துணைத் தலைவர் வா.செ. குழந்தைசாமி, தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் ம. ராசேந்திரன், கல்வெட்டு அறிஞர் ஐராவதம் மகாதேவன், எழுத்தாளர் ஜெயகாந்தன், கவிஞர்கள் அப்துல் ரகுமான், வைரமுத்து, மு. மேத்தா, ஈரோடு தமிழன்பன், மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கருத்துக்கள்

ஆனால், நாடாளுமன்ற தி.மு.க.க் குழு ஈழம் சென்று வந்த நாடகத்திற்கு துறை சார்நத கூட்டத்தில் நன்றி தெரிவிப்பதன் மூலம் நடுவணரசின் அமைப்பிற்குக் கட்சி்ச் சாயம் பூசியுள்ளதைத் தவிர்த்திருக்க வேண்டும். முகாம்களில் இருந்து விடுவிக்கப்படுவது தொடர்பான அறிக்கையைச் சிங்கள அரசு மறுத்துள்ள சூழலிலும் கண்ணி வெடி அகற்றுவது என்பது திட்டமிட்டுள்தை விட மேலும் கூடுதல் காலம் ஆகும் எனக் கூறி வதை முகாம்களில் இருந்து விடுவிப்பது என்பது இப்போதைக்கு இல்லை எனச் சிங்கள அரசாங்கம் அறிவித்துள்ள சூழலிலும் நடக்காத ஒன்றிற்குப்பாராட்ட நாணப்பட வேண்டுமல்லவா? இனிமேலாவது கட்சி வண்ணம் பூசப்படாத அளவிலும் மத்திய மாநில ஆளும் கட்சிகளைத் துதி பாடாத நிலையிலும் மாநாட்டு ஏற்பாடுகளில் கருத்து செலுத்துவார்களாக! மாநட்டின் ஓர் அமர்வாக உலக நாடுகளில் தமிழர்கள் எதிர் நோக்கும் சிக்கல்கள் என்னும் தலைப்பி்ல் கட்டுரைகள் அளிக்க ஏற்பாடு செய்து சிக்கல்களுக்கான தீர்வுகளைக் கண்டு உலகெங்கும் உள்ள மூத்த இனமான தமிழர்கள் உரிமையுடன் வாழவும் தமிழர் தாயகத்தைக் காணவவும் வழி வகுப்பார்களாக!

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
10/17/2009 2:47:00 AM

தமிழக அரசு 9ஆவது உலகத் தமிழ் மாநாடு நடத்த உரிமையில்லை. அதே நேரம் உலகளாவிய தமிழ் மாநாடு ஒன்றை நடத்துவதற்குத் தடையில்லை. அந்த அளவில் பெயரை மாற்றி மாநாடு நடத்துவது சரிதான். ஆனால், நாடாளுமன்ற தி.மு.க.க் குழு ஈழம் சென்று வந்த நாடகத்திற்கு துறை சார்நத கூட்டத்தில் நன்றி தெரிவிப்பதன் மூலம் நடுவணரசின் அமைப்பிற்குக் கட்சி்ச் சாயம் பூசியுள்ளதைத் தவிர்த்திருக்க வேண்டும். முகாம்களில் இருந்து விடுவிக்கப்படுவது தொடர்பான அறிக்கையைச் சிங்கள அரசு மறுத்துள்ள சூழலிலும் கண்ணி வெடி அகற்றுவது என்பது திட்டமிட்டுள்தை விட மேலும் கூடுதல் காலம் ஆகும் எனக் கூறி வதை முகாம்களில் இருந்து விடுவிப்பது என்பது இப்போதைக்கு இல்லை எனச் சிங்கள அரசாங்கம் அறிவித்துள்ள சூழலிலும் நடக்காத ஒன்றிற்குப்பாராட்ட நாணப்பட வேண்டுமல்லவா? இனிமேலாவது கட்சி வண்ணம் பூசப்படாத அளவிலும் மத்திய மாநில ஆளும் கட்சிகளைத் துதி பாடாத நிலையிலும் மாநாட்டு ஏற்பாடுகளில் கருத்து செலுத்துவார்களாக! மாநட்டின் ஓர் அமர்வாக உலக நாடுகளில் தமிழர்கள் எதிர் நோக்கும் சிக்கல்கள் என்னும் தலைப்பி்ல் கட்டுரைகள் அளிக்க ஏற்பாடு செய்து சிக்கல்களுக்கான தீர்வுகளை

By Ilakkuvanar Thiruvalluvan
10/17/2009 2:45:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *