புதன், 17 ஜூன், 2026

‘தனித்தமிழ்க்காவலர் இலக்குவனார்’ நூலுக்கு மதுரை நட்பு வட்டத்தின் பரிசு





இணைப்புப் படப்பதிவுகளில் உள்ளவாறு பரிசுகள் வழங்கப்பெறுகின்றன.

நட்பு தமிழ் வட்டம்(மதுரை) அமைப்பு உறுப்பினர்களுக்கான சிறப்பு பேச்சுப்பயிற்சி,எழுத்துப் பயிற்சி, அரசுப் பள்ளி மாணவர்களுக்கான இலக்கியப் பயிலரங்கங்கள், பொதுமக்களுக்கான தமிழ்வளர்ச்சிக் கருத்தரங்கங்கள், கல்லூரி மாணவர்களுக்கான நம்மை நாமறிவோம் பேச்சரங்கங்கள், கல்லூரிஅளவிலும் மாவட்ட அளவிலும் போட்டிகள் நடத்துதல், சமத்துவம் மதநல்லிணக்கம் இந்திய இறையாண்மை பற்றிய விழிப்புணர்வுக்  கருத்தரங்கம் கவியரங்கம் பட்டிமன்றம் நடத்துதல்,

அரசுப் பள்ளிகளுக்கு நூலகத்திற்கான அடுக்ககங்கள், நூல்கள் எழுத்து மேசைகள் எழுதுபொருட்கள் மின்விசிறிகள் வழங்குதல்,  அரசுப்பள்ளி மாணவர் திறன் மேம்பாட்டிற்கான திருக்குறள் முற்றோதல்  கையெழுத்து,,பேச்சு,,கட்டுரை,பாட்டு, நடனம் எனப் பல்திறன் பயிற்சி வகுப்புகள் நடத்தி  பின் போட்டிகளும் நடத்தி பரிசுகளும வழங்கல், இணையவழியில் தமிழகமெங்குமுள்ள பள்ளிக் குழந்தைகளுக்குத்  திருக்குறள் ஒப்பித்தல், புரட்சிக் கவிஞர் பாடல்கள் ஒப்பித்தல், அறநெறிக் கதைகள் சொல்லல்,  தமிழிசைப் பாடல்கள் பாடுதல், கவிதை வாசித்தல், பேசுதல் எனப்  பல்வேறு வாய்ப்புகளை வழங்கி வருகிறது.

யாரிடமும் நன்கொடை வாங்காமல், குழுவினரே தங்களுக்குள் பணத்தைத்திரட்டி, ஆண்டுதோறும் பல்வேறு வகைப்பாடுகளில் பரிசுகள் வழங்குதல், சிறப்பாக நிகழ்ச்சி நடத்துதல் எனத் தொண்டாற்றி வருகின்றனர்.

தமிழ்நாடு முழுவதுமுள்ள எழுத்தாளர்களுக்கான சிறந்த படைப்புப் போட்டி நடத்தி  விருதுகளும் பரிசுகளும வழங்கப்படுகின்றன.

செவ்வாய், 16 ஜூன், 2026

தமிழ்க் காப்புக் கழகம் – இணைய அரங்கம்: ஆளுமையர் உரை 167 & 168 ; நூலரங்கம்




ஆக்கமுங் கேடும் அதனால் வருதலால்

காத்தோம்பல் சொல்லின்கட் சோர்வு.                  

(திருவள்ளுவர், திருக்குறள், ௬௱௪௰௨ – 642)

நாள்: ஆனி 07, 2057 ஞாயிறு 21.06.2026 காலை 10.00 

வியாழன், 4 ஜூன், 2026

தமிழ்க் காப்புக் கழகம் – இணைய அரங்கம்; ஆளுமையர் உரை 165 & 166 ; நூலரங்கம்



வேட்பத்தாஞ் சொல்லிப் பிறர்சொல் பயன்கோடல்

மாட்சியின் மாசற்றார் கோள்.  (திருவள்ளுவர், திருக்குறள், ௬௱௪௰௬ – 646)

வரவேற்புரை : கவிஞர் தமிழ்க் காதலன்,

தலைமையும் நூலாய்வும் :  இலக்குவனார் திருவள்ளுவன்

ஆளுமையர் உரை:

நூ லா ய் வு :

திங்கள், 1 ஜூன், 2026

தமிழ்க் காப்புக் கழகம், புது தில்லிக் கிளை, இணைய அரங்கு உரை – 8



தமிழே விழி!                தமிழா விழி !!

தமிழ்த் தாய் வாழ்த்து: பண்ணிசைப் பாடகி,

திருமதி பாக்கியலட்சுமி மணி அவர்கள், உளுந்தூர்பேட்டை. 

வரவேற்புரை: , திருமிகு அரிஅரன் அவர்கள், வழக்குரைஞர், தில்லி.

செயலர் அறிக்கை: கல்லூரி மாணவி செல்வி வித்யா அவர்கள் 

(தலைவர், தமிழ்க் காப்புக் கழகம், தில்லிக் கிளை)

அறிமுக உரை: கல்லூரி மாணவர் திருமிகு சஞ்சய் அவர்கள் 

நன்றியுரை: கல்லூரி மாணவி செல்வி நிசா அவர்கள் 

ஞாலப்பண்: கல்லூரி மாணவி செல்வி பிரீத்தி அவர்கள் 

               செயலாளர்.                                                            தலைவர்

வெள்ளி, 29 மே, 2026

இன்னும் ஆங்கிலேயருக்கான ஆட்சியாகத்தான் தலைமைச்செயலகத்தினர் கருதுகின்றனரா? – இலக்குவனார் திருவள்ளுவன்



நேற்று தமிழ் வளர்ச்சி-பள்ளிக்கல்வி அமைச்சர் இராசுமோகன்,

“அரசாங்கம் எப்போதும் தமிழ் மொழிக்கும், தமிழ்த்தாய் வாழ்த்திற்கும் முதல் முதன்மைத்துத்தையே அளிக்கும். இது வெறும் மேடைப் பேச்சோடு நின்றுவிடாமல், அதற்கான சட்டப்பூர்வமான முறைகள் அனைத்தும் சரியாக பின்பற்றப்படும். எங்களை பொறுத்தவரை மாநிலத்தின் நலனே மிக முக்கியமானது.” என்று கருத்து தெரிவித்துள்ளார். இக்கருத்தைத் தெரிவித்தமைக்காக அவரையும் அரசையும் அரசை வழிநடத்திச் செல்லும் முதல்வர் ச.சோ.விசய்யையும் பாராட்டுகிறோம். அதே நேரம் அரசிற்கு எதிராகவே தலைமைச் செயலகத்தினர் செயற்படும் போக்கிற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டுகிறோம்.

மாறுதல் ஆணைகளைக் கூடத் தமிழில் வெளியிடமுடியாத நிலையிலான தமிழ் மொழி உள்ளது? இன்று(29.05.26) வெளிவந்த இ.ஆ.ப. அலுவலர்கள் மாறுதல் ஆணை தமிழில் இல்லை. வழக்கம்போலவே ஆங்கிலத்தில் கோலோச்சுகிறது. இதற்கு அரசு எச்சரிக்கையோ அறிவிப்பா வெளியிடக் கூடாது.

ஒன்றிய அரசிற்கு- அனுப்புவதற்காகத்தான் ஆங்கிலத்தில் ஆணை பிறப்பித்ததாகக் கூறும் நாெண்டிச் சாக்கையும் ஏற்கக்கூடாது. அவர்கள்வேண்டுமானால் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துக்கொள்ளட்டும். அல்லது இதன் ஆங்கிலப்படியை அவர்களுக்குத் தமிழக் அரசு அனுப்பட்டும்.

உடனடியாகப் பொதுத்துறைச் செயலர் வரையிலான தொடர்பான அலுவலர்கள் அனைவர்மீதும் நடவடிக்கை எடுத்துக் குறைந்தஅளவு தண்டைனயாவது வழங்க வேண்டும்.  இதுதான் அதிகாரிகளுக்கு அச்சத்தை ஏற்படுத்தித் தமிழ் ஆட்சிமொழிச் செயலாக்கத்தில் ஈடுபடச் செய்யும்.

இத்தகைய நேர்வுகளில் தமிழ்வளர்ச்சித்துறைச் செயலரே நடவடிக்கை எடுத்துத் தண்டனை வழங்கும் அதிகாரத்தை அளித்து ஆணை பிறப்பிக்க வேண்டும்.




வியாழன், 21 மே, 2026

தமிழ்க் காப்புக் கழகம் – இணைய அரங்கம்; ஆளுமையர் உரை 163 & 164 ; நூலரங்கம்

      21 May 2026      



சொல்லுக சொல்லைப் பிறிதோர்சொல் அச்சொல்லை

வெல்லுஞ்சொல் இன்மை அறிந்து

 (திருவள்ளுவர், திருக்குறள், ௬௱௪௰௫ – 645)

ஆளுமையர் உரை:

திங்கள், 11 மே, 2026

முதல்வர் பொறுப்பேற்ற பொழுதே நடந்த முதல் பாராட்டுக் கூட்டம்!



நேற்று ஞாயிறு 10.05.2026 காலை 10.00 மணிக்குத் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் மாண்புமிகு ச.சோ.விசய் முதல்வராகப் பொறுப்பேற்ற நிகழ்வு நடந்ததை அனைவரும் அறிவோம்.

நேற்று அதே நேரம் அவருக்குத் தமிழ்காப்புக் கழகம் சார்பில் பாராட்டுக் கூட்டம் நடைபெற்றது. இதுவே முதல் பாராட்டுக் கூட்டம். அதுவும் தமிழ் அமைப்பு நடத்திய பாராட்டுக் கூட்டம்.

தமிழ்க் காப்புக் கழகத் தலைவர் திரு இலக்குவனார் திருவள்ளுவன் தலைமையில் இக்கூட்டம் நிகழ்ந்தது.

தேர்தல் கணிப்புகளையும் திணிப்புகளையும் பொய்யாக்கித் தன்னம்பிக்கையால் வெற்றி பெற்றார் எனப் பாராட்டினார்.

மேலும் சிக்கல் எதுவும் வந்தால் முறியடித்து ஐந்தாண்டு காலம் முழுமையாக ஆட்சி நடத்த வாழ்த்தினார்.

குடியரசுத் தலைவர் ஆட்சிக்கு வழி வகுக்காமல் த.வெ.கழகத்திற்கு ஆதரவு தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர்கள் அனைவருக்கும் பாராட்டும் நன்றியும் தெரிவித்தார்.

தொடர்ந்து நடைபெற்ற கவியரங்கில், முனைவர் புத்தேரி தானப்பன், முனைவர் வி.பொ.தமிழ்ப்பாவை, செல்வி முசிபூர் அமீரா, செல்வி பி.முகில் ஆகியோர் வாழ்த்துப் பா பாடினர்.

நிறைவாக முனைவர் செ.இராசேசுவரி எழுதிய, “பண்பாட்டு நகர்வுகள் – தமிழ்நாட்டில் இருந்து சப்பானுக்கு” என்னும் நூல் குறித்து ஆய்வுரை வழங்கினார்.

தொடக்கத்தில் முனைவர் மா.போ.ஆனந்தி வரவேற்புரையாற்றினார். செல்வி முகிற்செல்வி நன்றி நவின்றார்.

கவியரங்கத்தில் பங்கேற்றோர் மாண்புமிகு முதல்வர் விசய்யின் திறமைகள் குறித்தும் வாக்குறுதிகளைச் சிறப்பாக நிறைவேற்றுவார் என்னும் நம்பிக்கை குறித்தும் தமிழ், தமிழர் நலன் குறித்தும் சிறப்பாக எடுத்துரைத்தனர்.