திங்கள், 11 மே, 2026

முதல்வர் பொறுப்பேற்ற பொழுதே நடந்த முதல் பாராட்டுக் கூட்டம்!



நேற்று ஞாயிறு 10.05.2026 காலை 10.00 மணிக்குத் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் மாண்புமிகு ச.சோ.விசய் முதல்வராகப் பொறுப்பேற்ற நிகழ்வு நடந்ததை அனைவரும் அறிவோம்.

நேற்று அதே நேரம் அவருக்குத் தமிழ்காப்புக் கழகம் சார்பில் பாராட்டுக் கூட்டம் நடைபெற்றது. இதுவே முதல் பாராட்டுக் கூட்டம். அதுவும் தமிழ் அமைப்பு நடத்திய பாராட்டுக் கூட்டம்.

தமிழ்க் காப்புக் கழகத் தலைவர் திரு இலக்குவனார் திருவள்ளுவன் தலைமையில் இக்கூட்டம் நிகழ்ந்தது.

தேர்தல் கணிப்புகளையும் திணிப்புகளையும் பொய்யாக்கித் தன்னம்பிக்கையால் வெற்றி பெற்றார் எனப் பாராட்டினார்.

மேலும் சிக்கல் எதுவும் வந்தால் முறியடித்து ஐந்தாண்டு காலம் முழுமையாக ஆட்சி நடத்த வாழ்த்தினார்.

குடியரசுத் தலைவர் ஆட்சிக்கு வழி வகுக்காமல் த.வெ.கழகத்திற்கு ஆதரவு தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர்கள் அனைவருக்கும் பாராட்டும் நன்றியும் தெரிவித்தார்.

தொடர்ந்து நடைபெற்ற கவியரங்கில், முனைவர் புத்தேரி தானப்பன், முனைவர் வி.பொ.தமிழ்ப்பாவை, செல்வி முசிபூர் அமீரா, செல்வி பி.முகில் ஆகியோர் வாழ்த்துப் பா பாடினர்.

நிறைவாக முனைவர் செ.இராசேசுவரி எழுதிய, “பண்பாட்டு நகர்வுகள் – தமிழ்நாட்டில் இருந்து சப்பானுக்கு” என்னும் நூல் குறித்து ஆய்வுரை வழங்கினார்.

தொடக்கத்தில் முனைவர் மா.போ.ஆனந்தி வரவேற்புரையாற்றினார். செல்வி முகிற்செல்வி நன்றி நவின்றார்.

கவியரங்கத்தில் பங்கேற்றோர் மாண்புமிகு முதல்வர் விசய்யின் திறமைகள் குறித்தும் வாக்குறுதிகளைச் சிறப்பாக நிறைவேற்றுவார் என்னும் நம்பிக்கை குறித்தும் தமிழ், தமிழர் நலன் குறித்தும் சிறப்பாக எடுத்துரைத்தனர்.

வெள்ளி, 8 மே, 2026

தமிழ்க் காப்புக் கழகம் – இணைய அரங்கம்: த.வெ.க.தலைவர் விசய்க்குப் பாராட்டரங்கம்

     08 May 2026 

 

தூங்காமை கல்வி துணிவுடைமை இம்மூன்றும்

நீங்கா நிலனான் பவர்க்கு.   (திருவள்ளுவர், திருக்குறள், ௩௱௮௰௩ – 383)

ஆய்விற்குரிய நூல் :

இணைய உரை 07 தமிழ்க்காப்புக்கழகம், புது தில்லி, 09052026

 




வியாழன், 23 ஏப்ரல், 2026

தமிழ்க் காப்புக் கழகம் – இணைய அரங்கம் + ஆளுமையர் உரை 159 & 160 ; நூலரங்கம்



திறனறிந்து சொல்லுக சொல்லை அறனும்

பொருளும் அதனினூஉங்கு இல்.   (திருவள்ளுவர், திருக்குறள்,௬௱௪௰௪ – 644)

தமிழே விழி!           தமிழா விழி!

செயலர், தமிழ்க்காப்புக் கழகம்

ஆய்விற்குரிய நூல் :

நிறைவுரை :

சனி, 11 ஏப்ரல், 2026

இணைய உரை 6+ தமிழ்க்காப்புக் கழகம், புது தில்லி+11.04.26





வியாழன், 9 ஏப்ரல், 2026

இளங்கோ அடிகள் புத்தாண்டு விழா ; நூலரங்கம்: தமிழ்க் காப்புக் கழகம் – இணைய அரங்கம்

 

செவ்வாய், 31 மார்ச், 2026

 

பெரியார்  நூலக வாசகர் வட்டம்- சனாதனம்-பொய்யும் மெய்யும் நூலாய்வு: ச.பிரின்சு என்னாரெசு பெரியார்



  பெரியார்  நூலக வாசகர் வட்டம்

2592ஆம் நிகழ்வு

 இடம் :  அன்னை ஈ.வெ.இரா.மணியம்மையார் அரங்கம், பெரியார் திடல், சென்னை 600 007

நாள் :  திருவள்ளுவர் ஆண்டு 2057, பங்குனி 19 / 02.04.2026

தலைவர்: வழக்குரைஞர் மானமிகு ஆ.வீரமர்த்தினி

தலைவர், பெரியார் நூலக வாசகர் வட்டம்

நூலாய்வு: “சனாதனம் – பொய்யும் மெய்யும்

ஆய்வுச் சிறப்புரை:

மானமிகு ச.பிரின்சு என்னாரெசு பெரியார்

ஏற்புரை: மானமிகு இலக்குவனார் திருவள்ளுவன்

முன்னிலை: தென்.மாறன், வழக்குரைஞர் பா.மணியம்மை, செ.சனார்த்தனம், 

நன்றியுரை: மானமிகு ஆ.வெங்கடேசன்செயலர், பெரியார் நூலக வாசகர் வட்டம்

உரூ.300 மதிப்புள்ள இந்நூல் விழா அரங்கில் தள்ளுபடி  விலையில் உரூ.200/க்குக் கிடைக்கும். நூல் வேண்டுவோர் + 91 94441 05470 எண்ணில் பதிவு செய்க! இலக்குவனார் திருவள்ளுவன் எழுதிய பிற நூல்களும் தள்ளுபடி விலையில் கிடைக்கும்.

தோழர்களோடு தவறாமல் வருகை தாருங்கள்!