சனி, 5 செப்டம்பர், 2026

இணையப் பதிவுகளில் இலக்குவனார் போற்றி! – நாம் தமிழர் சீமான் + தங்கம் தென்னரசு

 

இணையப் பதிவுகளில் இலக்குவனார் போற்றி! – நாம் தமிழர் சீமான் + தங்கம் தென்னரசு






தமிழ்ப்போராளி இலக்குவனாரை எப்போதும் தவறாமல் மறவாமல் போற்றும் செந்தமிழன் சீமான் புகழுரை




தொல்காப்பியத்தை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து முனைவர் பட்டம் பெற்ற முத்தமிழ்ப்பேரறிஞர்!

அதுநாள்வரை மாணவர்கள் ஆங்கிலத்தில் கூறிவந்த வருகைப் பதிவை அன்னைத் தமிழில் “உளேன் ஐயா” என்று உரக்கச் சொல்ல வைத்த பெருமகன்!

சங்கப் பாடல்களை முதன் முதலாகச் சிறுகதை, நாடகங்கள் வடிவில் உலகத்தமிழர் உள்ளங்களில் சேர்ப்பித்த இதழியல் முன்னோடி!

தான் வகுப்பெடுத்த கல்லூரிகளில் எல்லாம் மாணவர்களுக்கு இனப்பற்றும் மொழிப்பற்றும் ஊட்டித் தன்னந்தனியனாக ஒரு தலைமுறையையே மானத் தமிழர்களாக வளர்த்தெடுத்த பெருந்தகை!

மாணவர்களிடம் தாய்த்தமிழ்ப்பற்றை ஊட்டுகிறார் என்ற காரணத்திற்காகப் பல்வேறு மாவட்டங்களுக்குப் பணியிடம் மாற்றி அலைக்கழித்தது அன்றைய காங்கிரசு அரசு!

ஆனால், அதையே வாய்ப்பாகக் கொண்டு செல்லும் இடமெல்லாம் இந்தித் திணிப்பிற்கு எதிராக இளந்தமிழ் தலைமுறையினரிடம் தமிழ் நெருப்பைப் பற்ற வைத்த புரட்சியாளர்!

நா.காமராசன், க.காளிமுத்து, கவிஞர் இன்குலாபு, பா.செயப்பிரகாசம் என 1965 ஆம்ஆண்டு நிகழ்ந்த மூன்றாம் மொழிப்போரின் முதன்மைத் தளபதிகளாக முன்னின்றவர்கள் பலரும் ஐயா இலக்குவனார் மூட்டிய புரட்சித்தீயில் பூத்த அவரின் மாணவச் செல்வங்களே!

அன்னைத் தமிழைப் பயிற்சிமொழியாக்க மறுத்து ஆங்கிலத்திற்குத் துணை நின்ற திமுக கல்வி அமைச்சரைக் கண்டித்து அன்றைய முதல்வர் அறிஞர் அண்ணா அவர்களால் வழங்கப்பட்ட மாநிலக்கல்லூரித் தலைமைத் தமிழ்ப்பேராசிரியர் பணியினை, தன்மானத்துடன் தூக்கி எறிந்த தமிழ் மறவர் நம்முடைய ஐயா இலக்குவனார் அவர்கள்!

மொழிப்போரை முன்னின்று நடத்தியதற்காகச் சிறையேகிய ஈகி, பெரும் புலவர் ஐயா இலக்குவனார் அவர்களின் புரட்சிகரப் பெருவாழ்வினப் போற்றுகின்ற இந்நாளில் அவர் கற்பித்தவழி நின்று தமிழ் மொழியையும் மண்ணையும் விழியெனக் காப்போம் என உறுதியேற்போம்!

மொழி காத்த தமிழ் மறவர்

ஐயா இலக்குவனார் அவர்களின்

பெரும்புகழ் போற்றுவோம்!

(ஒப்பம்)

++

தமிழறிஞர்களில் தனித்துவமானவர்; ஓய்வறியாத் தமிழ்ப் பணியாளர் பேராசிரியர் சி. இலக்குவனார் அவர்களின் நினைவுநாள் இன்று.

அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தமிழ்ப் பாடத்தை நீக்க முடிவு செய்தபோது, அது அரசரின் முடிவாக இருந்தாலும், அதற்கு எதிராகத் துணிந்து வாதாடியவர். தான் சென்ற இடமெங்கும் தமிழ்க் கழகங்களை நிறுவியும், இதழ்களை நடத்தியும், தனித்தமிழை வளர்த்த தமிழ்க்காவலர். முத்தமிழறிஞர் தலைவர் கலைஞரைப் போன்ற தமிழுணர்வு பீறிட்டெழும் தலைமுறையை உருவாக்கிய ஆசிரியர். தமிழுக்காக வாழ்ந்து, தமிழுக்காகப் போராடி, தமிழைக் காக்கும் போராளிகளை உருவாக்கிய அவ்வறிஞரின் நினைவுநாளில், அவரது தமிழ்ப்பற்றையும் போராட்ட உணர்வையும் போற்றுவோம்!

– தங்கம் தென்னரசு, முகநூற்பதிவு

செவ்வாய், 1 செப்டம்பர், 2026

தமிழ்ப்போராளி பேரா.சி.இலக்குவனார் நினைவேந்தல், நூலாய்வு: இணைய உரையரங்கம்

      31 August 2026      கரமுதல



தலைவர், தமிழ்க்காப்புக் கழகம், தில்லிக் கிளை

எழுதிய சாகித்திய அகாதமியின் வெளியீடு:

வியாழன், 20 ஆகஸ்ட், 2026

இலக்குவனார் திருக்குறள் விருது : தகுதியானவர்கள் தகவல் தரலாம்




திருக்குறள் குறித்த  கட்டுரைகள், நூற்கள், உரைகள், சொற்பொழிவுகள், அமைப்புகள், போட்டிகள், காணொளிகள், இணையத்தளங்கள், வலைப்பூக்கள், வகுப்புகள், மொழி பெயர்ப்புகள் முதலான பல வகையிலும் பரப்பி வரும் திருக்குறள் ஆர்வலர்களுக்கு இலக்குவனார் திருக்குறள் விருது வழங்கப் பெறும்.

1.) கட்டுரைகள், நூற்கள், உரைகள் 2.) சொற்பொழிவுகள், வகுப்புகள் 3.) இணையத் தளங்கள், வலைப்பூக்கள், இதழ்கள் 4.) மொழி பெயர்ப்புகள் 5.) அமைப்புகள், போட்டிகள், பிற வகைகள் ஆகிய ஒவ்வொரு பிரிவிலும் மும்மூன்று விருதுகள் வழங்கப் பெறும்.

மேலும், எல்லா வகையிலும் திருவள்ளுவர் புகழ் பரப்பிவரும் குறள்நெறியைப் போற்றி வரும் மூவருக்கு இலக்குவனார் திருக்குறள் வாணாள் அருவினை விருது வழங்கப் பெறும்.

தகுதியான பிறருக்குப் பாராட்டிதழ்கள் வழங்கப் பெறும்.

விருதிற்காகத் தொண்டாற்றவில்லை என எண்ணாமல், தகைமையாளர்கள் தங்கள் விவரங்களை அனுப்ப அன்புடன் வேண்டுகிறோம். திருக்குறள் செயற்பாட்டாளர்களை அறிந்த

பிறரும் பரிந்துரைக்கலாம்.

விருது பெற விழைவோர் thamizh.kazhakam@gmail.com மின்வரிக்கு

ஆவணி 17, 2057/ செட்டம்பர் 03, 2026 ஆம் நாளுக்குள் தங்கள் பெயர், முகவரி, மின்வரி, பேசி எண்கள் முதலிய விவரங்களைப் பதிவு செய்து கொள்ளவும்

தங்களின் திருக்குறட்பணி விவரங்களுடன் முழுமையான தகவல்களை ஐப்பசி 14, 2057 /  31.08.2026 ஆம் நாளுக்குள்

தெரிவிக்கவும்  வேண்டப்படுகின்றனர்.

வாழ்த்துகளுடன்

புதன், 19 ஆகஸ்ட், 2026

தமிழ்க் காப்புக் கழகம் – இணைய அரங்கம்: ஆளுமையர் உரை 175 & 176 ; நூலரங்கம்: தமிழகத் தடங்கள்



தமிழே விழி!                                     தமிழா விழி!

இணரூழ்த்தும் நாறா மலரனையர் கற்றது

உணர விரித்துரையா தார்.   (திருவள்ளுவர், திருக்குறள்,௬௱௫௰ – 650)

கூட்ட எண் / Meeting ID: 864 136 8094  ;  கடவுக்குறி / Passcode: 12345

அணுக்கிக் கூட்ட இணைப்பு : https://us02web.zoom.us/j/8641368094? pwd=dENwVFBIOTNncGsrcENUSWJxbVZHZz09 (map)

ஆளுமையர் உரை:

செயலர், திருவள்ளுவர் மா மன்றம்

தலைவர், நட்பு தமிழ் வட்டம்

வெள்ளி, 7 ஆகஸ்ட், 2026

கவிஞர் புத்தேரி தானப்பன் அவர்களுக்குப் பாராட்டு விழா





தமிழ்க் காப்புக் கழகத்தின் தில்லிக் கிளை கடந்த பத்துத் திங்களாகச் சிறப்புடன் செயல்பட்டு வருகிறது. அதன் தலைவராக முனைவர் புத்தேரி தானப்பன் அவர்கள் செம்மையாகச் செயல்புரிந்து வருகிறார்.

சா(ஜா)ர்கண்டு மாநிலத்தின் முன்னை நீதியரசர் கற்பகவிநாயகம் அவர்கள் விருதினை வழங்கிச் சிறப்பித்தார்.

விருது பெற்ற முனைவர் புத்தேரி தானப்பன் அவர்களுக்குக் கடந்த ஆடி 10, 2057/26-7-2026 அன்று தில்லித் தமிழ்ச் சங்கத்தின் திருவள்ளுவர் கலையரங்கத்தில் பாராட்டு விழா நடைபெற்றது. 

விருது பெற்ற முனைவர் புத்தேரி தானப்பன் அவர்களை முன்னை நீதியரசர் கற்பகவிநாயகம் அவர்களும் அனைத்திந்திய தமிழ் அமைப்புகளின் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் முனைவர் முகுந்தன் அவர்களும் புகழ்பெற்ற நகைச்சுவைப் பேச்சாளரும் பட்டிமன்ற நடுவருமான புலவர் இராமலிங்கம் அவர்களும் பாராட்டினர்.

வியாழன், 6 ஆகஸ்ட், 2026

தமிழ்க் காப்புக் கழகம் – இணைய அரங்கம்: ஆளுமையர் உரை 173 & 174 ; நூலரங்கம்

 






புதன், 5 ஆகஸ்ட், 2026

இணைய உரை 10, தமிழ்க்காப்புக்கழகம், புதுதில்லி

 


வினாத் தொடுத்தல்: அரங்கில் பங்கேற்போர்.