கருத்துகள் - views
சனி, 11 ஏப்ரல், 2026
வியாழன், 9 ஏப்ரல், 2026
இளங்கோ அடிகள் புத்தாண்டு விழா ; நூலரங்கம்: தமிழ்க் காப்புக் கழகம் – இணைய அரங்கம்
வேட்பத்தாஞ் சொல்லிப் பிறர்சொல் பயன்கோடல்
மாட்சியின் மாசற்றார் கோள். (திருக்குறள், ௬௱௪௰௬ – 646)
தமிழே விழி! தமிழா விழி!
தமிழ்க்காப்புக்கழகம்
இணையவழியில் இளங்கோவடிகள் புத்தாண்டு விழா
ஆய்வரங்கம்
நாள்: பங்குனி 29, 2057 ஞாயிறு 12.04.2026 காலை 10.00 மணி
கூட்ட எண் / Meeting ID: 864 136 8094 ; கடவுக்குறி / Passcode: 12345
அணுக்கிக்கூட்ட இணைப்பு : https://us02web.zoom.us/j/8641368094? pwd=dENwVFBIOTNncGsrcENUSWJxbVZHZz09 (map)
வரவேற்புரை : தொல்காப்பியச் சுடர் அ.இருளப்பன்
தலைமையும் நூலாய்வும்: இலக்குவனார் திருவள்ளுவன்
கவியரங்கம் தலைமை : கவிஞர் தமிழ்க் காதலன்
கவிஞர் முனைவர் புத்தேரி தானப்பன்
கவிஞர் இலக்குவன்
கவிஞர் முனைவர் ஆனந்தி புது தில்லி
கவிஞர் முனைவர் மா.போ ஆனந்தி
கவிஞர் முனைவர் தமிழ்ப்பாவை
ஆய்வரங்கம் :தமிழ் ஆண்டு எது என்பது தொடர்பான படைப்புகள் குறித்து
நன்றியுரை: தமிழார்வலர் கி.வித்தியா
0000000000000000000000000000000000000000
மூவகை ஆண்டுப் பகுப்புகள்
தொல்காப்பியர் காலத்தில் அவரது காலத்திற்கு முன்பிருந்தவாறு ஆவணியே ஆண்டின் தொடக்கமாக இருந்தது. 365 நாளுக்கு ஒரு முறை முளைக்கும் மூங்கிலுக்கு ஆண்டு எனப் பெயர். மூங்கில் முளைக்கும் திங்கள் ஆவணி. எனவே, ஓராண்டுக் கால அளவைக்குறிப்பிடும் மூங்கில் தோன்றிய மாதத்தில் இருந்து ஆண்டினைக் கணக்கிட்டுள்ளனர்.
சித்திரையில் தொடங்கி பங்குனியில் முடிவது வருடம். சித்திரைத்திங்கள் மேழ ஓரையில் வருகிறது. மேழம் என்பது வருடை என்னும் ஒரு வகை ஆட்டைக் குறிக்கும். வருடையில் தொடங்கும் ஆண்டுப்பகுப்பு வருடம் எனப்படலாயிற்று.
திண்ணிலை மருப்பின் ஆடுதலை யாக
விண்ணூர்பு திரிதரும் வீங்குசெலல் மண்டிலத்து (நக்கீரர்: நெடுநல்வாடை: அடிகள் 160-161) என வரும் சங்க இலக்கியப் பாடலடிகள் ஆட்டினை – சித்திரையை – முதலாக உடைய காலப்பகுப்பைக் குறிக்கின்றது. வியாழ வட்ட அடிப்படையில் 60 ஆண்டு காலச் சுழற்சி முறையும் பயன்பாட்டில் இருந்துள்ளது. ஆனால் சமற்கிருத இழி காமக்கதைகளால் நாம் இதனைக் கைவிடும் நிலைக்குத் தள்ளப்பட்டோம்.
தை முதல் நாள், சூரியன் வடதிசை நோக்கித் திரும்பும் நாள் என்பதால், இயற்கையின் புதிய தொடக்கமாகக் கருதப்பட்டு ஆண்டுக் கணக்கிடப்பட்டுப் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது. எனவே, அறிஞர்கள் கூடித் தொடராண்டு கணக்கிற்காகத் தை முதல்நாளைப் பயன்பாட்டிற்குக் கொண்டுவந்தனர். திருவள்ளுவர் ஆண்டாகக் குறிக்கப் பெறும் இதனையே நாம் நடைமுறையில் பின்பற்ற வேண்டும்.
சித்திரை மாதத்தில் சித்திரை நாளில் முழு நிலா சேர்ந்ததாக இளங்கோ அடிகள்,
“சித்திரைச் சித்திரைத் திங்கள் சேர்ந்தென அந்நாள்” (சிலப்பதிகாரம், 5.64) எனக் குறிப்பிடுகிறார். அப்பொழுதுதான் இந்திர விழா கொண்டாடப்படும். சிலப்பதிகாரம், மணிமேகலை காலத்தில் இவ்விழா அரசு விழாவாகக் கொண்டாடப்பட்டுள்ளது. இவ்விழா, சித்திரை ஆண்டுப் பிறப்பைச் சிறப்பிப்பதாகக் கருத வேண்டும்.சித்திரைத் தொடக்கமே இளவேனிற் காலத் தொடக்கம். இளவேனிற் காலத்தை இளங்கோ அடிகள் குறிப்பிடுகிறார்.
செவ்வாய், 31 மார்ச், 2026
பெரியார் நூலக வாசகர் வட்டம்- சனாதனம்-பொய்யும் மெய்யும் நூலாய்வு: ச.பிரின்சு என்னாரெசு பெரியார்
பெரியார் நூலக வாசகர் வட்டம்
2592ஆம் நிகழ்வு
இடம் : அன்னை ஈ.வெ.இரா.மணியம்மையார் அரங்கம், பெரியார் திடல், சென்னை 600 007
நாள் : திருவள்ளுவர் ஆண்டு 2057, பங்குனி 19 / 02.04.2026
தலைவர்: வழக்குரைஞர் மானமிகு ஆ.வீரமர்த்தினி
தலைவர், பெரியார் நூலக வாசகர் வட்டம்
நூலாய்வு: “சனாதனம் – பொய்யும் மெய்யும்”
ஆய்வுச் சிறப்புரை:
மானமிகு ச.பிரின்சு என்னாரெசு பெரியார்
ஏற்புரை: மானமிகு இலக்குவனார் திருவள்ளுவன்
முன்னிலை: தென்.மாறன், வழக்குரைஞர் பா.மணியம்மை, செ.சனார்த்தனம்,
நன்றியுரை: மானமிகு ஆ.வெங்கடேசன், செயலர், பெரியார் நூலக வாசகர் வட்டம்
உரூ.300 மதிப்புள்ள இந்நூல் விழா அரங்கில் தள்ளுபடி விலையில் உரூ.200/க்குக் கிடைக்கும். நூல் வேண்டுவோர் + 91 94441 05470 எண்ணில் பதிவு செய்க! இலக்குவனார் திருவள்ளுவன் எழுதிய பிற நூல்களும் தள்ளுபடி விலையில் கிடைக்கும்.
தோழர்களோடு தவறாமல் வருகை தாருங்கள்!
புதன், 25 மார்ச், 2026
தமிழ்க் காப்புக் கழகம் – இணைய அரங்கம் – ஆளுமையர் உரை 159 & 160 ; சொல்லாய்வுகள் : நூலரங்கம்
சொல்லுக சொல்லைப் பிறிதோர்சொல் அச்சொல்லை
வெல்லுஞ்சொல் இன்மை அறிந்து. (திருவள்ளுவர், திருக்குறள், ௬௱௪௰௫-645)
தமிழே விழி! தமிழா விழி!
தமிழ்க் காப்புக் கழகம் – இணைய அரங்கம்
ஆளுமையர் உரை 159 & 160 ; நூலரங்கம்
நாள்: பங்குனி 15, 2057 ஞாயிறு 29.03.2026 காலை 10.00 மணி
கூட்ட எண் / Meeting ID: 864 136 8094 ; கடவுக்குறி / Passcode: 12345
அணுக்கிக்கூட்ட இணைப்பு : https://us02web.zoom.us/j/8641368094? pwd=dENwVFBIOTNncGsrcENUSWJxbVZHZz09 (map)
வரவேற்புரை : கவிஞர் தமிழ்க் காதலன், செயலர், தமிழ்க்காப்புக் கழகம்
தலைமையும் நூலாய்வும்: இலக்குவனார் திருவள்ளுவன்
ஆளுமையர் உரை:
சொல்லாய்வுச் செம்மல் வை.மு.கும்பலிங்கன்
முனைவர் சிவபாலமுருகன்
உச்சநீதி மன்ற வழக்குரைஞர், தலைவர், தில்லித் தமிழ்ச்சங்கம்.
ஆய்விற்குரிய நூல் :
வை.மு.கும்பலிங்கன் எழுதியுள்ள
சொல்லாய்வுகள்
நிறைவுரை :
அரசறிவியல் பேராசான் தோழர் தியாகு
நன்றியுரை : முனைவர் புத்தேரி தானப்பன்
தலைவர், தமிழ்க்காப்புக் கழகம், தில்லிக் கிளை
ஞாயிறு, 8 மார்ச், 2026
வியாழன், 5 மார்ச், 2026
தமிழ்க் காப்புக் கழகம் – இணைய அரங்கம்; ஆளுமையர் உரை 157 & 158 ; நூலரங்கம்
ஃஃஃ இலக்குவனார் திருவள்ளுவன் 05 March 2026 அகரமுதல
திறனறிந்து சொல்லுக சொல்லை அறனும்
பொருளும் அதனினூஉங்கு இல். (திருவள்ளுவர், திருக்குறள்,௬௱௪௰௪ – 644)
தமிழே விழி! தமிழா விழி!
தமிழ்க் காப்புக் கழகம் – இணைய அரங்கம்
ஆளுமையர் உரை 157 & 158 ; நூலரங்கம்
கூட்ட எண் / Meeting ID: 864 136 8094 ; கடவுக்குறி / Passcode: 12345
நாள்: மாசி 24, 2057 ஞாயிறு 08.03.2026 காலை 10.00 மணி
அணுக்கிக்கூட்ட இணைப்பு : https://us02web.zoom.us/j/8641368094? pwd=dENwVFBIOTNncGsrcENUSWJxbVZHZz09 (map)
வரவேற்புரை : கவிஞர் தமிழ்க் காதலன், செயலர், தமிழ்க்காப்புக் கழகம்
தலைமையும் நூலாய்வும்: இலக்குவனார் திருவள்ளுவன்
ஆளுமையர் உரை
நிதி அறிவுரைஞர் சேசாத்திரி
இதழாளர் இராகவேந்திரா ஆரா
ஆய்விற்குரிய நூல் :
நாவை.சிவம் எழுதிய வெல்லும் திருவள்ளுவம்
நிறைவுரை : அரசறிவியல் பேராசான் தோழர் தியாகு
நன்றியுரை : திருக்குறள் புலவர் து.வை.சிவராமலிங்கம்
புதன், 4 மார்ச், 2026
2 ஆவது தொல்காப்பிய ஆராய்ச்சி மாநாடு+ கட்டுரைச் சுருக்க இறுதி நாள்
2 ஆவது தொல்காப்பிய ஆராய்ச்சி மாநாடு+ கட்டுரைச் சுருக்க இறுதி நாள்
வணக்கம்
தொல்காப்பிய ஆராய்ச்சி மாநாட்டிற்குஆய்வுச்சுருக்கம்அனுப்ப பங்குனி 01, தி.பி.2057 / மார்ச்சு 15, 2026 வரைகாலநீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது.
பின்வரும் இணைப்பில் கட்டுரையின் ஆய்வுச் சுருக்கத்தை 2 பக்கங்களுக்குள் சொற்கோப்பில் (word file ) அளிக்கவும். .
https://forms.gle/QN63VR5v2KJAH5VA9
நன்றி
ஒருங்கிணைப்பாளர்
2ஆவது உலகத் தொல்காப்பிய ஆராய்ச்சி மாநாடு 2026, தொரண்டோ, கனடா
ஞாயிறு, 1 மார்ச், 2026
தொல்காப்பியம் – சொல்லதிகாரம் : பட்டய வகுப்பு : வாழ்த்துரை : இலக்குவனார் திருவள்ளுவன்