வெள்ளி, 29 மே, 2026

இன்னும் ஆங்கிலேயருக்கான ஆட்சியாகத்தான் தலைமைச்செயலகத்தினர் கருதுகின்றனரா? – இலக்குவனார் திருவள்ளுவன்



நேற்று தமிழ் வளர்ச்சி-பள்ளிக்கல்வி அமைச்சர் இராசுமோகன்,

“அரசாங்கம் எப்போதும் தமிழ் மொழிக்கும், தமிழ்த்தாய் வாழ்த்திற்கும் முதல் முதன்மைத்துத்தையே அளிக்கும். இது வெறும் மேடைப் பேச்சோடு நின்றுவிடாமல், அதற்கான சட்டப்பூர்வமான முறைகள் அனைத்தும் சரியாக பின்பற்றப்படும். எங்களை பொறுத்தவரை மாநிலத்தின் நலனே மிக முக்கியமானது.” என்று கருத்து தெரிவித்துள்ளார். இக்கருத்தைத் தெரிவித்தமைக்காக அவரையும் அரசையும் அரசை வழிநடத்திச் செல்லும் முதல்வர் ச.சோ.விசய்யையும் பாராட்டுகிறோம். அதே நேரம் அரசிற்கு எதிராகவே தலைமைச் செயலகத்தினர் செயற்படும் போக்கிற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டுகிறோம்.

மாறுதல் ஆணைகளைக் கூடத் தமிழில் வெளியிடமுடியாத நிலையிலான தமிழ் மொழி உள்ளது? இன்று(29.05.26) வெளிவந்த இ.ஆ.ப. அலுவலர்கள் மாறுதல் ஆணை தமிழில் இல்லை. வழக்கம்போலவே ஆங்கிலத்தில் கோலோச்சுகிறது. இதற்கு அரசு எச்சரிக்கையோ அறிவிப்பா வெளியிடக் கூடாது.

ஒன்றிய அரசிற்கு- அனுப்புவதற்காகத்தான் ஆங்கிலத்தில் ஆணை பிறப்பித்ததாகக் கூறும் நாெண்டிச் சாக்கையும் ஏற்கக்கூடாது. அவர்கள்வேண்டுமானால் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துக்கொள்ளட்டும். அல்லது இதன் ஆங்கிலப்படியை அவர்களுக்குத் தமிழக் அரசு அனுப்பட்டும்.

உடனடியாகப் பொதுத்துறைச் செயலர் வரையிலான தொடர்பான அலுவலர்கள் அனைவர்மீதும் நடவடிக்கை எடுத்துக் குறைந்தஅளவு தண்டைனயாவது வழங்க வேண்டும்.  இதுதான் அதிகாரிகளுக்கு அச்சத்தை ஏற்படுத்தித் தமிழ் ஆட்சிமொழிச் செயலாக்கத்தில் ஈடுபடச் செய்யும்.

இத்தகைய நேர்வுகளில் தமிழ்வளர்ச்சித்துறைச் செயலரே நடவடிக்கை எடுத்துத் தண்டனை வழங்கும் அதிகாரத்தை அளித்து ஆணை பிறப்பிக்க வேண்டும்.




வியாழன், 21 மே, 2026

தமிழ்க் காப்புக் கழகம் – இணைய அரங்கம்; ஆளுமையர் உரை 163 & 164 ; நூலரங்கம்

      21 May 2026      



சொல்லுக சொல்லைப் பிறிதோர்சொல் அச்சொல்லை

வெல்லுஞ்சொல் இன்மை அறிந்து

 (திருவள்ளுவர், திருக்குறள், ௬௱௪௰௫ – 645)

ஆளுமையர் உரை:

திங்கள், 11 மே, 2026

முதல்வர் பொறுப்பேற்ற பொழுதே நடந்த முதல் பாராட்டுக் கூட்டம்!



நேற்று ஞாயிறு 10.05.2026 காலை 10.00 மணிக்குத் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் மாண்புமிகு ச.சோ.விசய் முதல்வராகப் பொறுப்பேற்ற நிகழ்வு நடந்ததை அனைவரும் அறிவோம்.

நேற்று அதே நேரம் அவருக்குத் தமிழ்காப்புக் கழகம் சார்பில் பாராட்டுக் கூட்டம் நடைபெற்றது. இதுவே முதல் பாராட்டுக் கூட்டம். அதுவும் தமிழ் அமைப்பு நடத்திய பாராட்டுக் கூட்டம்.

தமிழ்க் காப்புக் கழகத் தலைவர் திரு இலக்குவனார் திருவள்ளுவன் தலைமையில் இக்கூட்டம் நிகழ்ந்தது.

தேர்தல் கணிப்புகளையும் திணிப்புகளையும் பொய்யாக்கித் தன்னம்பிக்கையால் வெற்றி பெற்றார் எனப் பாராட்டினார்.

மேலும் சிக்கல் எதுவும் வந்தால் முறியடித்து ஐந்தாண்டு காலம் முழுமையாக ஆட்சி நடத்த வாழ்த்தினார்.

குடியரசுத் தலைவர் ஆட்சிக்கு வழி வகுக்காமல் த.வெ.கழகத்திற்கு ஆதரவு தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர்கள் அனைவருக்கும் பாராட்டும் நன்றியும் தெரிவித்தார்.

தொடர்ந்து நடைபெற்ற கவியரங்கில், முனைவர் புத்தேரி தானப்பன், முனைவர் வி.பொ.தமிழ்ப்பாவை, செல்வி முசிபூர் அமீரா, செல்வி பி.முகில் ஆகியோர் வாழ்த்துப் பா பாடினர்.

நிறைவாக முனைவர் செ.இராசேசுவரி எழுதிய, “பண்பாட்டு நகர்வுகள் – தமிழ்நாட்டில் இருந்து சப்பானுக்கு” என்னும் நூல் குறித்து ஆய்வுரை வழங்கினார்.

தொடக்கத்தில் முனைவர் மா.போ.ஆனந்தி வரவேற்புரையாற்றினார். செல்வி முகிற்செல்வி நன்றி நவின்றார்.

கவியரங்கத்தில் பங்கேற்றோர் மாண்புமிகு முதல்வர் விசய்யின் திறமைகள் குறித்தும் வாக்குறுதிகளைச் சிறப்பாக நிறைவேற்றுவார் என்னும் நம்பிக்கை குறித்தும் தமிழ், தமிழர் நலன் குறித்தும் சிறப்பாக எடுத்துரைத்தனர்.

வெள்ளி, 8 மே, 2026

தமிழ்க் காப்புக் கழகம் – இணைய அரங்கம்: த.வெ.க.தலைவர் விசய்க்குப் பாராட்டரங்கம்

     08 May 2026 

 

தூங்காமை கல்வி துணிவுடைமை இம்மூன்றும்

நீங்கா நிலனான் பவர்க்கு.   (திருவள்ளுவர், திருக்குறள், ௩௱௮௰௩ – 383)

ஆய்விற்குரிய நூல் :

இணைய உரை 07 தமிழ்க்காப்புக்கழகம், புது தில்லி, 09052026

 




வியாழன், 23 ஏப்ரல், 2026

தமிழ்க் காப்புக் கழகம் – இணைய அரங்கம் + ஆளுமையர் உரை 159 & 160 ; நூலரங்கம்



திறனறிந்து சொல்லுக சொல்லை அறனும்

பொருளும் அதனினூஉங்கு இல்.   (திருவள்ளுவர், திருக்குறள்,௬௱௪௰௪ – 644)

தமிழே விழி!           தமிழா விழி!

செயலர், தமிழ்க்காப்புக் கழகம்

ஆய்விற்குரிய நூல் :

நிறைவுரை :

சனி, 11 ஏப்ரல், 2026

இணைய உரை 6+ தமிழ்க்காப்புக் கழகம், புது தில்லி+11.04.26