கருத்துகள் - views
வியாழன், 27 ஆகஸ்ட், 2026
வியாழன், 20 ஆகஸ்ட், 2026
இலக்குவனார் திருக்குறள் விருது : தகுதியானவர்கள் தகவல் தரலாம்
இலக்குவனார் திருக்குறள் விருது
தகுதியானவர்கள் தகவல் தரலாம்
திருக்குறள் குறித்த கட்டுரைகள், நூற்கள், உரைகள், சொற்பொழிவுகள், அமைப்புகள், போட்டிகள், காணொளிகள், இணையத்தளங்கள், வலைப்பூக்கள், வகுப்புகள், மொழி பெயர்ப்புகள் முதலான பல வகையிலும் பரப்பி வரும் திருக்குறள் ஆர்வலர்களுக்கு இலக்குவனார் திருக்குறள் விருது வழங்கப் பெறும்.
1.) கட்டுரைகள், நூற்கள், உரைகள் 2.) சொற்பொழிவுகள், வகுப்புகள் 3.) இணையத் தளங்கள், வலைப்பூக்கள், இதழ்கள் 4.) மொழி பெயர்ப்புகள் 5.) அமைப்புகள், போட்டிகள், பிற வகைகள் ஆகிய ஒவ்வொரு பிரிவிலும் மும்மூன்று விருதுகள் வழங்கப் பெறும்.
மேலும், எல்லா வகையிலும் திருவள்ளுவர் புகழ் பரப்பிவரும் குறள்நெறியைப் போற்றி வரும் மூவருக்கு இலக்குவனார் திருக்குறள் வாணாள் அருவினை விருது வழங்கப் பெறும்.
தகுதியான பிறருக்குப் பாராட்டிதழ்கள் வழங்கப் பெறும்.
இலக்குவனார் இலக்கிய இணையம், தமிழ்க்காப்புக்கழகம், மாநிலத் தமிழ்ச்சங்கம், திருவள்ளுவர் மாமன்றம் ஆகியன இணைந்து வழங்க உள்ள இவ்விருதிற்குத் தகுதியானவர்கள் தங்களைப் பற்றிய விவரங்களை அனுப்பி வைக்க வேண்டுகிறோம்.
விருதிற்காகத் தொண்டாற்றவில்லை என எண்ணாமல், தகைமையாளர்கள் தங்கள் விவரங்களை அனுப்ப அன்புடன் வேண்டுகிறோம். திருக்குறள் செயற்பாட்டாளர்களை அறிந்த
பிறரும் பரிந்துரைக்கலாம்.
விருது பெற விழைவோர் thamizh.kazhakam@gmail.com மின்வரிக்கு
ஆவணி 17, 2057/ செட்டம்பர் 03, 2026 ஆம் நாளுக்குள் தங்கள் பெயர், முகவரி, மின்வரி, பேசி எண்கள் முதலிய விவரங்களைப் பதிவு செய்து கொள்ளவும்
தங்களின் திருக்குறட்பணி விவரங்களுடன் முழுமையான தகவல்களை ஐப்பசி 14, 2057 / 31.08.2026 ஆம் நாளுக்குள்
தெரிவிக்கவும் வேண்டப்படுகின்றனர்.
வாழ்த்துகளுடன்
இலக்குவனார் திருவள்ளுவன், தமிழ்க்காப்பு க்கழகம், 98844 81652
முனைவர் பா.வளன் அரசு, மாநிலத்தமிழ்ச்சங்கம்
பொறி. இ. திருவேலன், இலக்குவனார் இலக்கிய இணையம்
முனைவர் மு.அழகுராசா, திருவள்ளுவர் மா மன்றம்
புதன், 19 ஆகஸ்ட், 2026
தமிழ்க் காப்புக் கழகம் – இணைய அரங்கம்: ஆளுமையர் உரை 175 & 176 ; நூலரங்கம்: தமிழகத் தடங்கள்
தமிழே விழி! தமிழா விழி!
இணரூழ்த்தும் நாறா மலரனையர் கற்றது
உணர விரித்துரையா தார். (திருவள்ளுவர், திருக்குறள்,௬௱௫௰ – 650)
தமிழ்க் காப்புக் கழகம் – இணைய அரங்கம்
ஆளுமையர் உரை 175 & 176 ; நூலரங்கம்
நாள்: ஆவணி 06, 2057 ஞாயிறு 23.08.2026 காலை 10.00
கூட்ட எண் / Meeting ID: 864 136 8094 ; கடவுக்குறி / Passcode: 12345
அணுக்கிக் கூட்ட இணைப்பு : https://us02web.zoom.us/j/8641368094? pwd=dENwVFBIOTNncGsrcENUSWJxbVZHZz09 (map)
வரவேற்புரை: கவிஞர் தமிழ்க் காதலன்
தலைமை : இலக்குவனார் திருவள்ளுவன்
ஆளுமையர் உரை:
முனைவர் அழகுராசா
செயலர், திருவள்ளுவர் மா மன்றம்
புலவர் நாநா.ஆறுமுகம்
தலைவர், நட்பு தமிழ் வட்டம்
நூலாய்வு: இதழாளர் மோகன்
மூத்த இதழாளர் மணா எழுதிய
தமிழகத் தடங்கள்
நிறைவாக – அரசறிவியல் பேராசான் தோழர் தியாகு
நன்றியுரை: முனைவர் வி.பொ.ப.தமிழ்ப்பாவை
வெள்ளி, 7 ஆகஸ்ட், 2026
கவிஞர் புத்தேரி தானப்பன் அவர்களுக்குப் பாராட்டு விழா
கவிஞர் புத்தேரி தானப்பன் அவர்களுக்குப்
பாராட்டு விழா
தமிழ்க் காப்புக் கழகத்தின் தில்லிக் கிளை கடந்த பத்துத் திங்களாகச் சிறப்புடன் செயல்பட்டு வருகிறது. அதன் தலைவராக முனைவர் புத்தேரி தானப்பன் அவர்கள் செம்மையாகச் செயல்புரிந்து வருகிறார்.
அவருடைய இலக்கியத் தொண்டினைப் பாராட்டி கடந்த ஆனி 31,2057/15 – 7 – 2026 அன்று தில்லி, நாடாளுமன்றத்திற்கு அருகில் உள்ள அரசமைப்பு மன்றத்தில் (Constitutional Club) நடைபெற்ற விருது வழங்கும் விழாவில் உலகக் கல்விச் சாதனை விருதுக் குழு(World Educational Achievement Award Council) அவருக்கு விருது வழங்கிச் சிறப்பித்தது.
சா(ஜா)ர்கண்டு மாநிலத்தின் முன்னை நீதியரசர் கற்பகவிநாயகம் அவர்கள் விருதினை வழங்கிச் சிறப்பித்தார்.
விருது பெற்ற முனைவர் புத்தேரி தானப்பன் அவர்களுக்குக் கடந்த ஆடி 10, 2057/26-7-2026 அன்று தில்லித் தமிழ்ச் சங்கத்தின் திருவள்ளுவர் கலையரங்கத்தில் பாராட்டு விழா நடைபெற்றது.
விருது பெற்ற முனைவர் புத்தேரி தானப்பன் அவர்களை முன்னை நீதியரசர் கற்பகவிநாயகம் அவர்களும் அனைத்திந்திய தமிழ் அமைப்புகளின் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் முனைவர் முகுந்தன் அவர்களும் புகழ்பெற்ற நகைச்சுவைப் பேச்சாளரும் பட்டிமன்ற நடுவருமான புலவர் இராமலிங்கம் அவர்களும் பாராட்டினர்.
வியாழன், 6 ஆகஸ்ட், 2026
தமிழ்க் காப்புக் கழகம் – இணைய அரங்கம்: ஆளுமையர் உரை 173 & 174 ; நூலரங்கம்
தமிழே விழி! தமிழா விழி!
பலசொல்லக் காமுறுவர் மன்றமா சற்ற
சிலசொல்லல் தேற்றா தவர். (திருவள்ளுவர், திருக்குறள், ௬௱௪௰௯ – 649)
தமிழ்க் காப்புக் கழகம் – இணைய அரங்கம்
ஆளுமையர் உரை 173 & 174 ; நூலரங்கம்
நாள்: ஆடி 24, 2057 ஞாயிறு 09.08.2026 காலை 10.00
கூட்ட எண் / Meeting ID: 864 136 8094 ; கடவுக்குறி / Passcode: 12345
அணுக்கிக் கூட்ட இணைப்பு : https://us02web.zoom.us/j/8641368094? pwd=dENwVFBIOTNncGsrcENUSWJxbVZHZz09 (map)
நிகழ்ச்சி அறிவிப்பு: இலக்குவனார் திருவள்ளுவன்
வரவேற்புரை: முனைவர் மா.போ. ஆனந்தி
தலைமை : கவிஞர் தமிழ்க் காதலன்
ஆளுமையர் உரை:
திருக்குறள் தூதர் ம.சக்கரவர்த்தி
பொறி.தமிழுக்கு இனியவன் கார்த்திகேயன் ஆனந்தன், தாய்லாந்து
நூலாய்வு: எழுத்தாளர் இ.பு.ஞானப்பிரகாசம்
இலக்குவனார் திருவள்ளுவன் நூல்
சொல்லாக்கம் நெறிமுறையும் வழிமுறையும்
நிறைவாக அரசறிவியல் பேராசான் தோழர் தியாகு
நன்றியுரை: செல்வி முகிற்செல்வி
புதன், 5 ஆகஸ்ட், 2026
இணைய உரை 10, தமிழ்க்காப்புக்கழகம், புதுதில்லி
தமிழே விழி! தமிழா விழி !!
தமிழ்க் காப்புக் கழகம், புது தில்லிக் கிளை.
இணைய அரங்கு உரை – 10
நாள்: ஆடித் திங்கள் 23 ஆம் நாள் (8 – 8- 2026) காரிக்கிழமை (சனிக்கிழமை)
நேரம்: காலை 10-00 மணி .
இணையத்தில் இணைய:
Link : https://meet.google.com/hjk-khzk-vae
நெறியாளர் : கல்லூரி மாணவி செல்வி வித்யா
தமிழ்த் தாய் வாழ்த்து:
பண்ணிசைப் பாடகி, திருமதி பாக்கியலட்சுமி மணி உளுந்தூர்பேட்டை.
வரவேற்புரை: கல்லூரி மாணவர் திருமிகு ரோசன் .
செயலர் அறிக்கை: கல்லூரி மாணவி செல்வி பிரீத்தி .
தொடக்க உரை: முனைவர் புத்தேரி தானப்பன்
(தலைவர், தில்லித் தமிழ்க் காப்புக் கழகம்)
தலைமை உரை:
தமிழறிஞர் இலக்குவனார் திருவள்ளுவன்
(தலைவர், தமிழ்க் காப்புக் கழகம், சென்னை)
அறிமுக உரை: மொழிபெயர்ப்பாளர் திருமதி பிரபா சேகர்
சிறப்புரை:
திருமிகு பாரதி பணிச்செல்வர் சா. பழனி அவர்கள்.
தலைப்பு : “மக்கள் நாயகத்தின் நான்காவது தூண் – இதழியல்”
வினாத் தொடுத்தல்: அரங்கில் பங்கேற்போர்.
நன்றியுரை: கல்லூரி மாணவர் திருமிகு சஞ்சை
ஞாலப்பண்: கல்லூரி மாணவி செல்வி நிசா
அனைவரும் வருக! தமிழமுதம் பருக!!
செவ்வாய், 4 ஆகஸ்ட், 2026
நட்பு தமிழ் வட்டம், 7ஆவது ஆண்டு தமிழ் விழா, மதுரை
நட்பு தமிழ் வட்டம்
7ஆவது ஆண்டு தமிழ் விழா
நாள்: ஆடி 24, 2057 ஞாயிறு 09.08.2026
காலை 08.45 முதல் மாலை 5.00 மணி வரை
இடம்: பிரபு மகால், அழகர்கோயில் சாலை, மதுரை
தலைமை: புரவலர் புலவர் நாநா ஆறுமுகம்
நூல் வெளியீடு, விருது வழங்குதல், பரிசு வழங்குதல்
சிறப்பு விருந்தினர்கள்
மேனாள் நீதிபதி மா.கோமதிநாயகம்
திரைப்படஇயக்குநர் சக்தி சிதம்பரம்
அமர்வு 1 : 08.45 தொடக்க நிகழ்வுகள்
அமர்வு 2 : 11.30 நூல் வெளியீடு
அமர்வு 3 : 12.00 விருது வழங்கல்
அமர்வு 4 : 12.30 படைப்பிலக்கியப் பரிசுகள்
அமர்வு 5 : 02.15 கவியரங்கம் ; 3.15 மணி பட்டிமன்றம்
அழைப்பிதழ் காண்க
புதன், 22 ஜூலை, 2026
தமிழ்க் காப்புக் கழகம் – இணைய அரங்கம்: ஆளுமையர் உரை 171 & 172 ; நூலரங்கம்
தமிழ்க் காப்புக் கழகம் – இணைய அரங்கம்
ஆளுமையர் உரை 171 & 172 ; நூலரங்கம்
நாள்: ஆடி 10, 2057 ஞாயிறு 26.07.2026 காலை 10.00
கூட்ட எண் / Meeting ID: 864 136 8094 ; கடவுக்குறி / Passcode: 12345
அணுக்கிக் கூட்ட இணைப்பு : https://us02web.zoom.us/j/8641368094? pwd=dENwVFBIOTNncGsrcENUSWJxbVZHZz09 (map)
வரவேற்புரை : கவிஞர் தமிழ்க் காதலன்
தலைமை : இலக்குவனார் திருவள்ளுவன்
ஆளுமையர் உரை:
தமிழ் வினைஞர் கோ.சுந்தரகுமார்,
தலைவர், தாய்லாந்து தமிழ்ச்சங்கம்
முனைவர் அமுதா பாண்டியன், பணி நிறைவு முதல்வர்
நூலாய்வு: பாவலர் தமிழப்பனின் குறளதிகாரம்
ஆய்வுரைஞர்: முனைவர் வி.பொ.ப.தமிழ்ப்பாவை
நிறைவாக அரசறிவியல் பேராசான் தோழர் தியாகு
நன்றியுரை: செல்வி முசிபூர் அமீரா