கருத்துகள் - views
புதன், 24 ஜூன், 2026
ல கரத்தை rh எனக் குறிப்பிடுவோம்!- இலக்குவனார் திருவள்ளுவன்
ஃஃஃ இலக்குவனார் திருவள்ளுவன் 24 June 2026 அகரமுதல
ல கரத்தை rh எனக் குறிப்பிடுவோம்!
லகர, ளகர, ழகரங்களை ஆங்கிலத்தில் எவ்வாறு நாம் வேறுபடுத்திக் குறிக்கலாம்?
தமிழில் இவற்றை நாம் எவ்வாறு குறிப்பிடுகிறோம் என முதலில் பார்ப்போம்.
ல – நா (நாவின் இருபக்கங்கள் தடித்து) மேல் பற்களின் அடியைத் தொடுவதால் லகரம் தோன்றும். இது ‘வ’ போல இருப்பதால் ‘வகர லகரம்’ என்கிறோம். எழுத்து மேல்நோக்கி முடிவதால் மேல்நோக்கு லகரம் என்றும் சொல்வர்.
ள – நா (நாவின் இருபக்கங்கள் தடித்து) மேல் அண்ணத்தின் நடுப்பகுதியைத் தொடுவதால் ளகரம் தோன்றும். இதனைப் பொது ளகரம் என்கிறோம். இது ‘ன’ போல இருப்பதால் ‘னகர ளகரம்’ என்றும் கூறுவர். எழுத்து கீழ்நோக்கிமுடிவதால் கீழ் நோக்கு ளகரம் என்றும் சொல்வர்.
ழ – நாவின் நுனி மேல்நோக்கி வளைந்து வருடுவதால் ழகரம் தோன்றும். ழ தமிழுக்கே சிறப்பானது. எனவே இதனைச் சிறப்பு ழகரம் என்று அழைக்கிறோம். இது ‘ம’ போல இருப்பதால் ‘மகர ழகரம்’ என்றும் கூறுவர்.
பொதுவாக
லனா/லாவன்னா/லகாரம் என்றும்
ளனா/ளாவன்னா/ளகாரம் என்றும்
ழனா/ ழாவன்னா/ ழகரம் என்றும் குறிப்பர். இருப்பினும் ஒலிப்பில் குறைபாடு ஏற்படலாம் எனக் கருதுவோர் இலக்கண அசிரியர் குறிப்பதுபோல் மேலே தெரிவித்தவாறு குறிப்பர்.
எழுத்தின் பெயர்களைக் குறிக்கையில் இது சரி. ஆனால் பிறமொழியில் எழுதும்பொழுது எவ்வாறு வேறுபடுத்திக் காட்டுவது? குறிப்பாக இப்போது நாம் ஆங்கிலத்தில் குறிப்பதைப் பார்ப்போம். ஆங்கிலத்தில் லகர, ளகர, ழகரங்களுக்கு L/l என ஓரெழுத்தையே பயன்படுத்துகிறோம். இதனால் குழப்பம் வருகிறது.
ல (Lakaram) la
ள (Lakarum) l’a
ழ (Zhakaram) l”a
என்று ஒரு சாரார் குறிப்பர். சிலர் எழுத்துமேல் அல்லது கீழே புள்ளி அல்லது கோடிட்டு வேறுபடுத்துவர். இவற்றில் ஒற்றுமை இல்லை.
சிறப்பு ழகரத்திற்குப் பேரா.முனைவர் சி.இலக்குவனார் zha எனப் பயன்படுத்த அறிமுகப்படுத்தினார். கற்றவரிடையே இஃது அறியப்பட்டிருந்தாலும் பரவலாகப் பயன்படுத்தப்படவில்லை. எனவே, இதனை நாம் அனைவரும் பயன்படுத்த வேண்டும். அதற்கு முதற்கட்டமாக அரசு தமிழ்நாடு என்பதை THAMIZHNAADU என்றே குறிக்க ஆணை பிறப்பிக்க வேண்டும். TAMILNAD என்று சொல்லவும் தடை விதிக்க வேண்டும். இதனால் இயல்பாகவே சிறப்பு ழகரத்திற்கு ஆங்கிலத்தில் zha எனக் குறிக்க வேண்டும் என்பதை அனைவரும் அறிந்து பயன்படுத்துவர்.
இவை தொடர்பில் லகரத்திற்கு rh எனப் பயன்படுத்தலாம் என நீண்ட நாளாக எனக்கு எண்ணம் உண்டு. நண்பர் பேரா.தங்க.மாரியப்பன் இவற்றை வேறுபடுத்த ஏதும் குறிப்பு தந்தால் அனைவரிடமும் பரப்பி அவ்வாறே நாம் பயன்படுத்தலாமே என்றார். நான் இக்கருத்தைக் குறிதததும் இஃது ஏற்கத்தக்கதாகத்தான் உள்ளது. நாம் பயன்படுத்திப் பரப்புவோம் என்றார்.
ல என்பதற்கு rh எனக் குறிப்பதன் காரணத்தையும் நான் தெரிவித்தேன்.
புணர்ச்சி விதியில் ‘ல்’, ‘ற்’ ஆக மாறுவது இயற்கை.
சான்றுக்குச் சில சொற்களைப் பார்ப்போம்.
கல்+கண்டு=கற்கண்டு; கல்+கோயில்=கற்கோயில்; கல்+கோபுரம்=கற்கோபுரம்; கல்+குவியல்=கற்குவியல்; கல்+சட்டி=கற்சட்டி; கல்+சிலை=கற்சிலை; நல்+கனி=நற்கனி; நல்+சுழி=நற்சுழி; நல்+கதி=நற்கதி; நல்+குடி=நற்குடி; நல்+குணம்=நற்குணம்; நல்+செய்தி=நற்செய்தி; நல்+புதல்வன்=நற்புதல்வன்; நல்+புதல்வி=நற்புதல்வி; நல்+பயன்=நற்பயன்; நல்+பொழுது=நற்பொழுது; பல்+காறை=பற்காறை; பகல்+பொழுது=பகற்பொழுது; பல்+பசை=பற்பசை; பல்+கறை=பற்கறை; பல்+காவி=பற்காவி; பல்=பல=பற்பல; பல்+குச்சி=பற்குச்சி; கல்+கந்து=கற்கந்து; கல்+பலகை=கற்பலகை; மல்+போர்=மற்போர்; மல்+கூத்து=மற்கூத்து; விரல்+கிடை=விரற்கிடை; விடியல்+காலை=விடியற்காலை; விடியல்+பொழுது=விடியற்பொழுது என்பனபோல் வரும்.
அதே நேரம் தன்புகழ்ச்சி>தற்புகழ்ச்சி, தன் பெருமை> தற்பெருமை, தன்காலம்>தற்காலம், தன்+சமயம்>தற்சமயம் என்பனபோலும் வரும். எனினும் நாம் பெரும்பான்மையாக வரும் லகர மாற்றத்தை மட்டும் பார்ப்போம்.
லகரம் றகரமாக மாறுவதால் லகரத்தைக் குறிக்க ஆங்கில r பயன்படுத்தலாமா?ஆனால் r என்றால் ற என வந்து விடும். எனவே rh எனலாம்.
கலைச்செல்வி > karhaicherhvi;
கலைமாமணி > karhai maa mani;
மலைச்சாமி > marhaichamy
நல்லப்பன்> >narhrhappan;
நல்லுச்சாமி > narhrhuchamy
எனக் குறிப்பிடுவோம்.
தொடக்கத்தில் இடராகத் தோன்றும். பயன்படுத்தப் பயன்படுத்த எளிதாக மாறும்.
எனவே, லகரல, ழகர, ளகரங்களைப் பின்வருமாறு ஆங்கிலத்தில் அடையாளப்படுத்துவோம்.
லகரம்
ழகரம்
ளகரம்
தமிழார்வலர்கள் இது குறித்த ஏற்பை, மறுப்பை, மாற்றுக் கருத்தைத் தெரிவிக்க அன்புடன் வேண்டுகிறோம்.
– இலக்குவனார் திருவள்ளுவன்
புதன், 17 ஜூன், 2026
‘தனித்தமிழ்க்காவலர் இலக்குவனார்’ நூலுக்கு மதுரை நட்பு வட்டத்தின் பரிசு
‘தனித்தனிக்காவலர் இலக்குவனார்’ நூலுக்கு
மதுரை நட்பு வட்டத்தின் பரிசு
2025 ஆம் ஆண்டுப் படைப்புகளுக்கான பரிசுகள்
இணைப்புப் படப்பதிவுகளில் உள்ளவாறு பரிசுகள் வழங்கப்பெறுகின்றன.
நட்பு தமிழ் வட்டம்(மதுரை) அமைப்பு உறுப்பினர்களுக்கான சிறப்பு பேச்சுப்பயிற்சி,எழுத்துப் பயிற்சி, அரசுப் பள்ளி மாணவர்களுக்கான இலக்கியப் பயிலரங்கங்கள், பொதுமக்களுக்கான தமிழ்வளர்ச்சிக் கருத்தரங்கங்கள், கல்லூரி மாணவர்களுக்கான நம்மை நாமறிவோம் பேச்சரங்கங்கள், கல்லூரிஅளவிலும் மாவட்ட அளவிலும் போட்டிகள் நடத்துதல், சமத்துவம் மதநல்லிணக்கம் இந்திய இறையாண்மை பற்றிய விழிப்புணர்வுக் கருத்தரங்கம் கவியரங்கம் பட்டிமன்றம் நடத்துதல்,
அரசுப் பள்ளிகளுக்கு நூலகத்திற்கான அடுக்ககங்கள், நூல்கள் எழுத்து மேசைகள் எழுதுபொருட்கள் மின்விசிறிகள் வழங்குதல், அரசுப்பள்ளி மாணவர் திறன் மேம்பாட்டிற்கான திருக்குறள் முற்றோதல் கையெழுத்து,,பேச்சு,,கட்டுரை,பாட்டு, நடனம் எனப் பல்திறன் பயிற்சி வகுப்புகள் நடத்தி பின் போட்டிகளும் நடத்தி பரிசுகளும வழங்கல், இணையவழியில் தமிழகமெங்குமுள்ள பள்ளிக் குழந்தைகளுக்குத் திருக்குறள் ஒப்பித்தல், புரட்சிக் கவிஞர் பாடல்கள் ஒப்பித்தல், அறநெறிக் கதைகள் சொல்லல், தமிழிசைப் பாடல்கள் பாடுதல், கவிதை வாசித்தல், பேசுதல் எனப் பல்வேறு வாய்ப்புகளை வழங்கி வருகிறது.
யாரிடமும் நன்கொடை வாங்காமல், குழுவினரே தங்களுக்குள் பணத்தைத்திரட்டி, ஆண்டுதோறும் பல்வேறு வகைப்பாடுகளில் பரிசுகள் வழங்குதல், சிறப்பாக நிகழ்ச்சி நடத்துதல் எனத் தொண்டாற்றி வருகின்றனர்.
தமிழ்நாடு முழுவதுமுள்ள எழுத்தாளர்களுக்கான சிறந்த படைப்புப் போட்டி நடத்தி விருதுகளும் பரிசுகளும வழங்கப்படுகின்றன.
புலவர் நாநா ஆறுமுகம்
நிறுவுநர். & தலைவர்
நட்பு தமிழ் வட்டம்-மதுரை
செவ்வாய், 16 ஜூன், 2026
தமிழ்க் காப்புக் கழகம் – இணைய அரங்கம்: ஆளுமையர் உரை 167 & 168 ; நூலரங்கம்
தமிழே விழி! தமிழா விழி!
தமிழ்க் காப்புக் கழகம் – இணைய அரங்கம்
ஆளுமையர் உரை 167 & 168 ; நூலரங்கம்
ஆக்கமுங் கேடும் அதனால் வருதலால்
காத்தோம்பல் சொல்லின்கட் சோர்வு.
(திருவள்ளுவர், திருக்குறள், ௬௱௪௰௨ – 642)
நாள்: ஆனி 07, 2057 ஞாயிறு 21.06.2026 காலை 10.00
கூட்ட எண் / Meeting ID: 864 136 8094 ; கடவுக்குறி / Passcode: 12345
அணுக்கிக் கூட்ட இணைப்பு : https://us02web.zoom.us/j/8641368094? pwd=dENwVFBIOTNncGsrcENUSWJxbVZHZz09 (map)
வரவேற்புரை : கவிஞர் தமிழ்க் காதலன்,
தலைமையும் நூலாய்வும் : இலக்குவனார் திருவள்ளுவன்
ஆளுமையர் உரை:
இசைக்கவி மதியழகன், சிங்கப்பூர்
கவித்திலகம் தங்க மாரியப்பன்
ஆய்விற்குரிய நூல் : கவிஞர் செம்பை சேவியர் எழுதியுள்ள
ஒன்றில் மூன்று – குறட்பா விளக்கம்
நிறைவுரை : அரசறிவியல் பேராசான் தோழர் தியாகு
நன்றியுரை : செல்வி முகிற்செல்வி
வியாழன், 4 ஜூன், 2026
தமிழ்க் காப்புக் கழகம் – இணைய அரங்கம்; ஆளுமையர் உரை 165 & 166 ; நூலரங்கம்
தமிழே விழி! தமிழா விழி!
தமிழ்க் காப்புக் கழகம் – இணைய அரங்கம்
ஆளுமையர் உரை 165 & 166 ; நூலரங்கம்
வேட்பத்தாஞ் சொல்லிப் பிறர்சொல் பயன்கோடல்
மாட்சியின் மாசற்றார் கோள். (திருவள்ளுவர், திருக்குறள், ௬௱௪௰௬ – 646)
நாள்: வைகாசி 24, 2057 ஞாயிறு 07.06.2026 காலை 10.00
கூட்ட எண் / Meeting ID: 864 136 8094 ; கடவுக்குறி / Passcode: 12345
அணுக்கிக் கூட்ட இணைப்பு : https://us02web.zoom.us/j/8641368094? pwd=dENwVFBIOTNncGsrcENUSWJxbVZHZz09 (map)
வரவேற்புரை : கவிஞர் தமிழ்க் காதலன்,
தலைமையும் நூலாய்வும் : இலக்குவனார் திருவள்ளுவன்
ஆளுமையர் உரை:
தமிழெழுச்சித் தொண்டர் சின்னப்பா தமிழர்
ஊடகச் செம்மல் பவா சமத்துவன்
நூ லா ய் வு :
இலக்குவனார் சங்கத்தமிழொளி வைதேகி எருபருட்டு, அறிஞர்சங்கர் சுவாமிநாதன் படைப்பான
பு ற நா னூ ற் று த் து ளி க ள் – SELECTED PURANANURU POEMS
நன்றியுரை : செல்வி முசிபூர் அமீரா
திங்கள், 1 ஜூன், 2026
தமிழ்க் காப்புக் கழகம், புது தில்லிக் கிளை, இணைய அரங்கு உரை – 8
தமிழே விழி! தமிழா விழி !!
தமிழ்க் காப்புக் கழகம், புது தில்லிக் கிளை
இணைய அரங்கு உரை – 8
நாள்: வைகாசித் திங்கள் 30 ஆம் நாள் (13 – 6- 2026) காரிக்கிழமை (சனிக்கிழமை)
நேரம்: காலை 10-00 மணி .
இணையத்தில் இணைய: https://meet.google.com/htz-tfer-zpz
நெறியாள்கை : திருமதி பிரபா சேகர் அவர்கள் (மொழிபெயர்ப்பாளர், தில்லி)
தமிழ்த் தாய் வாழ்த்து: பண்ணிசைப் பாடகி,
திருமதி பாக்கியலட்சுமி மணி அவர்கள், உளுந்தூர்பேட்டை.
வரவேற்புரை: , திருமிகு அரிஅரன் அவர்கள், வழக்குரைஞர், தில்லி.
செயலர் அறிக்கை: கல்லூரி மாணவி செல்வி வித்யா அவர்கள்
தொடக்க உரை: முனைவர் புத்தேரி தானப்பன்
(தலைவர், தமிழ்க் காப்புக் கழகம், தில்லிக் கிளை)
தலைமை உரை: தமிழறிஞர் இலக்குவனார் திருவள்ளுவன் அவர்கள்
அறிமுக உரை: கல்லூரி மாணவர் திருமிகு சஞ்சய் அவர்கள்
சிறப்புரை: கல்லூரி மாணவர் திருமிகு (உ)ரோசன் அவர்கள்
தலைப்பு: “என் வாழ்க்கை என் கையில்”
நன்றியுரை: கல்லூரி மாணவி செல்வி நிசா அவர்கள்
ஞாலப்பண்: கல்லூரி மாணவி செல்வி பிரீத்தி அவர்கள்
அனைவரும் வருக! தமிழமுதம் பருக!!
முனைவர் ஆனந்தி வாசுதேவன் முனைவர் புத்தேரி தானப்பன்
செயலாளர். தலைவர்
வெள்ளி, 29 மே, 2026
இன்னும் ஆங்கிலேயருக்கான ஆட்சியாகத்தான் தலைமைச்செயலகத்தினர் கருதுகின்றனரா? – இலக்குவனார் திருவள்ளுவன்
இன்னும் ஆங்கிலேயருக்கான ஆட்சியாகத்தான்
தலைமைச்செயலகத்தினர் கருதுகின்றனரா?
நேற்று தமிழ் வளர்ச்சி-பள்ளிக்கல்வி அமைச்சர் இராசுமோகன்,
“அரசாங்கம் எப்போதும் தமிழ் மொழிக்கும், தமிழ்த்தாய் வாழ்த்திற்கும் முதல் முதன்மைத்துத்தையே அளிக்கும். இது வெறும் மேடைப் பேச்சோடு நின்றுவிடாமல், அதற்கான சட்டப்பூர்வமான முறைகள் அனைத்தும் சரியாக பின்பற்றப்படும். எங்களை பொறுத்தவரை மாநிலத்தின் நலனே மிக முக்கியமானது.” என்று கருத்து தெரிவித்துள்ளார். இக்கருத்தைத் தெரிவித்தமைக்காக அவரையும் அரசையும் அரசை வழிநடத்திச் செல்லும் முதல்வர் ச.சோ.விசய்யையும் பாராட்டுகிறோம். அதே நேரம் அரசிற்கு எதிராகவே தலைமைச் செயலகத்தினர் செயற்படும் போக்கிற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டுகிறோம்.
மாறுதல் ஆணைகளைக் கூடத் தமிழில் வெளியிடமுடியாத நிலையிலான தமிழ் மொழி உள்ளது? இன்று(29.05.26) வெளிவந்த இ.ஆ.ப. அலுவலர்கள் மாறுதல் ஆணை தமிழில் இல்லை. வழக்கம்போலவே ஆங்கிலத்தில் கோலோச்சுகிறது. இதற்கு அரசு எச்சரிக்கையோ அறிவிப்பா வெளியிடக் கூடாது.
ஒன்றிய அரசிற்கு- அனுப்புவதற்காகத்தான் ஆங்கிலத்தில் ஆணை பிறப்பித்ததாகக் கூறும் நாெண்டிச் சாக்கையும் ஏற்கக்கூடாது. அவர்கள்வேண்டுமானால் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துக்கொள்ளட்டும். அல்லது இதன் ஆங்கிலப்படியை அவர்களுக்குத் தமிழக் அரசு அனுப்பட்டும்.
உடனடியாகப் பொதுத்துறைச் செயலர் வரையிலான தொடர்பான அலுவலர்கள் அனைவர்மீதும் நடவடிக்கை எடுத்துக் குறைந்தஅளவு தண்டைனயாவது வழங்க வேண்டும். இதுதான் அதிகாரிகளுக்கு அச்சத்தை ஏற்படுத்தித் தமிழ் ஆட்சிமொழிச் செயலாக்கத்தில் ஈடுபடச் செய்யும்.
இத்தகைய நேர்வுகளில் தமிழ்வளர்ச்சித்துறைச் செயலரே நடவடிக்கை எடுத்துத் தண்டனை வழங்கும் அதிகாரத்தை அளித்து ஆணை பிறப்பிக்க வேண்டும்.
சூழ்ச்சி முடிவு துணிவெய்தல் அத்துணிவு
தாழ்ச்சியுள் தங்குதல் தீது. (திருவள்ளுவர், திருக்குறள், ௬௱௭௰௧ – 671)
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
இதழுரை – அகரமுதல
வைகாசி 15, 2057/29.05.2026