சனி, 7 மார்ச், 2020

பெண்கள் வாழ்வுரிமைப் பாதுகாப்பு இயக்கத்தின் மகளிர் நாள் அரங்கம்

அகரமுதல

மாசி 25, 2051 மார்ச்சு 08,2020
ஞாயிறு மாலை 3.00
பாவாணர் தமிழ்வழிப்பள்ளி வளாகம்,
அட்டலக்குமி நிழற்சாலை, பள்ளிக்கரணை,
சென்னை 600100
பெண்கள் வாழ்வுரிமைப் பாதுகாப்பு இயக்கம்


தொழுகிறோம் உம்மை! – ஆற்காடு.க.குமரன்

அகரமுதல

தொழுகிறோம் உம்மை!
ஆலமரத்தின்
ஆணிவேர்
சலசலப்பின்றி
இலைகள்
இமயம் சரிந்து
இரு விழிகளில் நதியாய்
இதழினிலுதிரும்
இரங்கலும்
ஈரமாய்
நீர்…..தூரமாய்…..
கலங்கரை
விளக்கு
விளக்கியதில்
துலங்கிய கழகம்
கலங்கி
நூலகத்தில்
தவங்கிடக்கும்
நன்னூல்…..நின் முனை
என்னகத்தில்
பேராசிரியர்
பேராண்மை மிக்க
ஆசிரியர்
உம்மைக் கண்டு
ஆ……என
அண்ணாந்து வியந்த
சிறியர் யாம்
தொன்னூற்று எட்டு வரை
தொண்டு போதுமென
துயிலிலாழ்ந்தீரோ!
துணையினி யாரோ!
நேரில் காணாமலே
வேரில் நீர்
வேறில்லை என்னில்
ஈடில்லை மண்ணில்
பொதுச்செயலாளர்
பொதுவாகிப்போனீரோ
தொடர்ந்து தொண்டாற்ற
தொழுகிறோம் உம்மை!
துணையாய்,
தூணாய். எண்ணி…..
இவண்
ஆற்காடு.க.குமரன் 9789814114

பேராசிரியர் க.அன்பழகன் இயற்கை எய்தினார்!

அகரமுதல

[மார்கழி 07, 1953 /திசம்பர் 19, 1922 –
மாசி 24, 2051/மார்ச்சு 7, 2020]
இதழாளர், நூலாசிரியர், சட்டமன்ற மேலவை உறுப்பினர்(1962), நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர்(1967-71), தமிழகச் சட்டமன்ற உறுப்பினர், தமிழக அமைச்சர் முதலானபொறுப்புகளில் திறம்படப் பணியாற்றியவர், இனமானப் பேராசிரியர் எனச் சிறப்பிக்கப்படுபவர், திராவிடர் முன்னேற்றக்கழகப் பொதுச் செயலாளர், பேரன்பிற்கும் பெருமதிப்பிற்கும் உரிய  க.அன்பழகனார், நலக்குறைவின் காரணமாகவும் முதுமையின் காரணமாகவும் மரணம் உற்றார்.
அவரின் மறைவிற்கு இலக்குவனார் இலக்கிய இணையம், தமிழ்க்காப்புக்கழகம், தமிழ்நாடு-புதுவை தமிழ் அமைப்புகள், அகரமுதல மின்னிதழ் சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

வியாழன், 5 மார்ச், 2020

உலகத் தமிழ்ச்சங்கத்தின் தமிழ்க்கூடல், மாசி

அகரமுதல

 மாசி 23,2051/06.03.2020

வெள்ளிக்கிழமை முற்பகல் 11.00

உலகத்தமிழ்ச்சங்கம்,மதுரை
தமிழ்க்கூடல்
உரை: முனைவர்  செ.நிருமலாதேவி:
சு.சமுத்திரத்தின் புதினங்களில் பெண்கள்

சு.சமுத்திரம்

போராளிகள் ஆசான் அறிவரசன் என்கிற மு.செ.குமாரசாமி மரணம்


பேராசிரியர் அறிவரசன் என்கிற மு.செ.குமாரசாமி

ஈழத்தில் தமிழ் பயிற்றுவித்த பேராசிரியர் அறிவரசன் என்கிற மு.செ.குமாரசாமி மரணம்

தமிழ் ஈழம் சென்று தமிழ் பயிற்றுவித்த பேராசிரியர் அறிவரசன் என்கிற மு.செ.குமாரசாமி இயற்கை எய்தினார்.          
திருநெல்வேலி மாவட்டம், ஆழ்வார்குறிச்சி சிரீபரமகல்யாணி கல்லூரியின் ஓய்வு பெற்ற பேராசிரியர் அறிவரசன் என்கிற மு.செ.குமாரசாமி (81) உடல்நலக் குறைவால் புதன்கிழமை இயற்கை எய்தினார்.
‘புத்தன் பேசுகிறான்’ என்கிற இவரின் கவிதைத் தொகுப்பு மிகவும் பெயர் பெற்றவை. ‘இவர்தாம் பெரியார்’, ‘சோதிடப் புரட்டு’, ‘யார் இந்த இராமன்’ , ‘மாமனிதர் திருவேங்கடம் வேலுப்பிள்ளை’ முதலான மன்பதை சார்ந்த நூல்களையும் பேராசிரியர் வெளியிட்டுள்ளார்.
தமிழ் மொழியை நாடு முழுவதும் கொண்டு சேர்த்ததில் இவரின் பங்கு அளப்பரியது. இலண்டன், இத்தாலி, கனடா, சுவிச்சர்லாந்து, ஆத்திரேலியா, நார்வே முதலான நாடுகளுக்குச் சென்று அங்குள்ள தமிழ் ஆசிரியர்களுக்குத் தமிழ் கற்பித்துள்ளார்.
விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனின் அழைப்பை ஏற்று , 2006 முதல் 2008 வரை ஈழத்திற்கு நேரடியாக சென்று அங்குள்ள மாணவர்களுக்குத் தமிழ் கற்பித்தார். ‘ஈழத்தில் வாழ்ந்தேன் இரண்டாண்டுகள்’ என்ற நூல் அவர் ஈழத்தில் பெற்ற பட்டறிவுகளை நுட்பமாக விவரிக்கின்றன. வாழ்கையின் ஒவ்வொரு நாளையும் தமிழ் மொழிக்காக வாழ்ந்திட்ட பேராசிரியர், பாளையங்கோட்டை சைவ அவையில் தொடர்ச்சியாக இலக்கண வகுப்பு எடுத்து வந்தார்.
வாங்கிய பட்டங்கள்:   பகுத்தறிவாளர் கழகம் சார்பில் தமிழிசை பாவாணர் என்ற பட்டமும், கடையம் திருவள்ளுவர் கழகம் சார்பில் பைந்தமிழ்ப் பகலவன் என்ற பட்டமும் இவருக்கு  வழங்கப்பட்டன.
இவருக்கு ஞானத்தாய் என்ற மனைவியும், முத்துச்செல்வி, தமிழ்ச்செல்வி ஆகிய பெண்மக்கள் இருவரும் செல்வநம்பி, அழகியநம்பி ஆகிய ஆண்மக்கள் இருவரும் உள்ளனர்.
இவருடைய உடல் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வியாழக்கிழமை தானமாக வழங்கப்படுகிறது. தொடர்புக்கு 9092481997.

- தமிழ் இந்தியன் எக்சுபிரசு