வெள்ளி, 8 மார்ச், 2013

மகளிருக்கு வாழ்த்துகள்!



 மகளிருக்கு வாழ்த்துகள்!

குறிப்பிட்ட நாள்தான் மகளிர் நாள் என எண்ணாமல் எல்லா நாளும் மகளிர்க்கு முழு உரிமையுடைய நாள் என எண்ண வேண்டும்! மகளிர் உரிமைகளுக்கு மகளிரே குறுக்கே நிற்கும் போக்கு அகல வேண்டும்! வன்முறை அல்லது போர் என்றால் மிகுதியான பாதிப்பிற்கு மகளிர் உள்ளாகும் நிலை மாற வேண்டும்! எல்லா நிலைகளிலும் சம வாய்ப்பு பெறுவதே மகளிர் உரிமையேயன்றி ஆடவர்களுக்கு இணையான உரிமை என்ற பெயரில் தீய பழக்க வழக்கங்களுக்கு ஆட்படுவது உரிமையல்ல என்பதை உணர வேண்டும்!  மகளிர் நாள் எனத் தனி நாள்   கொண்டாட்டம் இன்றி எல்லா நாளிலும் எல்லா உரிமையும் பெற்றுச் சிறந்திட மகளிருக்கு வாழ்த்துகள்! அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் /தமிழே விழி! தமிழா விழி! எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!/

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக