வியாழன், 26 ஜனவரி, 2012

விடுதலைக் கனவை அழித்தவர்களுடன் இணையும் கலாமைப் புறக்கணிப்போம்!

விடுதலைக் கனவை அழித்தவர்களுடன் இணையும் கலாமைப் புறக்கணிப்போம்!

பதிவு செய்த நாள் : 25/01/2012

தங்கள் மொழியும் இனமும் நாடும் விடுதலை அடைய வேண்டும் எனக்கனவு கண்ட தமிழர்களை அழித்தவர்களுடன் இணைந்து நிற்கும் கலாம் என்ன கனவு காணச் சொல்கிறார். அரைத்த மாவை அரைப்பதால் இனிப்புகழ் பெற முடியாது. மீளாப் பழியிலிருந்தும் தப்பிக்க முடியாது. இனி அவர் இலங்கையிலோ தில்லியிலோ குடியிருக்கலாம். உலகத் தமிழர்கள் அவர்களைப் புறக்கணிப்போம்.
அறிவுப்புரட்சி ஒன்றே சமுதாய மாற்றத்துக்கு வழிவகுக்கும்:
யாழில் கலாம் உரை
முதலில் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்துக்கு சென்று மாணவர்களிடையே உரையாற்றிய கலாம், இளைஞர்களுக்கு கனவு என்பது மிக முக்கியமானதொரு கடமையாகும், அந்த கனவு தூக்கத்தில் வருவதல்ல உங்களை தூங்கவிடாது செய்வதே கனவு. கனவு காணுங்கள், அந்த கனவுகளை நனவாக்குவதற்கு உச்சக்கட்ட முயற்சியும் செய்யுங்கள், அதன் மூலம் உங்கள் குடும்பத்திற்கும், சமூகத்திற்கும், நாட்டிற்கும், பொறுப்புள்ள மனிதர்களாக உருமாறுங்கள்.
0

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக