திங்கள், 23 ஜனவரி, 2012

Send telegrams to kalam! Don't return to thamizhnaadu!

தமிழர்கள் வேண்டுகிறோம்! தமிழகம் திரும்பாதீர் ~ கலாமுக்குத் தொலை வரி   அனுப்புவோம்

பதிவு செய்த நாள் : 21/01/2012 http://www.natpu.in/?p=20251

முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் அவர்களுக்கு,  தமிழகம் திரும்ப வேண்டா  எனத் தமிழ்க்காப்புக் கழகம் சார்பில் தொடர்ந்து தொலை வரிகள் (தந்திகள்)  தூதஞ்சல்கள் அனுப்பப்பட்டு வருகின்றன.
பல்வேறு தமிழ் அமைப்புகளின் எதிர்ப்புகளையும் தாண்டித் தமிழினத்தை கொன்றழித்த இலங்கைக்குச் சென்றுள்ள அப்துல் கலாம் மீண்டும் தமிழகத்திற்குள் கால் வைக்க வேண்டா, என அவருக்குத் தொலை வரி அனுப்புமாறு அனைத்துத் தமிழ் அமைப்புகளையும்  மனித நேய அமை ப்புகளையும் தமிழின உணர்வு இயக்கங்களையும் கட்சிகளையும் தமிழ்க் காப்புக் கழகம் கேட்டுக்கொள்கிறது.
 தொலை வரியை அவர் சென்னையில் தங்கும் இடமான ஆளுநர் மாளிகை  முகவரிக்கு அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறோம்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக