புதன், 12 அக்டோபர், 2011

நவம்பர் 27 அணிதிரள்வோம் !

மாவீரர் தினத்தை புறக்கணிக்க மட்டும் நினைக்கவேண்டாம். அது ஒட்டுமொத்த தமிழினத்தை பாதிக்கும். தாயகக் கனவோடு தம் உயிர்களை நீத்த போராளிகளை அவமதிக்கும் செயலாக அமைந்துவிடும். ஒரு கணம் அவர்களை நினைத்துப் பாருங்கள். வரிப்புலி சீருடை அணிந்து மிடுக்காக நடமாடிய எம்மின இளைஞர்களைப் பிடித்து ஆடைகளை உருவி அம்மணமாக்கி, கைகளைக் கட்டி கண்களையும் கட்டி ஒரு நாயை உதைவதுபோல உதைத்து பின்னர் பிரடியில் சுட்டு கொலைசெய்தான் இலங்கை இராணுவச் சிப்பாய். இதனை மறக்கச் சொல்கிறீர்களா ? இல்லை இசைப்பிரியா போன்ற பெண்களின்  அறுத்து கொலைசெய்தார்களே அதனை மறக்கச்சொல்கிறீர்களா ? எல்லாம் மாவீரர்களின் கனவுகளை நனவாக்க லண்டன் மக்கள் நவம்பர் 27 அணிதிரள்வோம் !

வல்லிபுரத்தான்

நன்றி: அதிர்வு இணையம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக