செவ்வாய், 11 அக்டோபர், 2011

Automatic light: வீட்டுக்குள் நுழையும் போது தானாக எரியும் மின் விளக்கு


தர்மபுரி : வீட்டுக்குள் நாம் நுழைந்தவுடன் தானா எரியும், வெளியில் வந்தால் தானாக அணையும் மின் விளக்கை தர்மபுரி இந்தியன் அறிவியல் மையம் சார்பில் அறிமுகம் செய்துள்ளது.

தர்மபுரி இந்தியன் அறிவியல் மையம் சார்பில் மாணவர்களின் அறிவியல் திறமையை வளர்க்கவும், சாதாரண பொருட்கள் மூலம் அறிவியல் புதுமை கண்டுபிடிப்புகளை மாணவர்கள் மூலம் செய்யவும் உறுதுணையாக இருந்து வருகிறது. தற்போது, வீட்டுக்குள் நுழைந்தவுடன் எரியும் வகையிலும், அறையை விட்டு வெளியில் வந்தால், லைட் அணையும் வகையில் தயார் செய்யப்பட்டுள்ளது.இதற்காக பிரத்தியோகமாக தயார் செய்யப்பட்டுள்ள பெட்டியில் பிளக் பின் மற்றும் ஒரு மின் விளக்கு பொருத்தப்பட்டடுள்ளது.

இந்த பெட்டியில் உள்ள சென்சார் போர்டு மூலம் மனித உடலில் இருந்து வெளியேறும் கதிர்வீச்சுக்கள் மூலம் விளக்கு அணைந்து, எரியும் வகையில் தயார் செய்யப்பட்டுள்ளது.நம் வீட்டில் உள்ள மின் அமைபின் மொத்தமும் பிரத்தியோக பெட்டியில் இணைக்கும் வகையில் பிளக் பின் மூலம் இணைத்து வைக்க வேண்டும். பகல் நேரங்களில் நமக்கு இது பயன் இல்லை என்பதால், ஆஃப் செய்து வைத்து கொள்ளலாம். இரவு நேரங்களில் நவீன பெட்டியில் இணைப்பு கொடுத்து விட்டால், நாம் எந்த அறைக்கு சென்றாலும் அந்த அறையில் மின் விளக்கு எரியும்.

அதே போல் அந்த அறையை விட்டு வெளியில் வந்து விட்டால், சுவிட்ச் ஆஃப் செய்யாமல் ஆட்டோமெட்டிக்காக மின் விளக்கு எரிவது நின்று விடும்.இந்த கண்டுபிடிப்பை விரைவில் இந்தியன் அறிவியல் மைய விஞ்ஞானி ஜெயபாண்டியன் அறிமுகம் செய்ய உள்ளார். நாகாவதி அணை மாணவர்கள் சரண்யா, சங்கீதா, கீஷோர்குமார் ஆகியோர் தயார் செய்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக