Nedumaran லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
Nedumaran லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 9 செப்டம்பர், 2012

இராசபட்சவுக்கு எதிராக ப் போராடுவோம்: வைகோ

இராசபட்சவுக்கு எதிராக ப் போராடுவோம்: வைகோ

தினமணி First Published : 09 Sep 2012 02:40:58 AM IST


சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், "நாடாளுமன்றத்தில் வைகோ' என்ற நூலை தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ. நெடுமாறன் வெளியிட, அதைப் பெறுகிறார் வி.ஐ.டி. பல்க
சென்னை, செப். 8: இந்தியாவுக்கு வரும் ராஜபட்சவுக்கு எதிரான கறுப்புக் கொடி போராட்டத்துக்கு தடை விதிக்கப்பட்டாலும் அதையும் மீறி போராட்டம் நடத்துவோம் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறினார்.மதிமுக அரசியல் ஆய்வு மையச் செயலாளர் மு.செந்திலதிபன் தொகுத்த "நாடாளுமன்றத்தில் வைகோ' நூல் வெளியீட்டு விழா, சென்னையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன் நூலை வெளியிட, விஐடி பல்கலைக்கழக வேந்தர் ஜி.விசுவநாதன் முதல் நூலைப் பெற்றார்.விழாவில் வைகோ பேசியது:தமிழர்களைக் கொன்று குவித்தவர் ராஜபட்ச. சாஞ்சி நிகழ்ச்சியில் பங்கேற்க அவரை வரவேற்றதாகக் கூறிய பாஜக தலைவர் சுஷ்மா ஸ்வராஜ் பின்னர் இல்லை என்கிறார். நாடாளுமன்ற உறுப்பினர்கள் இலங்கை சென்றபோது சுஷ்மா மட்டும் ராஜபட்சவை ஏன் தனியாகச் சந்தித்தார் என்ற கேள்வி இன்னும் அப்படியே இருக்கிறது.சாஞ்சிக்கு வரும் ராஜபட்சவுக்கு கறுப்புக் கொடி காட்டுவதற்காக சென்னையில் இருந்து பஸ்களில் பயணிக்கிறோம். நாங்கள் நடத்தும் சிலுவைப் போருக்கு ஆதரவு தாருங்கள் என்று மத்தியப் பிரதேச முதல்வருக்கு கடிதம் எழுதியிருக்கிறேன். அவர் ஆதரவு தராமல் எங்கள் போராட்டத்துக்கு தடை விதித்தாலும் அதை மீறிப் போராட்டம் நடத்துவோம் என்றார் வைகோ.மதிமுக அவைத் தலைவர் திருப்பூர் சு.துரைசாமி தலைமை தாங்கினார், காந்திய மக்கள் இயக்கத் தலைவர் தமிழருவி மணியன், கொளத்தூர் மணி, பெ.மணியரசன், தியாகு, பாடலாசிரியர் தாமரை உள்பட பலர் பங்கேற்றனர்.

ஞாயிறு, 15 ஏப்ரல், 2012

Nedumaran releases book on LTTE leader

Nedumaran releases book on LTTE leader

[TamilNet, Saturday, 14 April 2012, 18:30 GMT]
The much anticipated ‘Pirapaharan – Tamizhar Ezhuchchiyin Vadivam’ (Pirapaharan - The Embodiment of Tamils’ Struggle) written by veteran Tamil Nadu political activist Pazha Nedumaran was released in Chennai on Friday at BT Thiyagaraja Hall. Published by Tamizhk-kulam Pathippaalayam, this book, of 1223 pages and illustrated with 32 photographs some of which are hitherto unpublished, contains handwritten letters of Mr. Pirapaharan and includes important personal conversations with the author, that throw light on the deep philosophy of the LTTE leader. Along with CPI stalwart Mahendran’s book ‘Veezhveanen’ru Ninaiththaayo’, this book written by a long time supporter of the Eezham Tamils’ struggle will join the series of must-read literature written by Tamil Nadu activists on the struggle for Tamil Eelam, for Tamils everywhere, Tamil literary circles in Chennai said.

Pirapaharan book launch
Pirapaharan book launch
Pirapaharan book launch
Pirapaharan book launch
Amidst a packed hall, the book release was attended by Vaiko, Kolathur Mani, Poet Kasi Anandan, CPI leader Nallakannu, Maniyarasan and others, along with the author.

Speaking at the meeting, Mr. Nedumaran hoped that ‘Pirapaharan’ would generate awareness among the Tamils living world over of the aspects of the struggle in the past, especially to youth.

Vaiko said that whether the Tamils will take up armed struggle again or not in the future will be decided by the world, and this book will be a guide towards it.

Nedumaran’s book moves in a chronological fashion, covering important incidents, political developments in the island and India, military manoeuvres of the Tigers, an idea of their political outlook, during the over 30 years of armed struggle, and stopping before 2009, roughly around the period of Brig. Balraj’s death. Providing important background information to the crucial periods of the 80’s and the 90’s when the Eezham Tamil struggle was at its greatest momentum, the author also provides insights into the functioning of Pirapaharan’s LTTE.

Delving into the changes and continuities in India’s foreign policy towards Sri Lanka and the Eezham Tamils, Nedumaran throws light on dynamics of Indian and Tamil Nadu politics that affected these. Details of what happened behind the scenes between the Indian government and the LTTE are discussed, from the initial ‘friendly’ period to the point when India did a complete U-turn.

Likewise, referring to books written by Indian bureaucrats involved in the island’s affairs and army commanders who participated in the IPKF fiasco, the author both analyses India’s policy shifts and provides evidence for his arguments.

The popular Eezham Tamil poet Kasi Anandan writes in his preface to ‘Pirapaharan’ that “Without being a mere eulogy to a leader, this book is a powerful piece of art that gives a solid shape to Pirapaharan’s ideology and goals.”

Pirapaharan book launch
Pirapaharan book launch
Pirapaharan book launch


Related Articles:
07.02.12   Eezham Tamils await dividends to come from Mahendran’s book

சனி, 14 ஏப்ரல், 2012

Referendum is necessary to EEZHAM - Vaiko

ஈழம் அமைய பொது வாக்கெடுப்பு தேவை: வைகோ

First Published : 14 Apr 2012 05:31:43 AM IST


"பிரபாகரன் தமிழர் எழுச்சியின் வடிவம்' என்ற நூலை ம.தி.மு.க. பொதுச்செயலர் வைகோ வெளியிட, பெறுகிறார் தமிழ்த் தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் மு.பாலசுப்
சென்னை, ஏப்.13: தமிழீழம் அமைய ஐ.நா.சபை சார்பில் பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ கூறினார். உலகத் தமிழர் பேரவைத் தலைவர் பழ.நெடுமாறன் எழுதிய "பிரபாகரன் - தமிழர் எழுச்சியின் வடிவம்' நூல் வெளியீட்டு விழா தியாகராய நகரில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.  ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ நூலினை வெளியிட, தமிழ்த் தேசியக் கட்சியின் பொதுச்செயலாளர் மு.பாலசுப்பிரமணியம் பெற்றுக்கொண்டார். விழாவில் வைகோ பேசியதாவது: இலங்கை அரசுக்கு இந்திய அரசு ஆயுதங்களை வழங்கியது. இந்த வஞ்சக சூழ்ச்சியால்தான் விடுதலைப் புலிகள் போரில் தோற்றனர்.  இப்போது இலங்கையின் கிழக்கு மாகாணங்களில் சிங்களர்கள் குடியேற்றம் விரைவாக நடைபெறுகிறது. இது தடுத்து நிறுத்தப்பட வேண்டும். ஈழத் தமிழர்களைக் கொன்று விட்டதாக இலங்கை அரசு கருதலாம். ஆனால் ஈழத் தமிழர்கள் பின்னால் 7 கோடி தமிழர்கள் இருக்கின்றனர் என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும்.  இலங்கைப் பிரச்னைக்கு தமிழீழம் ஒன்றுதான் தீர்வாக இருக்க முடியும். ஐ.நா.சபை பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும். அப்படி பொது வாக்கெடுப்பு எடுத்து தமிழீழம் அமைக்காவிட்டால் மீண்டும் விடுதலைப் புலிகள் ஆயுதம் தாங்கிப் போராடுவார்கள்.  பொது வாக்கெடுப்பா, ஆயுதமா என்பதை வரலாறே தீர்மானிக்க முடியும்.  ஆயுதம் தாங்கிப் போராடுவதைத் தவறு என்று யாரும் சொல்ல முடியாது. தவறு என்றால் எல்லா நாடுகளும் தங்கள் ஆயுதங்களை பசிபிக் கடலில்தான் கொட்ட வேண்டும். எந்த நாடாவது அப்படிச் செய்ய முன் வருமா?  பட்ஜெட்டில் ராணுவத்துக்கு ஆயுதம் வாங்குவதற்குத்தான் எல்லா நாடுகளும் நிதி அதிகம் ஒதுக்குதின்றன என்பதை மறந்து விடக் கூடாது. எனவே ஆயுதம் எடுப்பதில் தவறு இல்லை.  பழ.நெடுமாறன் எழுதியுள்ள இந்த நூல் ஈழத் தமிழர்களின் அடுத்த கட்டத்துக்கான ஆயுத சாலையாகப் பயன்படும் என்றார் வைகோ.  பழ.நெடுமாறன் பேசியதாவது: பிரபாகரன் புகழ் பாடுவதற்காக இந்த நூலை எழுதவில்லை. அதை அவர் விரும்பவும் மாட்டார். ஈழத் தமிழர்களின் தியாகத்தையும் வீரத்தையும் இளைய தலைமுறை தெரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காகத்தான் எழுதியுள்ளேன். பிரிட்டிஷார் ஆட்சியில் தமிழர்கள் கூலிகளாகத்தான் பார்க்கப்பட்டனர்.  இந்தப் பார்வை சுதந்திர இந்தியாவிலும் தொடர்ந்தது. விடுதலைப் புலிகளுடைய எழுச்சிக்குப் பின்னரே இந்தப் பார்வை மாறியது.  வீரம் நிறைந்தவர்களாக இப்போது தமிழர்கள் பார்க்கப்படுகின்றனர் என்றார் அவர்.  விழாவில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழு உறுப்பினர் ஆர்.நல்லகண்ணு, தமிழ்த் தேசிய பொதுவுடைமை கட்சித் தலைவர் பெ.மணியரசன், பெரியார் திராவிடர் கழகத் தலைவர் கொளத்தூர் மணி உள்பட பலர் பேசினர்.  தங்கப் பேனா: விழாவில் பழ.நெடுமாறனுக்கு ம.தி.மு.க. சார்பில் தங்கப் பேனா பரிசளிக்கப்பட்டது. 

புதன், 11 ஏப்ரல், 2012

nedu book about prapakaran publishing function 130412




தமிழ்க் குலம் பதிப்பாலயம் அழைக்கிறது
============================
பழ. நெடுமாறன் எழுதிய 
பிரபாகரன்-தமிழர் எழுச்சியின் வடிவம்
நூல் வெளியீட்டு விழா 

நாள் - 13-4-2012, வெள்ளிக்கிழமை
நேரம் - மாலை 5 மணி
இடம் - பிட்டி தியாகராயர் அரங்கம், தியாகராய நகர், சென்னை

தலைமை - கவிஞர் காசி. ஆனந்தன்

நூலை வெளியிட்டு சிறப்புரை - திரு. வைகோ

நூலை பெறுபவர்கள்
திரு. மு. பாலசுப்ரமணியன்
திரு. வி. கே. டி. பாலன்
திரு. சா. சந்திரேசன்
திருச்சி. திரு. கே. சௌந்தரராசன்

வாழ்த்துரை
திரு. தா. பாண்டியன்
இயக்குநர் திரு. மணிவண்ணன்
கொளத்தூர் திரு. தா. செ. மணி
திரு. தமிழருவி மணியன்
திரு. பெ. மணியரசன்
திரு. கா. பரந்தாமன்

ஏற்புரை - திரு. பழ. நெடுமாறன்


அனைவரும் வருக!
- தமிழ்க்குலம் பதிப்பாலயம்
8/140, டிப்போலைன்
சி. பல்லவபுரம்
சென்னை - 600043.
தொலைபேசி - 2264-0451

குறிப்பு
வெளியீட்டு விழா அன்று நூல் சிறப்பு விலை ரூ.700/- 
(நூலின் உண்மை விலை ரூ.800/-)


__._,_.___
Attachment(s) from Thanga
2 of 2 Photo(s)

வெள்ளி, 12 ஆகஸ்ட், 2011

3 பேர் மரணத்தண்டனையில் சட்டப்படி நடவடிக்கை: பழ.நெடுமாறன்

விரைவில் நடவடிக்கை எடுத்து வெற்றி காணுங்கள். 
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழா விழி! / எழுத்தைக் காப்போம்!  மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!


3 பேர் மரணதண்டனையில் சட்டப்படி நடவடிக்கை: பழ.நெடுமாறன்

First Published : 11 Aug 2011 04:47:46 PM IST

Last Updated : 11 Aug 2011 04:55:03 PM IST

சென்னை, ஆக.11: ராஜிவ்காந்தி கொலைவழக்கில் மரணதண்டனை விதிக்கப்பட்ட 3 பேரின் கருணை மனுக்களை குடியரசுத் தலைவர் தள்ளுபடி செய்த விவகாரத்தில் சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்வோம் என்று பழ.நெடுமாறன் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: ராஜிவ்காந்தி கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய மூவரின் கருணை மனுக்களை குடியரசுத் தலைவர் தள்ளுபடி செய்துவிட்டதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.21 ஆண்டு காலம் சிறையில் வாடிய பிறகும் குடியரசுத் தலைவரிடம் கருணை மனு தாக்கல் செய்து 11 ஆண்டுகளுக்குப் பிறகும் இம்மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டிருப்பது இயற்கை நீதிக்குப் புறம்பானதாகும். 1992ஆம் ஆண்டு சிறப்பு நீதிமன்றம் 26 பேருக்கும் ஒட்டு மொத்தமாக மரண தண்டனை விதித்தபோது அதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்காடி 18 பேர் குற்றமற்றவர்கள் என விடுவிக்கப்படவும் மூவருக்கு ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்படவும், இக்குழு வழி செய்தது.மரண தண்டனை விதிக்கப்பட்ட நால்வருக்காக அப்போதைய ஆளுநரிடம் கருணை மனு தாக்கல் செய்து அவர் அதை தள்ளுபடி செய்தவுடன் அது செல்லாது என உயர்நீதிமன்றத்தில் வழக்காடி வெற்றிபெற்றது இக்குழுவே ஆகும். அதைப்போல இப்போதும் மூவரின் கருணை மனுக்களை குடியரசுத் தலைவர் தள்ளுபடி செய்திருப்பதை எதிர்த்து சட்டரீதியான நடவடிக்கைகளை இக்குழு மேற்கொள்ளும்.ராஜிவ் கொலையில் மேலும் புலன் விசாரணை செய்யப்பட வேண்டும் என ஜெயின் கமிஷன் அளித்த பரிந்துரையின் பேரில் அமைக்கப்பட்ட சி.பி.ஐ. புலன் விசாரணைக்குழு இன்னமும் தனது விசாரணையை முடித்து அறிக்கையைத் தரவில்லை. இதுபோன்ற உண்மைகளைக் கவனத்தில் கொள்ளாது இந்த மூவரின் கருணை மனுக்களை குடியரசுத் தலைவர் ஏற்க மறுத்திருப்பது வருந்தத்தக்கது. எனவே  சட்டரீதியாக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகளை இக்குழு விரைந்து எடுக்கும் என்று பழ.நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

புதன், 6 அக்டோபர், 2010

புலிகள் மீதான தடையை நீக்க வைகோ, நெடுமாறன் வலியுறுத்தல்

சென்னையில் செவ்​வாய்க்​கி​ழமை நடை​பெற்ற மத்​திய தீர்ப்​பா​யத்​தின் விசா​ர​ணைக்கு ஆஜ​ரான மதி​முக பொதுச்​செ​ய​லர் வைகோ,​​ தமி​ழர் தேசிய இயக்​கத் தலை​வர்
சென்னை, அக். 5: சென்னையில் மத்திய தீர்ப்பாயத்தின் முன்பு செவ்வாய்க்கிழமை ஆஜராகி, விடுதலைப் புலிகள் மீதான தடையை மத்திய அரசு நீக்க வேண்டும் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ மற்றும் தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ. நெடுமாறன் ஆகியோர் கோரினர். சென்னையில் மத்திய தீர்ப்பாயத்தின் 3-வது கருத்தாய்வு கூட்டம் நீதிபதி விக்ரம் அஜித் சென் தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மீதான தடையை 2 ஆண்டுகளுக்கு நீட்டித்து, கடந்த மே 10-ம் தேதி மத்திய அரசு அறிவித்தது. சட்ட விரோத செயல் தடுப்பு சட்டத்தின் கீழ், புலிகள் இயக்கத்தின் மீதான தடையை நீட்டிப்பது குறித்து தீர்மானிக்க, தில்லி உயர் நீதிமன்ற நீதிபதி விக்ரம் அஜித் சென் தலைமையில் தீர்ப்பாயம் அமைக்கப்பட்டது.இந்தத் தீர்ப்பாயம் அடுத்த 6 மாதங்களுக்குள் அமர்வுகளை நடத்தி விசாரித்த பின் இதுகுறித்த முடிவை அறிவிக்க வேண்டும்.இதன்படி, புலிகள் இயக்கத்தின் மீதான தடையை நீட்டிப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து அவர்களின் பிரதிநிதிகள் மற்றும் சார்புடையோர் தீர்ப்பாயத்தின் முன்பு நேரில் ஆஜராகி கருத்து தெரிவிக்கலாம் என்று அரசு ஏற்கெனவே அறிவித்தது. இதையடுத்து தீர்ப்பாயத்தின் 2 விசாரணை அமர்வு தில்லியில் நடைபெற்றன. இதன் தொடர்ச்சியாக, முதல் முறையாக இந்தத் தீர்ப்பாயத்தின் 3-வது அமர்வு, சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள ஜுடிசியல் அகாதெமியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில் தமிழக காவல் துறையின் க்யூ பிரிவு எஸ்.பி. அசோக் குமார், புலிகள் மீதான தடையை நீட்டிப்பதற்கான தகுந்த ஆதாரங்கள் அடங்கிய ஆவணங்களை தாக்கல் செய்து நீதிபதியின் முன்பு சாட்சியம் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:தமிழகத்தில் கடந்த 2008 முதல் இதுவரை விடுதலைப் புலிகள் இயக்கத்தினர் 47 பேர் மீதும், இவர்களின் தீவிர ஆதரவாளர்கள் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. புலிகள் இயக்கத்தினர் மீதான தடையை நீட்டிப்பதற்கு தேவையான தகுந்த ஆதாரங்கள் திரட்டப்பட்டுள்ளன. இது குறித்து மத்திய, மாநில அரசுகளின் தகவல் பரிமாற்றம் குறித்த ரகசிய ஆவணங்களும் தீர்ப்பாயம் முன்பு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த சிலர் கைது செய்யப்பட்டு, விசாரிக்கப்பட்டு வருகின்றனர் என்றார் அசோக்குமார்.இதன்பின் நீதிபதியின் முன்பு வைகோ ஆஜராகி, விடுதலைப் புலிகள் இயக்கத்தின் சார்பில் இந்தியாவில் எந்தவித நடவடிக்கையும் இல்லை. இலங்கைத் தமிழர்களின் விடுதலைக்காக மட்டுமே அந்த இயக்கம் உள்ளது. அதன் மீதான தடையை நீடிக்க அரசு கூறும் காரணங்கள் யூகத்தின் அடிப்படையிலானவை ஆகும் என்றார்.பழ. நெடுமாறன் கூறியதாவது:  விடுதலைப் புலிகளுக்கு ஆதரவு தெரிவித்ததால், நான் நடத்தி வந்த தமிழர் தேசிய இயக்கம் என்ற கட்சி தடை செய்யப்பட்டுள்ளது. என் மீதும், எனது கட்சியினர் மீதும் 11 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மேலும் பொடா சட்டத்திலும் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டேன். எந்த இடத்தில் கூட்டம் நடத்துவதாக இருந்தாலும் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து அனுமதி பெற்ற பின்னரே நடத்த வேண்டியுள்ளது. இதனால், அரசமைப்பு சட்டத்தின் படி பேச்சுரிமை பறிக்கப்பட்டுள்ளது. எனவே, பாதிக்கப்பட்டவர் என்பதால் தீர்ப்பாயத்தின் முன்பு மனு தாக்கல் செய்துள்ளேன் என்றார்.இதே போல தமிழக மக்கள் உரிமைக் கழகத்தின் சார்பில் கருத்து தெரிவிக்க வாய்ப்பு வழங்க வேண்டும் என்று வழக்கறிஞர் எம். ராதாகிருஷ்ணன் ஆஜராகி, மனு தாக்கல் செய்தார். இதன்பின் விசாரணை நடத்திய நீதிபதி, இது குறித்த தீர்ப்பை தள்ளி வைத்தார்.  தீர்ப்பாயத்தின் விசாரணை 2-ம் நாளாக புதன்கிழமையும் தொடரும் எனத் தெரியவந்துள்ளது.ஊட்டியில் 20-ல் தீர்ப்பாயம் கூடுகிறது:இந்நிலையில், ஏற்கெனவே வெளியிடப்பட்ட அறிவிக்கையின்படி, இந்தத் தீர்ப்பாயத்தின் அடுத்த கட்ட கருத்தாய்வு வரும் 20-ம் தேதி ஊட்டியில் நடைபெறவுள்ளது.
கருத்துக்கள்

மன உறுதி முன்னால் மலைபோல் தடையும் தூள் தூளாகும்! வெல்லும் தமிழ்ஈழம்! விரைவில் சொல்லும் உலகு அதனை! எனினும் ஈழத்தமிழர்களைக் கொல்லும் இந்தியப் போக்கிற்கு விரைவில் முடிவு வேண்டும். இந்திய ஈழ நட்புறவு வளர வேண்டும். 
வாழ்த்துகளுடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
10/6/2010 4:45:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

திங்கள், 14 ஜூன், 2010

பலிகடாவாகும் ஈழத் தமிழர்கள்



2009-ம் ஆண்டு மே 21-ம் தேதி இலங்கை நாடாளுமன்றத்தில் போரில் வெற்றி பெற்ற பெருமிதத்துடன் இலங்கை அதிபர் ராஜபட்ச பேசும்போது, இந்தியாவின் போரையே நான் நடத்தினேன் என பகிரங்கமாக அறிவித்தார். இந்திய அமைதிப்படை என்ற பெயரால் இந்திய ராணுவத்தை அனுப்பிச் சாதிக்க முடியாததைத் தான் சாதித்ததாக மறைமுகமாகக் கூறினார். கடந்த ஓராண்டில் இந்தியப் பிரதமரின் பாதுகாப்பு ஆலோசகரும் வெளியுறவுத்துறைச் செயலரும் பலமுறை கொழும்புக்குச் சென்று ராஜபட்சவுக்கு நன்றிகூறி பேச்சுவார்த்தை நடத்தித் திரும்பினார். ஓராண்டு கழித்து வெற்றி வீரராக தில்லியில் அடியெடுத்து வைத்த ராஜபட்சவுக்கு, இந்திய அரசு ரத்தினக் கம்பள வரவேற்பு அளித்தது. தில்லியில் அவர் தங்கிய ஒரே நாளில் ஏழு உடன்பாடுகள் செய்துகொள்ளப்பட்டுள்ளன. சிங்கள ராணுவத்தினருக்கும், காவல்துறையினருக்கும் இந்தியாவில் சிறப்புப் பயிற்சிகள் தொடர்ந்து அளிக்கப்படும் என்பது முக்கியமான உடன்பாடாகும். இந்த உடன்பாட்டுக்கு அவசியம் என்ன? இலங்கைக்கு அருகில் உள்ள ஒரே நாடான இந்தியா மிகச்சிறந்த நட்பு நாடாகும். அப்படியிருக்கும்போது மேலும் மேலும் சிங்கள ராணுவத்தைப் பலப்படுத்த வேண்டிய நோக்கம் என்ன? போர் உச்சகட்டமாக நடந்த கடந்த ஆண்டு இலங்கையின் பாதுகாப்புச் செலவு 210 பில்லியன் ரூபாய்களாகும். போர் முடிந்து புலிகளும் ஒழிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்ட பிறகு, 2010-ம் ஆண்டு பாதுகாப்புச் செலவுக்காக கிட்டத்தட்ட அதே அளவு தொகையான 201 பில்லியன் ரூபாய்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இலங்கைக்கு ராணுவ ரீதியாக உதவுவது என்பது நாளை இந்தியாவுக்கு எதிராகவே திரும்பாது என்பதற்கு உத்தரவாதம் எதுவும் இல்லை. 500 மெகாவாட் திறனுள்ள அனல் மின் நிலையம் ஒன்றை அமைக்க இந்தியா ரூ. 1,000 கோடி வழங்க முன்வந்துள்ளது. சிங்களப் பகுதியில் ஏராளமான தரிசு நிலங்கள் உண்டு. அனல் மின் நிலையங்களை அங்குதான் அமைப்பது வழக்கம். ஆனால், திரிகோணமலைக்கு அருகே மக்கள் செறிந்து வாழும் சம்பூர் என்ற ஊரைத் தேர்ந்தெடுத்து அங்குள்ள மக்களை எல்லாம் விரட்டியடித்து அனல் மின் நிலையம் அமைக்க ஒதுக்கியுள்ளது சிங்கள அரசு. காலங்காலமாக சம்பூரில் வாழ்ந்து சுற்றிலும் உள்ள விவசாய நிலங்களில் விவசாயம் செய்து வாழ்ந்த மக்களின் கதி என்ன என்பது குறித்து இந்தியா கவலைப்படவில்லை. இலங்கையின் ரயில்வே புனரமைப்புக்காக ரூ. 4,000 கோடியைத் தர இந்தியா ஒப்புக்கொண்டுள்ளது. இந்தியாவில் பல பகுதிகளில் ரயில்வே திட்டங்கள் போதுமான பணம் இல்லாமல் தேங்கிக் கிடக்கின்றன. தமிழர் பகுதியில் உள்ள காங்கேசன் துறைமுகம், பலாலி விமான நிலையம் ஆகியவற்றைத் திருத்தி நவீனமயமாக்க இந்தியா ஒப்புக்கொண்டுள்ளது. இதற்கு எப்படியும் பல ஆயிரம் கோடி ரூபாய் செலவாகும். ஆனால், இதன் மூலம் சிங்களப் படைகள் விரைவான முறையில் தமிழர் பகுதிகளில் வந்திறங்கி அவர்களைத் தாக்க முடியும். வேறு பயன் எதுவும் இல்லை. ஏனெனில், இலங்கையில் கொழும்புத் துறைமுகம் மட்டுமே சர்வதேசத் துறைமுகமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்றுமதியும், இறக்குமதியும் அதன் மூலம் மட்டுமே நடைபெற வேண்டும். தூத்துக்குடி - கொழும்பு, தலைமன்னார் - ராமேசுவரம் ஆகியவற்றுக்கிடையே மீண்டும் கப்பல் போக்குவரத்துத் தொடங்குவதற்கும் உடன்பாடு செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் அகதிகள் முகாம்களிலும் வெளியில் தங்கள் சொந்தச் செலவிலும் தங்கியுள்ள மூன்று லட்சத்துக்கும் மேற்பட்ட ஈழத் தமிழர்களை இனிமேல் நீங்கள் உங்கள் நாட்டுக்குத் திரும்பலாம் என்று கூறி விரட்டியடிக்கவே இந்தத் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. வேறு பயன் எதுவும் இல்ல. 2008-ம் ஆண்டு இந்தியா-இலங்கை ஆகிய நாடுகளுக்கிடையே மீன்பிடித் தொழிலாளர்கள் தொடர்பாக ஏற்பட்ட உடன்பாடு மேலும் பலப்படுத்தப்படும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த உடன்பாடு கையெழுத்திட்ட பிறகும் கடந்த 2 ஆண்டுகளில் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவது அதிகமாகியிருக்கிறது. ராஜபட்ச தில்லியில் இருக்கும் காலகட்டத்திலேயே ராமேசுவரம் மீனவர்களை சிங்களக் கடற்படை மிகக்கடுமையாகத் தாக்கியுள்ள செய்தி வெளியாகியுள்ளது. உடன்பாடுகளில் உள்ள மற்ற அம்சங்கள் அனைத்தும் சிங்கள அரசுக்குச் சாதகமானதே தவிர ஈழத்தமிழர்களுக்கு முற்றிலும் எதிரானவையே ஆகும். இந்தியாவுக்கும் இதனால் எவ்விதப் பயனும் இல்லை. கடந்த ஆண்டு அக்டோபர் 15-ம் தேதி தமிழக முதலமைச்சர் அனுப்பி வைத்த தூதுக்குழுவிடம் ராஜபட்ச பேசும்போது, இன்றிலிருந்து 15 நாள்களில் முள்வேலி முகாம்களில் உள்ள மக்கள் விடுவிக்கப்படுவது தொடங்கும்; மூன்று மாதத்தில் அனைவரும் விடுவிக்கப்படுவார்கள் என வாக்குறுதி அளித்தார். ஓராண்டு காலத்துக்கு மேலாகியும் அந்த வாக்குறுதி முழுமையாக நிறைவேற்றப்படவில்லை. இன்னும் 80 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் முகாம்களில் முடக்கப்பட்டிருக்கிறார்கள். விடுவிக்கப்பட்டவர்களும் அவர்கள் ஊர்களுக்குத் திரும்பினாலும் வாழ முடியவில்லை. வீடுகள் எல்லாம் குண்டு வீச்சால் இடிந்து கிடக்கின்றன. இந்த நிலையில் மீண்டும் காங்கிரஸ் - தி.மு.க. தூதுக்குழுவை நமது முதலமைச்சர் தில்லிக்கு அனுப்பி ராஜபட்சவிடம் முறையீடு செய்திருக்கிறார். முன்னாள் மத்திய அமைச்சர் டி.ஆர். பாலு வெளியே வந்தபோது தனது திருப்தியின்மையை வெளிப்படுத்தியிருக்கிறார். இந்தியா புறப்படுவதற்கு முன் ஜூன் 7-ம் தேதி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களை ராஜபட்ச அழைத்துப் பேசினார். அந்தப் பேச்சில் நடந்தவை குறித்து நாடாளுமன்ற உறுப்பினரான சுரேஷ் பிரேமச்சந்திரன் பின்வருமாறு கூறியிருக்கிறார்: ""போரினால் அழிக்கப்பட்ட தமிழர்களின் வீடுகளைக் கட்டித்தர வேண்டும் என்றும் இடம்பெயர்ந்த தமிழர்களை அவர்களின் சொந்த இடங்களில் குடியேற்ற வேண்டும் என்றும் நாங்கள் கேட்டபோது, அவற்றுக்கான நிதிவசதி அரசிடம் இல்லை என்று ராஜபட்ச கூறியிருக்கிறார். அதுமட்டுமல்ல, இனப்பிரச்னைக்கான அரசியல் தீர்வு குறித்துப் பேச முற்பட்டபோது சிங்கள மக்கள் தனக்கு வழங்கிய ஆணைப்படிதான் எதையும் தன்னால் செய்ய முடியும். உங்கள் கோரிக்கைகளைக் கேட்பதற்குத் தயாராக இல்லை என ராஜபட்ச கண்டிப்புடன் கூறினார். மக்கள் குடியிருப்புப் பகுதிகளை அதிஉயர் பாதுகாப்பு வளையங்களாக அறிவித்து ராணுவம் கைப்பற்றியதை மீண்டும் மக்களிடம் அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் அவர் ஏற்கவில்லை. தமிழர் பகுதிகளில் சிங்களக் குடியேற்றம் குறித்து நாங்கள் முறையிட்டபோது இலங்கை சிங்கள நாடு; எங்கு வேண்டுமானாலும் குடியேற சிங்களர்களுக்கு உரிமை உண்டு என்றும் கூறினார்'' எனத் தெரிவித்திருக்கிறார். போரில் தனக்கு உதவிய இந்தியாவுக்கு நன்றி கூற வேண்டும் என்பதற்காக ராஜபட்ச இங்கு வரவில்லை. மாறாக, அவருக்கு உலக அளவில் பெரும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அமெரிக்கா, மேற்கு நாடுகள் உள்பட பல உலக நாடுகள் ராஜபட்சவை போர்க்குற்றங்களுக்காக விசாரிக்க வேண்டும் என்ற கோரிக்கையைத் தொடர்ந்து எழுப்பி வருகின்றன. இதிலிருந்து தாம் தப்புவதற்காக இந்தியாவின் உதவியை நாடி அவர் வந்திருக்கிறார். இந்தியாவின் துணையுடன் ஈழத்தமிழர் பிரச்னைக்குத் தீர்வு காண உண்மையில் தான் முயல்வதாக ஒரு மாயத்தோற்றத்தை அவர் ஏற்படுத்த விரும்புகிறார். இந்த கபட நாடகத்துக்கு இந்திய அரசும் துணைபோகிறது. இந்தியாவின் பிராந்திய நலன்களுக்கு உள்பட்ட சின்னஞ்சிறிய நாடான இலங்கையை எப்படியாவது திருப்தி செய்து தனது பக்கம் வைத்துக்கொள்வதற்காக இந்திய அரசு பெருமுயற்சி செய்கிறது. இந்த முயற்சிகளின் விளைவுகள் விபரீதமாகவே அமைந்துவிட்டன. ஜவாஹர்லால் நேரு வகுத்த நடுநிலையான வெளிநாட்டுக் கொள்கை இந்திரா காந்தி காலம் வரையில் முழுமையாகப் பின்பற்றப்பட்டது. ஆனால், ராஜீவ் காலத்தில் ஒரு பெரும் சறுக்கல் ஏற்பட்டது. பிரதமருக்கு அதிகாரிகள் வழிகாட்டத் தொடங்கினார்கள். நேரு, இந்திரா காலங்களில் மிகப்பெரும்பாலான ஆசிய, ஆப்பிரிக்க, தென்அமெரிக்க நாடுகள் இந்தியாவின் வழிகாட்டுதலுக்கு இணங்க அணிசாரா கொள்கையைப் பின்பற்றின. இதன் விளைவாக, அந்நாடுகளின் இயற்கையான தலைமை இந்தியாவை வந்தடைந்தது. ஆனால், இப்போது நிலைமை தலைகீழாக மாறிப்போயிற்று. அணிசாரா நாடுகள் மட்டும் அல்ல, அண்டையில் உள்ள தெற்காசிய நாடுகளே இந்தியாவின் தலைமையை ஏற்கவில்லை. இதன் விளைவாக ஐ.நா. பாதுகாப்புக் குழுவின் உறுப்பினர் தேர்தல் நடைபெற்றபோது, அத்தேர்தலில் இந்தியா பரிதாபகரமான தோல்வியைத் தழுவ நேர்ந்தது. நேரு காலத்தில் இலங்கையில் அந்நிய வல்லரசுகள் நுழையத் தயங்கின. ஆனால், ஜெயவர்த்தன காலத்தில் அமெரிக்கா, இஸ்ரேல், பாகிஸ்தான் போன்ற நாடுகள் இலங்கைக்கு ராணுவ ரீதியான உதவிகளை அளிப்பதன் மூலம் நெருக்கமான உறவு கொண்டன. 1984-ம் ஆண்டிலிருந்து இஸ்ரேலிய மொசாட் படையினர் இலங்கைக்கு வந்து சிங்களப் படையினருக்குப் பயிற்சி கொடுத்தார்கள். மேற்கத்திய நாடுகளைச் சேர்ந்த கூலிப்படையினர், கிளர்ச்சியாளர்களை ஒடுக்குவதற்கான பயிற்சிகளை அளித்தார்கள். இந்த இரண்டரை ஆண்டுகளில் சிங்கள ராணுவம் ஐந்து மடங்கு பெருகியதற்கு மேற்கு நாடுகளின் உதவியே காரணம். இதனால் இந்தியாவுக்கு ஏற்படவிருக்கும் அபாயத்தை உணர்ந்த இந்திரா, இதற்குப் பதிலடியாக ஈழத்தமிழரை வலுப்படுத்தத் திட்டமிட்டார். ஈழப்போராளிகளுக்கு ராணுவப் பயிற்சியும் ஆயுதங்களும் கொடுத்தார். ஏனெனில், சிங்களரை அவர் ஒருபோதும் நம்பவில்லை. சீனப் படையெடுப்பு, வங்க தேசப்போர் நடைபெற்ற காலங்களில் இலங்கை செய்த துரோகத்தை அவர் மறக்கவில்லை. திரிகோணமலையை அமெரிக்கக் கடற்படைத் தளத்துக்குத் தாரைவார்க்க ஜெயவர்த்தன முன்வந்தபோது அதற்குக் கடும் கண்டனத்தை இந்திரா தெரிவித்தார். அதன் விளைவாக, அந்த முயற்சி முளையிலேயே கிள்ளி எறியப்பட்டது. ராஜீவ் காலத்தில் நிலைமை அடியோடு மாறியது. அரசியல் அனுபவமோ, குறைந்தபட்ச ராஜதந்திர அறிவோ, தொலைநோக்குப் பார்வையோ கொஞ்சமும் இல்லாதவர் ராஜீவ் என்பதைப் புரிந்துகொண்ட அதிகாரிகள், அவரை ஆட்டிப்படைக்கத் தொடங்கினார்கள். இதை உணர்ந்த ஜெயவர்த்தன விரித்த வஞ்சக வலையில் ராஜீவ் விழுவதற்கு ரொமேஷ் பண்டாரி, ஜே.என்.தீட்சித் போன்ற அதிகாரிகள் உதவினார்கள். ராஜீவ் - ஜெயவர்த்தன உடன்பாடு ஏற்பட்டு அதன் விளைவாக இந்திய ராணுவம் முதன்முறையாக இந்தியாவின் எல்லைக்கு வெளியே அந்நிய நாடு ஒன்றுக்கு அனுப்பப்பட்டது. இதன் விளைவாக, 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டார்கள். தொடக்க காலத்திலிருந்து இந்தியாவைத் தங்களது இரண்டாவது தாயகமாகக் கருதிவந்த ஈழத்தமிழர்கள், இந்தியாவை வெறுக்கத் தொடங்கினார்கள். பிற்காலத்தில் வேண்டாத விளைவுகள் ஏற்பட்டன. ராஜீவின் தவறான கொள்கைகளை அமெரிக்காவும் மேற்கு நாடுகளும் ஊக்குவித்தன. ஈழத்தமிழர்களின் வலிமைக் கரமாக விளங்கிய விடுதலைப் புலிகளை ஒடுக்க உதவுவது, சிங்களப் பேரினவாதத்தை ஊக்குவிக்கும் என்பதையோ எதிர்காலத்தில் இந்திய எதிர்ப்பில் ஊறிப்போன சிங்களரை சீனா பக்கம் கொண்டுபோய்ச் சேர்க்கும் என்பதையோ ராஜீவோ மேற்கு நாடுகளோ கொஞ்சமும் உணரவில்லை. மேற்கு நாடுகள் ஒரு கட்டத்துக்கு மேல் தனக்கு உதவ முன்வர மாட்டார்கள் என்பதை உணர்ந்தவுடன் இந்தியாவுக்கு எதிரி நாடுகளான சீனா, பாகிஸ்தான் போன்ற நாடுகளுடன் நெருக்கமான உறவு பூண இலங்கை முயற்சிகளை மேற்கொண்டது. ராஜீவுக்குப் பிறகு வந்த காங்கிரஸ் அல்லது அதன் ஆதரவு பெற்ற பிரதமர்கள் அதிகாரிகளின் வழிகாட்டலையே பின்பற்றினார்கள். சிறிது சிறிதாக சீனா, பாகிஸ்தானின் ஆதிக்கம் இலங்கையில் பெருகிவருவது குறித்தும் அதனுடைய விளைவுகள் குறித்தும் அவர்கள் கொஞ்சமும் கவலைப்படவில்லை. பிரதமராக வாஜ்பாய் இருந்தபோது பாதுகாப்புத்துறை அமைச்சராக இருந்த ஜார்ஜ் பெர்ணான்டஸ் நிலைமையின் தீவிரத்தை உணர்ந்து இலங்கைக்கு ராணுவ ரீதியான எந்த உதவியையும் இந்தியா வழங்கக்கூடாது என்ற முடிவெடுப்பதற்குக் காரணமாக இருந்தார். அதேவேளையில் பிற அந்நிய நாடுகள் இலங்கையில் ஊடுருவுவதையும் கண்டிக்க அவர் தவறவில்லை. 2003-ம் ஆண்டில் மீண்டும் காங்கிரஸ் கூட்டணி மத்திய ஆட்சியைக் கைப்பற்றியபோது ராஜீவ் காந்தியின் செல்லாத கொள்கையையே பின்பற்றத் தொடங்கியது. இலங்கைக்கு ராணுவ ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் ஏராளமான உதவிகள் வழங்கப்பட்டன என்பது எல்லோரும் அறிந்த உண்மையாகும். இலங்கையில் ஈழத்தமிழர்களையும் விடுதலைப்புலிகளையும் ஒடுக்குவதற்கு சிங்கள அரசுக்கு உதவுவது என்பது, தனது தலையில் தானே மண்ணை வாரிப் போட்டுக்கொள்வதாகும் என்பதை இந்தியா உணரவில்லை. இந்தியப் பிரதமருக்கும் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கும், எம்.கே. நாராயணன், சிவசங்கரமேனன் போன்ற அதிகாரிகளே வழிகாட்டிகளாக அமைந்தார்கள். இலங்கையில் இந்தியாவின் செல்வாக்கு ஓங்குவதற்குப் பதில் அவர்களின் தவறான ஆலோசனைகளின் விளைவாக இந்தியாவின் பகைநாடுகளின் செல்வாக்கு அங்கு மிகுந்தது. இந்துமாக்கடல் மார்க்கம் சீனாவின் பிடியில் சிக்கிக்கொண்டதை உணர்ந்த மேற்கு நாடுகள் அதிர்ச்சியடைந்தன. ஈழப்போரின் கடைசிக்கட்டத்தில் அப்பாவித் தமிழ் மக்களை ஈவுஇரக்கமின்றி சிங்களர்கள் படுகொலை செய்யத் துணிந்தபோது அதைத் தடுக்கும் சக்தி மேற்கு நாடுகளுக்கோ, ஐ.நா.பேரவைக்கோ இல்லாமல்போயிற்று. ராஜபட்சவைப் போர்க்குற்றவாளியாக விசாரிக்க வேண்டுமென மேற்கு நாடுகள் ஐ.நா. மனித உரிமை கமிஷனில் குரல் எழுப்பியபோது இந்தியா மீண்டும் மீண்டும் தவறுக்குமேல் தவறு செய்தது. இந்தக் குற்றச்சாட்டுகளிலிருந்து இலங்கையைக் காப்பாற்ற சீனாவுடன் கைகோர்த்து நின்றது. இந்தப் பின்னணியில்தான் ராஜபட்சவுக்கு இந்திய அரசு தில்லியில் ரத்தினக் கம்பள வரவேற்புக் கொடுத்து பல ஆயிரம் கோடிகளை அள்ளித் தரும் உடன்பாடுகளையும் செய்துகொண்டிருக்கிறது. இலங்கையை எப்படியாவது தாஜா செய்து இந்தியாவின் நலன்களைக் காப்பாற்றிக்கொள்ள வேண்டும் என்பதற்காக ஈழத் தமிழர்களை இந்தியா கைகழுவிவிட்டது. சிங்கள பலிபீடத்தில் தமிழரைக் காவுகொடுத்தாவது இலங்கையை திருப்திப்படுத்த வேண்டும் என்பதையே தனது கொள்கையாக இந்திய அரசு கொண்டிருக்கிறது. ஆனால், உண்மையில் சீனா பலிபீடத்தில் இந்திய நலன்களைக் காவுகொடுத்துவிட்டது. சிவசங்கரமேனன், எம்.கே. நாராயணன், நிருபமா போன்ற உலகப் பார்வையும், தொலைநோக்கும் அற்ற அதிகாரிகளால் வழிநடத்தப்படும் மன்மோகன் சிங் அரசு எதிர்காலத்தில் தெற்கே தொல்லைதரும் பகைநாடாக இலங்கை விளங்கப்போகிறது என்பதை உணரும்போது காலம் கடந்திருக்கும். எல்லாமே கைமிஞ்சிப் போயிருக்கும். ஈழத்தமிழர்களை இந்தியா நெருக்கடியான காலகட்டத்தில் அடியோடு கைகழுவியது கண்டு தமிழ்நாட்டு தமிழர்கள் மட்டுமல்ல, மலேசியா, தென்னாப்பிரிக்கா மற்றும் உள்ள உலக நாடுகளில் வாழும் தமிழர்கள் பெரும் கவலையும் தங்கள் எதிர்காலத்தைப் பற்றிய அச்சமும் கொண்டுள்ளனர். சிங்கள அரசைப் பின்பற்றி மேற்கண்ட நாடுகளின் அரசுகளும் தங்களை விரட்டியடிக்க முனைந்தால் இந்தியா தனது கண்களையும் காதுகளையும், வாயையும் பொத்திக்கொள்ளும் என்பதை அவர்கள் உணர்ந்து அதிர்ச்சி அடைந்திருக்கிறார்கள். இந்தியாவின் இந்தத் துரோகம் கண்டு தமிழக மக்களின் உள்ளங்கள் எரிமலையென குமுறிக்கொண்டே இருக்கின்றன. அது வெடிக்கப்போகும் நாள் வெகு தூரத்தில் இல்லை.
கருத்துக்கள்

நெடுமாறன் போன்றோர் தொடர்ந்து இவ்வாறான உண்மைகளை உரைத்துக்கொண்டுதான் இருக்கின்றனர். சதிக்கூட்டாளி என்பதால் இந்திய அரசு கேளாச செவியாக இருக்கின்றது. ஆனால், தமிழ் மக்கள் இவற்றை உணர்ந்து ஒன்று சேர்ந்தால் வலிமை பெற்று நம் இனத்தைக் காப்பாற்றலாம் அல்லவா? சில காலம் தேர்தலையும் கட்சி அரசியல்களையும் மறந்து இவர் தலைமையில் ஒன்று சேரலாமே! தமிழினப்பகையான இந்தியமும் சிங்களமும் ஒன்று சேர்ந்து தமிழ்மக்களுக்கு மட்டுமல்லாமல் இந்திய மக்களுக்கும் வஞ்சகம் புரிகின்றனர். நம்நாடு வலிமையும் வளமும் பெற்றுத் திகழ வேண்டுமானால் ஈழத் தமிழர்கள் காப்பாற்றப்பட வேண்டும் என்னும் உண்மையை நாம் ஓங்கி உரைக்க வேண்டும்.

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
6/14/2010 4:15:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

ஞாயிறு, 13 ஜூன், 2010

தமிழர்களை வேட்டையாட இராசபக்சேவுக்கு அனுமதி இந்திய-இலங்கை உடன்பாட்டின் விளைவு-பழ. நெடுமாறன்

இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங் – இலங்கை அதிபர் இராசபக்சே ஆகியோர் செய்துகொண்டுள்ள ஏழு உடன்பாடுகளின்படி ஈழத்தமிழர்களை முற்றிலுமாக சிங்கள இனவெறி பலிபீடத்தில் இந்திய அரசு காவுகொடுத்துவிட்டது. இதைக்கண்டுத் தமிழர்களின் நெஞ்சங்கள் எரிமலையாய் குமுறுகின்றன.

முதலாவதாக இருநாடுகளுக்கிடையே உயர்மட்ட அளவில் இராணுவ ரீதியான கருத்துப் பரிமாற்றங்கள் செய்துகொள்ளப்படும். சிங்கள இராணுவத்தினருக்கு இந்திய இராணுவ முகாம்களில் பயிற்சி அளிக்கப்படும். இலங்கைக் காவல்துறையினருக்கு இந்தியாவில் உள்ள பயிற்சி மையங்களில் நவீன பயிற்சிகள் அளிக்கப்படும்.

அதாவது இராணுவ ரீதியில் இந்தியாவும் இலங்கையும் இணைந்து செயல்படும் என்பது தெளிவாக்கப்பட்டிருக்கிறது. இலங்கையில் விடுதலைப் புலிகளை முழுவதுமாக ஒழித்துவிட்டதாக இராசபக்சே அறிவித்திருக்கிறார். இலங்கைக்கு அருகே வேறு பகைநாடுகள் எதுவும் கிடையாது. இந்தச் சூழ்நிலையில் இலங்கை இராணுவத்திற்கு நவீன பயிற்சிகள் அளித்து பலப்படுத்த வேண்டிய அவசியம் என்ன? இது நாளைக்கு இந்தியாவுக்கு எதிராகத் திரும்பாது என்பதற்கு உறுதி என்ன?

திரிகோணமலையில் சம்பூர் என்ற இடத்தில் 500 மெகாவாட் திறனுள்ள அனல் மின் உற்பத்தி நிலையத்தை இந்தியா அமைத்துக்கொடுக்க ஒப்புக்கொண்டிருக்கிறது.

சம்பூர் வெட்டவெளியோ அல்லது தரிசு நிலமோ அல்ல. சம்பூர் அடர்த்தியாக தமிழர்கள் தொன்றுதொட்டு வாழ்ந்த ஊர். ஊரைச் சுற்றிலும் விவசாய நிலங்கள் உண்டு. ஆனால் திரிகோணமலைக்கு அருகே உள்ள எந்த ஊரிலும் தமிழர்களை வாழவிடாமல் விரட்டியடிப்பதின் மூலமே திரிகோணமலையை முழுமையாக தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர முடியும் என சிங்கள அரசு கருதுகிறது. அதற்குத் துணைபுரியும் வகையில் சம்பூரில் வாழும் பல்லாயிரக்கணக்கானத் தமிழர்களை விரட்டியடித்துவிட்டு அங்கு அனல் மின்நிலையம் அமைக்க இந்தியா உதவுவது என்பது தமிழர்களுக்கு செய்யப்படும் துரோகமாகும்.

இலங்கையின் வடமாநிலத்தில் உள்ள காங்கேசன்துறை துறைமுகத்தையும், பலாலி விமான நிலையத்தையும் நவீன மயமாக்கி மேம்படுத்த இந்தியா உதவ முன்வந்துள்ளது.

காங்கேசன்துறை துறைமுகமும் பலாலி விமான நிலையமும் திருத்தி அமைக்கப்படுவதின் மூலம் சிங்களப் படைகள் விரைவில் தமிழர் பகுதிகளில் வந்து இறங்கி அவர்களைத் தாக்க முடியும். அதற்கு இந்திய அரசு உதவியுள்ளது.

தூத்துக்குடி-கொழும்பு, தலைமன்னார்-இராமேசுவரம் ஆகியவற்றுக்கிடையே மீண்டும் கப்பல் போக்குவரத்துத் தொடங்கப்படும் என உடன்பாடு கூறுகிறது.

தமிழ்நாட்டில் அகதிகள் முகாம்களிலும் வெளியில் தங்கள் சொந்த செலவில் தங்கியுள்ள மூன்று இலட்சத்திற்கும் மேற்பட்ட ஈழத்தமிழர்களை இலங்கையில் போர் முடிந்துவிட்டது. இனிமேல் நீங்கள் தங்கியிருக்கத் தேவையில்லை எனக்கூறி விரட்டியடிக்கவே இந்தத் திட்டம் உதவும். மேலும் இந்திய முதலாளிகள் இலங்கையில் தொடங்கியுள்ள தொழிற்சாலைகளுக்குத் தேவையான கச்சாப் பொருட்களை கொண்டுசெல்ல இத்திட்டம் பயன்படும். இப்போதுள்ள சூழ்நிலையில் இரு நாடுகளையும் சேர்ந்த தமிழர்கள் பயணம் செய்யப்போவதில்லை.

2008ஆம் ஆண்டு இந்தியா-இலங்கை ஆகிய நாடுகளுக்கிடையே மீன்பிடித் தொழிலாளர்கள் தொடர்பாக ஏற்பட்ட உடன்பாடு மேலும் பலப்படுத்தப்படும். இதன் மூலம் மீனவர்களின் பாதுகாப்பு வலுப்படுத்தப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

இந்த உடன்பாடு செய்துகொள்ளப்பட்ட கடந்த இரண்டு ஆண்டுகளில் தமிழ்நாட்டு மீனவர்கள் தொடர்ந்து சிங்களக் கடற்படையால் வேட்டையாடப்பட்டு வருகிறார்கள். நூற்றுக்கணக்கானவர்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். இராசபக்சே தில்லியில் இருக்கும்போதே இராமேசுவரம் மீனவர்களை சிங்களக் கடற்படை மிகக்கடுமையாகத் தாக்கியுள்ள செய்தி வெளியாகியுள்ளது.

மொத்தத்தில் இந்த உடன்பாடுகள் சிங்கள அரசுக்குச் சாதகமானவையே தவிர ஈழத்தமிழர்களுக்கு முற்றிலும் எதிரானவையே ஆகும். போர் முடிந்த பிறகு 15-10-09இல் தமிழக முதல்வரால் அனுப்பிவைக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு, இராசபக்சேயைச் சந்தித்தபோது இன்னும் 15 நாட்களில் முள்வேலி முகாம்களில் உள்ள மக்கள் சிறிதுசிறிதாக விடுவிக்கப்பட்டு அவர்கள் ஊர்களுக்கு அனுப்பப்படுவார்கள். மூன்று மாதத்திற்குள் அனைவருமே விடுவிக்கப்படுவார்கள் என வாக்குறுதி அளித்தார் என முதல்வர் கருணாநிதியே அறிக்கை வெளியிட்டார். ஆனால் கிட்டத்தட்ட 9 மாதங்கள் கடந்த பிறகும் முகாம்களில் உள்ள மக்களில் பெரும்பாலோர் இன்னும் விடுவிக்கப்படவில்லை. விடுவிக்கப்பட்டவர்களும் அவர்கள் ஊர்களுக்குத் திரும்ப முடியவில்லை. நடுவழியில் உள்ள முகாம்களில் அடைக்கப்பட்டிருக்கிறார்கள்.

இலங்கைத் தமிழர் பகுதிகளில் கிட்டத்தட்ட 2,60,000 தமிழர் வீடுகள் குண்டுவீச்சுகளினால் முழுமையாக அழிந்துவிட்டன. ஏறத்தாழ 10 இலட்சம் மக்கள் வீடுகளை இழந்து சாலையோரங்களிலும் மரத்தடிகளிலும் வாழ்ந்து வருகிறார்கள்.

இப்போது டில்லியில் இராசபக்சேயைத் சந்தித்த தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவிடம் மூன்று மாதத்தில் பிரச்சினை தீரும் என வாக்குறுதி வழங்கியிருக்கிறார். இக்குழுவின் தலைவராகச் சென்ற முன்னாள் அமைச்சர் டி.ஆர்.பாலு இராசபக்சேயுடன் நடத்திய பேச்சுவார்த்தையில் தங்களுக்குத் திருப்தி ஏற்படவில்லையென்று கூறியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

இந்தியாவுக்குப் புறப்படுவதற்கு முன் கொழும்பில் தனது மாளிகைக்கு சூன் 7ஆம் தேதியன்று தமிழ்த் தேசிய கூட்டமைப்பைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களை அழைத்து இராசபக்சே பேசியிருக்கிறார். அதன்பின் அக்குழுவில் ஒருவராகச் சென்ற சுரேசு பிரேமசந்திரன் பின்வருமாறு கூறியிருக்கிறார்:

‘போர்க் காரணமாக அழிக்கப்பட்ட தமிழர் வீடுகளைக் கட்டித்தரவேண்டுமென இராசபக்சேவிடம் நாங்கள் வேண்டியபோது. இலங்கை அரசிடம் அதற்கான நிதி வசதியில்லை என்று கைவிரித்துவிட்டார். இடம்பெயர்ந்த தமிழர்களை அவர்கள் சொந்த இடங்களில் குடியேற்றவேண்டும் என்று கேட்டுக்கொண்டபோது அதற்கான நிதிவசதி இல்லையென்று வெளிப்படையாகவே இராசபக்சே தெரிவித்தார். இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண்பது குறித்து அவரிடம் பேசமுற்பட்டபோது ‘சிங்கள மக்கள் தனக்கு வழங்கிய ஆணைப்படிதான் தன்னால் எதையும் செய்யமுடியும். உங்கள் கோரிக்கைகளைக் கேட்பதற்கு தயாராக இல்லை, என இராசபக்சே மிகக்கண்டிப்புடன் கூறினார். அரசியல் கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்குவது தொடர்பாக கேட்டபோதும் மறுத்துவிட்டார். மக்கள் குடியிருப்புப் பகுதிகளை அதிஉயர் பாதுகாப்பு வலையங்களாக அறிவித்து இராணுவம் கைப்பற்றியதை மீண்டும் மக்களிடம் அளிக்கவேண்டும் என்று கேட்ட கோரிக்கையையும் அவர் ஏற்கவில்லை. தமிழர் பகுதிகளில் சிங்களக் குடியேற்றம் நிறுத்தப்படவேண்டும் என நாங்கள் கேட்டபோது இலங்கை சிங்கள நாடு. எங்கு வேண்டுமானாலும் குடியேற சிங்களர்களுக்கு உரிமை உண்டு என்றும் இறுமாப்புடன் கூறினார்.’ எனத் தெரிவித்திருக்கிறார்.

தில்லி வந்துள்ள இராசபக்சேயின் தூதுக்குழுவில் டக்ளஸ் தேவானந்தா கிழக்கு மாநில முதலமைச்சர் பிள்ளையான் ஆகியோரும் வந்துள்ளார்கள். டக்ளஸ் தேவானந்தா மீது கொலைக் குற்றம் உட்பட மூன்று வழக்குகள் சென்னை நீதிமன்றங்களில் கடந்த 24 ஆண்டு காலமாக நிலுவையில் உள்ளன. கடந்த 2006ஆம் ஆண்டு சூன் 19ஆம் தேதியன்று இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் அவர்களை ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ சந்தித்து கொலைக் குற்றவாளியான டக்ளஸ் தேவானந்தா வெளியுறவுத் துறை அதிகாரிகளைச் சந்தித்துப் பேசவும், தில்லியில் செய்தியாளர்களைச் சந்திக்கவும் அனுமதிக்கப்பட்டது எப்படி என்று கேட்டபோது. இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக பிரதமர் வாக்குறுதி அளித்தார். ஆனால் இதற்குப் பின் மூன்று வாரங்கழித்து கியூபா தலைநகரான ஹவானாவில் நடைபெற்ற சர்வதேச மாநாட்டிற்கு வந்த இராசபக்சே தன்னுடன் டக்ளஸ் தேவானந்தாவையும் அழைத்துகொண்டுவந்து மன்மோகன் சிங்கை அறிமுகம் செய்துவைத்த படம் இந்தியப் பத்திரிகைகளில் வெளியானது. எனவே டக்ளஸ் தேவானந்தா குறித்து விவரம் எதுவும் இந்தியப் பிரதமருக்குத் தெரியாது என கூற முடியாது. இந்தப் பிரச்சினையில் தமிழகக் காவல்துறையை தன்வசம் வைத்திருக்கும் முதலமைச்சர் கருணாநிதியும் வாய்மூடி மெளனம் சாதிப்பதை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். தமிழ்நாட்டுத் தமிழன் ஒருவரை கொலை செய்த ஒரு குற்றவாளி மீது உள்ள வழக்கில் 24 ஆண்டுகாலமாக தமிழக காவல்துறை எந்த நடவடிக்கையும் எடுக்காமல் தூங்கிக்கிடக்கிறது. கிழக்கு மாநிலத்தைப் பிரித்தது சரியே என இந்தியாவிடம் தெரிவிக்க பிள்ளையான் அழைத்துவரப்பட்டுள்ளார்.

நான் உமி கொண்டு வருகிறேன். நீ அவல் கொண்டு வா இருவரும் ஊதி ஊதி தின்போம் என்ற பழமொழிக்கேற்ப இராசபக்சே – மன்மோகன் உடன்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த உடன்பாட்டினால் இலங்கைக்கு ஆதாயமே தவிர, இந்தியாவுக்கு எதுவும் இல்லை. ஈழத்தமிழர்களை தொடர்ந்து வேட்டையாட இராசபக்சே இந்திய அரசினால் ஊக்குவிக்கப்பட்டிருக்கிறார். இதைத் தமிழர்கள் ஒருபோதும் மன்னிக்கப்போவதில்லை.

அன்புள்ள

( பழ. நெடுமாறன் )
ஒருங்கிணைப்பாளர்
இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் «

வியாழன், 4 பிப்ரவரி, 2010

செங்கல்பட்டு ஏதிலிகள் மீதான காட்டுமிராண்டித்தனமான தாக்குதலிற்கு பழ.நெடுமாறன் கண்டனம்

பதிந்தவர்_கனி on February 3, 2010
பிரிவு: செய்திகள்

செங்கற்பட்டு சிறப்பு முகாமில் எத்தகைய விசாரணையும் இல்லாமல் பல மாதங்களாக அடைக்கப்பட்டுள்ள 31 ஈழத்தமிழ் ஏதிலிகள் மீது நேற்று இரவு 10 மணிக்கு மேல் காவல்துறையினரால் மிகக்கடுமையான தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன் என பழ.நெடுமாறன் கண்டனம் வெளியிட்டுள்ளார்.

இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கை வருமாறு

செங்கற்பட்டு சிறப்பு முகாமில் எத்தகைய விசாரணையும் இல்லாமல் பல மாதங்களாக அடைக்கப்பட்டுள்ள 31 ஈழத்தமிழ் ஏதிலிகள் மீது நேற்று இரவு 10 மணிக்கு மேல் காவல்துறையினரால் மிகக்கடுமையான தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்.

தங்கள் குறைகளைத் தீர்ப்பதாக முதலமைச்சர் அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து, நேற்று அந்தக் கைதிகள் அனைவரும் சாகும் வரை உண்ணாநிலைப் போராட்டத்தைத் தொடங்கினார்கள். ஆனால் இரவு 10 மணிக்கு மேல் திடீரென 200க்கும் மேற்பட்ட காவல்படை வீரர்கள் உள்ளே புகுந்து உறங்கிக்கொண்டிருந்த ஏதிலிகள் மீது மிகக்கடுமையான தாக்குதலை நடத்தியுள்ளார்கள்.

அதிகாலை 4 மணி வரை விடிய விடிய நடைப்பெற்ற இந்தத் தாக்குதலின் விளைவாக ஏதிலிகள் அனைவருமே படுகாயமடைந்துள்ளனர். மிகமோசமான முறையில் பாதிக்கப்பட்டுள்ள 13 ஏதிலிகளை மட்டும், அங்கிருந்து காவல்துறை அகற்றிவிட்டது. அவர்கள் கதி என்னவாயிற்று என்பதும் தெரியவில்லை. ஏதிலிகளுக்குச் சொந்தமான துணிகள் மற்றும் பொருட்கள் அடியோடு அழிக்கப்பட்டுள்ளன. படுகாயமடைந்தவர்களுக்கும் மற்றவர்களுக்கும் சிகிச்சை அளிக்கப்படவில்லை. உணவும் தரப்படவில்லை..

தமிழ்நாட்டில் உள்ள ஏதிலிகளுக்கு மேலும் பல வசதிகளை செய்துக்கொடுக்கப்போவதாக பசப்பிவரும் முதலமைச்சர் கருணாநிதியின் கட்டுப்பாட்டில் உள்ள காவல்துறை, உண்ணாநிலை இருந்த ஏதிலிகள் மீது நடத்திய இந்த காட்டுமிராண்டித்தனமான தாக்குதல் முள்ளிவாய்க்கால் படுகொலையை நினைவுப்படுத்தியிருக்கிறது.

படுகாயமடைந்த அனைத்து ஏதிலிகளையும் உடனடியாக விடுதலை செய்வதோடு அவர்களை மருத்துவமனையில் சேர்த்து தக்க சிகிச்சையளிக்க வேண்டுமென வலியுறுத்துகிறேன் என அவர் மேலும் கூறியுள்ளார்.

(Visited 15 times, 15 visits today)


சனி, 30 ஜனவரி, 2010

காந்தியப் பொருளாதாரத்தை வடிவமைத்த தமிழன்



பாரிஸ்டர் மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி என்ற இளம் வழக்கறிஞரை மகாத்மா காந்தியாக உருவாக்கியதில் தமிழர்களுக்குப் பெரும் பங்கு உண்டு. தென்னாப்பிரிக்காவில் இருந்தபோது ஒப்பந்தக் கூலிகளாக அழைத்துச் செல்லப்பட்ட தமிழர்களுக்கு வெள்ளை முதலாளிகள் இழைத்த கொடுமைகளுக்கு எதிராகத்தான் அவர் தனது முதல் போராட்டத்தைத் தொடங்கினார். பாலசுந்தரம் எனும் தமிழ் ஒப்பந்தக் கூலியை அவருடைய வெள்ளை எஜமானன் மிகக் கடுமையாகத் தாக்கிக் கொடுமை செய்த வழக்கை ஏற்று நடத்தி அந்த அப்பாவித் தமிழனுக்கு நீதி கிடைக்க உதவியதன் மூலம் அவர் வாழ்வில் மிகப் பெரும் திருப்பம் ஏற்பட்டது.1894-ம் ஆண்டு "நேட்டால் இந்தியன் காங்கிரஸ்' என்ற பெயரில் ஓர் அமைப்பை காந்தியடிகள் தோற்றுவித்தார். இந்த அமைப்பில் முக்கிய பங்கு வகித்தவர்கள் தமிழர்களே. தென்னாப்பிரிக்காவில் காந்தியடிகள் 20 ஆண்டுகளுக்கு மேல் தங்கியிருந்து பல்வேறு போராட்டங்களை நடத்தி இந்திய மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளை நீக்குவதற்கு வழிவகுத்தார்.1920-ம் ஆண்டு முதல் 1947--ம் ஆண்டு வரை 27 ஆண்டுகள் இந்தியாவில் சுதந்திரப் போராட்டத்தை காந்தியடிகள் வழிநடத்தினார். ஆனால் அதற்கான பயிற்சியையும் பக்குவத்தையும் அவருக்குத் தென்னாப்பிரிக்காவில் நடத்திய போராட்டங்கள் அளித்திருந்தன. அதற்கு முழுமையாகக் காரணமானவர்கள் தமிழர்களே.தென்னாப்பிரிக்காவில் அவர் நடத்திய போராட்டத்தில் வள்ளியம்மை, நாகப்பன், நாராயணசாமி ஆகிய 3 தமிழர்கள் உயிர்த் தியாகம் செய்தனர். பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் இப்போராட்டத்தில் ஈடுபட்டு சிறை சென்றனர். பல தமிழர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதற்காக நாடு கடத்தப்பட்டனர். ஆனாலும் காந்தியடிகளுக்குத் தோள் கொடுத்து துணை நிற்பதிலிருந்து தமிழர்கள் பின்வாங்கவில்லை.வள்ளியம்மை குறித்தும் தனக்குத் தோள் கொடுத்துத் துணை நின்ற தமிழர்கள் குறித்தும் காந்தியடிகள் குறிப்பிட்ட கருத்துகள் அவர் எவ்வளவு உயர்வாகத் தமிழர்களை மதித்தார் என்பதற்குச் சான்றாகத் திகழ்கின்றன.காந்தியடிகள் அரை நிர்வாணப் பக்கிரி கோலத்துக்கு மாறியதும் தமிழகத்தில்தான். 22-9-1921 அன்று காந்தியடிகள் மதுரையில் தங்கியிருந்தபோது அன்று அதிகாலையில் எழுந்து தனக்குத் துணையாக இருந்த விருதுநகர் காங்கிரஸ் தொண்டர் பழனிகுமாரு பிள்ளையை எழுப்பி கதர் வேட்டியைப் பிடிக்கச் சொல்லி இரண்டாகக் கிழித்து ஒரு பாதியை இடுப்பில் கட்டிக்கொண்டு மற்றொரு பாதியை தோளில் போர்த்திக் கொண்டார். அன்றிலிருந்து அவர் மறைவு வரை இதுவே அவரது உடையாயிற்று.காந்தியடிகளின் மனசாட்சிக் காவலர் என்று அழைக்கப்படும் அளவுக்கு அவரைப் பற்றி உள்ளும் புறமும் தெரிந்து அவருடைய பணிகள் எல்லாவற்றுக்கும் துணை நின்றவர் ராஜாஜி ஆவார்.காந்திய இயக்கத்துக்குத் தமிழகத்தில் கிராமம் கிராமமாகச் சென்று தொண்டர் படையைத் திரட்டியவர் காமராஜ் ஆவார். காந்தியப் பொருளாதாரத் தத்துவத்துக்கு வடிவம் அமைத்துத் தந்த பெருமைக்குரியவர் ஜே. சி. குமரப்பா ஆவார். காந்தியடிகளின் ஆதாரக் கல்வித் திட்டத்தை உருவாக்கியவர் அரியநாயகம் என்னும் ஈழத் தமிழர்.இப்படி காந்தியடிகளுக்கு பலவகையிலும் துணையாக நின்று பெருந்தொண்டாற்றியவர்கள் தமிழர்களே.ஜோசப் கொர்னலியஸ் செல்லதுரை குமரப்பா. சென்னையில் உயர் கல்வி கற்ற இவர் 1912-ம் ஆண்டு லண்டன் சென்று பட்டயக் கணக்கர் படிப்பில் சேர்ந்தார். பிறகு லண்டனில் சிறிது காலம் பணியாற்றிவிட்டு 1919-ல் இந்தியாவுக்குத் திரும்பி மும்பையில் சொந்தமாகவே பட்டயக் கணக்கு நிறுவனத்தைத் தொடங்கி நடத்தினார். 1928-ம் ஆண்டு அமெரிக்காவுக்குச் சென்று நிர்வாக மேலாண்மை படித்தார். கொலம்பியா பல்கலைக்கழகத்தில் பொருளாதாரம் பயின்றார். 1929-ம் ஆண்டு இந்தியாவுக்குத் திரும்பினார். பிரிட்டிஷ் அரசு தன்னுடைய வரிவிதிப்புக் கொள்கையின் மூலம் இந்தியாவை எப்படியெல்லாம் சுரண்டுகிறது என்பது குறித்து ஒரு நூலை எழுதினார். காந்தியடிகளின் பார்வைக்கு அந்த நூலைக் கொண்டு செல்ல விரும்பினார். காந்தியடிகளின் செயலாளராக இருந்த பியரிலால் மூலம் அந்த விருப்பம் நிறைவேறியது.1929-ம் ஆண்டு மே மாதம் 9-ம் தேதி பிற்பகல் 2:30 மணிக்கு சபர்மதி ஆசிரமத்தில் காந்தியடிகளை அவர் சந்தித்தார். இந்தச் சந்திப்பு அவரின் வாழ்க்கைப் போக்கை மாற்றிவிட்டது. அவரது நூலைத் தனது "யங் இந்தியா' இதழில் தொடர் கட்டுரையாக வெளியிடுவதாக காந்தியடிகள் கூறியபோது அவர் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. தனது பொருளாதாரச் சிந்தனைகளும் குமரப்பாவின் பொருளாதாரச் சிந்தனைகளும் ஒரே மாதிரியாக அமைந்ததைக் கண்ட காந்தியடிகள் இதனை இதனால் இவன் முடிக்கும் எனக் கருதினார்.காந்தியடிகளால் தோற்றுவிக்கப்பட்ட தேசியப் பல்கலைக்கழகமான குஜராத் வித்யா பீடத்தில் பொருளாதாரப் பேராசிரியராக குமரப்பாவை நியமிக்க காந்தியடிகள் ஏற்பாடு செய்தார். இதன் மூலம் குமரப்பாவின் சொந்த வாழ்க்கை பெரும் மாறுதலுக்குள்ளானது. திருமணத்தைத் துறந்து காந்தியத் தொண்டராக வாழத் தன்னை அவர் அர்ப்பணித்துக் கொண்டார். காந்தியடிகளுக்கு அவர் மீது உள்ள நம்பிக்கை நாளுக்கு நாள் அதிகரித்தது. 1931-ம் ஆண்டு புகழ்பெற்ற தண்டி உப்புச் சத்தியாகிரக யாத்திரையை காந்தியடிகள் தொடங்கியபோது குமரப்பாவை யங் இந்தியாவின் ஆசிரியர் பொறுப்பில் நியமித்தார்.காந்தியடிகளைச் சுற்றி எத்தனையோ தலைவர்களும் அறிஞர் பெருமக்களும் இருந்த போதிலும் அவர்களில் யாரையும் இப்பதவியில் அவர் நியமிக்கவில்லை. குமரப்பாவை இப்பதவிக்கு அவர் தேர்ந்தெடுத்தார். அனல் பறக்கும் கட்டுரைகளை எழுதியதற்காக குமரப்பாவுக்கு ஒன்றரை ஆண்டு காலச் சிறைத் தண்டனை பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் விதிக்கப்பட்டது. ஆனால் காந்தி இர்வின் உடன்பாடு ஏற்பட்டதனால் சில நாள்களிலேயே அவர் விடுதலை செய்யப்பட்டார்.1932-ம் ஆண்டு காந்தியடிகள் கைது செய்யப்பட்டபோதும் யங் இந்தியா இதழின் ஆசிரியர் பொறுப்பை மீண்டும் குமரப்பா ஏற்க நேர்ந்தது. அப்போதும் இவர் எழுதிய கட்டுரைகளுக்காக இவருக்கு இரண்டரை ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. தண்டனைக் காலம் முழுவதையும் நாசிக் சிறையில் அவர் கழித்தார்.1934-ம் ஆண்டு சிறையிலிருந்து வெளிவந்தவுடன் காந்தியடிகள் இவரை பிகார் பூகம்ப நிவாரணப் பணிகளுக்கு அனுப்பி வைத்தார். அவர் அங்கிருந்து டாக்டர் ராஜேந்திர பிரசாத்துக்குத் துணையாக ஓராண்டு காலம் பணியாற்றினார்.1935-ம் ஆண்டு இந்திய தேசிய காங்கிரசின் சார்பில் அகில இந்தியக் கிராமத் தொழில்கள் சங்கம் தோற்றுவிக்கப்பட்டது. இதன் தலைவராகக் காந்தியடிகளும் செயலாளர் மற்றும் அமைப்பாளராக குமரப்பாவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இந்த அமைப்பின் மூலம் நாடெங்கும் கிராமத் தொழில்களைத் திருத்தி அமைக்கவும் அதன் வளர்ச்சிக்கு உதவும் பல்வேறு தொழில்நுட்பங்களை வழங்கவும் இந்த அமைப்பு பெரும் பணியாற்றியது. கிராம உத்யோக் பத்திரிக்கா என்ற பெயரில் மாத இதழ் ஒன்றையும் குமரப்பா நடத்தினார்.1938-ம் ஆண்டு காங்கிரஸ் தலைவராக சுபாஷ் சந்திர போஸ் இருந்தபோது தேசியத் திட்டக் குழு ஒன்றை அவர் அமைத்தார். பிற்காலத்தில் நாடு சுதந்திரம் பெற்றபோது உருவாக்கப்பட்ட தேசியத் திட்டக் குழுவுக்கு இதுவே முன்னோடியாகும். இக்குழுவுக்குத் தலைவராக ஜவாஹர்லால் நேரு நியமிக்கப்பட்டார். காந்தியடிகள் மற்றும் நேருவின் வற்புறுத்தலுக்கு இணங்க இக்குழுவில் அங்கம் வகிக்க இசைந்த குமரப்பா 3 மாதங்களில் இக்குழுவில் இருந்து விலகினார். திட்ட அணுகுமுறையில் அவருக்கு இருந்த கருத்து வேறுபாடே இதற்குக் காரணமாகும்.1942-ம் ஆண்டு ஆகஸ்டு போராட்டத்தின்போது அதில் ஈடுபட்டு பல்வேறு தலைமறைவு நடவடிக்கைகளில் ஈடுபட்டதற்காக இரண்டரை ஆண்டுக் காலம் சிறையிலடைக்கப்பட்டு 1945-ம் ஆண்டு விடுதலை செய்யப்பட்டார். சிறையிலிருந்த போது "நிரந்தரப் பொருளாதாரம்', "இயேசு பிரானின் போதனைகளும், செயற்பாடுகளும்' எனும் இரு நூல்களை எழுதினார். இந்த நூல்களைப் படித்து வியந்து போற்றிய காந்தியடிகள் குஜராத் வித்யா பீடத்தின் மூலம் இவருக்கு இரு முனைவர் பட்டங்களை வழங்கச் செய்தார்.இந்தியாவுக்குச் சுதந்திரம் வழங்குவது குறித்து இந்தியத் தலைவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்துவதற்காக பிரிட்டிஷ் அரசால் அனுப்பப்பட்ட நாடாளுமன்றக் குழு காந்தியடிகளை சென்னையில் 23-1-1946 அன்று சந்தித்துப் பேசியது. இந்தியாவின் பொருளாதார சமுதாய சிக்கல்கள் குறித்து ஜே.சி. குமரப்பா, அவர் சகோதரர் பரதன் குமரப்பா ஆகியோரைச் சந்தித்துப் பேசுமாறு காந்தியடிகள் நாடாளுமன்றக் குழுவை வேண்டிக் கொண்டார். எனவே அக்குழுவினர் இருவரையும் சந்தித்துப் பேசி பல விவரங்களை அறிந்து கொண்டனர். அந்த இரு சகோதரர்களுக்கும் காந்தியடிகள் அளித்த முக்கியத்துவத்தை இந்நிகழ்ச்சி சுட்டிக்காட்டுகிறது.நாடு சுதந்திரம் பெற்ற பிறகு அவருக்கு அதிகார அரசியலில் நாட்டமில்லை. இந்தியாவின் முதலாவது நிதியமைச்சராக இவரே நியமிக்கப்படுவார் என்ற நம்பிக்கை நாடெங்கும் பரவியிருந்தது. ஆனாலும் எந்த பதவியையும் ஏற்க அவர் முன்வரவில்லை.1947-ம் ஆண்டு காங்கிரஸ் செயற்குழுவில் இருந்து ஜெயப்பிரகாஷ் நாராயணன் விலகியபோது இவரை நியமிக்க காங்கிரஸ் தலைமை முடிவு செய்தது. ஆனால் காந்தியடிகள் வற்புறுத்தியும்கூட இவர் அதை ஏற்க மறுத்தார். காங்கிரஸ் கட்சிக்குள் இருந்த இடதுசாரிகள் மற்றும் வலதுசாரிகள் ஏற்கக்கூடிய பொருளாதாரக் கொள்கை ஒன்றை வகுத்து பிரதமர் நேருவிடம் இவர் அளித்தார். ஆனால் காந்தியடிகளின் மறைவுக்குப் பிறகு குமரப்பாவின் ஆலோசனைகளை நேரு ஏற்கவில்லை. இந்தியாவில் சோஷலிச முறையில் தொழிற்புரட்சி ஒன்றை ஏற்படுத்துவதையே அவர் விரும்பினார். அந்த அடிப்படையில் அரசுத் துறையில் கனரகத் தொழில்களை உருவாக்கினார்.ஆனால் குமரப்பாவோ இயற்கையோடு இயைந்த தொழிற்புரட்சி ஏற்பட வேண்டுமென்று விரும்பினார். கடலில் உள்ள நீர் சூரிய வெப்பத்தால் ஆவியாகி மேலே சென்று மேகமாகி மீண்டும் நிலத்தில் மழையாகப் பொழிகிறது.ஆறுகளில் பெருகி ஓடி வரும் மழை நீர் கடலில் கலக்கிறது. இது இயற்கையான சுழற்சியாகும். இந்த இயற்கை நெறியை மறந்து செயற்படும் நாடு குழப்பத்தில் ஆழும் என குமரப்பா கருதினார்.ஒவ்வொரு கிராமமும் அங்கு வாழும் மக்களுக்குத் தேவையான பொருள்களை அங்கேயே கைத்தொழில் முறையில் உற்பத்தி செய்ய வேண்டும். ஒவ்வொரு கிராமமும் தன்னிறைவு பெற்ற கிராமமாக மாறுவது மொத்தத்தில் நாட்டைத் தன்னிறைவு பெற்ற நாடாக மாற்றிவிடும் எனக் கருதினார். ஆனால் காந்தியடிகளுக்குப் பிறகு அவரது யோசனைகளை ஏற்கவோ, செயற்படுத்தவோ யாரும் தயாராக இல்லை.1950-களின் தொடக்கத்தில் சீனா, சோவியத் ஒன்றியம், கிழக்கு ஐரோப்பிய நாடுகள் ஆகியவற்றுக்கு அவர் நல்லெண்ணத் தூதுவராகச் சென்று வந்தார். அந்நாடுகளில் ஏற்பட்டிருக்கும் புரட்சிகரமான மாற்றங்களை நேரில் காணும் ஒரு வாய்ப்பாக இந்தப் பயணத்தை அவர் பயன்படுத்திக் கொண்டார்.இந்தியாவில் விரைவான தொழில்மயக் கொள்கையும் நிலச் சீர்த்திருத்தத்தைப் பற்றி உண்மையாக எந்த நடவடிக்கையும் இல்லாதிருப்பதையும் அதற்கு நேர்மாறாக இந்நாடுகளில் நிலைமை இருப்பதையும் நேரில் கண்டார். அந்தப் பயணத்துக்குப் பிறகு இந்நாடுகளில் நிலவும் தன்னிறைவு உணர்வை அவர் பாராட்டினார்.மக்களின் அடிப்படை வாழ்வில் முன்னேற்றம் காண்பதை நோக்கமாகக் கொண்டு அரசுகள் இயங்குவதை அவர் மிகவும் பாராட்டினார். உண்மையான காந்தியவாதியான அவர் கம்யூனிச நாடுகள் குறித்து வெளியிட்ட கருத்துகள் பலருக்கு வியப்பை அளித்தன.இரண்டாம் உலகப் போருக்குப் பின்னால் உலகப் பெரும் வல்லரசாக அமெரிக்கா உருவானதையும் அவர் கண்டார். ஐரோப்பிய ஏகாதிபத்திய நாடுகளுக்குப் பதிலாக அமெரிக்கா புதிய ஏகாதிபத்தியமாக உருவானதை அவர் கண்டித்தார்.கொரியாவில் அமெரிக்கா நாபாம் குண்டுகளையும், கிருமி குண்டுகளையும் வீசியதை அவர் கடுமையாகக் கண்டனம் செய்தார். அமெரிக்காவுக்கு எதிராகப் பொருளாதாரப் புறக்கணிப்பு நடவடிக்கையை மேற்கொள்ள இந்தியா உள்பட உலக நாடுகள் முன்வரவேண்டுமென்று அவர் வேண்டுகோள் விடுத்தார்.வினோபா பாவே தலைமையில் நடைபெற்ற பூதான இயக்கமும் அவரது விமர்சனத்துக்கு உள்ளாயிற்று. நிலத்தைத் தானமாகப் பெற்று நிலமில்லாதவர்களுக்கு அதை வழங்குவதோடு பூதான இயக்கத்தின் கடமை முடிந்துவிடாது. நிலத்தைப் பெற்ற ஏழை எளிய மக்கள் அதில் வேளாண்மை செய்யவும் தங்கள் வாழ்க்கைத் தரத்தை உயர்த்திக் கொள்ளவும் வழிவகை செய்ய வேண்டும்.அதற்கு அந்த மக்களைப் பயிற்றுவிப்பதற்குத் தொண்டர்களும் வேண்டும். இதையெல்லாம் செய்யாமல் பூதான இயக்கம் இயங்குவது வெற்றி பெறாது என்று அவர் கூறியபோது, பலரும் அவர்மீது கோபப்பட்டனர். ஆனால் அவர் கூறியதுதான் சரியானதென்பதை காலம் நிரூபித்தது.சர்வோதய இயக்கம் குறித்தும் அவருக்கு இதுபோன்ற கருத்துகள் இருந்தன. அதை அவர் வெளிப்படுத்தத் தயங்கவில்லை. இதை அந்த இயக்கத்திலிருந்த பலர் விரும்பவில்லை. ஆனாலும் அவர் மனதில் பட்டதை மறைக்காமல் கூறினார்.தேசத்தந்தை காந்தியடிகளுக்குப் பொருளாதாரத் திட்டம், நிர்மாணத் திட்டம், கைத்தொழில் திட்டம் போன்ற பல துறைகளில் அரிய ஆலோசனைகளை வழங்கி அவரால் பாராட்டப்படும் நிலையில் இருந்த நிகரற்ற தமிழர் ஜே.சி. குமரப்பா.காந்தியடிகளின் நெருங்கிய சகாக்களாக இருந்த அத்தனை தலைவர்களுடனும் தோழமை உணர்வோடு பழகியவர் அவர். ஆனாலும் ஒருபோதும் அவற்றைப் பயன்படுத்திப் பதவி நாடாதவர். காந்தியடிகள் எப்படி அதிகாரப் பதவிகள் எதையும் நாடாமல் வாழ்ந்தாரோ, அதைப்போல அவருடைய உண்மையான சீடரான குமரப்பாவும் "என் கடன் பணி செய்து கிடப்பதே' என்ற நாவுக்கரசரின் வாக்குக்கு ஏற்ப வாழ்ந்தார்.காந்தியடிகளின் மறைவுக்குப் பிறகும் அவர் வழியிலிருந்து கொஞ்சமும் விலகாமல் உறுதியாக நடந்தவர் குமரப்பா. இதன் காரணமாகவே தன்னுடைய பழைய சகாக்களின் புறக்கணிப்புக்கு அவர் ஆளானார். அதைக் குறித்தெல்லாம் அவர் ஒருபோதும் கவலைப்படவில்லை. உண்மையான காந்தியவாதியாக இறுதிவரை வாழ்ந்தார்.மதுரை மாவட்டம் கல்லுப்பட்டியிலிருந்த காந்தி நிகேதன் ஆசிரமத்தின் தலைமைப் பொறுப்பை ஏற்று அருந்தொண்டு புரிந்தார். இறுதியாக சென்னை அரசு மருத்துவமனையில் அவர் சேர்க்கப்பட்டபோது வினோபா பாவே, குடியரசுத் தலைவர் ராஜேந்திர பிரசாத், ராஜாஜி, காமராஜ் போன்ற பல தலைவர்கள் அவரைச் சந்தித்தனர்.அவருடைய சகா அரியநாயகம், சகோதரர் பரதன் குமரப்பா ஆகியோர் அவர் அருகேயே இருந்தனர். அவருடைய குருநாதர் காந்தியடிகள் மறைந்த அதே நாளான 30-1-1960 அன்று அவர் மறைந்தார்.காந்தியப் பொருளாதாரத்தை வடிவமைத்த அந்தத் தமிழனின் 50-வது நினைவுநாள்.யார் யாருக்கெல்லாமோ பிறந்த நாளும், நினைவு நாளும் நடத்தப்படுகிறது. குமரப்பாவைப் பற்றி நினைக்கக் காங்கிரஸ்காரர்களுக்குக்கூட நேரமுமில்லை, மனமுமில்லை.தமிழன் நன்றி கெட்டவனாக இருக்கலாம். ஆனால், உலகம் அப்படியல்ல. குமரப்பாவின் நிலைத்த பொருளாதாரக் கொள்கையும், அவர் முன்வைத்த மரபுசாரா எரிசக்திக் கொள்கையும் உலகளாவிய சிந்தனையைத் தூண்டியிருக்கிறது.

திங்கள், 11 ஜனவரி, 2010

தமி​ழ​கம் வந்த தமி​ழர்​கள் விரட்​டப்​பட்​டது ஏன்?



உ ​ல​கம் முழு​வ​தி​லும் பல்​வேறு நாடு​க​ளில் தமி​ழர்​கள் பரவி வாழ்​கி​றார்​கள்.​ இன்று நேற்​றல்ல,​​ பல நூறாண்​டு​க​ளா​கத் தமி​ழர்​கள் பல நாடு​க​ளில் குடி​யேறி அந்​நா​டு​க​ளையே தங்​கள் சொந்த நாடு​க​ளாக ஏற்​றுக் கொண்டு வாழ்​கி​றார்​கள்.​ அதி​லும் ஏழா​யி​ரம் ஆண்​டு​க​ளுக்கு முன்பு இலங்​கை​யும் இந்​தி​யா​வும் கட​லால் பிரிக்​கப்​ப​டு​வ​தற்கு முற்​பட்ட காலத்​திற்கு முன்பே இரு​பு​றத்​தி​லும் வாழ்ந்த தமி​ழர்​கள் மொழி​யா​லும் பண்​பாட்​டா​லும் மிக நெருங்​கி​ய​வர்​க​ளாக இருந்​தார்​கள்.​சங்க காலப் புல​வ​ரான ஈழத்து பூதந்​தே​வ​னார் காலத்தி​லி​ருந்து சென்ற நூற்​றாண்​டில் ஆறு​முக நாவ​லர் காலம் வரை​யி​லும்,​​ அதற்​குப் பிறகு இன்​று​வ​ரை​யி​லும் மட்​டு​மல்ல,​​ இனி எதிர்​கா​லத்​தி​லும் ஈழத் தமி​ழர்​க​ளுக்​கும் தமி​ழ​கத் தமி​ழர்​க​ளுக்​கும் உள்ள உறவு என்​பது தொப்​புள் கொடி உற​வா​கும்.​ஈ​ழத் தமி​ழர்​கள் மட்​டு​மல்ல பிற​நா​டு​க​ளில் வாழ்​கிற தமி​ழர்​க​ளும் தங்​க​ளது பண்​பாட்​டுத் தாய​க​மா​கக் கரு​து​வது தமிழ்​நாட்​டையே ஆகும்.​ தமிழ்​நாட்​டுக்​கும் பிற நாடு​க​ளில் வாழ்​கிற தமி​ழர்​க​ளுக்​கும் இடையே உள்ள உறவு என்​பது தாய்-​சேய் உறவு ஆகும்.​மொழி,​​ பண்​பாடு,​​ கலை ஆகி​ய​வற்​றின் அடிப்​ப​டை​யில் உல​கம் எங்​கும் நடை​பெ​றும் தமிழ் ஆய்​வு​களை ஒருங்​கி​ணைக்​க​வும் உல​கத் தமி​ழர்​களை ஒன்​று​ப​டுத்​த​வும் உல​கத் தமிழ் ஆராய்ச்சி மன்​றம் ஈழத் தமி​ழ​றி​ஞர் தனி​நா​ய​கம் அடி​கள்,​​ தமி​ழ​கத்து அறி​ஞர்​கள் வ.அய்.​ சுப்​பி​ர​ம​ணி​யம்,​​ சாலை இளந்​தி​ரை​யன் போன்ற பல​ரின் கூட்டு முயற்​சி​யால் உரு​வாக்​கப்​பட்​டது.​மு ​தல் உல​கத் தமி​ழ​ராய்ச்சி மாநாடு மலே​சி​யா​வில் 1966-ம் ஆண்டு ஏப்​ரல் 16-ம் தேதி முதல் 23-ம் தேதி வரை மிகச்​சி​றப்​பாக நடை​பெற்​றது.​ உல​கெங்​கும் உள்ள பல்​வேறு நாடு​க​ளைச் சேர்ந்த தமி​ழ​றி​ஞர்​கள் இம்​மா​நாட்​டில் பங்கு பெற்​ற​னர்.​ அப்​போது தமி​ழ​கத்​தின் முத​ல​மைச்​ச​ராக இருந்த எம்.​ பக்​த​வத்​ச​லம் தலை​மை​யில் இரா.​ நெடுஞ்​செ​ழி​யன்,​​ பி.டி.ராஜன் உள்​பட பல​கட்​சித் தலை​வர்​கள் தமி​ழ​கக் குழு​வா​கச் சென்று கலந்து கொண்​ட​னர்.​1968-ம் ஆண்டு ஜன​வரி 3 முதல் 10-ம் தேதி வரை சென்​னை​யில் 2-வது உல​கத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு நடை​பெற்​ற​போ​தும் அனைத்து நாடு​க​ளைச் சேர்ந்த தமி​ழ​றி​ஞர்​க​ளும் வேறு​பாடு இன்றி கலந்து கொண்​ட​னர்.​ ராஜாஜி,​​ பெரி​யார்,​​ காம​ரா​சர்,​​ ஜீவா,​​ ம.பொ.சி.​ போன்ற பல​வேறு கட்​சித் தலை​வர்​க​ளை​யும் முத​ல​மைச்​ச​ராக இருந்த அண்ணா,​நேரில் சென்று அழைத்து இம்​மா​நாட்​டில் சிறப்​பு​ரை​யாற்ற வைத்​தார்.​ அவர்​க​ளும் அவ​ரு​டன் ஒத்​து​ழைத்​த​னர்.​ அனை​வ​ரும் தமி​ழர்​கள் என்ற உணர்​வு​டன் அர​சி​யல் வேறு​பா​டு​களை மறந்து ஒன்​றி​ணைந்து உல​கத் தமி​ழர்​க​ளின் ஒற்​று​மைக்கு வலிமை சேர்த்​த​னர்.​1970-ம் ஆண்டு 3-வது மாநாடு பாரி​சி​லும் 1974-ம் ஆண்டு நான்​கா​வது மாநாடு யாழ்ப்​பா​ணத்​தி​லும் ஒற்​றுமை குலை​யாத வகை​யில் நடை​பெற்​றது.​ யாழ்ப்​பாண மாநாட்​டில் சிங்​கள ராணு​வம் புகுந்து சுட்டு 9 தமி​ழர்​கள் உயிர் துறந்த துயர நிகழ்ச்​சி​யும் நடை​பெற்​றது.​1981-ம் ஆண்டு ஜன​வரி 4 முதல் ​ 10-ம் தேதி வரை மது​ரை​யில் நடை​பெற்ற ஐந்​தா​வது உல​கத் தமிழ் மாநாட்​டின் போது முத​ல​மைச்​ச​ராக இருந்த எம்.ஜி.ஆர்.​ விடுத்த அழைப்பை அனைத்​துக்​கட்​சித் தலை​வர்​க​ளும் ஏற்று மாநாட்​டில் பங்கு கொண்​ட​னர்.​ ஆனால் தி.மு.க.​ தலை​வ​ரான கரு​ணா​நிதி மாநாட்​டில் கலந்து கொள்​வ​தைத் தவிர்த்​தார்.​ அன்றி​லி​ருந்து இந்த ஒற்​று​மை​யைச் சீர்​கு​லைக்​கும் நட​வ​டிக்​கை​கள் தொடங்​கின.​1995-ம் ஆண்டு ஜன​வரி 1 முதல் 5-ம் தேதி வரை தஞ்​சா​வூ​ரில் நடை​பெற்ற 8-வது மாநாட்​டின் போது முத​ல​மைச்​சர் ஜெயல​லி​தா​வின் அழைப்பை ஏற்று பல கட்​சித் தலை​வர்​க​ளும் கலந்து கொண்​ட​னர்.​ அதி​லும் கரு​ணா​நிதி கலந்து கொள்​ள​வில்லை.​ இம்​மா​நாட்​டின் போது​தான் தமி​ழர்​களை அவ​ம​திக்​கும் நிகழ்ச்சி நடை​பெற்​றது.​சு​வீ​டன் நாட்​டுத் தமி​ழ​றி​ஞர் பீட்​டர் சால்க்,​​ ஈழத் தமி​ழ​றி​ஞர் சிவத்​தம்பி ஆகி​யோர் மாநாட்​டில் உரை​யாற்ற அழைக்​கப்​பட்டு,​​ இங்கு வந்த பிறகு அவர்​க​ளைக் கட்​டா​யப்​ப​டுத்தி வெளி​யேற்​றிய வெட்​க​க​ர​மான நிகழ்ச்சி நடை​பெற்​றது.​ உல​கத் தமி​ழர்​கள் அனை​வ​ரும் இதை வன்​மை​யா​கக் கண்​டித்​த​னர்.​1998-ம் ஆண்டு தஞ்​சை​யில் நடை​பெற்ற ​ 6-வது உலக சைவ மாநாட்​டில் கலந்து கொள்ள வெளி​நா​டு​க​ளைச் சேர்ந்த தமி​ழர்​கள் பலர் வந்​தி​ருந்​த​னர்.​ ஆனால் தென்​னாப்​பி​ரிக்​கா​வில் இருந்து வந்​தி​ருந்த வீர​பத்​தி​ரன்,​​ இலங்​கை​யைச் சேர்ந்த மனோன்​மணி சண்​மு​க​தாஸ்,​​ பிரிட்​ட​னைச் சேர்ந்த டாக்​டர் சிவ​தா​சன் தம்​ப​தி​யி​னர் ஆகிய நால்​வர் வெளி​யேற்​றப்​பட்​ட​னர்.​ இதற்கு எதி​ராக மாநாட்​டுப் பிர​தி​நி​தி​கள் அற​வ​ழி​யில் போரா​டி​னர்.​ ஆனா​லும் எது​வும் நடக்​க​வில்லை.​ அப்​போது முத​ல​மைச்​ச​ராக இருந்த கரு​ணா​நிதி இதைத் தடுக்க எது​வும் செய்​ய​வில்லை.​அ​தற்​குப் பிறகு 2002-ம் ஆண்டு ஜூலை 20,​ 21 ஆகிய நாட்​க​ளில் சென்​னை​யில் உல​கத் தமி​ழர் பேர​மைப்​பின் தொடக்க விழா மாநாடு நடை​பெற்​ற​போது முத​ல​மைச்​ச​ராக இருந்த ஜெயல​லிதா அதற்​குத் தடை​வி​தித்​தார்.​ அர​சி​ய​லுக்கு அப்​பாற்​பட்ட மாநாடு என்று தெரிந்​தும் இந்​தத் தடை விதிக்​கப்​பட்​டது.​ உயர் நீதி​மன்​றம் தலை​யிட்டு அந்​தத் தடையை நீக்கி மாநாட்​டுக்கு அனு​மதி வழங்​கி​யது.​÷2004-ம் ஆண்டு பெங்​க​ளூ​ரில் உல​கத் தமி​ழர் பேர​மைப்​பின் மூன்​றாம் ஆண்டு நிறைவு மாநாட்​டின் போது மாநாட்​டைத் தொடங்​கி​வைப்​ப​தற்​காக அழைக்​கப்​பட்​டி​ருந்த இலங்கை நாடா​ளு​மன்ற உறுப்​பி​னர் ஈழ​வேந்​தன்,​​ சென்னை விமான நிலை​யத்​தி​லேயே திருப்பி அனுப்​பப்​பட்​டார்.​ அதற்​கு​ரிய கார​ணம் எது​வும் அவ​ருக்கு அதி​கா​ரி​க​ளால் தெரி​விக்​கப்​ப​ட​வில்லை.​ தெற்​கா​சிய நாடு​க​ளின் கூட்​ட​மைப்​பான சார்க் நாடு​க​ளைச் சேர்ந்த நாடா​ளு​மன்ற உறுப்​பி​னர்​கள் யாராக இருந்​தா​லும் இந்த நாடு​க​ளுக்​குள் சுற்​றுப்​ப​ய​ணம் செய்து வரு​வ​தற்கு விசா எது​வும் தேவை​யில்லை.​ இந்த விதி​யும் மீறப்​பட்​டது.​ இலங்கை நாடா​ளு​மன்ற உறுப்​பி​ன​ரான ஈழ​வேந்​த​னுக்கு உரிய விசா இருந்​தும் அவர் திருப்பி அனுப்​பப்​பட்ட அவ​லம் நேர்ந்​தது.​ அப்​போ​தும் முத​ல​மைச்​ச​ராக ஜெயல​லிதா இருந்​தார் என்​பது குறிப்​பி​டத்​தக்​கது.​2006-ம் ஆண்டு ஆகஸ்டு 12,​ 13-ம் தேதி​க​ளில் சேலம் நக​ரில் உல​கத் தமி​ழர் பேர​மைப்​பின் நான்​காம் ஆண்டு நிறைவு மாநாடு நடை​பெற்​ற​போது முத​ல​மைச்​ச​ராக இருந்த கரு​ணா​நிதி,​​ அதற்​குத் தடை​வி​தித்​தார்.​ இந்​தத் தடை​யும் உயர் நீதி​மன்​றத்​தால் நீக்​கப்​பட்டு மாநாடு வெற்​றி​க​ர​மாக நடை​பெற்​றது.​2009-ம் ஆண்டு டிசம்​பர் 26,​ 27-ம் தேதி​க​ளில் தஞ்சை நக​ரில் நடை​பெற்ற உல​கத் தமி​ழர் பேர​மைப்​பின் ​ ஏழாம் ஆண்டு நிறைவு மாநாட்​டில் பங்​கேற்​ப​தற்​காக வந்த இலங்கை நாடா​ளு​மன்ற உறுப்​பி​னர் சிவாஜி​லிங்​கம் சென்னை விமான நிலை​யத்தி​லி​ருந்து திருப்பி அனுப்​பப்​பட்​டார்.​ இது​வும் முத​ல​மைச்​சர் கரு​ணா​நி​தி​யின் ஆட்​சி​யின்​போ​து​தான் நடை​பெற்​றது.​உ​ல​கத் தமி​ழர்​கள் ஒன்​று​கூடி தமது பிரச்​னை​கள் குறித்து கருத்​துப் பரி​மாற்​றம் செய்து கொள்​ளும் சுதந்​தி​ரம் தமிழ்​நாட்​டில் இல்லை என்​பதை இந்த வெளி​யேற்ற நிகழ்ச்​சி​கள் நமக்கு எடுத்​துக்​காட்​டு​கின்​றன.​ தமிழ்​நாட்​டைத் தங்​கள் தாய​க​மா​கக் கரு​து​கின்ற வெளி​நாட்​டுத் தமி​ழர்​கள்,​​ தமி​ழ​கம் வரும்​போ​தெல்​லாம் இப்​படி விரட்​டி​ய​டிக்​கப்​ப​டு​வது ஒட்​டு​மொத்த தமி​ழி​னத்​திற்கே அவ​மா​ன​மா​கும்.​ஜெ​யல​லிதா அல்​லது கரு​ணா​நி​தி​யின் ஆட்​சிக் காலங்​க​ளில் தமிழ்​நாட்​டில் நடை​பெற்ற உல​கத் தமி​ழர் மாநா​டு​க​ளில் பங்​கேற்க வந்​த​வர்​கள் அனு​ம​திக்​கப்​பட்​டி​ருந்​தால் பிர​ள​யம் எது​வும் நேர்ந்​தி​ருக்​காது.​ தமி​ழ​றி​ஞர்​களை அவ​ம​தித்த குற்​ற​மும் முத​ல​மைச்​சர்​கள் மீது படிந்​தி​ருக்​காது.​ வெளி​யேற்​றப்​பட்ட தமி​ழ​றி​ஞர்​கள் ஆனா​லும்,​​ நாடா​ளு​மன்ற உறுப்​பி​னர்​கள் ஆனா​லும் அவர்​கள் அனை​வ​ரும் தமி​ழ​கத்​திற்​குப் புதி​ய​வர்​கள் அல்​லர்.​ எத்​த​னையோ முறை வந்து சென்​ற​வர்​கள்.​ ஜெயல​லிதா வேண்​டு​மா​னால் அவர்​க​ளைப் பற்றி அறி​யா​மல் இருக்​க​லாம்.​ ஆனால் கரு​ணா​நிதி அவர்​கள் குறித்து நன்கு அறிந்​த​வர்.​ என்​றா​லும் தில்​லி​யின் தமி​ழர் அவ​ம​திப்பு போக்​கி​னைத் தடுத்து நிறுத்தி தமி​ழர்​க​ளின் உரி​மையை நிலை​நாட்ட இரு​வ​ருமே தவ​றி​விட்​ட​னர்.​இந்​தி​யா​வில் பிற மொழி பேசு​கி​ற​வர்​கள் நடத்​தும் உலக மாநா​டு​க​ளுக்கு வரு​கி​ற​வர்​கள் தாரா​ள​மாக வந்து சுதந்​தி​ர​மா​கப் பேசி​விட்​டுப் போகி​றார்​கள்.​ உல​கத் தெலுங்​கர் மாநாடு சில ஆண்​டு​க​ளுக்கு முன்​னால் ஹைத​ரா​பாத் நக​ரில் நடை​பெற்​ற​போது பிற​நா​டு​க​ளில் வாழும் தெலுங்​கர்​கள் அந்த மாநாட்​டில் கலந்​து​கொள்ள வந்​த​போது எவ்​வி​தத் தடை​யும் விதிக்​கப்​ப​ட​வில்லை.​ அவ்​வாறே பெங்​க​ளூ​ரில் நடந்த உலக கன்​னட மாநாட்​டி​லும் பிற நாடு​க​ளைச் சேர்ந்த கன்​ன​டர்​கள் தாரா​ள​மா​கக் கலந்​து​கொள்ள அனு​ம​திக்​கப்​பட்​ட​னர்.​உ​ல​ கப் பஞ்​சாபி மாநாடு சண்​டீ​க​ரில் நடை​பெற்​ற​போது கன​டா​வில் வாழ்ந்து கொண்​டி​ருந்த காலிஸ்​தான் இயக்க ஆத​ர​வா​ளர்​கள் இந்​தியா வர இந்​தி​யத் தூத​ர​கம் விசா தர மறுத்​து​விட்​ட​போது,​​ பஞ்​சாப் முத​ல​மைச்​சர் பிர​த​ம​ரி​டம் போராடி விசா வழங்​கச் செய்​தார்.​ இந்​திய அர​சால் தடை​செய்​யப்​பட்ட காலிஸ்​தான் அமைப்​பைச் சேர்ந்​த​வர்​கள் இந்​தி​யா​வுக்​குள் தாரா​ள​மாக வந்து தங்​கள் மொழி மாநாட்​டில் சுதந்​தி​ர​மா​கப் பேச​மு​டி​கி​றது.​ இதற்கு பஞ்​சாப் முத​ல​மைச்​ச​ரின் மொழி உணர்​வும் மத்​திய அர​சு​டன் போரா​டும் மன உறு​தி​யுமே கார​ண​மா​கும்.​த​மிழ்​நாட்​டில் நடை​பெற்ற உல​கத் தமிழ் மாநாட்​டுக்கு வந்த பிற​நாட்​டுத் தமி​ழர்​கள் வெளி​யேற்​றப்​பட்​ட​தற்கு தான் பொறுப்​பல்ல மத்​திய அரசே பொறுப்பு என்று சொல்லி முத​ல​மைச்​சர் தப்​பித்​துக்​கொள்ள முடி​யாது.​ மத்​திய ஆட்​சி​யி​லும் இவ​ரது கட்சி ஓர் அங்​கம்.​ பிர​த​ம​ரி​டம் இவ​ருக்கு மதிப்பு நிறைந்த செல்​வாக்கு இருப்​ப​தா​கக் கூறப்​ப​டு​கி​றது.​ ஆனா​லும் தமி​ழர்​க​ளுக்கு எதி​ரான மத்​திய அர​சின் நட​வ​டிக்​கை​களை இவர் தடுத்து நிறுத்த முன்​வ​ர​வில்லை என்று சொன்​னால் அது இவ​ரது சம்​ம​தத்​தோடு நடை​பெ​று​கி​றது என்​ப​து​தான் பொருள்.​மு​த​ல​மைச்​சர் கரு​ணா​நிதி முன்​னின்று நடத்த இருக்​கும் உல​கத்​த​மிழ் செம்​மொழி மாநாட்​டில் பங்​கு​பெற உலக நாடு​களி​லி​ருந்து இத்​தனை இத்​தனை பிர​தி​நி​தி​கள் கலந்​து​கொள்ள இருக்​கி​றார்​கள் என்ற பட்​டி​யலை முத​ல​மைச்​சர் மிக்க பெரு​மி​தத்​து​டன் வெளி​யிட்​டி​ருக்​கி​றார்.​ மற்​ற​வர்​கள் நடத்​தும் உல​கத்​த​மிழ் மாநா​டு​க​ளுக்கு வந்த பலரை வெளி​யேற்​றி​ய​வர் இப்​போது இவர் நடத்​தும் மாநாட்​டுக்​கா​வது உல​கத் தமி​ழர்​களை அனு​ம​திக்க முன்​வந்​தி​ருப்​பது மகிழ்ச்​சிக்​கு​ரி​யது.​ இவர்​க​ளில் யாரை​யே​னும் வெளி​யேற்​றா​மல் இருப்​பார் என நம்​பு​வோ​மாக.
கருத்துக்கள்

உங்கள் கருத்தை முதலாவதாகப் பதிவு செய்யுங்கள்

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *