வியாழன், 2 ஜூலை, 2015

தமிழ் இலக்கியத் தோற்றக் காலத்தை அறுதியிட்டுரைக்க இயலாது – சி.இலக்குவனார்


01 9

தமிழ் இலக்கியத் தோற்றக் காலத்தை அறுதியிட்டுரைக்க இயலாது

  ‘இலக்கியம்’ என்பது தூய தமிழ்ச் சொல். இதனை “இலக்கு+இயம்’ எனப் பிரிக்கலாம். இது ‘குறிக்கோளை இயம்புவது’ என்னும் பொருளைத் தருவது. வாழ்வின் குறிக்கோளை வகையுற எடுத்து இயம்புவதே இலக்கியமாகும். ஆகவே, இலக்கியத்தின் துணைகொண்டு அவ்விலக்கியத்திற்குரிய மக்களின் வாழ்வியலை அறிதல் கூடும். தமிழிலக்கியத்தின் துணை கொண்டு தமிழ் மக்களின் வாழ்வியலை அறியலாம்.
  தமிழ் மக்களின் வரலாற்றை அறிவதற்குத் துணைபுரிவனவற்றுள் முதன்மை இடம் பெறுவதும் தமிழ் இலக்கியமேயாகும். தமிழ் இலக்கியம் தொன்மை நலம் சான்றது. அதன் தோற்றுக் காலம் யாதென அறுதியிட்டுரைத்தல் எவராலும் இயலாது.
– செந்தமிழ்ச் செம்மல் பேராசிரியர் சி.இலக்குவனார்: இலக்கியம் கூறும் தமிழர் வாழ்வியல்: பக்கம் 13



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக