bow01

இதுதான் வீரமா? இந்தக் கதையை அறிவுடையதென்று ஏற்கமுடியுமா?

 வில்வீரன் ஒருவன் வில்லிலே நாணேற்றி அம்பைப் பூட்டி விசையாக விடுகிறான், ஒரு புலியைக் குறி வைத்து. 1. அம்பு வில்லினின்றும் விடுபட்டு மிக வேகமாகப் புலியின் உடலை ஊடுருவிச் சென்று, அருகிலிருந்த வாழை மரத்திலே பாய்ந்து நின்று விட்டது. இந்நிகழ்ச்சி உண்மையானது. உருவகப்படுத்தியதன்று. அம்பு புலியின் உடலைத் துளைத்துச் சென்றது என்பது அம்பின் கூர்மையையும் வேகத்தையும் அதை எறிந்தோனுடைய சக்தியையும், குறி தவறாத திறமையையும் குறிக்கிறது.புலியைத் துளைத்தபின் அம்பின் வேகம் குறைகிறது. தடையேற்பட்டதால், 1. எனவே, புலியைத் துளைத்த அம்பு, வாழையைத் துறைத்துச் செல்ல முடியாமல் அதிலேயே பதிந்து நின்று விட்டது. வில் வீரனின் செயல், இவ்வண்ணம் கூறப்படுகிறது தமிழ்க்கலையிலே.
  வேற்றுமொழி நஞ்சு கலந்த காவியத்திலே அம்பின் செய்தி வேறு வகையாகக் கூறப்படுகிறது. இராமனது அம்பறாத்துணியிலிருந்து அம்பு புறப்படடது. புறப்பட்டு இராவணனது உடலெங்கும் சீதை என்னும் சிந்தனை எங்கே என்று தேடித் திரிந்து அங்கெல்லாம் பாய்ந்து பின் கடலிலே சென்று குளித்துப் புனிதமடைந்து மீண்டும் இராமனது அம்பறாத்துணியிலே வந்து அமர்ந்தது என்று இயம்பப்படுகிறது. இத்தகைய செயல்கள் சுவைக்கு உதவுமா? ஆராய்ச்சிக்குதான நிற்குமா? கற்பனை என்று காணும்போதே கருத்திற்படவில்லையா? இதுதான் வீரமா? இந்தக் கதையை அறிவுடையதென்று ஏற்கமுடியுமா?
பேரறிஞர் அண்ணா: “”அண்ணாவின் சிந்தனைகள்”: தொகுப்பாசிரியர்- புலவர் இளஞ்செழியன்: பக்கம். 190-191
pulavar Ilanchezhiyan01