புதன், 5 டிசம்பர், 2012

10 ஆயிரம் கன அடி நீர் திறந்துவிடக் கருநாடகாவுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

10 ஆயிரம் கன அடி நீர் திறந்துவிடக் கருநாடகாவுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

கர்நாடக அரசு காவிரியில் விநாடிக்கு 10 ஆயிரம் கன அடி நீர் திறந்து விட உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
கர்நாடக அரசு காவிரியில் விநாடிக்கு 10 ஆயிரம் கன அடி நீர் திறந்துவிட உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இன்றிலிருந்து ஞாயிறு வரை பத்தாயிரம் கன அடி நீர் திறந்து விடப்பட வேண்டும்.
நாளை அல்லது நாளை மறுநாள் தமிழக கர்நாடக தரப்பு இணைந்த காவிரி கண்காணிப்புக் குழுக் கூட்டம் கூட்டப்பட வேண்டும்.
தமிழகத்திலும் கர்நாடகத்திலும் பயிரிடப்பட்டுள்ள பயிர்களுக்கு எவ்வளவு நீர் தேவைப்படும் என்று கணக்கிட்டு இறுதி முடிவு எடுக்க வேண்டும்.
இந்த முடிவை திங்கள்கிழமை உச்ச நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.
மேலும், காவிரி நடுவர் மன்றத்தின் இறுதி உத்தரவினை மத்திய அரசு, அரசிதழில் வெளியிட எத்தனை நாட்கள் ஆகும் என்பது குறித்து உச்ச நீதிமன்றத்தில் பதிலளிக்க வேண்டும்
- இவ்வாறு உச்ச நீதி மன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக