திங்கள், 3 டிசம்பர், 2012

காதல்-கலப்புத் திருமணத்தை எள்ளி நகையாடி குற்றம்சாட்டுவதை ஏற்க முடியாது: வைகோ

காதல்-கலப்பு  த் திருமணத்தை எள்ளி நகையாடி குற்றம்சாட்டுவதை ஏற்க முடியாது: வைகோ அறிக்கை
காதல்-கலப்பு திருமணத்தை எள்ளி நகையாடி குற்றம்சாட்டுவதை ஏற்க முடியாது: வைகோ அறிக்கை
சென்னை, டிச. 3-
தமிழ்நாட்டில் பொறுப்பான ஒரு அரசியல் கட்சியின் தலைவரான ராமதாஸ், காதலைச் சாடுவதோடு, கலப்புத் திருமணங்களையும் எள்ளி நகையாடி, குற்றம்சாட்டுவது, எவ்விதத்திலும் ஏற்கத்தக்கது அல்ல என்று ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தர்மபுரி மாவட்டத்தில் இருவேறு சாதிகளைச் சேர்ந்த இரண்டு இளம் உள்ளங்கள், காதல் வயப்பட்டு திருமணம் செய்து கொண்டதால், நாய்க்கன்கொட்டாயைச் சேர்ந்த பெண்ணின் தந்தை நாகராஜ், மனம் உடைந்து தற்கொலை செய்து கொண்டது துயரச் சம்பவம் ஆகும். ஆனால், இதற்கு அப்பகுதி வாழ் தலித் மக்கள் பொறுப்பாளிகள் அல்ல.
அதற்காக, காதல் திருமணங்களை எள்ளி நகையாடுவதும், கலப்புத் திருமணங்களை நிந்திப்பதும், மிகவும் தவறான போக்கு ஆகும். கல்வியிலும், சமூக நிலையிலும், தங்களுடைய முயற்சியாலும், உழைப்பாலும் முன்னேறி வரும் தலித் சமூகத்து இளம் தலைமுறையினறை ஏளனம் செய்வதும், பரிகசிப்பதும் பண்புடைமை ஆகாது.
அதிலும், தலித் மக்களுக்காக மட்டும் அன்றி, தமிழ்ச் சமுதாயத்துக்காகப் பாடுபடுகின்ற ஒரு இயக்கத்தைக் கொச்சைப்படுத்தி, திரும்பத் திரும்ப அவர்களை இழிவுபடுத்திப் பேசுவது, மிகவும் கவலை தருகிறது. எனவே, சமய ஒற்றுமைக்கும், சமூக நீதிக்கும் இந்தியாவுக்கே வழிகாட்டி வந்து உள்ள தமிழ்நாட்டின் பெருமைக்குக் குந்தகம் நேராமல், சகோதரத்துவத்துக்குப் பங்கம் ஏற்பட்டு விடாமல், பொது அமைதியைப் பாதுகாக்க வேண்டியது, அனைவரின் கடமை ஆகும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக