வியாழன், 4 பிப்ரவரி, 2010

மோசடித்தேர்தலில் மகிந்தவிற்கு நோபல் பரிசு

பதிந்தவர்_கனி on February 3, 2010
பிரிவு: செய்திகள்

சிறிலங்கா வரலாற்றிலேயே எப்போதும் இடம்பெற்றிராத வகையில் மிக மோசமான தேர்தலை நடத்திய அரச அதிபர் மகிந்தவிற்கு மோசடித் தேர்தலுக்கான நோபல் பரிசு கொடுக்க வேண்டும் என சனநாயக மக்கள் முன்னணியின் தலைவரும் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்தார்.

அரச அதிபர் தேர்தல் முடிவுகளைப் புறக்கணிப்பதாகக் கூறி எதிர்க்கட்சிகள் நடத்திய ஆர்ப்பாட்டப் பேரணியில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

வாக்குகள் எண்ணப்படும் நிலையங்களுக்கு எதிர்க்கட்சிப் பிரதிநிதிகள் எவரும் அனுமதிக்கப்படவில்லை. தேர்தல் வாக்களிப்பு முடிவடைந்த பின்னர் ஒவ்வொரு மாவட்டங்களிலும் குறிப்பிடப்பட்ட வாக்களிப்பு வீதங்களுக்கு மாறாகவே மறுநாள் கூறப்பட்டன.

முதல்நாள் 70 வீதமாக இருந்த வாக்களிப்புகள் மறுநாள் 80 வீதமாக மாறியது எவ்வாறு?

தேர்தல் தினத்தன்று காலை 7 மணிமுதல் மாலை 4 மணிவரை சிறுசிறு செயல்களில் ஈடுபட்டிருந்த மகிந்த அன்று இரவு பாரிய வேலைகளில் ஈடுபட்டு நாட்டு மக்களின் தீர்மானத்தை மாற்றியமைத்துள்ளார்.

இது நமக்குக் கிடைத்த வெற்றி. அது பறிக்கப்பட்டமைக்கு நாங்கள் கடுமையான எதிர்ப்பினை தெரிவிக்கிறோம். இதற்கு உரிய பாடத்தை எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் நாம் கற்பிப்போம்.

மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் அநுரகுமார திசாநாயக்க உரையாற்றுகையில்,

நாம் வெவ்வேறு கட்சிகளைப் பிரதிநிதித்துவப்படுத்துபவர்கள். வெவ்வேறு கொள்கைகளையுடையவர்கள். நாட்டில் அநியாயத்தை ஒழித்து சனநாயகத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கில் ஒன்று சேர்ந்திருக்கின்றோம் என்றார்.

சரத் பொன்சேகா மற்றும் ஐக்கிய தேசிய முன்னணியில் அங்கம் வகிக்கும் அனைத்துக் கட்சிகளின் பிரதிநிதிகள் உட்பட அரசியல் பிரமுகர்கள் பலர் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர்.

இந்தப் பேரணியில் அரச அதிபர் தேர்தலில் வேட்பாளர்களாக போட்டியிட்ட புதிய இடதுசாரி முன்னணியின் தலைவர் கலாநிதி விக்ரமபாகு கருணாரத்னவும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

(Visited 4 times, 4 visits today)


முதலில் தோற்கடிக்கப்பட்டதாகக் கூறப்பட்ட ப.சிதம்பரம் வெற்றி பெற்றதாக அடுத்து அறிவிக்கப்பட்டது எப்படி? வைக்கோ தொகுதியில் தேர்தல் முடிந்ததும் அறிவிக்கப்பட்ட வாக்குப்பதிவு எண்ணிக்கை முடிவு அறிவிக்கும் பொழுது கூடுதலாக மாறியது எவ்வாறு? அப்படிததான் இந்திய ஆசானிடம் பாடம் படித்த சிங்களம் தேர்தலை நடத்திக் காட்டி நல்ல மாணவனாகப் பெயர் எடுத்துள்ளது. எனவே. சிங்களவர்கள் இந்தியாவையும் இந்திய அடிவருடிகளையும் நம்பாமல் மனித நேயத்துடன் நடந்து தமிழ் ஈழத்திற்கு ஆதரவாகப் போர்க்குரல் கொடுத்து தமிழ ஈழத்தை அங்கீகரிக்க வேண்டும். வெல்க தமிழ் ஈழம்! தமிழ்த்தேசிய ஞாலத் தலைவர் மேதகு பிரபாகரன் அவர்கள் தலைமையில் ஈழக் குடியரசு விரைவில் அமைவதாக.! வாழ்த்துடன் இலக்குவனார் திருவள்ளுவன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக