புதன், 3 பிப்ரவரி, 2010

அண்ணாவின் புகழ் பாடுகிறோம்: கருணாநிதி புகழாரம்



சென்னை, ​​ பிப்.​ 2:​ ""நினைவு நூலகம்,​​ பல்கலைக்கழகங்கள் என அண்ணாவின் புகழை தொடர்ந்து பாடிக்கொண்டிருக்கிறோம்'' என்று முதல்வர் கருணாநிதி கூறினார்.மறைந்த முன்னாள் முதல்வர் அண்ணாவின் 41}வது நினைவு நாள் புதன்கிழமை அனுசரிக்கப்படுகிறது.​ இதையொட்டி,​​ முதல்வர் கருணாநிதி தலைமையில் அமைதிப் பேரணி நடைபெறுகிறது.சென்னை சேப்பாக்கம் வாலாஜா சாலையில் உள்ள முதல்வர் கருணாநிதியின் சட்டப் பேரவை அலுவலகத்தில் இருந்து பேரணி புறப்படுகிறது.​ மெரீனா கடற்கரை காமராஜர் சாலையில் உள்ள அண்ணா சதுக்கம் வரை இந்தப் பேரணி நடைபெறுகிறது.அங்கு,​​ அண்ணா நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து அவருக்கு அஞ்சலி செலுத்துகிறார் முதல்வர் கருணாநிதி.இதனிடையே,​​ அண்ணா மறைவு குறித்தும் அவரைப் பற்றிய நினைவுகள் தொடர்பாகவும் முதல்வர் கருணாநிதி செவ்வாய்க்கிழமை அறிக்கை வெளியிட்டார்.அதில், ​​ ""அண்ணா அறிவாலயம் தொடங்கி,​​ அண்ணா நூற்றாண்டு நினைவு நூலகம் வரை}பாலங்கள்}சாலைகள்}பல்கலைக்கழகங்கள்}நகர்தோறும் ஊர்தோறும் சிலைகள் என அண்ணாவின் புகழை தொடர்ந்து பாடிக் கொண்டிருக்கிறோம்.அண்ணா மறைந்த ஆண்டு முதல் இன்றுவரை}ஏன் கடந்த ஆண்டு ராமச்சந்திரா மருத்துவமனையில் நோயாளியாக அனுமதிக்கப்பட்டிருந்த நிலையிலும்,​​ ஒவ்வொரு ஆண்டும் அண்ணாவின் நினைவிடத்துக்கு வந்து அஞ்சலி செலுத்திடத் தவறுவதில்லை.அதே முறையில் இந்த ஆண்டும் இந்த நாளில் அந்த இடத்துக்கு வந்து என் அஞ்சலியை அண்ணாவின் பாதங்களில் குவிக்கின்றேன்'' என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.
கருத்துக்கள்

பேரறிஞர் அண்ணாவால் விரட்டியடிக்கப்பட்டு எழுந்திருக்க முடியாமல் இருக்கும் காங்கிரசைச் சுமந்து கொண்டு காத்துக் கொண்டு இருக்கிறோம். விளம்பரங்களில் பேரறிஞர் படத்தைப் போட்டு அவர் நற்பெயருக்குக் களங்கம் கற்பிக்க வேண்டா என்பதற்காகக் குடும்பத்தினர் படங்கள்தான் போட்டுக் கொள்கிறோம். இளைஞர் அணியை ஊக்குவிப்பதாகக் கூறிக் கொண்டு பேரறிஞர்அண்ணாவுடன் தொடர்புடையவர்களை ஓரங் கட்டுகிறோம. இலங்கைத் தமிழர்கள் தாக்கப்படும் பொழுது தேர்தலில் ஈடுபடுகிறார் எனப் பெருந்தலைவர் காமராசரைத் தாக்கிப் பேசிய பேரறிஞர் அண்ணாவின் நினைவைத் தூக்கி எறிந்து விட்டு ஈழத் தமிழர்களைக் கொன்று குவிக்கும் தோன்றாத் துணைவன் காங்கிரசைத் தோளில் சுமக்கிறோம். இவற்றை யெல்லாம் தொண்டர்கள் நினைக்கக் கூடாது என்பதற்காகக் கட்சியினரைக் கொத்தடிமைகளாக வைத்துள்ளோம். இளைய தலைமுறையினரிடம் பேரறிஞர் பற்றியும் தமிழின எழுச்சி பற்றியும் மறந்தும் பேசுவதில்லை. இந் நினைவு நாளிலாவது மனச் சான்று விழித்து மாறினால் நல்லது என உள்மனம் நினைக்கலாம். பேரறிஞர் அண்ணாவின் நினைவுகளுடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
2/3/2010 2:44:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக