அன்புடன் இலக்குவனார திருவள்ளுவன்
6/22/2009 3:58:00 AM
எந்தக் கட்சித் தலைவரையும் பழி சுமத்த வேண்டாம். மக்களாகிய நாமும்தான் குற்றவாளிகள். கறை படாத உத்தமர் நமக்குள் எவரும் இல்லை. இப்போதுள்ள அறநெறி நூல்கள், இலக்கியங்கள் எதிலுமே தூய தமிழ்ப் பண்பாட்டுக்குரிய தெளிவு இல்லை. முதலாம் தமிழ் சங்கமும் தென்குமரி நாடும் கடலில் அழிந்த போதே தூய தமிழ்த் திருமறையாகிய செவ்வியம் என்ற தமிழ்முருகப் பண்பாட்டு வழிமுறையும் மறைந்து விட்டது. அப்பொழுது நம் ஆணவத்தாலும் அலட்சியத்தாலும் கைவிடப் பட்ட ஒழுக்கத்தை, நம் பண்பாட்டு ஆயுதத்தை மீண்டும் ஏந்துவோம். சத்தியமாக நம் உரிமைகளைப் பெறுவோம். கடவுள் நமக்கு உரிமைப் படுத்திய தூய அருள் ஆயுதத்தின் சக்தியை எந்த வல்லரசாலும் தடுக்கவே முடியாது. எப்படி என்றெல்லாம் விளக்கம் கேட்க வேண்டாம். நம் பண்பாட்டுக் கடமையை முதலில் ஒழுங்காக செய்வோம். மற்ற எல்லாக் கடமை உணர்வுகளும் நமக்குள் தானே பிறக்கும். தமிழ்மாண உணர்ச்சி இல்லாதவர்களை விட்டுவிடுங்கள், எக்கேடோ கெட்டு அழியட்டும். உண்மைத் தமிழர்கள் ஒன்று சேருவோம். திருமுருகாற்றுப் படைக்கு வாருங்கள்! உரிமைத்தமிழர் செவ்வேல் கட்டளை! thamilurimay@gmail.com
6/21/2009 8:44:00 PM