வியாழன், 18 அக்டோபர், 2012

தமிழ்நாடு இந்தியாவில் இல்லையா?தமிழக மீனவர்கள் மீது இலங்கை மீண்டும் வெறி த் தாக்குதல்

கச்சத்தீவு அருகே இராமேசுவரம் மீனவர்கள் மீது இலங்கை க் கடற்படை மீண்டும் வெறி த் தாக்குதல்
கச்சத்தீவு அருகே ராமேசுவரம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படை மீண்டும் வெறி தாக்குதல்
ராமேசுவரம், அக். 18-

கடலுக்கு மீன் பிடிக்க செல்லும் ராமேசுவரம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருவதும், மீன்பிடி வலைகளை அறுத்தும் கடலில் வீசி எறிவதும் வாடிக்கையாகி விட்டது. இதனால் மீன் பிடிக்க செல்லும் மீனவர்கள் அச்சம் அடைந்துள்ளனர். இந்த நிலையில் கச்சத்தீவு அருகே மீன் பிடிக்க சென்ற 5 மீனவர்களை இலங்கை கடற்படையினர் மீண்டும் தாக்கி விரட்டியடித்துள்ளனர்.

ராமேசுவரத்தில் இருந்து நேற்று 530 படகுகளில் 2500 மீனவர்கள் மீன் பிடிக்க சென்றனர். சில மீனவர்கள் கச்சத்தீவு அருகே சென்றபோது இலங்கை கடற்படையினர் குட்டி படகுகளில் அங்கு வந்தனர். அவர்கள் ராமேசுவரம் மீனவர்களை பார்த்து இங்கு மீன் பிடிக்க வரக்கூடாது என்று எத்தனை முறை சொல்வது என கூறி விரட்டியடித்தனர். ராஜேந்திரன் என்பவரது படகில் இருந்த 5 மீனவர்களை அவர்கள் சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது.

இலங்கை கடற்படையினரின் தாக்குதலுக்கு பயந்து மற்ற மீனவர்கள் மீன் பிடிக்காமல் கரை திரும்பினர். இலங்கை கடற்படையினரின் அட்டகாசத்தை தடுக்க மத்திய-மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக