திங்கள், 15 அக்டோபர், 2012

2000 ஆண்டுகள் கடந்த பழநி வையாபுரி குளம்: கல்வெட்டில் தகவல்

2000 ஆண்டுகள் கடந்த பழநி வையாபுரி குளம்: கல்வெட்டில் தகவல் 

 தினமலர்
பழநி:பழநி வையாபுரி குளத்தில் 12 ம் நூற்றாண்டைச் சேர்ந்த, கல்வெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த கல்வெட்டு மூலம் 2000 ஆண்டுகளுக்கு முன்பே வையாபுரிகுளம் பயன்பாட்டில் இருந்தது தெரியவந்துள்ளது. தற்போது இதில் கண்டெடுக்கப்பட்டுள்ள கல்வெட்டில் 37 வரிகளில் எழுத்துகள் பொறிக்கப்பட்டுள்ளது. அதில் "வையாபி நாட்டு, பழனியில் ஏரி அறிமுஞ்சு இக்குளம் இறங்கிடதமையில்' என்ற வார்த்தை மூலம் பழநியும்-வையாபுரி குளமும் பேரழிவை சந்தித்தன என்பதை நமக்கு தெரிவிக்கின்றன.

அந்தகாலத்தில் பழநியை ஆண்ட ராஜாராஜ குமாரபாலன் என்ற அரசனின் மனைவி "கூத்தன் அதியசோழி' என்ற பெண் தான், வையாபுரி குளத்தை தூர்வாரி மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டு வந்தாள் என்ற செய்தியும் இதன் மூலம் நமக்கு தெரியவருகிறது.தொல்லியல் ஆய்வாளர் நாராயணமூர்த்தி கூறுகையில்;"800 ஆண்டு பழமையான கல்வெட்டில், பழநியாண்டவரின் வேல் பொறிக்கப்பட்டுள்ளது. இரண்டு கல்வெட்டில் ஒன்று அரசு அருங்காட்சியத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. மேலும் கல்வெட்டு குறித்த தகவல்கள் சேகரிக்கப்பட்டு வருகிறது,' என்றார்.






கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக