வவுனியாவில் இளங்கோ அடிகள் நினைவுநாள் நிகழ்வுகள்

  சித்திரை  முழுநிலா அன்று இளங்கோஅடிகள் நினைவு நாள் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இதை முன்னிட்டு, வவுனியா சின்னப்புதுக்குளம், சிவன் கோவிலுக்கு அருகிலுள்ள
 இளங்கோ அடிகளின் திருவுருவச்சிலைக்கு மலர் மாலை அணிவித்து மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது. மாவட்டச் சமூகச்சேவை அலுவலர் திரு. எசு.எசு. சீனிவாசன் அவர்களினால் அன்னாரின் நினைவுப் பேருரை நிகழ்த்தப்பட்டது.
  இந்நிகழ்வில் முன்னாள்  நகரத்துணைத்தலைவரும், இளங்கோ அடிகளின் திருவுருவச் சிலையினை நிறுவியவருமான திரு. க. சந்திரகுலசிங்கம், மாவட்டச்சிற்றூர் ஆட்சி அலுவலர் திரு. எம். விசயரட்ணம், மாவட்டக் கலைபண்பாட்டு அலுவலர் திரு. இ.நித்தியானந்தன், நகர வரியிறுப்பாளர் சங்கம், தமிழ் விருட்சம் அமைப்பின் தலைவர் எசு. சந்திரகுமார் (கண்ணன்) செயலாளர் திரு. மாணிக்கம் செகன், தமிழ்த் தேசிய இளைஞர் கழகத் தலைவர் திரு. சு. காண்டீபன், செயலாளர் திரு. கேசவன், பொருளாளர் திரு. நிகேதன், அமைப்பாளர் திரு. பிரதீபன், கலைமகள் நற்பணிமன்றத் தலைவர் திரு. பா. சிந்துசன, சிவன் கோவில் நிருவாகத்தினர், சிவன் சிறுவர் இல்லச் சிறுவர்கள் எனப் பலரும் இந்நிகழ்வில் கலந்த கொண்டனர்.
முத்திரை,டிடிஎன் : muthirai_ttn_logo
குறிப்பு : சித்திரை  வெள்ளவா அன்று கண்ணகி சிலைக்கு மாலை அணிவிக்கும் தமிழக அரசு இளங்கோ அடிகள் சிலைக்கும் மாலை அணிவிக்கலாமே!