தலைப்பு-கமபன்கழகம் - thalaippu_kambankazhagam

கம்பன் கழகம், காரைக்குடி   

தை 17, 2047 / 31-1-2016 ஆம் நாள் காரைக்குடி கம்பன் கழகத்தின்அனைத்துக் கல்லூரி மாணாக்கர்களுக்கான பேச்சுப் போட்டிகளும், பள்ளிகளுக்கான ஒப்பித்தல் போட்டிகளும் காரைக்குடி கிருட்டிணா கல்யாண மண்டபத்தில்  நடைபெற்றன.
28 கல்லூரி மாணாக்கர்களும், 60 பள்ளி மாணாக்கர்களும் பங்கேற்றுக், கீழ்க் குறிப்பிடுவோர் பரிசுக்குத் தேர்ந்தெடுக்கப் பெற்றனர்.
கோவை கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரி மு.சாசகான் கம்பராமாயணத்தில் முதற் பரிசினையும் (உரூ 3.500), திருக்குறளில் இரண்டாம் பரிசினையும் (உரூ 1,000) வென்றார். அமராவதிபுதூர் சாரதா நிகேதன் மகளிர் கல்லூரி இரா. நாச்சாள் திருக்குறளில் முதற் பரிசினையும்  (உரூ 3500), கம்பராமாயணத்தில் இரண்டாம் பரிசினையும் (உரூ1000) வென்றார்.
ஊக்கப் பரிசுகளை (உரூ750 வீதம்) பள்ளத்தூர் சீதாலெட்சுமி ஆச்சி மகளிர் கல்லூரி பத்மாராகவி, கைக்குறிச்சி பாரதி கலைக் கல்லூரி சு.சுந்தரவள்ளி, ம.கௌசல்யா, பெங்களூரு, ஐ.ஐ.எசு. திருமூலநாதன், கிருட்டிணன்கோவில் வி பி எம் எம் மகளிர் கல்லூரி க.வைரமணி ஆகிய  ஆறு பேர்களும் பெற்றனர்.
பள்ளிகளுக்கான  கம்பராமாயண ஒப்பித்தல் போட்டியில் காரைக்குடி கலைவாணி பள்ளி ம.பானுப்பிரியா, தேவகோட்டை முருகானந்தா நடுநிலைப்பள்ளி சு.அருண்குமார் இருவரும் இரு முதற்பரிசுகளையும் (உரூ 1,000 வீதம்),
தேவகோட்டை புனிதசான் பள்ளி த.மகாலெட்சுமி, திருப்பத்தூர் நாகப்பா மருதப்பா பள்ளி மு.மீனாம்பாள், கோட்டையூர் சிதம்பரம் செட்டியார் பள்ளி சுப. கோமதி, ,காரைக்குடி கலைவாணி பள்ளி ம.சண்முகப்பிரியா,  இசுடெனிசு செரின், க.சுபலெட்சுமி, பீ.சோசி அபர்ணா, சிங்கம்புணரி அன்னை வேளாங்கண்ணி பள்ளி த.அரிணி, புதுவயல் வித்யாகிரி பள்ளி வெ.சௌந்தர்யதர்சினி, கோ.அபிராமி, கூத்தலூர் புனித செபத்தியார் பள்ளி ச.கோகிலவாணி, காரைக்குடி ஆசாத்து பள்ளி செ.கலைமணி,ஆகிய  பன்னிரண்டு பேர்களும்  இரண்டாம் பரிசுகளையும் (உரூ 250 வீதம்),
கீழச்செவல்பட்டி மீ சு பள்ளி மா.செகன், கோட்டையூர் சிதம்பரம் செட்டியார் பள்ளி பி மதிவதனி, தேவகோட்டை புனித சான் பள்ளி அ.தனலெட்சுமி, கானாடுகாத்தான் மு சித மு சிதம்பரம் செட்டியார் பள்ளி  இரா.மணிகண்டன், திருப்பத்தூர் நாகப்பா மருதப்பா பள்ளி மா. சத்யா, சிங்கம்புணரி,அன்னை வேளாங்கண்ணி பள்ளி சு.சிநேகவர்சினி ஆகிய ஆறு பேர்களும் ஊக்கப் பரிசுகளையும் பெற்றனர்.
கல்லூரிகளுக்கு அழகப்பா பல்கலைக்கழகப் பேராசிரியர்கள் சு. இராசாராம், சே செந்தமிழ்ப்பாவை, இராமசாமி தமிழ்க்கல்லூரி பேராசிரியர்கள் செ.நாகநாதன், இரா.கீதா, குழிப்பிறை முனைவர் வீ,கே. கத்தூரிநாதன், பேராசிரியர் பா தட்சிணாமூர்த்தி ஆகியோரும் பள்ளிகளுக்கு,  பொன்னமராவதி நல்லாசிரியர் நா திருநாவுக்கரசு, திருப்புத்தூர் சி உசா, அழகர்கோவில் ஆ.பழனியாயி, மதுரை சு.தொண்டியம்மாள் ஆகியோரும் நடுவர்களாகப் பணியாற்றி பரிசுக்குரியோரைத் தேர்ந்தெடுத்து உதவினர்.
பரிசுகள் மாசி 08, 2047 / மார்ச்சு மாதம் 21 ஆம் நாள் திங்கள்கிழமை மாலை  காரைக்குடி கிருட்டிணா கல்யாண மண்டபத்தில் நடைபெறும் கம்பன் கழகத்தின் இவ்வாண்டுக் கம்பன் திருவிழாவின் முதல் நாளில் மாணாக்கர்களுக்கு வழங்கப்பெறும்.
பழ. பழனியப்பன்
செயலாளன், கம்பன் கழகம்
கைபேசி: 94450 22137
தரவு முதுவை: இதாயத்து