புதன், 24 ஜூன், 2015

நிறுவ இருக்கும் தொல்காப்பியர் சிலை குறித்த கருத்தைத் தெரிவிக்கவும்

தொல்காப்பியர் சிலை0

குமரி மாவட்டத்தில் உள்ள காப்பிக்காடு தொல்காப்பியர் பிறந்த ஊராகக் கண்டறியப்பட்டுள்ளது.
அங்கு, தொகாப்பியருக்குச் சிலை அமைத்திடும் பணி தொடங்கப்பட்டுள்ளது.
சிலை வடிக்கும் பணி சென்னையில் நடைபெற்று வருகின்றது.
சிலையின் மாதிரி வடிவம் அணியமாகியுள்ளது.
தமிழக அரசு வெளியிட்டுள்ள தொல்காப்பியர் படத்தை ஒட்டி இந்த வடிவம் அமைக்கப்பட்டுள்ளது.
அதன் படம்  தரப்பட்டுள்ளது.
அறிஞர் பெருமக்கள் தங்கள் கருத்துகளைத் தெரிவிக்குமாறு வேண்டிக் கொள்கிறேன்.
அன்புடன்
முத்து.செல்வன்
உறுப்பினர்
தொல்காப்பியர் சிலை அமைப்புக் குழு.
செயல் தலைவர்
அனைத்திந்தியத் தமிழ்ச் சங்கப் பேரவை
tholkappiyar_statue03
tholkappiyar_statue02

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக