புதன், 26 மே, 2010

தாய் மொழியில் தடுமாறலாமா?


இன் ​றைய நாளில் பள்​ளி​க​ளில் தமி​ழின் நிலை,​​ தமிழ் கற்​பிக்​கும் முறை​கள்,​​ தமிழ் மொழி​யில் மாண​வர்​க​ளின் நிலை இவை​க​ளைப் பார்க்​கும் போது சில கசப்​பான உண்​மை​களை இங்கே வெளிப்​ப​டுத்த வேண்​டி​யுள்​ளது.​கல் ​வித்​து​றை​யில் ஒரு புள்ளி விவ​ரம் கேட்​கப்​ப​டு​கி​றது.​ அது என்​ன​வென்​றால் 6-ஆம் வகுப்பு முதல் 10-ஆம் வகுப்பு வரை எத்​தனை மாண​வர்​க​ளுக்கு தமிழ் எழுத,​​ படிக்​கத் தெரி​ய​வில்லை,​​ எத்​தனை மாண​வர்​கள் சுமா​ராக எழு​தப் படிக்​கக் கூடி​ய​வர்​கள் என்ற விவ​ரங்​க​ளைக் கேட்​கி​றார்​கள்.​ பத்​தாம் வகுப்​புக்கு வந்​தும் கூட தமி​ழில் எழுத,​​ படிக்க தெரி​யா​த​வர்​கள் எல்லா பள்​ளி​க​ளி​லும் இருக்​கி​றார்​கள் என்​பது உண்​மையே!​ இதை யாரா​லும் மறுக்​க​மு​டி​யாது.​ தமிழ்​நாட்​டில் தாய் மொழி​யிலே தடு​மாற்​றம் என்​றால் மற்ற பாடங்​களை இவர்​கள் எப்​படி படிக்க முடி​யும்?​ எப்​படி புரிந்​து​கொள்ள முடி​யும்?​ ஆக தமிழ் மொழிப்​பா​டத்​தில் இப்​ப​டி​யொரு நிலை இருப்​ப​தற்கு என்ன கார​ணம்?​ கல்​வித்​து​றை​தான் கார​ணம்.​அனை​வ​ருக்​கும் கல்வி என்ற திட்​டம் கொண்டு வந்த நேரத்​தில்,​​ 6,​ 7,​ 8-ம் வகுப்​பு​க​ளுக்கு கற்​பித்து வந்த இடை​நிலை ஆசி​ரி​யர்​க​ளுக்​குப் பதி​லாக பட்​ட​தாரி ஆசி​ரி​யர்​களை நிய​மித்​தார்​கள்.​ இடை​நிலை ஆசி​ரி​யர்​கள் எல்லா பாடங்​க​ளை​யும் சிறப்​பா​கக் கற்​பித்து வந்​தார்​கள்.​ ஆனால் பட்​ட​தாரி ஆசி​ரி​யர்​களை நிய​ம​னம் செய்​த​போது கணக்கு ஆசி​ரி​யர்​க​ளை​யும்,​​ அறி​வி​யல் ஆசி​ரி​யர்​க​ளை​யும் நிய​மித்​தார்​கள்.​ அதன்​பி​றகு ஆங்​கில ஆசி​ரி​யர்​களை நிய​மித்​தார்​கள்.​ இந்த ஆசி​ரி​யர்​க​ளுக்​குத் தமிழ்ப் பாடத்தை நடந்த பாட​வேளை ஒதுக்​கிக் கொடுக்​கப்​பட்​டது.​ இவர்​கள் தமிழ் மொழி அறிவு பெற்​றி​ருந்த போதி​லும் தமிழ்ப் பாடத்​திற்கு முக்​கி​யத்​து​வம் தரு​வ​தில்லை.​ தங்​க​ளு​டைய பாடத்​தைக் கற்​பிப்​ப​தி​லேயே கவ​ன​மாக இருக்​கி​றார்​கள்.​ தமி​ழில் இலக்​க​ணம்,​​ செய்​யுள் பகு​தி​க​ளைத் தொடு​வ​தில்லை,​​ உரை​ந​டையை மட்​டும் மாண​வர்​களை படிக்​கச் சொல்​லி​யும்,​​ உரை​யைப் படித்து விடை​களை எழுதி தயார் செய்​தும் தமிழ்ப் பாடத்தை முடித்​து​வி​டு​கி​றார்​கள்.​ஆக,​ ​ தமிழ் மொழி​யைக் கற்​பிக்க தமிழ் ஆசி​ரி​யர்​கள் நிய​மிக்​கப்​பட்​டி​ருந்​தால் தமிழ் மொழி​யில் மாண​வர்​கள் செய்​யும் பிழை​க​ளைச் சுட்​டிக்​காட்டி சரி​யான தமிழை பிழை இல்​லா​மல் எழு​தும் பயிற்​சி​யைக் கொடுக்க முடி​யும்.​ஆசி​ரி​யர்​கள் நிய​ம​னம்:​​ஆசி ​ரி​யர்​களை நிய​மிக்​கும் போது 6,7,8-ம் வகுப்​பு​க​ளுக்கு மற்ற பாட ஆசி​ரி​யர்​களை நிய​மிப்​பது போல தமிழ் ஆசி​ரி​யர்​கள் இது​வரை நிய​மிக்​கப்​ப​ட​வில்லை.​ உதா​ர​ண​மாக 6,7,8-ம் வகுப்​பு​க​ளுக்கு நான்கு பணி​யி​டங்​களை ஒதுக்​கும்​போது இரண்டு கணித பட்​ட​தாரி ஆசி​ரி​யர்​கள்,​​ இரண்டு அறி​வி​யல் பட்​ட​தாரி ஆசி​ரி​யர்​கள் அல்​லது ஒரு அறி​வி​யல் ஆசி​ரி​யர்,​​ ஒரு ஆங்​கில ஆசி​ரி​யர் என்ற நிலை​யில்​தான் நிய​ம​னம் செய்​யப்​ப​டு​கி​றது.​ தமிழ் ஆசி​ரி​யர் பணி​யி​டங்​கள் அறவே விடப்​பட்​டுள்​ளது.​ இந்த நடை​முறை நடு​நிலை,​​ உயர்​நிலை மற்​றும் மேல்​நி​லைப் பள்​ளி​கள் என எல்லா வகைப் பள்​ளி​க​ளி​லும் நீடிக்​கி​றது.​தரம் உயர்த்​தப்​ப​டும் பள்​ளி​கள்:​​தொடக் ​கப்​பள்​ளியை நடு​நி​லைப் பள்​ளி​யாக தரம் உயர்த்​தும்​போது கணி​தம் மற்​றும் அறி​வி​யல் ஆசி​ரி​யர்​களை நிய​மிக்​கி​றார்​கள்,​​ ஏன் ஆங்​கில ஆசி​ரி​ய​ரைக் கூட நிய​மிக்​கி​றார்​கள்.​ ஆனால் தமி​ழா​சி​ரி​யர் எந்​தப் பள்​ளி​யி​லும் இது​வரை நிய​மிக்​கப்​ப​ட​வில்லை.​ அதே​போல் ஒரு நடு​நி​லைப்​பள்​ளியை,​​ உயர்​நி​லைப் பள்​ளி​யா​கத் தரம் உயர்த்​தும்​போது தமி​ழா​சி​ரி​ய​ரைத் தவிர மற்ற பாட ஆசி​ரி​யர் பணி​யி​டங்​கள் உடனே அனு​ம​திக்​கப்​ப​டு​கி​றது.​ தமி​ழா​சி​ரி​யர் பணி​யி​டங்​கள் பள்ளி தொடங்கி சுமார் நான்கு அல்​லது ஐந்து ஆண்​டு​கள் கழித்​துத்​தான் அனு​ம​திக்​கப்​ப​டு​கி​றது.​÷உ​யர்​நி​லைப்​பள்​ளி ​களை மேல்​நி​லைப் பள்​ளி​க​ளா​கத் தரம் உயர்த்​தும் போதும் இதே நிலை​தான்.​ முது​நி​லைத் தமி​ழா​சி​ரி​யர்​களை நிய​ம​னம் செய்​யா​மல் யாரோ ஒரு​வர் அப்​பா​டத்தை நடத்​து​கி​றார்​கள்.​÷இப்​படி பள்​ளி​க​ளில் தமிழ்ப் பாடங்​க​ளைச் சரி​யான ஆசி​ரி​யர்​க​ளைக் கொண்டு கற்​பிக்​கா​மல் இருப்​ப​தால் மாண​வர்​கள் தமிழ் மீது ஆர்​வம் இல்​லா​மல் இருக்​கி​றார்​கள்.​ தொழில் கல்​வி​யில் சேரு​ப​வர்​கள் கூட தமிழ் பாடங்​க​ளில் தேர்ச்சி பெற்​றால் போதும்.​ கணி​தம்,​​ இயற்​பி​யல்,​​ உயி​ரி​யல் போன்ற பாடங்​க​ளில் உள்ள மதிப்​பெண்​களை தொழில் கல்வி படிப்​பிற்கு எடுத்​துக் கொள்​வ​தால் அப்​பா​டங்​க​ளில் மட்​டும் அதிக கவ​னம் செலுத்​து​கி​றார்​கள்.​ தமிழை ஒதுக்​கி​வி​டு​கி​றார்​கள்.​எனவே தாய்த் தமிழ் நாட்​டில் தமிழ் மொழி​யின் இத்​த​கைய நிலை​யைப் போக்க,​​1.​ எல்லா பள்​ளி​க​ளி​லும் 6,7,8-ம் வகுப்​பு​க​ளுக்கு தமி​ழா​சி​ரி​யர்​களை நிய​ம​னம் செய்​ய​வேண்​டும்.​2. ​ தரம் உயர்த்​தப்​ப​டும் எல்லா பள்​ளி​க​ளுக்​கும் மற்ற பாட ஆசி​ரி​யர்​களை நிய​மிப்​பது போலவே தமி​ழா​சி​ரி​யர்​க​ளை​யும் நிய​ம​னம் செய்ய வேண்​டும்.​3.​ தொழில் கல்வி பட்​டப்​ப​டிப்​பில் சேரு​வ​தற்​கும் தமிழ்ப் பாடத்​தில் பெறும் மதிப்​பெண்​ணை​யும் கணக்​கில் எடுத்​துக் கொள்ள வேண்​டும்.​4.​ தமிழ்ப் பாட வகுப்​பு​க​ளில் பேச்​சுப் பயிற்சி,​​ தாங்​களே கருத்​து​களை சிந்​தித்து கட்​டு​ரை​கள் எழு​தும் பயிற்சி,​​ நூல்​களை திற​னாய்வு செய்து விமர்​சிக்​கும் பயிற்சி போன்ற செயல்​பா​டு​க​ளைச் செய்ய வழி காணும் போது இது மொழித் திறனை வளர்க்க உத​வும்.​5.​ தனி​யார் பள்​ளி​க​ளில் கூட தமிழ் பாடத்​திற்கு முக்​கி​யத்​து​வம் தரப்​ப​டு​வ​தில்லை.​ ஆங்​கில வழி​யில் படிக்​கும் மாண​வர்​கள் பெரும்​பா​லா​னோர் தமி​ழைப் படிக்க தடு​மா​று​வார்​கள்.​ கார​ணம் இங்​கே​யும் தமி​ழுக்கு முக்​கி​யத்​து​வம் தரப்​ப​டு​வ​தில்லை.​ இந்​நி​லை​யை​யும் மாற்ற தகுந்த நட​வ​டிக்கை மேற்​கொள்ள வேண்​டும்.​சம் ​பந்​தப்​பட்​ட​வர்​கள் இவற்​றைக் கவ​னித்து தகுந்த நட​வ​டிக்​கை​களை மேற்​கொண்​டால் தமிழ் நாட்​டில் மாண​வர்​க​ளி​டம் தமிழ் மொழி வளர்ச்​சி​யு​றும்.​ இல்​லை​யென்​றால் தமிழ்,​​ நாளும் தேய்ந்து கல்வி கற்​ற​வர்​கள் கூட சரி​யான தமிழ் சொற்​க​ளைப் பயன்​ப​டுத்​தத் தெரி​யா​மல் செய்​யுள்,​​ இலக்​கி​யம்,​​ இலக்​கண அறிவை பெறா​மல் மங்​கும் நிலை ஏற்​ப​டும் என்​ப​தில் ஐய​மில்லை.​கோ.செல்​வ​ரா​சன்,​​ காம​ராசு நகர்,​​ பெத்த தாளாப்​பள்ளி அ.நி.​ கிருஷ்​ண​கிரி மாவட்​டம்
கருத்துக்கள்

சரியான கோரிக்கைகள் முன்னெடுத்து வைக்கப்பட்டுள்ளன. செம்மொழி மாநாடு நடைபெறும் வேளையில் தமிழ்த்தாய் தமிழ்நாட்டுப்பள்ளிகளில் நுழைவுரிமையின்றிக் கண்ணீர் வடிக்கக் கூடாது. உடனே முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakuvanar Thiruvalluvan
5/26/2010 2:51:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக