செவ்வாய், 23 பிப்ரவரி, 2010

ஆங்கில மொழிபெயர்ப்பு ​ இல்லாததால்​ திமுக அமைச்சர்கள்,​​ எம்.பி.க்கள் எதிர்ப்பு



புதுதில்லி, ​​ பிப்.22:​ நாடாளுமன்ற இரு அவைகளின் கூட்டுக்கூட்டத்தில் குடியரசுத்​ த​லைவர் பிரதிபா பாட்டீல் ஆற்றிய உரை அதேநேரத்தில் ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்படாததற்கு திமுக அமைச்சர்கள் ஆ.ராசா,​​ தயாநிதி மாறன்,​​ எம்.பி.க்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.​ குடியரசுத் தலைவர் இந்தியில் ஆற்றிய உரை,​​ ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்படவில்லை.​ இது குறித்து திமுக எம்.பி.​ டி.கே.எஸ்.​ இளங்கோவன் கூறுகையில் இந்த பிரச்னை குறித்து திமுக எம்.பி.க்கள் மக்களவைத் தலைவர் மீரா குமாரை சந்தித்து புகார் தெரிவித்தனர் என்றார்.​ பிரதிபா பாட்டீல் ஆற்றிய உரையின் ஆங்கில மொழிபெயர்ப்பில் முதலாவது மற்றும் கடைசி பத்தியை மட்டும் குடியரசுத் துணைத் தலைவர் ஹமீது அன்சாரி வாசித்தார்.
கருத்துக்கள்

கலைஞர் போர்க்குணத்தைக் காட்டுவோம் எனக் கூறியதற்கு ஏற்ப நல்ல வாய்ப்பு இதுவே. நாடாளுமன்றங்களில்அனைத்து மொழிகளுக்கும் சம உரிமை கேட்டுப் போராடி வெற்றி பெற வேண்டும். குடியரசுத் தலைவரின் உரையின் தமிழ் மொழி பெயர்ப்பு அளிக்கப்படாத வரையில் அவரது உரை தொடர்பான விவாதததில் திமுக பங்கேற்காது என அறிவிக்க வேண்டும். இந்தியக் கூட்டமைப்பு தமிழ்த் தேசியத்தை மதிக்கா விட்டால் ஏற்படப் போகும் விளைவுகள் குறித்துக் காங்கிரசு கட்சியிடம் எச்சரிக்க வேண்டும். தமிழக இறையாண்மையை மதிக்கும் இந்தியக் கூட்டமைப்பே தேவை. (பதவி நலனே வாழ்வின் இலக்கு என மாற்றிக் கொண்ட திமுக தலைமைக்கு இவ்வாறு கூறி என்ன பயன்? என்கிறீர்களா? மனச் சான்றுள்ள உறுப்பினர்களாவது சிந்திக்க மாடடார்களா?)

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
2/23/2010 3:48:00 AM

THIS IS CALLED HINDI IMPOSITION. UNION GOVT SHOULD RESPECT ALL THE PEOPLE EQUALLY.

By Paris EJILAN
2/23/2010 2:20:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *
தினமலர்
இந்தியில் ஜனாதிபதி உரை: சபாநாயகரிடம் முறையீடு
பிப்ரவரி 23,2010,00:00 IST
Front page news and headlines today



வாசகர் கருத்து
இப்போ அரபு மொழி தெரியாமல் எத்தனையோ லட்ச கணக்கான இந்திய மக்கள் அரபு நாடுகளில் நல்ல விதமாக வேலை பார்த்து கொண்டும், வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறார்கள். திரு சாமி, Doha, Qatar உள்பட. ஆகையால் ஹிந்தி மொழி கட்டாயம் என்கிறது எல்லாம் நமக்கு தேவை இல்லாத ஒன்று. இப்போ தமிழ் நாட்டில் வந்து வேலை பார்க்கும் மற்ற மாநிலத்வர்கள் எல்லாம் தமிழ் கற்று கொண்டா வந்து வேலை பார்க்கிறார்கள்? இப்போ பிரச்சினை என்ன வென்றால் மொழி பெயர்ப்பு செய்யாதது தான்.
இந்தி எதிர்ப்பு போராட்டம் நடந்தது இந்தி மொழி நம் மீது திணிக்க முற்படடபொழுது தானே ஒழிய வேறு எந்த காரணமும் இல்லை. தாய் மொழியில் கல்வி கற்பது நல்லது ஏனெனில் புரிந்து கொள்வது எளிது என்ற நோக்கதினால் தான். அப்படி கற்ற நாம் ஒன்றும் மோசம் போய்விட வில்லை என்பதற்கு சான்று வெளிநாட்டில் வாழும் நம்மை போன்றவர்களே சான்று. இந்தியாவில் தமிழ் நாடும் ஒரு அங்கம் என்றால், ஆட்சி மொழியில் தமிழும் ஒரு அங்கமாக இருக்க வேண்டும் என்பதே என் தாழ்ந்த விருப்பம்.

உன் நாடும், உன் மொழியும் மதிக்கப்படும் பொழுது நீயும் மதிக்கப்படுவாய்.
by Org Tamilan,Manama,Bahrain 23-02-2010 18:58:26 IST
ஹிந்தி தெரியாத MP எந்த விதத்தில் தமிழ் மக்களுக்கு நல்லது செய்துவிட முடியும்?

சில தமிழ் நாட்டு MPக்களுக்கு தமிழே ஒழுங்கா பேச வராது, அப்புறம்தானே ஹிந்தி.
by G கணேஷ்,Ahmedabad,India 23-02-2010 18:31:45 IST
why to learn HINDI which is unnecessary. I didn''''t find any use of it, eventhough i worked in various places bangalore, hyderabad, etc.. Remember Hindi is one of the national language along with other 14 languages. The president should have used English Else arranged for translation in all official languages which is according to language act. ''''Hindi is NOT a National Language''''
by S ராஜா,Pondicherry,India 23-02-2010 18:23:41 IST
இப்ப தெரியுதா ஹிந்தி தெரியாம நம்ம தமிழ் மக்கள் வெளி மாநிலங்களில் எவ்வளவு கஷ்டபடுறாங்கனு... போயி சபாநாயகரிடம் புகார் கொடுக்காமல் நம்ம முதல்வர்ரிடம் சொல்லி ஹிந்திய கட்டாயமாக்க சொலுங்க... தமிழ் தமிழ்னு சொல்லி நாம எல்லாம் தமிழ்நாட்டுல சுத்த தமிழ் பேசினால் ஏதோ நமக்கு நாமே ஆறுதல் சொல்லிகிடலாம்... ஆனா நாம பேசுற தமிழ்ல 50% க்கு மேல ஆங்கிலம் தான் இருக்கு....??? சுத்த தமிழ்ல பேசினா புரியலனு சொல்லுறாங்க நம்ம தமிழ் மக்கள்...!!!
by K Samy,Doha,Qatar 23-02-2010 17:16:17 IST
dmk mps should ask karunanithy not the speaker or anybodyelse.mk only made you to not to study hindi not others.So why these tamil mps are murmuring on others?.
by mr ramesh,chennai,India 23-02-2010 16:26:12 IST
Well said unmaiyana indian.If there is one community that can be easily fooled is we Tamilians only.We blindly follow our Political leaders and film stars.People feel jealous when malayali people occupy major posts in central government.Nobody has stopped us from doing so but bcoz of our inefficiency learning new ideas we continue to lag behind.Look malayalis,telegus and all other state people learn hindi but look at the way malayalis speak very rarely they mix english words when they speak their language even when they speak English it will have a Malayalam accent to it thereby ascertaining their identity but we Tamilians make fun at them for speaking so.But we Tamilians always say Tamil Vazhga Tamil Velga but our Tamil is like this
Dey Dorra open pannu,Windowa close pannu,Fan switcha off pannu,Palam instead of Pazham.Is this Tamil?First let us try to speak good Tamil and then we can proudly say we are Tamilians.So people do corrupt my beloved Tamil language.
by e manimaran,chennai,India 23-02-2010 15:20:38 IST
english best . ask to voice in english. dont use hindi at centre
by r guna,kjaruir,India 23-02-2010 09:43:13 IST
இந்தி தெரியாத எம்.பி.,க்கள் இந்தியாவில் இருக்க தகுதி அற்றவர்கள் தான். நமது பெரும் தலைவர் ''காமராஜர்'' போலே இருக்க கற்றுக்கொள்ளுங்கள். அவர் பள்ளிக்கூடம் போகாதவர். ஆனால் அவருக்கு மூன்று மொழிகள் தெரியும். நீங்கள் பள்ளிக்கு போயும் கூட ஹிந்தி மொழியை கற்றுக்கொள்ள மறுப்பது ஏன் ? எத்தனை கேவலமான விஷயம் தெரியுமா? நமது நாட்டின் தலை நகரம் டெல்லி, அங்கு பேசும் மொழி ஹிந்தி, அது இந்திய நாட்டில் உள்ள ஒரு குறிப்பிட்ட மாநிலத்தவருக்கு மட்டும் தெரியாது!!!! கற்றுக்கொள்ளுங்கள் தமிழ் மொழி ஒன்றும் அழிந்து விடாது! இப்படிக்கு ஹிந்தி தெரிந்த பச்சை தமிழன் ''வைரமுத்து'' கன்னியாகுமரி,நாகர்கோயில்லில் இருந்து.
by S வைரமுத்து ,NAGERCOIL,India 23-02-2010 09:43:05 IST
அட நாமெல்லாம் முதல்ல இந்தியர்கள் அப்பிடிங்கறது மறந்துட்டோமா! இங்கிலீஷ் தெரியும் ஆனா ஹிந்தி தெரியாது.. இந்தமாதிரி அரசு சட்டத்தால் நாம ஹிந்தி கத்துக்க முடியலனு நான் பல முறை வேதனை பட்டிருக்கேன். அந்த வேதனை ஒரு இந்தியனா இவர்கள் புரிந்து இனிமேலாவது ஹிந்தி கத்துட்டு தமிழ்நாடு தாண்டி போகட்டும்..
ஹிந்தியின் அவசியம் புரிந்து ஸ்கூல் பாட திட்டத்துல சேத்துங்க.. அடுத்த தலைமுறை எம்.பிக்களாவது இப்படி அழாம இருக்கட்டும்... அதுக்காக இங்கிலீஷ் வேண்டாம்னு முடிவு பண்ண வேண்டாம்..
by K வெங்கடேஷ்,Coimbatore.,India 23-02-2010 09:13:16 IST
//மற்ற மொழி கற்பதால் தமிழ் மொழி என்றும் அழியாது, அதனால் தமிழ் மொழிக்கு ஒரு இழுக்கும் இல்லை//

மற்ற மொழிகள் கற்பதால் நம் மொழி அழியாது அது தொழிலுக்காக கற்றால்,
வடக்க தாத்தாக்கள் பேசிய மொழி பேரர்கள் பேசுவதில்லை, இன்று பேரர்களின் தாய்மொழி இந்தியாக ஆன கதை எல்லாம் உங்களுக்கு எங்க தெரியப்போகுது, மொழி அழியாது என்பது எல்லாம் வெறும் கதை, அது இடத்தையும் அதற்கு கொடுக்கப்படும் முக்கியத்துவத்தையும் பொருத்தது, இந்தி கற்றிருந்தால் இன்று ஆங்கிலம் தெரியாமல் இருந்திருப்போம் என்பது தான் உண்மை. இந்திய விட ஆங்கிலம் நல்ல சோறு போடுது இன்று -
இந்திக்கு இருக்கும் உரிமை ஆங்கிலத்துக்கும் உண்டு இந்தியாவில் அனைவரும் ஆங்கிலம் கற்றால் இந்த பிரச்சனை இல்லை,
பல மொழி மக்களை ஒன்றாக இணைத்து இந்தியான்னு பேருவச்ச்சமட்டும் போததாது, அனைத்து மொழிக்கும் சம உரிமை கொடுக்கணும் அதுதான் சரியான குடியரசு, ஒரே ஒரு இந்திய மொழிக்கு மட்டும் மத்தியில் அலுவல் மொழி அந்தஸ்து (மற்றொண்டு ஆங்கிலம்), மற்றது எல்லாம் என்ன மட்டமா ?
''இந்தியாக்கு தேசிய மொழி என்று ஒன்று கிடையாது'' எந்த அரசியல் அமைப்பு சட்டதுலையும் குறிப்பிடப்படவில்லை அனைத்தும் அலுவல் மொழி மட்டுமே, அப்படியே இனி ஒரு மொழியை மட்டும் குடிப்பிட்டால் அதையும் ஏற்றுக்கொள்ள முடியாது,
அனைவரும் சமம் அனைத்து மொழியும் சமம், அனைத்து மொழிகளுக்கும் சமஉரிமை வேண்டும் தமிழ் உட்பட.
by t vijay,singapore,Singapore 23-02-2010 09:09:43 IST
திரு டி.உண்மையான இந்தியன் அவர்களே,

இந்தி''ய என்ன இளவுக்கு கத்துக்கணும் ? கத்துகறதும் கத்துக்காததும் அவர் அவர் விருப்பம், இந்தியாவில் ஆயிரத்துக்கும் மேல் மொழிகள் உள்ளது, இந்திக்கு மட்டும் என்ன முக்கியத்துவம் ?

//தமிழன், தமிழன் என கூறி ஹிந்தி கற்க தடை போடும் அரசியல்வாதிகள் பிரித்து ஆளும் சூழ்ச்சி செய்து வெற்றி பெறுகிறார்கள், //
தமிழகத்தில் இந்தி படிக்க தடை இருகிறதா ? உங்களுக்கு வேணுமுன்னா நீங்க போய் படிக்க வேண்டியதுதானே, எனக்கு வேணும்ன்னு தோணிச்சி நான் சின்னவயசுல படிச்சேன், அதே போல வேற எந்த மொழி வேணும்ன்னு தோணுதோ அதையும் படிப்பேன். அது என்னோட தனிப்பட்ட விஷயம், ஆனா இந்தி தெரிந்தால் தான் இந்தியன்னு கண்டுப்பிடிச்ச உங்களோட சிந்தனையை என்னனு சொல்லுறது
இந்திய ஆட்சி மொழியா கொண்ட மாநிலங்களின் வளர்ச்சி விகிதத்தையும், தமிழக வளர்ச்சி விகிதத்தையும் ஒப்பிட்டு பாருங்க, தமிழகத்துல இருந்து வடநாட்டுக்கு போற தமிழர்களின் விழுக்காட பாருங்க ஒரு சதவிகிதம்தான் இருக்கும், மற்ற தொன்னுத்து ஒன்பது சதவிகிதம் எதுக்கு கத்துக்கணும் ?
by t vijay,Singapore,Singapore 23-02-2010 09:08:44 IST
இந்தியன் என்றால் இந்தி தெரிய வேண்டுமா? இது மொழி வெறியின் உச்சம்!. இதனால் தான் வட கிழக்கு மாநிலங்களில் தேசப்பற்று குறைந்து தீவிரவாதம் உள்ளது.
நம் நாடு சர்வதேச அளவில் உயர்ந்திருப்பதற்கு காரணம் ஆங்கிலம்.
இந்தி வெறியர்கள் இந்தியாவை இந்தி நாடு ஆக்குவதற்கு அனுமதிக்க கூடாது !. பழைய சோவித் நாடுகள் ரஷ்ய மொழி மட்டும் தெரிந்த காரணத்தினால் ஏற்பட்ட பின்னடைவை இந்தியாவும் சந்திக்க வேண்டுமா?

இன்னொரு கொடுமை!, சென்னை - மதுரை விமானங்களில் கூட, தற்காப்பு, பாதுகாப்பு அறிவிப்புகள் இந்தியில் சொல்லப்படுகின்றன. இந்தி தெரிந்தவன் மட்டும் உயிர் பிழைக்க வேண்டும் , தமிழன் சாக வேண்டுமா?

இதை தினமும் விமானத்தில் செல்லும் தமிழக பாராளுமன்ற உறுப்பினர்கள் பர்ராளுமன்றதில் தட்டி கேட்க வேண்டும்.
இந்திக்கு பதிலாக தமிழில் அறிவுப்புகள் வேண்டும். இந்தி மட்டும் தெரிந்தவர்கள் தமிழ் அல்லது ஆங்கிலம் கற்கட்டும்.
by i indian,dubai,United Arab Emirates 23-02-2010 09:03:53 IST
ஹிந்தி எதிர்ப்பு ஊருக்கு உபதேசம் தான். கனிமொழி ஹிந்தியில் பட்ட மேற்படிப்பு படித்தவர். தமிழா இனியும் அரசியல் வியாதிகளின் ஏமாற்று பேச்சை நம்பாதே!
by V bala,Muscat,Oman 23-02-2010 08:35:17 IST
கலைஞர் போர்க்குணத்தைக் காட்டுவோம் எனக் கூறியதற்கு ஏற்ப நல்ல வாய்ப்பு இதுவே. நாடாளுமன்றங்களில்அனைத்து மொழிகளுக்கும் சம உரிமை கேட்டுப் போராடி வெற்றி பெற வேண்டும். குடியரசுத் தலைவரின் உரையின் தமிழ் மொழி பெயர்ப்பு அளிக்கப்படாத வரையில் அவரது உரை தொடர்பான விவாதததில் திமுக பங்கேற்காது என அறிவிக்க வேண்டும். இந்தியக் கூட்டமைப்பு தமிழ்த் தேசியத்தை மதிக்கா விட்டால் ஏற்படப் போகும் விளைவுகள் குறித்துக் காங்கிரசு கட்சியிடம் எச்சரிக்க வேண்டும். தமிழக இறையாண்மையை மதிக்கும் இந்தியக் கூட்டமைப்பே தேவை. (பதவி நலனே வாழ்வின் இலக்கு என மாற்றிக் கொண்ட திமுக தலைமைக்கு இவ்வாறு கூறி என்ன பயன்? என்கிறீர்களா? மனச் சான்றுள்ள உறுப்பினர்களாவது சிந்திக்க மாடடார்களா?)
1.) உண்மையான இந்தியன் என்ற பெயரில் ஒருவர் அறியாமையை வெளிப்படுத்தியுள்ளார். தமிழர்களின் தேசிய மொழி தமிழே! இந்தியக் கூட்டமைப்பில் அனைத்துமொழிகளுக்கும சம வாய்ப்பு வழங்காவிட்டால் கூட்டமைப்பிற்குத்தான் கேடு. வலிவான பொலிவான இந்தியவாவாக திகழ அனைத்து மொழிகளுக்கும் சம உரிமை வழஙக் வேண்டும். நாம் மொழியாலும் இனத்தாலும் நாட்டாலும் தமிழர்கள். அரசமைப்பால் இந்தியர்கள். அரசமைப்பு நிலைக்க இந்தியனாகக் கூறிக் கொள்வோர் மொழிச் சமஉரிமைக்கு வழிகாணுக
by I. thiruvalluvan,chennai,India 23-02-2010 08:14:28 IST
யாருப்பா அது உண்மையான இந்தியன். அவரு எத்தன மாநிலங்கள் போயி இருக்காரு? இன்னும் முப்பது சதவிதம் மக்களுக்கு ஹிந்தி தெரியாது. முக்கியமாக கிராம புறங்களில் அவர்களுடைய தாய் மொழி மட்டும் தான் அவர்களுக்கு தெரியும். மற்ற மொழி தெரியும் என்பது ஒரு பிளஸ் பாயிண்ட். மற்றபடி வேறு ஒன்றும் இல்லை. ஹிந்தி தெரியவில்லை என்பதால் வெட்க பட தேவை இல்லை. இந்த முறையீடு வெட்கக்கேடான முறையீடு இல்லை.
by k Ganesan,nashik,India 23-02-2010 07:50:07 IST
தயாநிதி மாறன் தவிர மற்ற யாருக்கும் ஹிந்தி தெரியாது. மக்களே இனியாவது உணருங்கள் இவர்கள் தமிழ் மொழி பற்றை. கலைஞர் ஹிந்தி எதிர்ப்பு போராட்டம் நடத்திய நேரத்தில் அவர்களுடைய பேரன் மற்றும் மருமக பிள்ளைகள் ஹிந்தி பயிற்சி பெற்றுக்கொண்டு இருந்தனர். தமிழர்களை மடயனாக்கி அவர்கள் பிள்ளைகளை மட்டும் புத்திசாலியாக வளர்த்தனர்.
by s காசி,ny,United States 23-02-2010 07:36:10 IST
DMK should come out of UPA,at centre.
by R Karuppiah Sathiyaseelan,Kinshasa,Congo (Zaire) 23-02-2010 03:39:09 IST
இனி அந்த அறையை தி.மு.க., பெற முடியுமா என்பது சந்தேகமே
இதுல தெரியுது தி.மு.க சாப்புட தான் லாயக்குன்னு..மேல போய் உக்கர்ந்து
எங்க தொகுதிக்கு அது பண்ணு இது பண்ணுன்னு கேட்பாங்கன்னு ஒட்டு போட்டா.....
தலைய சொருன்சுகிட்டு என்னயா பண்ணுரிங்க..ஏதாவது பண்ண மாட்டாங்கலா
அப்புடின்னு நாங்கலம் ஏங்குறோம் யா....
ஒவ்வொரு நாளூம் சும்மா செத்து செத்து பொலைக்குறோம்......நீங்க என்னடானா...இலவச ரயில்,இலவச விமானம்,இலவச வீடு எப்புடி எல்லமே இலவசம் தான் உங்களுக்கு...எல்லாம் நாங்க கொடுக்குர வரி பனம்
நல்லா இருங்கடா அப்பா
by A சரவணன்(யாமிருக்க பயமென்),DUBAI(MADURAI),India 23-02-2010 02:28:29 IST
இது வெட்கக்கேடான முறையீடு, இந்தி தெரியாத எம்.பி.,க்கள் இந்தியாவில் இருக்க தகுதி அற்றவர்கள்.

தமிழர்களே இதை படித்துவிட்டு கொதித்து கண்டபடி ஏசாதீர்கள்...இதை விமர்சனத்தை எழுதியன் தமிழை தாய்மொழியாக கொண்டு தமிழ் பேசும் தமிழகத்தில் பிறந்த உண்மையான இந்தியன் (தமிழன், தமிழன் என கூறி ஹிந்தி கற்க தடை போடும் அரசியல்வாதிகள் பிரித்து ஆளும் சூழ்ச்சி செய்து வெற்றி பெறுகிறார்கள், மற்ற மொழி கற்பதால் தமிழ் மொழி என்றும் அழியாது, அதனால் தமிழ் மொழிக்கு ஒரு இழுக்கும் இல்லை.)
by T உண்மையான இந்தியன் ,Chennai.,India 23-02-2010 01:27:32 IST
Translation is required for Tamilnadu M.P''s only not other state M.P''s. Vazhga tamil!
by M Raj,Qatar,India 23-02-2010 00:53:35 IST




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக