ஞாயிறு, 21 பிப்ரவரி, 2010

பிறந்தநாளில் கட்-அவுட்டுகள், பேனர்கள் கூடாது: மு.க.ஸ்டாலின்



சென்னை, பிப்.20: தனது பிறந்தநாளில் கட்-அவுட்கள், பேனர்கள் எதுவும் கண்டிப்பாக வைத்திடக் கூடாது என்று துணை முதல்வரும், திமுக பொருளாளருமான மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.இதுதொடர்பாக அவர் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:எனது பிறந்த நாளான மார்ச் 1-ம் தேதியன்று, எனக்கு வாழ்த்து சொல்லும் வகையில் இளைஞரணியினரும், கட்சியினரும் பேனர்கள், கட்- அவுட்கள் எதுவும் கண்டிப்பாக வைத்திடக்கூடாது. அப்படி செய்வது எனக்கு எந்த வகையிலும் நன்மை செய்வதாகாது. தற்போது யாரேனும் இத்தகைய ஏற்பாடுகளைச் செய்திருந்தால் அவற்றை உடனடியாக அகற்றிவிட வேண்டும்.சுவரொட்டிகள் ஒட்டுவதும் அறவே தவிர்க்கப்பட வேண்டும். பிறந்தநாள் விழா என்ற பெயரில் பொதுமக்களுக்கு எந்த ஒரு இடையூறும் ஏற்படுத்தக் கூடாது.கட்சியின் வளர்ச்சிக்காகவும், மக்களின் நலனுக்காகவும் சமூக நலப்பணிகள் மேற்கொள்வோர் எவ்வித ஆடம்பரமுமின்றி ஆக்கப்பூர்வமான முறையில் நடத்திட வேண்டும். இது என் கண்டிப்பான வேண்டுகோள் என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
கருத்துக்கள்

சில ஆண்டுகளுக்கு முன்பு சனவரித் திங்கள் ஒன்றில் மதுரையில் கலைஞரின் மூத்த மகனுக்காக மிகப் பெருமளவிலும் பெரு எண்ணிக்கையிலும் மக்களுக்குத் தொல்லைகள் கொடுக்கும் வகையில் வெட்டுருக்கள் வைக்கப்பட்டிருந்தன.அதனைக் கண்டிக்காத கலைஞர் அவர்கள் வேலூரில் பிறந்த நாள் கொண்டாடிய திமுக வின் மாவட்டடப் பொறுப்பாளர் ஒருவரின் வெட்டுருக்களைப் பார்த்து விட்டு அவர் வளர்ந்து விடுவாரே என்ற அச்சத்தில் கண்டித்தார். ஆனால் அடுத்த திங்களே சென்னையில் மற்றொரு மகனுக்கு வெட்டுருக்கள் வைக்கப்பட்டபொழுது மட்டற்ற மகிழ்ச்சி கொண்டார். இந்நிலை தொடர்ந்துதான் வருகின்றது. பேரறிஞர் அண்ணா நூற்றாண்டு விழாவில் கூட அறிஞரின் படத்தைப்போல் 100 மடங்கு எண்ணிக்கையில் குடும்பத்தினர் படங்கள்தாம் இருந்தன. எனினும் இப்படிச் செய்வது தனக்கு எந்த வகையிலும் நன்மை தராது எனத் தாலினே கூறியுள்ளது வரவேற்கத்தக்கது. இதனை உண்மையாகவே செயல்படுத்தினால் மனப்பக்குவம் பெற்று வரும் அவர் பாராட்டிற்குரியவரே!

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
2/21/2010 5:14:00 AM

is good i like ur style thanks a lot

By shahul m.kasim
2/21/2010 2:27:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்
enna nadakkuthu tamilnaatila............ Jae adutha vaaramthaan onnnuku poraangalaam.........
By ram
2/21/2010 11:13:00 AM

அருமை துணைமுதல்வர் அவர்களே.இந்த செய்தியை நாட்டுமக்க்ளுக்கு தந்ததின் மூலம் நீங்கள் உயர்ந்துவிட்டீர்கள்.உண்மையில் நீங்கள் கூறுவதுபோல் அதில் உங்களுக்கு எந்த நண்மையும் இல்லை,அந்தநாளில் தொண்டர்கள் விருப்பப்பட்டால் பள்ளிக்குழந்தைகளுக்கு சீருடை,எழுதுபொருட்கள்,உணவு ,இரத்ததானம் , மருத்துவ மனை நோயாளிகளுக்கு பால் பிரட் என்பனவற்றை உங்கள் பெயரால் செய்யட்டும் உங்களுக்கு வாழ்த்தும் பொதுமக்களுக்கு உங்கள் பேரில் நன்மதிப்பும் கிட்டும் .இவ்வறிக்கைக்காக மனமாற பாராட்டுகிறேன்

By முஹைதீன்,துபாய்
2/21/2010 10:53:00 AM

Ilakuvanar avargal inayathalathil ooyathu paniyatri varuvathu yendrum paaratta thakkathu.

By adappaavi
2/21/2010 9:23:00 AM

ippadi kandithal( idhai seyalpaduthinal) ungalukkuthan engal vote. thalaivare

By kl manoj
2/21/2010 9:12:00 AM

vazhga mudalvar(thunai)thodarattum avar kandippu

By v.loganathan
2/21/2010 9:07:00 AM

பாராட்டுக்குரிய செயல்.இதுபோல் எல்லா அரசியல் கட்சி தலைவர்களும்,மற்றவர்களும், தங்களின் பிறந்த நாளை முன்னிட்டு மக்களுக்காக தொண்டு சேவை செய்து வந்தால் இந்த நாட்டில் எவ்வளவோ ஏழை மக்கள் பயன் பெற்று முன்னேற்றம் காண முடியும்.

By Ibnusalih.abudabi.uae.
2/21/2010 7:55:00 AM

சிறப்பாகச் சொன்னார் ஸ்டாலின் இதைப் பாராட்டும் முகத்தான், நாடெங்கிலும் ஸ்டாலின் அவர்களுக்குச் சிலை வைத்து மகிழ்வோம். உபி கள்ளே வருக். திருவோட்டுடன் வருக். வசூல் மழை பொழிக.

By அப்பாவி
2/21/2010 6:01:00 AM

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக