kavithaipoatti
  ஆசுதிரேலியா / அவுத்திரேலியா, ‘தமிழ்க்கோ’ அமைப்பினால் இலங்கையின் வடக்கு மாகாணத்தில் உள்ள கவி ஆர்வம் கொண்டோர்க்கான மாபெரும் கவிதைப்போட்டி ஒன்று நடாத்தப்படவுள்ளது. இந்தப்போட்டியானது வட மாகாணத்தில் உள்ள கவி ஆர்வம் மிக்கவர்களின் திறன்களை ஊக்குவித்துச் சிறப்பிப்பதற்கும், அவர்களின் கவிதைகளை நூலாக்குவதற்குமாக நடாத்தப்படுகின்றது. மூன்று பிரிவுகளாக இப்போட்டி நடாத்தப்படும். ஒவ்வொரு பிரிவிலும் முதல் எட்டு இடங்களைப் பெறுவோர்க்குப் பணப்பரிசில்கள் அளிக்கப்படும்.
1ஆம், 2ஆம் பிரிவுகளுக்கு:
1 ஆம் இடம் பதினைந்தாயிரம் உரூபாய்
2 ஆம் இடம் பத்தாயிரம் உரூபாய்
3 ஆம் இடம் ஐயாயிரம் உரூபாய்
18 அகவைக்கு மேற்பட்ட போட்டியாளர்களுக்கு:
1 ஆம் இடம் இருபதாயிரம் உரூபாய்
2 ஆம் இடம் பதினைந்தாயிரம் உரூபாய்
3 ஆம் இடம் பத்தாயிரம் உரூபாய்
ஒவ்வொரு பிரிவிலும் தொடர்ந்து இடங்களைப் பெறும்   ஐந்து பேர்களுக்கு இரண்டாயிரம் உரூபாய் வீதம் பணப்பரிசில் வழங்கப்படும். கலந்து கொள்ளும் யாவர்க்கும் சன்றிதழ் அளிக்கப்படும்.
போட்டியின் விதிமுறைகள்:
  1. முதலாம் பிரிவு :- தரம் 5 முதல், தரம் 09 வரையான மாணவர்கள்
      2.இரண்டாம் பிரிவு :- தரம் 10 முதல் உயர்தரம் வரையான மாணவர்கள்
  1. பாடசாலை மாணவர்கள் அல்லாத பதினெட்டு வயதிற்கு அதிகமான யாவரும் மூன்றாம் பிரிவுப் போட்டியில் பங்குபற்ற முடியும்.
  2. போட்டியில் பங்குபற்றுவோர்கள்   பொறுப்புக் கூறக்கூடிய தொய்வக(இறப்பர்) முத்திரை உடைய, சமூகத் தகுதியுடைய ஒருவரிடம், தமது சொந்தக்கவிதை என்பதனை உறுதிப்படுத்தும் சான்றிதழ் பெற்று, கவிதையுடன் இணைத்து அனுப்ப வேண்டும்.
  3. முதலாம் பிரிவினர் 15 வரிகளுக்கு மேற்படாமலும், இரண்டாம் பிரிவினர் 25 வரிகளுக்கு மேற்படாமலும், மூன்றாம் பிரிவினர் 35 வரிகளுக்கு மேற்படாமலும் கவிதைகளை அனுப்ப வேண்டும். குறித்த வரிகளைவிடக் குறைவாக இருந்தாலும் கவிதைகள் போட்டியில் சேர்க்கப்படும். கவியின் தரம் முதன்மையாக நோக்கப்படும்.
  4. கருப்பொருளுக்கு வரையறை இல்லை.
  5. மரபுக் கவிதைகள், புதுக்கவிதைகள் யாவும் ஏற்றுக்கொள்ளப்படும்.
  6. கவிதைகள் ஏற்றுக்கொள்ளப்படும் இறுதி நாள் 20.08.2015.
     9.கவிதைகளை அஞ்சலி‌லோ, நேரடியாகவோ, மின்னஞ்சலிலோ வழங்ககலாம்.
  1. போட்டியாளர் தமது பெயர், முகவரி, தொலைபேசி எண்(விரும்பினால் மட்டும்) என்பவற்றைத் தனியான தாளில் இணைத்து அனுப்ப வேண்டும். கவிதையின் தாளில் இவை எழுதப்படலாகாது.
  2. படைப்புகள் யாவும், தாயகம், புலம் என்று குறித்த துறைகளில் பாண்டித்தியம் பெற்றவர்களைக்கொண்ட நடுவர் குழுவால் மதிப்பீடு செய்யப்பட்டுப் போட்டி முடிவுகள் ஊடகங்கள் மூலமாக அறிவிக்கப்பட்டு, மேடை நிகழ்ச்சி ஒன்றில் வெற்றியாளர்களுக்குப் பரிசில்களும், நினைவுச்சின்னங்களும், பாராட்டுச்சான்றிதழ்களும் வழங்கப்படும்.
  3. கவிதைகள் தட்டச்சிலோ, தெளிவான கையெழுத்திலோ அனுப்ப்பட ‌வேண்டும்.
   13.போட்டியில் பங்குபற்றும் போட்டியாளர்கள் தங்களது படைப்பைப் பதிப்பிக்கவும் வேறுஏதேனும் காட்சிப்புல வடிவத்தில் வெளிப்படுத்தவு காப்புரிமை மற்றும் வெளியீட்டு உரிமையைத், ‘தமிழ்க்கோ’விற்கு வழங்குகிறீர்கள்! (குறித்த விதிக்கு ஒப்புக்‌கொண்‌டே தாங்கள் போட்டியில் கலந்துகொள்கின்றீர்கள் என்பதைக் கவனத்தில் கொள்ளவும்.)
  1. அஞ்சல்/நேரடி முகவரி.

     கவிதைப் போட்டி 2015
     பண்பாட்டு அலுவலர்(கலாசார உத்தியோகத்தர்),
     பகுதி(பிரதேச)ச் செயலகம்,
     புதுக்குடியிருப்பு.
     மின்னஞ்சல் kavithaipoaddi2015@gmail.com
மேலதிகத் தொடர்புகளுக்கு

யோ.புரட்சி 0775892351

க.குவேந்திரன்   +61420421004க.குவேந்திரன்   +61420421004