திங்கள், 5 ஆகஸ்ட், 2013

நிரம்புவது அணை மட்டுமல்ல நம் நெஞ்சமும்தான்...


நிரம்புவது அணை மட்டுமல்ல நம் நெஞ்சமும்தான்...























கடந்த சில மாதங்களுக்கு முன் கடுமையாக வறண்டு கிடந்த மேட்டூர் அணை கர்நாடகா மாநிலத்தில் பெய்துவரும் மழை காரணமாக நிரம்பிவருகிறது.

சேலம் மாவட்டம் மேட்டூரில் காவிரி ஆற்றின் மீது கிட்டத்தட்ட பத்து ஆண்டுகளாக பத்தாயிரம் தொழிலாளர்களைக் கொண்டு , 1934-ல் கட்டிமுடிக்கப்பட்ட மேட்டூர் அணையானது, கட்டி முடிக்கப்பட்ட போது ஆசியாவிலேயே உயரமான அணையாகவும், உலகிலேயே அதிக பெரிய நீர்தேக்க அணையாகவும் விளங்கியது.

அணையில் தண்ணீர் நிரம்பியிருக்கும் நிலையில் தற்போது 59 மைலுக்கு பரந்து விரிந்து கடல் போல தண்ணீர் காட்சியளிக்கிறது. நாள்தோறும் மின்சாரம் எடுக்கப்படுகிறது. அணையில் இருந்து சுமார் 20 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள பண்ணைவாடி கிராமத்தில் இருந்த நந்தி சிலை, ஜலகண்டேஸ்வரர் கோயில், இரட்டை கோபுர தேவாலயம் எல்லாம் தண்ணீரில் முழ்கியிருக்கிறது, எங்கும் சந்தோஷம் பொங்கியிருக்கிறது.
பல லட்சம் ஏக்கர் டெல்டா விவசாயிகள் இந்த அணை நீரை நம்பித்தான் இருக்கிறார்கள், பிழைக்கிறார்கள். மேட்டூர் அணையில் இருந்து காவிரியாக கிளம்பும் ஆறு பல்வேறு கிளை நதிகளாக பிரிந்து பல ஆயிரக்கணக்கான ஏக்கர் மண்ணையும், மக்கள் மனதையும் குளிர்விக்க இருக்கிறது.

கடந்த 2ம்தேதி அணையில் கூடுதல் நீர் திறப்பின் போது நேரில் போயிருந்த போது அணையின் பல்வேறு பகுதிகளுக்கு போய் அபூர்வமான படங்கள் எடுக்கும் வாய்ப்பு கிடைத்தது.
-எல்.முருகராசு



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக