வியாழன், 3 ஜனவரி, 2013

கோடம்பாக்கம் கைத்தறி ச் சேலைக்குச் செல்வாக்கு : மதுரையின் பெருமை

கோடம்பாக்கம் கைத்தறி ச் சேலைக்கு மவுசு : மதுரையின் பெருமை பேசும் பெண்கள்

மதுரை: மதுரையில் உற்பத்தி செய்யப்படும் "கோடம்பாக்கம்' கைத்தறி சேலைக்கு சிங்கப்பூர், மலேசியா, இலங்கை உள்ளிட்ட வெளிநாடுகளில் மவுசு அதிகரித்துள்ளது.மதுரையை சேர்ந்த கைத்தறி நெசவு தொழிலாளி தெய்வேந்திரன். இவர், நூறு சதவீதம் தரமான பருத்தி நூலை பயன்படுத்தி காட்டன் சேலைகளை ஜரிகையுடன் தயாரித்து கைத்தறியில் புதுமையை புகுத்தினார்.

இவ்வகையான சேலைகளை பெண்கள் அணிவதற்கு ஈசியாகவும், பேஷனாகவும், எடை குறைவாகவும் இருந்தன. நாளடைவில் கைத்தறி காட்டன் சேலைகளுக்கு பெண்கள் மத்தியில் அமோக வரவேற்பு இருந்தது. குறிப்பாக, கோடம்பாக்கம் கோலிவுட் நடிகைகள் விரும்பி அணிந்தனர். இதனாலேயே, இச்சேலைகளுக்கு "கோடம்பாக்கம் கைத்தறி சேலை' என பெயர் வந்தது. ஏற்றுமதி அமோகம்:கோடம்பாக்கம் கைத்தறி காட்டன் சேலைகளுக்கு சிங்கப்பூர், மலேசியா, இலங்கை மற்றும் வடமாநில பெண்களிடையே அமோக வரவேற்பு உள்ளது. அதிகளவு ஏற்றுமதி செய்யப்படுகிறது. மதுரையில் ஒத்தக்கடை, கடச்சனேந்தல்,  திருப்பரங்குன்றம் கைத்தறிநகர், வில்லாபுரம், அவனியாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் கோடம்பாக்கம் சேலைகளை ஆர்டரின் பேரில் நெசவாளர்கள் உற்பத்தி செய்கின்றனர்.
ரூ.800 முதல் விலை:
மதுரை நரசிங்கம்பட்டியை சேர்ந்த நெசவாளர் கண்ணன்: விசைத்தறியில் பெரிய டிசைன் சேலைகளை தயாரிக்க முடியாது. இது கைத்தறியில் சாத்தியமாகும். "நைசாகவும்' இருக்கும். இவ்வகை சேலைகளுக்கு என்றைக்குமே மவுசு இருந்து கொண்டே இருக்கிறது. ஒரு பாவுக்கு பத்து சேலைகளை தயாரிக்கலாம். ஒரு சேலைக்கு 200 ரூபாய் கூலி. நாள் ஒன்றுக்கு ஒரு சேலை தான் தயாரிக்க முடியும். சேலையின் விலை 800 ரூபாய் என்றார்.மதுரை த்தக்கடையை சேர்ந்த நெசவாளர் கிருஷ்ணமூர்த்தி: கைத்தறி ஜவுளி தொழிலில் நிலைத்து நிற்பது கோடம்பாக்கம் சேலைகள் தான். இதனை கைத்தறியில் மட்டுமே தயாரிக்க முடியும். விசைத்தறியில் இயலாது. சம்பளம் குறைவாக இருப்பதால், கைத்தறி நெசவு படிப்படியாக குறைந்து வருகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக