ஞாயிறு, 2 செப்டம்பர், 2012

இராசபட்சவை இந்தியா எச்சரிக்க வேண்டும்: இராமதாசு மறைமுகமாக பக்சேவை வரவேற்கிறாரா?



இதன் மூலம் மரு.இராமதாசு கொடுங்கோலன் இனப்படுகொலையாளி பக்சேவை இந்தியா  வரவேற்க ஒத்துக் கொண்டார் என்பது புரிகிறது. வரும் தேர்தலில் கூட்டணிக்கான அச்சாரமா? வழக்கு விடுவிப்பிற்கான அடையாளப்பேரமா? இந்நிலையை மாற்றி பக்வேசே வருகையைக் கண்டித்து வரவிடாமல் செய்ய முன்வர வ‌ேண்டும்.அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழா விழி! எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்! /



இலங்கையில் தமிழ் ப் பெண்கள் சீரழிப்பு;  இராசபட்சவை இந்தியா எச்சரிக்க வேண்டும்: இராமதாசு


Last Updated : 02 Sep 2012 05:53:32 PM IST

சென்னை, செப். 2: தமிழ்ப்பெண்களுக்கு எதிரான சிங்களப் படையினரின் பாலியில் அத்துமீறல்களையும், தமிழர்களுக்கு எதிரான மனித உரிமை மீறல்களையும் உடனடியாக தடுத்து நிறுத்தும்படி ராஜபக்சேவை பிரதமர் மன்மோகன்சிங் எச்சரிக்க வேண்டும் என்று பா.ம.க நிறுவனர் ராமதாஸ் கேட்டுக்கொண்டுள்ளார்.இதுகுறித்து இன்று அவர் வெளிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது:இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாநிலங்களில் வாழும் தமிழர்கள் அனைவரும் சுயமரியாதையுடனும், அரசியல் அதிகாரத்துடனும் வாழ்வதற்கு தனித் தமிழீழம் அமைப்பது தான் ஒர் தீர்வு என்ற முழக்கம் உலகம் முழுவதும் தீவிரமடைந்து வருகிறது. இந்நிலையில், தமிழர்கள் வாழும் பகுதிகளிலிருந்து சிங்களப் படைகளை வெளியேற்ற வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்க மறுத்துவிட்ட இலங்கை அரசு,  அண்மைக் காலமாக போரில் பாதிக்கப்பட்ட தமிழ்ப்பெண்களையும், போருக்குப் பின்னர் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்ட பெண் போராளிகளையும் விசாரணை என்ற பெயரில் முகாம்களுக்கு அழைத்துச் செல்லும் சிங்களப் படையினர் அவர்களை பாலியல் வன்கொடுமைகளுக்கு உள்ளாக்குவதாகவும்,  இதையெல்லாம் எதிர்த்து கேட்க முடியாத தமிழ்ப்பெண்கள் நடைபிணங்களாக வாழ்ந்து வருவதாகவும், நூற்றுக்கணக்கான பெண்கள் அவமானம் தாங்க முடியாமல் தற்கொலை செய்து கொண்டிருப்பதாகவும் அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.தமிழ் இனத்தை அடியோடு அழித்துவிட வேண்டும் என்ற எண்ணத்துடன் திட்டமிட்டு இத்தகைய கொடுமைகளைஅரங்கேற்றி வருகின்றது இலங்கை அரசு.  தமிழகத் தமிழர்களின் தொப்புள் கொடி உறவுகளான ஈழத்தமிழ்ப்பெண்களுக்கு இழைக்கப்படும் இந்தக் கொடுமைகளுக்கு முடிவு கட்ட வேண்டிய கடமையும், பொறுப்பும் இந்திய அரசுக்கு உண்டு. எனவே  வரும் 21ம் தேதி இந்தியா வரும் இலங்கை அதிபர் இராஜபக்சேவை கடுமையான வார்த்தைகளால் பிரதமர் மன்மோகன்சிங் எச்சரிக்க வேண்டும். அதுமட்டுமின்றி இம்மாதம் 10ம் தேதி முதல் 28ம் தேதி வரை ஜெனிவாவில் நடைபெறவிருக்கும் ஐ.நா. மனித உரிமை ஆணையத்தின் 21வது கூட்டத்திலும் இதுகுறித்து பிரச்சினை எழுப்பி இலங்கையை உலக நாடுகள் கண்டிக்கவும், எச்சரிக்கவும் மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கேட்டுக்கொண்டுள்ளார்.
கருத்துகள்

இந்திய ராணுவம் அமைதிப்படை என்ற பெயரில் இதை விட மோசமான மிருகத்தனமான வேலைசெய்தார்கள்.உதாரணம் தாயையுனம் தந்தையையும் தூணில் கட்டிவைத்து அவர்களின் கண் முன்னே பெண்பிள்ளைகளைகற்பழித்தார்கள்.வங்காளதேசத்தில் இதைவிட கொடுமைகள் செய்தார்கள்.இதை அறிந்ததுதான் பிரபாகரன் இந்தியன் ராணுவத்தின் வருகையை ஆரம்பத்தில் இருந்தே எதிர்த்தார். இப்படியான நிலையில் இந்திய அரசிடம் முறையிடுவதில் என்ன பலன். ஒரு வழியில் பிரபாகரனின் பிழையான முடிவுகளும் இப்படி நடப்பதற்ற்கு ஒரு காரணம். யார் செய்தாலும் தவறு தவறுதான்.
By ப.kasi
9/2/2012 7:45:00 PM
மறுத்தவர் அய்யா அவர்கள் கேட்டுக் கொண்டப்படி நிச்சயமாக மத்திய அரசு ராஜபக்சேவை எச்சரிக்க மாடார்கள். வேண்டுமென்றால், நாம் எதிர்பார்க்கின்ற வேண்டுகோளின்படி, தமிழக அரசியல் கட்சித் தலைவர்களையும், அவர்களின் ஆதரவாளர்களையும் எச்சரியுங்கள் என்று பிரதமரை சந்திக்கும்போது அதிபர் கேட்டுக் கொண்டால் நிச்சயம் கேட்பார்கள். பொறுத்திருந்துப் பாருங்கள்! இப்போது நம்மிடையே வேண்டப்படுவது, தமிழர்கள் என்ற உணர்வும், ஒற்றுமையும், நல்ல மாற்றங்களும், மறுமலர்ச்சியும், எழுச்சியும் என்பதை மறவாலி ருப்போம்.
By பழனிசாமி T
9/2/2012 7:30:00 PM
பொதுவாக தமிழக அரசியல் கட்சிகள் தங்கள் சுய நலனுக்காகவே அரசியல் நடத்துவது நூற்றுக்கு நூறு உண்மை. இவர்களால் தமிழர்கள் மத்தியில் எந்த மாற்றத்தையும் கொண்டு வரமுடியாது. சுய மரியாதைக் கெட்ட அரசியல் கட்சிகள். அரசியல் கட்சித் தலைவர்களில் விதிவிலக்குமுண்டு. இவற்றிற்கெல்லாம் மக்களின் மனப்போக்கும், மந்தப் போகும்தான் காரணம். மக்கள் மக்களாக வாழ்ந்தால் இந்த அவல நிலை, ஈழத் தமிழர்களுக்கு மட்டுமின்றி, கச்சத் தீவு மீனவர்களுக்கும் ஏற்ப் பட்டிருக்காது. "எவன் வாழ்ந்தால் என்ன, செத்தால் என்ன" என்ற பரவலான சுயநலப் போக்கு நம்மிடை யே இருப்பதுதான் மறுக்கமுடியாத உண்மை. மக்களாட்சியின் அருமைத் தெரிந்தவர்கள், மனித உரிமைக்கு மதிப்புக் கொடுப்பவர்கள், குறிப்பாக மேலை நாட்டவர்கள், இவர்களுக்குதான் உயிரின் விலை தெரியும். இந்த விலை மதிப்பற்ற செல்வங் கள் இன்றும் நம்மிடையே இல்லை. இனிமேலாவது மக்களிடம் கொஞ்சம் நல்ல எழுச்சி, மாற்றங்களை எதிர்ப்பார்கலாமா? தமிழர்கள் என்ற உணர்வை யாவது முதலில் நாம் வளர்ப்போம்.
By பழனிசாமி T
9/2/2012 7:09:00 PM
இந்த மனிதருக்கு மட்டும் இந்த நியூஸ் எப்படி கிடைச்சது என்று புரியவில்லை இலங்கை தமிழர் நாங்களே கேள்விபடாத ஒன்று தன் சொந்த அரசியலுக்கு ஏன் தான் இலங்கை தமிழ் பெண்களின் மானத்தை விற்று பிழைக்கணும்
By mohan
9/2/2012 7:01:00 PM
கொத்து கொத்தாக தமிழரை அளிக்க துணை நின்டவரக்ளுக்கு இப்ப நடப்பது பெரிய விடயம் இல்லை இந்திய தமிழ் மீனவர் பற்றியே அக்கரி இல்லாதவர்கள் இதை எப்படி பார்ப்பார்கள் தமிழகத்தில் உள்ள அரசியல் கட்ச்சிகள் தங்கள் சுய நலனுக்காகவே அரசியல் நடத்துகிறார்கள்
By pillai
9/2/2012 1:00:00 PM
ஹி ஹி ஹி பெரிய டவுசர் ...அன்று 2009 இது நடந்த போது பேடி கருணாநிதியின் தோளில் சாய்ந்து நின்று இதை ரசித்தவன் ..தான் நீ ...இப்பொது எல்லோரையும் போல் எடுத்துவிட்டார் ஈழ தமிழர் பிரச்சினையை ..ஆக தேவைபடால் எடுப்பீர்கள் ..அவர்களை
By KOOPU
9/2/2012 12:58:00 PM
..ராமதாசிற்கு தெரியும் பிரதமர் ஒன்றும் செய்ய மாட்டார் என்று ! ஏன் இந்த வெட்டி அறிக்கை ! அழிவது வடக்கித்தியர் இனம் அல்லவே !
By ர.Krishanmurthy
9/2/2012 12:35:00 PM





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக