புதன், 5 செப்டம்பர், 2012

மூளை (Brain)

மூளை (Brain)

மூளை

(Brain)

- இலக்குவனார் திருவள்ளுவன்

மூளை, உடற்செயல்களைக் கட்டுப்படுத்தி ஒருமுகப்படுத்தும் உறுப்பு ஆகும். அனைத்துச் செயல்களுக்கான கட்டளைகளும் முளைக்கும் இடம் என்பதால் (முளை>) மூளை எனப்படுகிறது. இருபக்கச் சமச்சீருள்ள உயிரினங்களுக்கு மூளை இருக்கும். மைய நரம்புமண்டலத்தின் முன்பகுதி இதுவே.

நரம்பு மெய்ம்மியால் ஆன மிகப் பெரிய உறுப்பு மூளை. இது, மண்டை ஓட்டின் உள்ளே பாதுகாப்பாக உள்ளது. வெளிச் சவ்வு, நடுச்சவ்வு, உள் சவ்வு ஆகிய மூன்று சவ்வுப் போர்வைகளால் மூடப்பெற்றுள்ளது.

மூளையானது, முன் மூளை, நடு மூளை, பின் மூளை என மூன்று பகுதியாகப் பிரித்து அறியப்படும்.முன்மூளையானது, பெருமூளை, இடை மூளை என இருபகுதியாகும்.

பெருமூளை இரண்டுஅரைக்கோளங்களாகக் காணப்படும். இரு கோளங்களுக்கும் இடையில் (பெருமூளை)நீள்பள்ளம் உள்ளது. பெருமூளையின் மறுபுறம்,

01. உவளிடம்,

02. கீழ் உவளிடம்,

03. அடி உவளிடம்,

04. நடு உவளிடம்,

05. பக்க உவளிடம்

ஆகியன உள்ளன.


தொடர்ச்சிக்கு :

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக