ஞாயிறு, 22 மே, 2011

Chinna kuthuusi expired: மூத்தஇதழாளர் சின்னக்குத்தூசி காலமானார்

 
சாதி, சமய வேறுபாடின்றி எக்கருத்தையும் ஆராய்ந்த இதழாளர் மறைவிற்கு ஆழ்ந்த  இரங்கல்கள். இளம் இதழாளர்கள் அவரைப்பின்பற்றினால் நன்று. அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழா விழி! / எழுத்தைக் காப்போம்!  மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!  

மூத்த பத்திரிகையாளர் சின்னக்குத்தூசி காலமானார்
First Published : 22 May 2011 10:52:12 AM IST


சென்னை, மே 22: மூத்த பத்திரிகையாளர் சின்னக்குத்தூசி சென்னையில் இன்று காலமானார். அவருக்கு வயது 77. இரா.தியாகராஜன் என்பது அவருடைய இயற்பெயர். கடந்த ஒரு வருடமாகவே உடல்நலம் பாதிக்கப்பட்டு சென்னையில் தனியார் மருத்துவமனையில் உயர்சிகிச்சை பெற்று வந்தார். தன் உடல்நிலையைக் கருத்தில் கொள்ளாமல் தொடர்ந்து கட்டுரைகள் பல எழுதிவந்தார். 15.06.1934ல் திருவாரூரில் பிறந்தவர். ராமநாதன் - கமலா தம்பதியரின் புதல்வர். திருவாரூரில் பள்ளிப்படிப்பு முடித்து, ஆசிரியர் பயிற்சி பெற்று, பல்வேறு பள்ளிகளில் ஆசிரியராகப் பணி புரிந்தவர். பின்னாளில் பத்திரிகையாளராகப் பரிமளித்த அவர், பல்வேறு இதழ்களிலும் எழுதியுள்ளார். பத்திரிகையாசிரியராகவும் பணியாற்றியுள்ளார். பொதுவாழ்க்கை - எழுத்துப்பணி இவற்றுக்காக திருமணம் செய்துகொள்ளாமல் வாழ்ந்தவர் இவர்.இவரது இறுதிச் சடங்கு, இன்று (மே 22) மாலை 4 மணி அளவில் பெசன்ட் நகர் மின்மயானத்தில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள்

சிறந்த பத்திரிக்கையாளர்களில் ஒருவரான, சின்ன குத்தூசி அவர்கள் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறேன். அவரது மறைவு, பத்திரிக்கை உலகிற்கு இழப்பு.
By பி.டி.முருகன் திருச்சி
5/22/2011 12:08:00 PM
அடடா, நேற்றுதான் இவரை பற்றி விகடனில் படித்தேன். தி.மு.க. திருந்துவதற்கு இவர் பேனா உயரட்டும் என்று எழுதியிருந்தார்கள். கடவுளே தி.மு.க. திருந்தக் கூடாது என்று நினைத்து விட்டார் போலும்.
By Paamaran
5/22/2011 11:34:00 AM
எவ்வளவு தலைவர்களை சந்தித்த ஒரு நல்ல பத்திரிகையாளர் மறைந்து விட்டார்.பத்திரிகை உலகுக்கு ஒரு ஈடு செய்ய முடியாத இழப்பு.அவர் ஆத்மா சாந்தியடையட்டும்
By vaayaadi
5/22/2011 11:25:00 AM
May rest in peace, kudos for his excellent services to the community
By RSekar
5/22/2011 11:12:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக