திங்கள், 22 பிப்ரவரி, 2010

முல்லைப் பெரியாறு: திமுக நிலைக்கு பாமக ஆதரவு



சென்னை, பிப். 21: முல்லைப் பெரியாறு அணைப் பிரச்னை தொடர்பாக உச்ச நீதிமன்றம் நியமித்துள்ள ஐவர் குழுவில் தமிழகத்தின் சார்பில் யாரும் இடம்பெறத் தேவையில்லை என திமுக எடுத்துள்ள நிலைப்பாட்டுக்கு பாமக வரவேற்பு தெரிவித்துள்ளது.÷இது குறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கை:÷முல்லைப் பெரியாறு வழக்கின் தன்மையை திசைதிருப்பும் வகையில், அணையின் பாதுகாப்புத் தன்மையை மீண்டும் ஆராய வேண்டும் என்றும், அதற்காக ஐவர் குழுவை அமைப்பதாகவும் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இது பெரும் அதிர்ச்சியையும், ஏமாற்றத்தையும் அளித்துள்ளது. இப்பிரச்னை குறித்து அனைத்துக் கட்சி கூட்டத்தைக் கூட்டி முடிவெடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தேன். ஆனால் "ஐவர் குழுவில் தமிழகம் இடம்பெறத் தேவையில்லை' என்று திமுக பொதுக்குழுவில் முடிவெடுத்து அறிவித்துள்ளார்கள்.÷இதனை அனைத்துக் கட்சித் தலைவர்களும் ஏற்றுக் கொள்வார்கள் என்று முதல்வர் கருணாநிதி நம்பிக்கை தெரிவித்துள்ளார். இதுவும் ஒரு வழி என்ற வகையில் அதனை பாமக ஏற்றுக் கொள்கிறது. முல்லைப் பெரியாறு பிரச்னை மட்டுமல்ல, பல்வேறு ஆற்றுநீர் பிரச்னைகளில் தமிழகத்துக்கு கேரளம் உதவ மறுத்து வருகிறது. குமரி மாவட்டத்துக்குப் பயன்தரும் நெய்யாற்று தண்ணீரில் புதிதாகப் பிரச்னை கிளப்புகிறது.÷அரிசி, காய்கறிகள், மின்சாரம், மணல் போன்ற ஜீவாதாரப் பிரச்னைகளில் தமிழகத்தை நம்பியுள்ள கேரளம், ஆற்றுநீர் பிரச்னையில் தமிழகத்துக்கு எதிராகச் செயல்பட்டு வருகிறது. தமிழகத்தின் உரிமைகளை நிலைநாட்ட அனைத்து கட்சிகளும் ஒன்றுபட்டு போராட வேண்டும். இந்தக் கடமையை உணர்ந்து அனைவரும் செயல்பட வேண்டும் என்று ராமதாஸ் கூறியுள்ளார்.
கருத்துக்கள்

தீர்ப்பை மறுக்கவில்லை. ஆனால் குழுவில் இடம் பெறவில்லை என்றுதான் கலைஞர் தெரிவித்துள்ளார்.முற்றிலும் புறக்கணிக்கச் சொல்லும் பாமக வின் கருததிற்கு இக்கருத்து எதிரானது. எனினும் எப்படியும் நா.உ. பதவி பெற வேண்டும் என்ற எண்ணத்தில் இருக்கும் பொழுது ஒத்து ஊதித்தானே ஆக வேண்டும்.

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
2/22/2010 3:48:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக