திங்கள், 28 ஜனவரி, 2013
திங்கள், 27 ஆகஸ்ட், 2012
இருப்புப் பாதைகள் அருகே வீடுகள் கட்டித்தர திட்டம்
இதுதொடர்பாக, டில்லி யில், ரயில்வே அமைச்சக உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:நாட்டில் பல இடங்களில், ரயில்வேக்கு சொந்தமான இடங்களில், 1.34 லட்சம் ஆக்கிரமிப்புகள் உள்ளன. அதாவது, ரயில்வேக்கு சொந்தமான மொத்த நிலங்களில், 981 எக்டேர் நிலங்கள், ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன.வடக்கு ரயில்வே மண்டலத்தில், 220 எக்டேரும், வடகிழக்கு எல்லை ரயில்வே பகுதியில், 167 எக்டேரும், தென் கிழக்கு மண்டல ரயில்வே பகுதியில், 162 எக்டேர் நிலங்களும் ஆக்கிரமிப்பாளர்களின் பிடியில் உள்ளன.சீரான மற்றும் விரைவான ரயில் போக்குவரத்திற்கு தடையாக, ரயில் பாதைகளை ஒட்டியே, இந்த ஆக்கிரமிப்புகள் உள்ளன. இவற்றை அகற்றவும், அந்த இடங்களில் வசிக்கும் குடிசைவாசிகளுக்கு, மாற்றிடமாக, குறைந்த செலவில் வீடுகளை கட்டிக் கொடுக்கவும், ரயில்வே துறை முடிவு செய்துள்ளது.
இந்த திட்டத்திற்கு, "சுகி கிரஹா' என, பெயரிடப்பட்டு, டில்லி, மும்பை நகரங்களில் இதற்கான பணிகள் துவங்கியுள்ளன. மும்பை நகரில், 22 கோடி ரூபாய் செலவிலும், டில்லியில், 11 கோடி ரூபாய் செலவிலும், குறைந்த செலவிலான வீடுகள் கட்டப்பட உள்ளன.இந்த திட்டமானது, 2011-12ம் ஆண்டு, ரயில்வே பட்ஜெட்டிலேயே, அப்போதைய, ரயில்வே அமைச்சர் மம்தா பானர்ஜியால் அறிவிக்கப்பட்டது. இந்த வீடு கட்டும் திட்டம், நாட்டில் முதல் கட்டமாக, டில்லி, மும்பை, திருச்சி, சீல்தாக் மற்றும் சிலிகுரி ஆகிய ஐந்து இடங்களில் செயல்படுத்தப்படும்.
இதுதவிர, இந்த ரயில் பாதைகளை ஒட்டிய ஆக்கிரமிப்பு பிரச்னை, மத்திய நகர்ப்புற வீட்டு வசதி மற்றும் வறுமை ஒழிப்பு அமைச்சகத்தின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. குடிசை வாசிகளை மாற்ற, மாநில அரசுகளுடன் இணைந்து, மேற்கொள் ளப் படும், "ராஜிவ் அவாஸ் யோஜனா' திட்டத்தின் கீழும், ரயில் பாதைகளுக்கு அருகே வசிப்பவர்களுக்கு வீடுகள் தர வேண்டும் என, கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.இவ்வாறு ரயில்வே அமைச்சக உயர் அதிகாரி கூறினார்.- தினமலர்
புதன், 22 பிப்ரவரி, 2012
Urging Colombo to rebuild railway to north evokes 143-year-old debate
Urging Colombo to rebuild railway to north evokes 143-year-old debate
[TamilNet, Tuesday, 21 February 2012, 00:39 GMT]A group of politicians, academics and NGO workers in the South including some Tamils and Muslims of southern orientation, while urging implementation of several LLRC recommendations in consultation with the TNA, and at the same time urging demilitarisation and political solution based on devolution, concluded their signed statement on Friday, wondering it was “hard to understand delay in rebuilding the railway to the north – a one time artery of commerce and people movement.” The perception of the model of ‘integration’ with the Colombo-based system, evokes 143-year-old debate on ‘the tale of two cities’, started by the then British Government Agent in Jaffna, Sir William Twynham, whether the railway makes Jaffna independent or dependent of Colombo. Twynham in his time rather preferred to develop the external trade of the ports in Jaffna and land-link them with the rest of the island.
Further comments from an academic in Jaffna follow:
The railway has come to then British Ceylon in 1864.
The British colonial focus of the railway was linking their latest conquest in the island, Kandy, and the plantations in the hill country to facilitate the export of tea.
The immediate economic victim was Batticaloa, because until then the produce of the tea estates were largely exported through the Batticaloa port in the east of the country of Eezham Tamils.
But the British Government Agent Twynham in Jaffna was thinking in terms of the people of the land he was administering.
In 1869, Twynham built the Punnaalai causeway, linking the Kayts harbour with the rest of the island to improve the local economic independence and external trade that was at that time based on tobacco.
Long caravans of bullock carts starting from the Kayts harbour with commercial items coming in return from as far as Bengal, were taken to the south for trade.
Twynham, who loved the country and people he was administering, strongly argued with the British colonial office against linking Jaffna with Colombo by railway. Twynham retired in 1896, he chose to spend even his retirement life in Jaffna and died in Jaffna.
Twynham was proved right when the railway finally came to Jaffna with commodities coming from Colombo. The ports of Jaffna were closed and became ghost towns. The traders became subordinates by having their shops in the south – to be chased away after every pogrom and then to plead for their return, and not for their national rights. Others who continued with their ancient profession became ‘smugglers’.
The then leading politician of the north, who saw to it that a railway station was built at I’nuvil to facilitate his travels from Colombo, heralded a paradigm of ‘Colombo-Tamils’ deciding the polity of Eezham Tamils.
Now, we see a trend of Sinhala capital coming to the north with military protection and colonial enclaves for further subordination of the nation of Eezham Tamils. The diaspora is not allowed an independent entry to its land for investment. The forces of Colombo-centric thinking are keen in even luring the diaspora into the pattern. The railway, following its long colonial tradition, is now to enhance the agenda of the new colonial masters.
India could have helped the situation by swiftly opening the ports and trade in the north, by developing an appropriate communication through Naakappaddinam, Point Calimere and Athiraam-paddinam and by insisting on Colombo for the development of east coast link of Batticaloa and Trincomalee with Point Pedro. But New Delhi doesn’t want to do it, while its politicians in Tamil Nadu brag about the Thooththukkudi–Colombo ferry.
What is pricking to a Tamil mind is that the signatories of the statement who worry about “people movement” between Colombo and Jaffna have shown no concern at all about people movement within the nation of Eezham Tamils along the eastern and western coasts. Eezham Tamils are long deprived of this ‘people movement’ within their own nation, as Colombo has been deliberately sitting on it.
The formation of a civil society movement based on the grassroot organizations of the north and east has become a pricking problem for some of the Tamil minds seeking space but can’t conceive anything beyond the Colombo-centric life of subjugation, and have been conditioned to remain so, by forces inside and outside of the island. One could see that in the mushrooming Colombo-based Tamil signatories claiming ‘civil society’, but belonging to only certain families and esoteric groups.
Once a section of the elite and affluent of the Eezham Tamil nation bases its property, interests, professional opportunities and orientation of outlook in Colombo, its concern about the liberation of its nation is bound only to the extent of bringing in equilibrium to suit its interests, within the Colombo-centric system preserved at any cost. Eezham Tamils in the island and in the diaspora, as well as grassroot Tamil Nadu should carefully understand where the ultimate problems exist and what to do about them.
External Links:
| The Island: | An appeal to the Tamil Community and its civil and political representatives | |
| The Island: | Practical steps to meaningful reconciliation |
செவ்வாய், 27 டிசம்பர், 2011
Social service by railway labourers: இதுவல்லவோ மனித நேயம்! :
தன்னைப் போன்ற, ஆதரவற்ற சிறுவர்களை மீட்டு, மறுவாழ்வு அளிப்பது தான், அவரது குறிக்கோள். ரயில்வே ஸ்டேஷன், பஸ் ஸ்டாண்ட் மற்றும் பல்வேறு பகுதிகளில், உற்றார் உறவினர்களை இழந்து, நிர்கதியாக நிற்கும் ஆதரவற்ற குழந்தைகளை கண்டுபிடித்து, அவர்களுக்கு மறுவாழ்வு அளிக்க அனைத்து ஏற்பாடுகளையும் செய்து தருகிறார். இதனால், ரயில்வே தொழிலாளர்கள், ஆட்டோ டிரைவர்கள், பிளாட்பார கடை வியாபாரிகள் என பலருக்கும் அறிமுகம் ஆனார். இவர்களை இணைத்து, "சமூக தன்னார்வலர் குழு' என்ற, மீட்புக்குழுவை அமைத்துள்ளார், சுரேஷ்பாபு.
இவரது முயற்சியால், இன்று ரயில்வே ஸ்டேஷன், பஸ் ஸ்டாண்ட் மற்றும் பொது இடங்களில் 50 சமூக தன்னார்வ குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த குழுக்களால், கடந்த இரண்டு ஆண்டுகளில் மீட்கப்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 74.
சமூக தன்னார்வ குழுவின் பணி குறித்து, சுரேஷ்பாபு கூறியதாவது: ஆதரவற்ற குழந்தைகளுக்கு அடைக்கலம் அளிக்கும், டான் பாஸ்கோ அன்பு இல்லம், சைல்டுலைன் மற்றும் தன்னார்வ அமைப்புகளுடன் இணைந்து இப்பணியை மேற்கொள்கிறோம். எங்கள் குழுவில் இருப்பவர்கள், சாதாரண தொழிலாளர்கள் தான். அன்றாட வருமானத்திற்காக தினக்கூலி செய்யும் ரயில்வே பார்சல் தொழிலாளர்கள், ஆட்டோ - டாக்சி டிரைவர்கள் என, சிலரை தேர்வு செய்து, இந்த குழுவை அமைத்துள்ளோம். ஆதரவற்ற குழந்தைகள், மனநலம் குன்றியோர் என யாராவது ஒருவரைப் பார்க்க நேரிட்டால், தன்னார்வ குழுவினர், உடனடியாக சைல்டுலைன் மற்றும் போலீசாருக்கு, தகவல்களை தெரிவிப்பர். முதலில் குழந்தைகளை மீட்டு, உணவு மற்றும் உதவிகளை அளிப்பர். குழந்தைகள் பேசும் நிலையில் இருந்தால், "சைல்டுலைன்' கட்டணமில்லா தொலைபேசி எண் 1098 குறித்து, விழிப்புணர்வு ஏற்படுத்துவர். விபத்தில் சிக்கியவர்களை, மருத்துவமனையில் அனுமதிப்பது, ரத்தம் தேவைப்பட்டால் ரத்த தானம் செய்வது,பெற்றோரிடம் கோபித்து வந்த குழந்தைகளுக்கு கவுன்சலிங் அளிப்பது உள்ளிட்ட பணிகளை மேற்கொள்வர். இவ்வாறு, சுரேஷ் பாபு கூறினார்.
சமூக பாதுகாப்பு குழுவில், இடம்பெற்றுள்ள, ரயில்வே பார்சல் தொழிலாளிகள் ராமமூர்த்தி, செந்தில்குமார் கூறியது: வழியும், மொழியும் தெரியாத வட மாநில குழந்தைகள், குடிகார தந்தையால் வீட்டை விட்டு விரட்டியடிக்கப்பட்ட குழந்தைகள், வீட்டு எஜமானர்களின் சித்ரவதையை தாங்க முடியாத வேலைக்கார சிறுவர்கள், தாயின் கள்ளக்காதலனால் விரட்டப்பட்ட குழந்தைகள், மாற்றுத்திறனாளி குழந்தைகள், மனநலம் குன்றியோர் என, பலரும், கோவையின் பல்வேறு தெருக்களில் இருந்து மீட்கப்பட்டுள்ளனர். சில மாதங்களுக்கு முன்பு, கோவை ரயில்வே ஸ்டேஷன் பிளாட்பாரத்தில், சித்தபிரமை பிடித்தது போன்று, முழு நிர்வாணமாக நின்ற 13 வயது சிறுவன் மீட்கப்பட்டான். பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகி உடலும், மனமும் சோர்ந்த நிலையில் நின்ற, அந்த சிறுவனை மீட்டு மறுவாழ்வு அளிக்கப்பட்டது' என்றனர்.
50 குழுக்களில் 900 உறுப்பினர்கள் : சமூக தன்னார்வ பாதுகாப்பு குழுவின், ஒருங்கிணைப்பாளர் ஜாக்குலின் கூறியதாவது: மீட்கப்பட்ட குழந்தைகளை பெற்றோர் அல்லது உறவினர்களிடம் சேர்ப்பது, பெற்றோரை இழந்த குழந்தைகளை ஆதரவற்றோர் இல்லங்களில் சேர்த்து, அவர்களுக்கு கல்வி உள்ளிட்ட உதவிகளை செய்து வருகிறோம். சமூக தன்னார்வலர் குழுவில் சேர்ந்துள்ள, ரயில்வே தொழிலாளர் உள்ளிட்ட உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கியுள்ளோம். 50 குழுக்களில் மொத்தம் 900 பேர் உறுப்பினர்களாக உள்ளனர். இவர்களுடன் அடிக்கடி தொடர்பு வைத்துக்கொண்டு, பணி குறித்து ஆய்வு செய்வோம். மாதாந்திர கூட்டங்கள் நடத்தி பணியின் மேம்பாடு குறித்து விவாதிக்கப்படுகிறது. சிறந்த பணிக்கு பாராட்டு தெரிவிக்கப்படுகிறது. மூன்று மாதங்களுக்கு ஒரு முறை, பயிற்சி முகாம்கள் நடத்தப்படுகின்றன. இதில், குழந்தைகளின் உரிமைகள், குழந்தைகள் மனோபாவம், குழந்தைகள் நல திட்டங்கள், சமூக பொருளாதார மற்றும் சுற்றுச்சூழல் பிரச்னைகள் குறித்து விவாதிக்கப்படும். குழந்தைகள் கடத்தல், துன்புறுத்தலில் இருந்து பாதுகாத்தல் மற்றும் விழிப்புணர்வு குறித்தும் பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகின்றன.
இவ்வாறு, ஜாக்குலின் தெரிவித்தார்.
புதன், 13 ஜூலை, 2011
Dinamani editorial about train accidents: உயிருடன் விளையாடுகிறார்கள்!
வெள்ளி, 20 ஆகஸ்ட், 2010
திங்கள், 17 மே, 2010
இவ்வாறு நடைமேடை மாறுவதை அறிவிப்பதுமுதல் முறை யல்ல. எனக்கும் நான்கைந்து முறை இந்தஅவதி ஏற்பட்டுள்ளது. ஒரு முறை மதுரையில் மாறி மாறி 5 முறை நடைமேடை மாறுவதாக அறிவித்து அங்கும் இங்கும் அலைய விட்டார்கள். அதுபோல் கும்பகோணத்தில இருந்து சென்னை வருகையில் திருச்சிராப்பள்ளியில் மலைக்கோட்டை உடனே வேறு நடைமேடையில் இருந்து புறப்படுவதாக அறிவித்து அனைவரையும் அல்லல் படுத்தினர். ஆனால், கூட்ட நெரிசலில் சாவு ஏற்பட்ட முதல் துன்ப நிகழ்வாக இஃது இருக்கலாம். எனவே, இந்நிகழ்விற்குக் காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதுடன் பொதுவாக நாடு முழுமையும் இவ்வாறு அவ்வப்பொழுது நடைமேடை மாற்றம் முன்கூட்டி முடிவெடு்க்காமல் பயணிகளையும் வரவேற்கவும் வழியனுப்பவும வந்திருப்பவர்களையும் தொல்லைக்கு ஆளாக்கும் கெடுபிடி இடர்களைக் களைய தொடர்வண்டித்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
5/17/2010 2:33:00 AM
இதெல்லாம் படிக்கிறபோதே நமக்கு பரிதாபமாக இருக்கிறதென்றால்,பாவம் அந்த இரண்டு ஜீவன்களும் குறிப்பாக அந்த சிறுவன் என்ன பாடுபட்டிருப்பான் ,உண்மையில் அந்த அதிகாரியை டிஸ்மிஸ் செய்யவேண்டும்,இல்லாவிட்டால் இதுமாதிரியான அலட்சிய அறிவிப்பை செய்யமுடியாது
5/17/2010 2:02:00 AM
வியாழன், 25 பிப்ரவரி, 2010
இரவீந்திர நாத தாகூர் அவர்களின் 150 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு வங்கமொழியின் பெயரால் தொடர்வண்டி இயக்கவது அல்லது அவரது நூலான கீதாஞ்சலியின் பெயரால் இயக்குவது என்பது பொருத்தமாக இருக்கும். சமற்கிருதத்தின் பெயரால் இயக்குவதை நிறுத்த வேண்டும். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
2/25/2010 3:10:00 AM
தாய்மொழிகளில் தேர்வு எழுத வாய்ப்புநல்கும் மம்தாவிற்குப் பாராட்டுகள். இதனை அனைத்துத் துறைகளும் தனியார் நிறுவனங்களும் பயன்படுத்தி மொழிச் சமநிலையை ஏற்படுத்த வேண்டும். இதன் மூலம் தேசிய மொழிகளின் உரிமைகள் காக்கப்பட்டு இந்தியக் கண்டத்தின் ஒற்றுமையும் பேணப்படும். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
2/25/2010 2:55:00 AM
புதன், 23 டிசம்பர், 2009
நம்மோடு நட்புடன் பழகி, நாம் ஆதரித்தால் தான் உலக நாடுகளில் ஒரு நாடாக மலரும் நிலை உள்ளது. ஆனால் நம்முடன் நட்புடன் பழகிய ஈழத் தமிழ் நாட்டைச் சிதைத்தது ஏன்? நாம் ஆதரித்தால் தமிழ் ஈழம் மலர்ந்திருக்கும் என்ற உண்மையை உரைத்ததற்குப் பாராட்டுகள். ஆனால் நட்பு நாடி வந்தவர்களை விரட்டி யடித்து விட்டு வஞ்சகர்களுடன் கைகோத்துக் கொத்துக் கொத்தாகவும் எரி குண்டுகள் மூலமும் வஞ்சகச் செயல்கள் மூலமும், வெண்கொடி ஏந்தி வரச் செய்தும் அழித்தொழிததது ஏன்? மனச் சான்று எட்டிப பார்ப்பதால் காங்கிரசுடன் உறவு முறியும் பொழுது உண்மை வெளிவரும். ஆனால் உயிரிழந்த நம்மவர்கள் மீண்டு வருவார்களா? உடலுறுப்புகளை இழந்தோரும் உடைமைகளை இழந்தோரும மீள் நிலைக்குத் திரும்புவார்களா? வேதனையுடன் இலக்குவனார் திருவள்ளுவன்
12/23/2009 3:21:00 AM
பெட்டிகளில் பயணம் செய்யப் பதிவு செய்தோர் மிகுதியாக இருக்கும் பொழுது கூடுதல் பெட்டிகள் இணைக்கப்படுவதில்லையா? அது போல் சூழலுக்கேற்பத்தான் முடிவெடுக்க வேண்டும். உவமைகள் செய்தியைப் புரிந்து கொள்ள உதவலாமே தவிர உண்மையாகிவிடாது. தமிழ் நாட்டைப் பிரிக்கலாமா அல்லது வேண்டாவா எனக் கூறும் உரிமை நமக்கு உண்டு. பிற மாநிலங்களைப் பொறுத்தவரை அந்தந்த மாநிலத்தவர்தான் முடிவெடுக்க வேண்டும். தலையிடும் உரிமை பிற மாநிலத்தவருக்குக் கிடையாது. 1947க்குப் பின்னர்ப் புதிய மாநிலங்கள் பல உருவாகியிருக்கும் பொழுது மேலும் மாநிலங்கள் பிரிக்கப்படுவது கொலைபாதகச் செயலன்று. அதேநேரம் பிரித்துத்தான் ஆக வேண்டும் என்ற கட்டாயமுமன்று. எனவே, உரிய மாநிலததவர் அமைதியான வழீயில் அணுகி உரிய தீர்வுகளை எட்ட வேண்டும். பிற மாநிலத்தவர் தலையிடுவதற்கான உரிமையைத் தரக் கூடாது. மாநிலங்களைப் பிரிக்கக் கூடாது என்றால்தான் இந்தியன் என்ற தேசப்பற்று முத்திரை கிடைக்கும் என எண்ணுவது அறியாமை அல்லவா?
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
12/23/2009 3:12:00 AM
செவ்வாய், 22 டிசம்பர், 2009
தடி எடுத்தவன் தண்டல்காரன் என்னும் நிலை காங்கிரசுக் கூட்டணியில் இருப்பதை நன்றாகத் தோலுரித்துக் காட்டியுள்ளீர்கள். பாராட்டுகள்! ஆனால், இவர்கள் கைகளில் ஆட்சிப பொறுப்பை விடுகிறோமே என்று மக்கள் என்று வெட்கப்படப் போகிறார்கள் என்றுதான் தெரியவில்லை. அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
12/22/2009 3:37:00 AM
திங்கள், 9 நவம்பர், 2009
தமிழ் மண்ணில் தமிழருக்கு வாய்ப்பில்லை என்றால் அவலம் என இடித்துரைக்கும் தினமணிக்குப் பாராட்டுகள்! தொடர் வண்டித்துறை என்று மட்டுமல்ல எல்லா பணி வாய்ப்புகளிலும் இந்த அவலம்தான் உள்ளது. இதனைத் துடைத்தெறிய அரசியல் கட்சிகளை நம்பாமல் மக்கள் பாடுபட வேண்டும். 80 விழுக்காடு மாநிலத்தவர்க்கு 20 விழுக்காடு அந்தந்த மாநில மொழிகளை அறிந்த பிற மாநிலத்தவருக்கு எனப் பொது விதி வகுத்தால் மண்ணின் மைந்தர் உரிமை காப்பாற்றப்படும்.
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
11/9/2009 3:03:00 AM
புதன், 21 அக்டோபர், 2009
சென்னை, அக். 20: சென்னை கடற்கரை- தாம்பரம் இடையே இயக்கப்படும் புறநகர் மின் ரயில்களில், தமிழில் ஒளிரும் எழுத்துகளுடன் செவ்வாய்க்கிழமை முதல் அறிவிப்பு செய்யப்படுகிறது.
இந்த மின் ரயில்களின் பெட்டிகளில் வைக்கப்பட்டுள்ள மின்னணு பலகைகளில், அடுத்து வரும் ரயில் நிலையங்கள், நேரம் குறித்து ஆங்கிலத்தில் மட்டுமன்றி தமிழிலும் இனி அறிவிப்பு செய்யப்படும் என தென்னக ரயில்வே செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏதோ அயல்நாட்டில் தமிழில்அறிவிப்பு செய்வது போல் சொல்ல வேண்டிய கொடுமை விடுதலை இந்தியாவில் அடிமைத் தமிழுக்கு இருக்கிறது என்பது இதன் மூலம் புரிகின்றது.தொடர்வண்டித்துறையிலும் தொலை பேசித் துறை முதலான பிற மத்திய அரசு அலுவலகங்களிலும் நமசுகார் எனப் பதிவுக் குரலை ஒலிபரப்பாமல் வணக்கம் என ஒலி பரப்பவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். எங்கும் தமிழ் என்பதை இன்னும் வாய்ப்பேச்சாகச் சொல்லிக் கொண்டிராமல் செயலாக்கம் காண வேண்டும். தமிழ் நாட்டில் தமிழ் கடைநிலை மொழியாக இருக்கும் அவல நிலையை உடனே போக்க வேண்டும். தமிழுக்கு மதிப்பு தந்தால் தமிழன் தானாக உயருவான். தமிழனை உயர்த்தினாலும் தமிழ் வளம் பெறும். இரண்டும் இணையாக நடைபெற வேண்ணடும்.
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
10/21/2009 2:47:00 AM
செவ்வாய், 6 அக்டோபர், 2009
பாராட்டுகள். இதுபோல் மத்திய அரசு நடத்தும் அனைத்துத் தேர்வுகளையும் அவரவர் தாய்மொழியில் எழுத உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும். சான்றாகக் கோயம்புத்தூரில் உள்ள படைப் பள்ளியான சைனிக் பள்ளி போன்று நாடெங்கும் உள்ள பள்ளிகளில் சேர இந்தி அல்லது ஆங்கிலத்திலதான் தேர்வு எழுத வேண்டும். இந்தி தெரிந்தவர்கள்தாம் படைத்துறைக்குத் தகுதியானவர்கள் என்று மத்திய அரசு செயல்படுவது நமக்கெல்லாம் இழுக்கல்லவா? தமிழ் தமிழ் என்று முழங்குவோர் இதுபற்றி யெல்லாம் கவலைப்படுவதில்லை. அவரவர் குடும்பச் சிக்கல்களில் கருத்து செலுத்தவே நேரம் போதாத பொழுது இதற்கெல்லாம் எங்கே நேரம் இருக்கப் போகிறது? மம்தாவை அனைத்துத் துறையினரும் பின்பற்றி மண்ணின் மொழிகளை மதிக்க வேண்டும்.
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
10/6/2009 2:54:00 AM
ரைல்வே தேர்வுகள் இனி அவரவர் தாய் மொழியில் எழுதலாம் என்ற முடிவு படி தமிழ் மொழியிலும், எழுதலாம் என்பது , தமிழ் மொழிக்கு கிடைத்த ஒரு வாய்ப்பாகும். வாழ்க! தமிழ். அமைச்சர் மம்தா பநர்ஜி அவர்களுக்கு அனைத்து தமிழர்களின் நன்றி ! நல்வாழ்துக்கள்
10/6/2009 12:11:00 AM
excellent
10/5/2009 10:10:00 PM
Congrats! Good move Mamta. Keep it up. Also instruct to use local languages in all the Trains, Flights.
10/5/2009 8:37:00 PM
நல்ல முயற்சி பாராட்டுக்கள் மம்தா அவர்களே. அப்படியே மக்களவையில் அழகிரிக்காக கொஞ்சம் குரல் கொடுங்களேன்!?
10/5/2009 8:31:00 PM
very good
10/5/2009 8:15:00 PM
mamtha done a good job. congrats to mamtha
10/5/2009 7:53:00 PM
WELCOME WELCOME MAM MAMTHA CONGRATULATIONS................
10/5/2009 7:53:00 PM