புதன், 24 பிப்ரவரி, 2010

காலமானார் எழுத்தாளர் சு.​ ஜெயராஜ்



திருநெல்வேலி,​​ பிப்.​ 23: ​ ​ ​ எழுத்தாளர் சு.​ ஜெயராஜ் ​(81),​ பாளையங்கோட்டையில் செவ்வாய்க்கிழமை இறந்தார்.பாளையங்கோட்டை, ​​ குலவணிகர்புரம் அருகே உள்ள வீரமாணிக்கப்புரத்தில் வசித்து வந்த ஜெயராஜ்,​​ ஹீப்ரு மொழியில் இருந்து மோசேயின் "தோரா',​ சாலமனின் "நாளஜ்' ஆகிய நூல்களை தமிழில் மொழி பெயர்த்துள்ளார்.இதில் தோரா,​​ புத்தக வடிவில் வெளிவந்துள்ளது.​ "நாளஜ்' மொழிபெயர்ப்பு பணி முடிந்துவிட்ட நிலையில்,​​ அதை நூல் வடிவில் கொண்டு வருவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.இந்த மொழிபெயர்ப்பு பணியின்போதே பக்கவாத நோயால் ஜெயராஜ் பாதிக்கப்பட்டார்.​ 4 மாதங்களாக நோய்வாய்ப்பட்டு இருந்த அவர்,​​ செவ்வாய்க்கிழமை அதிகாலை இறந்தார்.அவரது உடலுக்கு,​​ திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழக தமிழ்த்துறை முன்னாள் தலைவர் தொ.​ பரமசிவம்,​​ "யாதுமாகி' பதிப்பக உரிமையாளர் லேனா.​ குமார் உள்ளிட்ட தமிழ் ஆர்வலர்கள் அஞ்சலி செலுத்தினர்.​ மாலையில் அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது.

தினமணி நேயர்கள் சார்பில் அவரது குடும்பத்தார்க்கு நம் இரங்கல்கள்!

வருத்தத்துடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
2/24/2010 4:11:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக