சென்னை :"எதிலும் ஏட்டிக்கு போட்டி தான் இன்றைய எதிர்க்கட்சியின் பண் பாடு' என, தமிழக முதல்வர் கருணாநிதி கண்டித்துள்ளார்.
அவரது கேள்வி - பதில் அறிக்கை:தோழர் உ.ரா.வரதராஜன், நம் மத்தியிலே, அவரது தொண் டுள்ளத்தையும், கொள்கை உறுதியையும், மக்கள் பணியையும், அன்பான நட்பு, அரசியல் நாகரிகம் ஆகியவற்றையும் நினைவு அலைகளாக மிதக்க விட்டுவிட்டு, மறைந்து விட்டார்.அவர் மறைவை ஒட்டிய கேள்விக்குறி இன்னும் மறையவில்லை. அவர், மத்தியதர மக்களிடமும், பாட்டாளி வர்க்கத்தினரிடமும் பெற்றிருந்த பேரும், புகழும், கீர்த்தியும் மறையவில்லை; என்றும் மறையாது.
பார்லிமென்ட் கூட்டத் தொடர் துவங்கும் முன்பே, அனைத்துக் கட்சித் தலைவர்களை அழைத்து பிரதமரும், சபாநாயகரும் பேசியிருப்பதும், அமைதியாக மன்றத்தை நடத்திச் செல்ல ஒத்துழைக்க வேண்டுமென வேண்டுகோள் விடுத்திருப்பதும், வரவேற்கத்தக்கவை.பார்லிமென்டை நடக்க விடமாட்டோம் என சில கட்சிகள் சபதம் செய்ததும், அதை நடைமுறையில் நிலைநாட்டுவதும், ஜனநாயகத்தை மலரச் செய்யாது. மக்கள் ஓட்டளித்து அனுப்பியிருப்பது, அவர்கள் வாழும் பகுதிகளுக்கு, தேர்ந்தெடுக்கப்பட்டவர்களால் நல்லது நடக்கும் என்பதற்காகத் தான். இப்போது, பார்லிமென்ட் காட்சிகளைக் காண்போர், ஜனநாயகத்தைப் பற்றிய நம்பிக் கையை இழந்துவிடக் கூடிய சூழ்நிலை உருவாவதை, உறுப்பினர்கள் தவிர்க்க வேண்டும்.
ம.தி.மு.க.,வும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் இணைந்து, யானைமலையை உடைத்து சிற்பக் கலைநகரம் அமைக்கக் கூடாது என்பதை வலியுறுத்தி, மார்ச் 4ம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக அறிக்கை வெளியிட்டுள்ளன.யானைமலையைக் குடையும் எண்ணம் அரசுக்கு இல்லை என்றும், அரசின் சார்பில் அவ்வாறு எந்த அறிவிப்பும் செய்யப்படவில்லை என்றும் தெளிவாக அந்தத் துறையின் அமைச்சர் தங்கம் தென்னரசு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதற்கு பிறகும், இந்தக் கட்சிகள் ஆர்ப்பாட்டம் அறிவித் திருக்கின்றன என்றால், அவர் களுடைய நோக்கத்தை மக்கள் புரிந்து கொள்வார்கள் அல்லவா?யாரோ அறிக்கை விட்டு அழைக்கின்றனர் என்பதற்காக, இன்னமும் பகுத்தறிவைப் பயன் படுத்தத் தவறாத பாண்டியன் போன்றவர்கள், அவர்களோடு சேர்ந்து, "யானைமலை சலோ சலோ' என்பது தான் ஆச்சரியமாக இருக்கிறது.
முல்லைப் பெரியாறு அணை பிரச்னை குறித்து, சுப்ரீம் கோர்ட் டால் அமைக்கப்பட்டுள்ள ஐவர் குழுவில் இணைந்து கருத்து தெரிவிப்பதால் எந்தப் பயனும் விளையப் போவதில்லை என, தி.மு.க., பொதுக்குழுவில் நிறைவேற்றிய தீர்மானத்துக்கு சிலர் கண்டனம் தெரிவித்து, அறிக்கை விடுத்திருக்கின்றனர்.
நான் கேள்விப்பட்ட வரை, எனக்கு வந்த செய்தி வருமாறு:தி.மு.க., பொதுக்குழுவில் முல்லைப் பெரியாறு அணை குறித்து சுப்ரீம் கோர்ட் அமைக்கும் குழுவில், ஐவரில் ஒருவராக தி.மு.க., சார்பிலும் இடம்பெறக் கூடும் என நினைத்து, அதை வன்மையாகக் கண்டித்து ஒரு நீண்ட அறிக்கை தயாரித்து வைத்திருந்தனராம். அதற்கு வாய்ப்பில்லாமல் தி.மு.க., பொதுக்குழுவில் அறிவித்துவிட்டதால், ஏமாற்றமடைந்து, அவசர அவசரமாக, முதலில் தயாரித்து வைத்திருந்த நீண்ட அறிக்கையைத் தூக்கிப் போட்டுவிட்டு, பொதுக்குழு தீர் மானத்தைக் கண்டனம் செய்து, புதிய அறிக்கையை வெளியிட்டார்களாம். இப்படி, எதிலும் ஏட்டிக்கு போட்டி தான் இன்றைய எதிர்க்கட்சியின் பண்பாடு என்பதை பொதுமக்கள் தான் புரிந்து கொள்ள வேண்டும்.இவ்வாறு கருணாநிதி தெரிவித்துள்ளார்.
| |
| வாசகர் கருத்து | |
by R Rameshbabu,Salem,India 24-02-2010 18:08:12 IST |
by k thiru,chennai,India 24-02-2010 16:15:49 IST |
by sun sundar,singapore,India 24-02-2010 16:12:25 IST |
by s இபு:பாரிஸ் ,sarcelles,France 24-02-2010 16:01:39 IST |
If govt. joins as per the court then jaya is oppsoing that.. if govt not joins as per the court then jaya is opposign that also.. One thing ADMK have to understand is they can never come to power in future.. ADMK will be like MDMK |
by k vel,chennia,India 24-02-2010 09:35:04 IST |
by chandra sekaran,chennai,India 24-02-2010 08:53:43 IST |
by குமார்,coddlour,India 24-02-2010 08:41:56 IST |
அம்மாவிடம் பண்ணாதிர்கள் வம்பு மக்கள் அம்மாவிடம் குடுக்க போவது ஆட்சி எனும் கொம்பு அப்பொழ்து உங்கள் அமைச்சர்கள் அனைவரும் அம்மாவுக்கு தூக்க போவது சொம்பு நீங்களும் அம்மாவை பார்த்து பண்ண போவது பம்பு |
by n ராஜ்,tx,United States 24-02-2010 08:39:02 IST |
by A சிங்கை சீனு,Singapore,India 24-02-2010 08:37:07 IST |
by A kilavansethupathi,Chennai,India 24-02-2010 08:23:07 IST |
by m செந்தில் ,tirupur,India 24-02-2010 08:18:35 IST |
வாழ்க தமிழ் வழர்க தமிழ் மக்கள். |
by DR Bashkaran,Bangalore,India 24-02-2010 07:50:19 IST |
by M செல்வா புதுப்பள்ளி,NAGAI,India 24-02-2010 07:41:37 IST |
by C Tholkapiyan,Madurai,India 24-02-2010 06:59:33 IST |
(கழகம்) பாராட்டுகிறது. ஆனால் நீங்கள் ஜெயங்கொண்டம் எம்.எல்.எ ராஜேந்திரன் ரேஞ்சுக்கு பதில் தருகிறீர்கள். vivek காமெடி மாதிரி இருக்கு தயவு செய்து நாட்டம்மை அறிக்கயை மாற்றி எழுது. |
by mokka சாமீ,jawa,Indonesia 24-02-2010 06:31:28 IST |
by K Kuppan,Singapore,Singapore 24-02-2010 05:27:23 IST |
உங்களின் கே.ப அறிகையில் மற்றவர்களை தாக்கவும்..உங்களை நீங்களே ''புகழ்ந்து கொள்ளவுமே'' பயன்படுத்தி உங்களுக்கு ''சாதகமாய்'' ஒண்ணுமே தெரியாத ''அப்பாவியாய்'' உம்மை காட்டிக்கொள்ள நினைப்பது..''பலே'' அரசியல் வாதி என்பதை காட்டுகிறது. இத்தனை ஆண்டுகளாய் இல்லாமால் ஏனையா இந்த ஆனைமலை பிரச்சினை வந்தது..மலையை குடைந்து ''கிரைனிட்'' எடுத்து காசு பண்ண பார்த்தார்கள் உம்ம கட்சிகாரர்கள்.. தமிழ்நாட்டையே சுரண்ட நினைக்கும் உம்ம கட்சிகாரர்களை தடுக்க நினைத்தால் ''பகுத்தறிவை'' பயன்படுத்த தெரியாதவர்கள் என்று ''பச்சையாய்'' பழி சொல்வதில் உமக்கு நீரே நிகர்.. என்னா ஆருடம்..புள்ளரிக்குதையா மஞ்ச துண்டாரே..அம்மா அவர்கள் அறிக்கையை தயாரித்து வைத்திருந்ததால்தான்..நீர் ''சுப்ரீம்''கோர்ட்டின் ஐவர் குழுவில் சேரவில்லையோ..இங்கே இங்கேதான் ''உம்ம பகுத்தறிவு (??) மிக அற்புதமாய் வேலை செய்கிறது.. குள்ளநரி என்று உம்மை சொன்னால் தப்பே கிடையாது..குறுக்கு புத்தி எப்படியெல்லாம் வேலை செய்கிறது பாருங்களேன்.. கேட்போர் எல்லாம் எள்ளிநகை யாடுவர்..அது உம்ம காதில் விழாமல் இருக்க ''யானை''மலையை சுரண்ட நினைக்கும் அஞ்சா நெஞ்சர் கூட்டம் எடுக்கும் ''தினசரி'' பட்டம் வழங்கும் விழாவில் ''அல்ப'' சந்தோஷமாய் என்ஜாய் பண்ணுங்கோ.. |
by p சேகர்,SINGAPORE,Singapore 24-02-2010 03:43:10 IST |
by I. Thiruvalluvan,chennai,India 24-02-2010 03:34:14 IST |
by ரவி,TORONTO,Canada 24-02-2010 03:23:55 IST |
by S செந்தில் ,India,India 24-02-2010 03:11:25 IST |
by Mr ஆஷா,Chennai,India 24-02-2010 03:11:02 IST |
தலைவா இன்னிக்கு தேதி வரைக்கும் நாம ஏட்டிக்கு போட்டி இல்லாம என்னிக்காச்சும் பேசி இருக்கோமா? மற்றவர்களாவது பரவாயில்லை. ஏட்டிக்கு தான் போட்டி பேசுவாங்க. நாம போட்டிக்கே போட்டி பேசுபவர்கள் ஆச்சே. உங்க கேள்வி - பதில் அறிக்கையே அதுக்கு தான தலைவா வெச்சு இருக்கோம்? என்னிக்காச்சும் ஒரு நாள் ஸ்ட்ரெய்ட் பார்வேர்டா பதில் சொல்லி இருக்கோமா? ''சூரியன் கிழக்கே உதிக்கும். சரியா? தவறா?''-ன்னு ஒரு கேள்வி கேட்டா, அதுக்கு கூட அங்க வளைச்சு இங்க வளைச்சு ஒரு பத்து பக்கத்திற்கு பேசும் ஆளுங்க நாம. இவர்கள் பண்ணும் ஏட்டிக்கு போட்டியெல்லாம் பற்றி கவலைப்பட்டு அறிக்கை தராதே தலைவா. நம்ம தான் எல்லாவற்றிலும் முதல். அது போல இதிலும் நாமே முதல். நம்ம லெவெல்ல ஒரு பயலும் டச் பண்ண முடியாது. நீ போய் நல்லா ரெஸ்ட் எடு தலைவா. |
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக