தலைப்பு-புரட்சிசெய்தவர் வள்ளுவர்,கா.பொ.இரத்தினம் : thalaippu_puratchi_cheythavar_valluvar_kaa.po.rathinam

பெரும்புரட்சி செய்தவர் வள்ளுவர் பெருமான்
“கடவுளுடைய வாக்குகள் இவை. முனிவர்களுடைய கூற்றுகள் இவை. இவற்றை ஆராயாமல் ஏற்றுக் கொள்ள வேண்டும். ஆராய்தற்கு முற்பட்டால், பொருத்தமற்றன என்று இகழ்ந்தால் நரகத்தில் அழுந்துவீர்கள்” என்று முழங்கிய நூல்கள் மலிந்த அக்காலத்தில் “உண்மைப் பொருளை ஆராய்ந்து பார்த்து அறிதல் வேண்டும். குருட்டுத் தனமாக எதையும நம்புதல் கூடாது. யார் கூற்றானாலும் ஆராயாமல் ஏற்றுக் கொள்ளப்படாது” என்று பெரும் புரட்சி செய்தவர் வள்ளுவர் பெருமான்.
-தமிழ்மறைக் காவலர் கா.பொ.இரத்தினம்