தலைப்பு-திருக்குறள்போல் நூலிலலை-கா.பொ.இரத்தினம் :thalaippu_thirukkuralpoal_vearunuul_illai_ka.po.rathinam

திருக்குறள் போல் சிறந்தோங்கும் நூல் வேறொன்றுமில்லை
  பல துறைகளிலும் மனிதனை மனிதனாக வாழ – பிறர் உதவியின்றி வாழ –  தனக்கும் பிறருக்கும் பயன்பட – வழிகாட்டிய தனிச்சிறப்பினாலே தமிழ்மறையை (திருக்குறளை) யாவரும் போற்றத் தொடங்கினர். பிற நாட்டு மக்களும் இதன் பெருமையை அறிந்தவுடன் தம்முடைய மொழிகளிலே மொழி பெயர்த்துத் தம் மக்களும் பயனடையச் செய்கின்றனர். மக்கள் யாவரையும் முழு மனிதராக்கும் தமிழ் மறையைப் போன்று சிறந்தோங்கும் இலக்கிய நூல் இவ்வுலகில் வேறொன்று மில்லை.
தமிழ்மறைக் காவலர் கா.பொ. இரத்தினம்