மாணிக்கவாசகம்பள்ளி-மாஓகம்01 : manickavasakampalli_oagam01

மா ஓகையில் கலந்து கொண்ட

மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும்

பாராட்டு விழா 

  தேவகோட்டை: தேவகோட்டை பெருந்தலைவர் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும்  நடுநிலைப் பள்ளி மாணவர்கள் தேவகோட்டையில் கந்தசட்டிக் கழகம் சார்பாக நடைபெற்ற மா ஓகையில்(யோகா) கலந்துகொண்டதற்குப் பாராட்டு விழா பள்ளியில் நடைபெற்றது.
   விழாவில் ஆசிரியை சாந்தி வரவேற்றார். பள்ளித் தலைமை ஆசிரியர் இலெ. சொக்கலிங்கம் தலைமை தாங்கினார். கந்தர்சட்டிக் கழகம் சார்பாக நடைபெற்ற மா ஓகையில்  கலந்து கொண்ட அனைத்து மாணவர்களுக்கும் கழகத்தின் சார்பாகச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. பள்ளியில் இருந்து மாணவர்களை  மா ஓகைக்கு ஒருங்கிணைத்து அழைத்துச் சென்ற ஆசிரியர்கள் கருப்பையா, சிரீதர் ஆகியோருக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன. ஆசிரியை காலவல்லி நன்றி கூறினார்.
மாணிக்கவாசகம்பள்ளி-மாஓகம்02 : manickavasakampalli_oagam02