வியாழன், 2 பிப்ரவரி, 2012

Vaiko accused rajapakshe : விருந்து வைத்து கன்னத்தில் அறைந்துள்ளார் இராசபட்ச: வைகோ குற்றச்சாட்டு

விருந்து வைத்து கன்னத்தில் அறைந்துள்ளார் ராஜபட்ச: வைகோ குற்றச்சாட்டு

First Published : 01 Feb 2012 10:43:21 AM IST

Last Updated : 01 Feb 2012 01:10:01 PM IST

சென்னை, பிப்.1: 13-வது சட்டத் திருத்தத்தை தனது அரசு நிறைவேற்றும் என்று இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணாவிடம் உறுதி அளித்துவிட்டு பின்னர் தாம் அவ்வாறு சொல்லவில்லை என்று கூறுவது விருந்து சோறு போட்டுவிட்டு கன்னத்தில் அறைந்த செயலாகும் என்று மதிமுக பொதுச்செயலர் வைகோ கூறியுள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: இந்திய அரசும், சிங்கள அரசும் நடத்திய மோசடி நாடகம் ஒரு ஏமாற்று வேலை என்பது அம்பலத்திற்கு வந்துவிட்டது. ஜனவரி 17 ஆம் தேதி இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா தனது இலங்கை பயணம் குறித்து தெரிவிக்கையில், ராஜபட்ச அரசு தமிழர்களுக்கு அதிகாரப் பகிர்வை தரும் என்றும், 13 ஆவது அரசியல் சட்ட திருத்தத்தை நிறைவேற்றும் என்றும், ஏன் அதற்கும் ஒருபடி மேலே சென்று அதிகாரங்களை வழங்கும் என்றும் தன்னிடம் உறுதி அளித்திருப்பதாக கூறினார். ஆனால், ஜனவரி 30 ஆம் தேதி இலங்கை அதிபர் ராஜபட்சவிடம் இதுகுறித்து நிருபர்கள் கேட்டதற்கு அவ்விதம் நான் சொல்லவே இல்லை என்றும், இலங்கை நாடாளுமன்றம் தான் இதுபற்றி முடிவு செய்ய வேண்டும் என்றும் கூறியுள்ளார்.இது இந்திய அமைச்சருக்கு விருந்து சோறு போட்டுவிட்டு கன்னத்தில் அறைந்துள்ள செயலாகும். தொடர்ந்து இந்திய அரசு தமிழக மக்களையும், ஈழத் தமிழர்களையும் ஏமாற்றுவதற்காக 13 ஆவது அரசியல் திருத்தத்தை சிங்கள அரசு நிறைவேற்றும் என்று கூறி வருகிறது.2011 ஆம் ஆண்டு மே மாதத்தில் இரு நாட்டு வெளியுறவு அமைச்சர்களும் தில்லியில் வெளியிட்ட அறிக்கையில் 13 ஆவது அரசியல் சட்ட திருத்தம் நிறைவேற்றப்படும் என்று ஒரு பொய்யை வெளியிட்டார்கள்.13 ஆவது திருத்தம் என்பதையே ஈழத்தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. அதில் உண்மையான அதிகாரப் பகிர்வு கிடையாது. 1987 இந்திய-இலங்கை ஒப்பந்தத்தில் வடக்கு-கிழக்கு மாகாணங்கள் இணைப்புக்கு வாக்கெடுப்பு நடத்தப்படும் என்ற அறிவிப்பை, ஒப்பந்தம் கையெழுத்தான பத்து நாட்களுக்குள் அன்றைய இலங்கை அதிபர் ஜெயவர்த்தனா மறுத்தது மட்டும் அன்றி, அதனை எதிர்த்து பிரச்சாரம் செய்வேன் என்றும் கூறினார். அப்பொழுதும் இந்திய அரசு ஊமையாக இருந்தது. பின்னர் 2007 ஆம் ஆண்டில் கொழும்பு உச்சநீதிமன்றத்தில் இணைப்பு கூடாது என்று சிங்கள அரசு தரப்பில் சொல்லப்பட்டதையும் உச்ச நீதிமன்றம் அதனை ஏற்றுக்கொண்டு, வடக்கு-கிழக்கு இணைப்பு கிடையாது என்று தீர்பபளித்ததையும் இந்திய அரசு கண்டுகொள்ளாமல் அப்போதும் வாய்திறக்கவில்லை.தொடர்ந்து ஈழ தமிழர்களுக்கு துரோகம் இழைத்து வரும் காங்கிரஸ் தலைமையிலான இந்திய அரசையும் தமிழ் இனப்படுகொலை நடத்தி, தொடர்ந்து இன அழிப்பு வேலையில் ஈடுபட்டு வரும் சிங்கள அரசையும், இந்த இரு அரசுகள் நடத்தும் கபட நாடகத்தையும், தாய்த் தமிழகத்தில் உள்ளோரும், ஈழத்தமிழர்களும், உலகெங்கும் உள்ள மனித உரிமை ஆர்வலர்களும் நன்றாகவே உணர்ந்துள்ளனர். இனியும் இந்திய அரசின் செய்யும் மாய்மால ஏமாற்று வேலைகள் ஒருபோதும் எடுபடாது.இவ்வாறு வைகோ தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
கருத்துகள்

வைகோ சொல்வதில் நியாயம் உள்ளது.இந்தியாவும் இலங்கையும் ஒன்றை ஒன்று ஏமாற்ற முயலுகின்றன .இதில் பல முறை இலங்கையே வெற்றி பெற்றுள்ளது. ஆக அங்கு உள்ள தமிழர்களை பற்றி யாருக்கும் கவலை இல்லை..மறவன்
By மறவன்
2/1/2012 8:48:00 PM
ராஜீவ் போட்ட ஒப்பந்தத்தை அமல் படுத்தாதற்குஇலங்கையின்மீது மத்திய அரசுக்கு கோபம் வரவேண்டும். ஆனால் மாறாக அந்த கோபம் தமிழர்கள்மீது பாய்ந்து பலர் சாவிற்கு வழிவகுத்தது.
By வரதராஜ் k
2/1/2012 7:34:00 PM
'முத்துக்குமார்' என்ற கௌரவமான பெயரை களங்கப்படுத்திட வேண்டாம். இப்பெயரில் கருத்து தெரிவிப்பவர் தன பெயரை 'கோயபல்ஸ்' என்று வைத்துக் கொள்வது மிகப் பொருத்தமாக இருக்கும்!
By நல்லரசு
2/1/2012 6:28:00 PM
கிருஷ்ணாவிடம் ராஜபக்ஷே சொன்னது உண்மையாக இருக்கலாம். அதையே நிருபர்கள் கேட்ட பொழுது, பாராழுமன்றத்தில் நிறைவேற்றுவதில் பிரச்சனையாக கூடாது என்ற நோக்கில், 'நான் அவ்வாறு கூறவில்லை, பாரழுமன்றம்தான் முடிவு செய்ய வேண்டும்' என்று ராஜ தந்திரத்துடன் ராஜபக்ஷே கூறியிருக்கலாம். முன்பு நடந்த பல்டிகளை போன்று இப்போதும் நடக்கும் என்று நம்பலாகாது. வைக்கோவின் அறிக்கையில் நியாயம் இருந்தாலும், இப்போதைய நிலமைகள் வேறு. "ஒரு நாட்டுக்குள் அனைத்து மக்களும் சமம்" என்று எல்லா நாடுகளும் கூறிவரும் நிலையில், இலங்கை இதிலிருந்து தப்ப முடியாது. வைக்கோவின் அறிக்கை இந்தியா அரசின் முயற்சியை மேலும் துரீதபடுத்தும்.

1.இப்படியெல்லாம் கூப்பாடுப் போட்டுக் கொண்டிருப் பதில் எந்தப் பலனும் தராது. அன்றிலிருந்து இன்றுவரை இலங்கை தமிழர் விவகாரத்தில் மத்திய காங்கிரஸ் அரசு ஏதோ ஒரு உள் நோக்கத்தோடு தலையிட்டிருக்கின்றார்கள். இது ஆண்டவனுக்குத் தான் வெளிச்சம். இலங்கை ஐ நா அமைப்பின் உறுப்பு நாடாம்; ஆதலால், அதன் மீது, ஐ நா வே போர்க் குற்ற நடவடிக்கைகளுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டாம் என்ற சேதியும் இப்போது கொஞ்சம் கேட்கின்றது. இதெல்லாம் நமக்கு தேவையா? கொஞ்சம் மாந்தர் நேயத்தோடு சிந்தனை செய்து, நடுநிலையோடு நின்று, தமிழர்கள் அனைவரும் இனிமேல் செயல்படவேண்டும். மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுங்கள்; இந்தியா வரப் போகின்ற போர்க் குற்ற விசாரணையில், ஐ நாவிற்கு முழு ஒத்துழைப்புக் கொடுக்க வேண்டும். போர்க் குற்றவாளிகள் அனைவரையும் நீதி தேவன் முன் நிறுத்தச் சொல்லுங்கள். இப்படி செய்வதன் மூலம்தான், ஈழத் தமிழர்களின் உண்மை நிலையை உலகச் சமுதாயம் அறியும். அவர்களுக்கு நீதியும் கிடைக்கும். கிடைக்கச் செய்யுங்கள். இல்லை யென்றால் இலங்கையின் அக்கரையில் தமிழ் மண்ணில் 7 கோடி தமிழர்கள் வாழ்வது அர்த்த மில்லாமல் போய்விடும். உலக ரங்கில் நமக்கு என்ன மரிய
By பழனிசாமி T
2/1/2012 2:31:00 PM
2.மீண்டும் இன்னொருக் கோரிக்கை. இலங்கையில் தமிழர் மத்தியில், ஈழத்தில் ஐ நா மூலம் ஒரு பொது வாக்கெடுப்பு நடத்தப்படவேண்டும். தமிழக மக்கள் மத்திய காங்கிரஸ் அரசுக்கு அழுத்தம் கொடுக்கவேண்டும். ஒரு வேலை மத்திய அரசு இது இலங்கையின் உள்நாட்டு விவகாரமென்று கை நழுவலாம்; இனிமேல் தமிழர்கள் காதுகளில் பூ சுற்றும் வேலை வேண்டாம். உள்நாட்டு விவகாரமென்றால், ஏன் அன்று கச்சத் தீவைக் கொடுக்க வேண்டும்; இந்திய இலங்கை ஒப்பந்தம்; அமைதிப் படையென்றப் பேரில், போர்ப் படையை அனுப்பவேண்டும். அன்று, வங்காள தேசத்தைப் பிரித்துக் கொடுத்தவர்கள்; இன்று ஐ நா அவையில் பாலஸ்தீனிய தனி நாட்டிற்க்கு ஆதரவுக் கொடுத்தவர்கள், மேலும் கிழக்கு ஜெருசலம் மாநகரை பிய்த்து, அந்நாட்டின் தலை நகரமாக ஆகவேண்டும் என்றக் கோரிக்கையை அங்கு வலி யுருத்தியவர்கள்; இதையெல்லாம் யார் இவர்களுக்கு கற்றுக் கொடுத்தது. அங்கு ஒரு நீதி; இங்கு ஒரு தலைப் பட்சமான நீதியா? நாம் வெறும் பொது வாகேடுப்பைதான் வலியுறுத்துகின்றோம். வேண்டுமென்றால், பொது வாக்கெடுப்பின் மூலம், இலங்கையரசு தமிழர்களோடு, நியாமாக இவ்விவகாரத்தை தீர்த்துக் கொள்ளட்டும்.
By பழனிசாமி T
2/1/2012 2:26:00 PM
சோனியாவும், ராஜபட்சேவும் தமிழினத்திற்கு எதிராக நடத்துகின்ற கூட்டு யுத்தத்தில் தமிழர்களை ஏமாற்ற அரங்கேற்றும் நாடகங்களில் இதுவும் ஒன்று!
By பொன்மலை ராஜா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக