uraiyaasiriyargal_mu.vai.aravinthan_attai
  கல்லாடர் அல்லது கல்லாடனார் என்ற பெயருடன் பண்டைக்காலத்தில் புலவர் சிலர் இருந்தனர். அவர்களுள் ஒருவர் சொல்லதிகாரத்திற்கு உரை கண்ட கல்லாடர் … சொல்லதிகாரத்திற்கு உரை இயற்றியவர் அனைவர்க்கும் பிற்பட்டவர் கல்லாடர். இவர் உரை, முன்னோர் உரைகளிலிருந்து தமக்குப் பிடித்தவற்றை எல்லாம் ஒழுங்கு சேர்த்து எழுதப்பட்ட உரையாக உள்ளது. … “பெயர் நிலைக்கிளவி” என்னும் சூத்திர உரை நச்சினார்க்கினியர் உரையின் எதிரொலியாகவே உள்ளது. … கல்லாடர் உரையைப் பிரயோக விவேக நூலாசிரியர் எடுத்துக் காட்டுகின்றார் … எனவே, கல்லாடர் நச்சினார்க்கினியர்க்குப் பின்னும் பிரயோக விவேக நூலார்க்கு முன்னும் வாழ்ந்தவர் எனலாம். இவரது காலம் 15,16-ஆம் நூற்றாண்டாகலாம்.
-ஆராய்ச்சியாளர் மு.வை.அரவிந்தன்:
உரையாசிரியர்கள்: பக்கம்.220