ஞாயிறு, 20 ஜனவரி, 2013

ஆயிரம் உரூபாய் நாணயம் இவரிடம் இருக்கிறது


உலகச் சிறப்பு வாய்ந்த தமிழகக் கட்டடக்கலையை விளக்கும் தமிழகப் பெரிய கோயில் இடம் பெற்றுள்ள நாணயத்தில் தமிழுக்கு இடமில்லை. என்று இந்த நிலை மாறுமோ? வருத்தத்துடன் இலக்குவனார் திருவள்ளுவன் /தமிழே விழி! தமிழா விழி! எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!/


ஆயிரம் உரூபாய் நாணயம் இவிம்   இருக்ிறது

மதுரை: மதுரை, தெற்குவாசல் சின்னக்கடை வீதியைச் சேர்ந்தவர் ஏ.செல்லவேல், 57. பழைய அலுமினியம், தாமிரம் போன்ற உலோகங்களை விற்பனை செய்து வருகிறார். நாணயங்கள் சேகரிப்பிலும் ஆர்வம் கொண்டவர். அவ்வப்போது சிறப்பு நாணயங்கள் வெளியிடும்போது, அவற்றை வாங்க மத்திய அரசிடம் விண்ணப்பிப்பார். தஞ்சை பிரகதீஸ்வரர் கோயில் கட்டி, 1000 ஆண்டு நிறைவை முன்னிட்டு, மத்திய அரசு, 1000 ரூபாய் நாணயம் வெளியிட்டது. அதை வாங்க, செல்லவேல் விண்ணப்பித்தார். இந்த நாணயம், தபால் மூலம் நேற்று அவருக்கு கிடைத்தது. ஒருபுறம் நாணய மதிப்பு, அசோகசக்கரம் மறுபுறம் பிரகதீஸ்வரர் கோயில் உள்ளது.

அவர் கூறுகையில், ""இதுபோன்று விசேஷமாக வெளியிடும் நாணயம் மக்கள் புழக்கத்திற்கு வருவதில்லை. இதைப் பெற 4500 ரூபாய் செலவிட வேண்டும். இப்படி, இரு நாணயங்கள் வாங்கியுள்ளேன்,'' என்றார்.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக