சனி, 4 ஜூன், 2011

Thamizh marraige for American bride : தமிழ்மறை முழங்கக் காதலனைக் கரம் பிடித்த அமெரிக்கப் பெண்!


தமிழ் முறையில் திருமணம் செய்து கொண்ட மணமக்கள் வாழ்க! தமிழ் முறையில் திருமணம் செய்வித்த குடும்பத்தினர் வாழ்க! வாழ்க!
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் 

/ தமிழே விழி! தமிழா விழி!
/ எழுத்தைக் காப்போம்!  மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்! 

தமிழ்மறை முழங்க காதலனை கரம் பிடித்த அமெரிக்கப் பெண்!
19:32 AM IST


தமிழ்மறை முழங்க காதலனை திருமணம் செய்து கொண்ட அமெரிக்கப் பெண் ஒக்சானா.
கோவை, ஜூன் 3: கோவையில் தமிழ்மறை முழங்க காதலனை திருமணம் செய்து கொண்டார் அமெரிக்கப் பெண்.கோவை சர்வோதய சங்க முன்னாள் செயலர் வி.பி.தண்டாயுதம் மகன் செந்தில்குமரன், பி.இ.,பட்டதாரி. அமெரிக்காவில் புளோரிடா அட்லாண்டிகா பல்கலைக்கழகத்தில் எம்.எஸ்., மற்றும் எம்பிஏ முடித்து டெக்ஸôஸ் மாநிலத்தில் ஆஸ்டின் நகரில் தனியார் நிறுவனத்தில் முதுநிலை மேலாளராகப் பணியாற்றி வருகிறார். அங்கு, பணியாற்றிய ஆசிரியை ஒக்சானா அவருக்கு அறிமுகமானார். இருவரும் காதலித்தனர்.திருமணம் செய்து கொள்ள விரும்பிய இருவரும், தங்கள் வீட்டின் சம்மதத்தை எதிர்பார்த்து ஓராண்டுக்கும் மேலாகக் காத்திருந்தனர். காந்திய சிந்தனைவாதியான தண்டபாணி, தன் மகன் விருப்பத்துக்கு இடையூறு செய்யாமல், அதே சமயம், இந்து முறைப்படி திருமணம் நடக்க வேண்டும் என்ற தன் விருப்பத்தை தெரிவித்தார். காதலி ஒக்சானாவின் தந்தை ரோமன் ஜாபியாச், தாயார் நாடியா ஜாபியாசிடம் இதுகுறித்து தெரிவிக்கப்பட்டது. அவர்களும் இதற்கு சம்மதம் தெரிவித்தனர். ரோமன் ஜாபியாச், நியூஜெர்சி மாநிலத்தில் மோர்ரிஸ் நகர ரோமன் சபிஹாச் கவுன்சிலராக இருக்கிறார். இவரது மூதாதையர்கள் உக்ரைன் நாட்டைச் சேர்ந்தவர்கள். கடந்த இரு தலைமுறைகளாக அமெரிக்காவில் வசிக்கின்றனர்.இருவீட்டார் சம்மதம் கிடைத்ததும் திருமண ஏற்பாடுகள் தடபுடலாக கோவையில் நடைபெற்றன. இரு வாரங்களுக்கு முன் அமெரிக்காவிலிருந்து பெண் வீட்டார் கோவை வந்தனர். கோவை பத்மாவதியம்மாள் திருமண மண்டபத்தில் வெள்ளிக்கிழமை திருமண விழா நடைபெற்றது. ஒக்சானா, சிவப்பு கைநெசவு கதர் பட்டுச் சேலையுடுத்தி தமிழ் மணப் பெண்ணாக மணமேடையில் காத்திருந்தார். மணமகன் பட்டுவேட்டி, பட்டுச் சட்டை மிளிர வந்து தாலிகட்டத் தயாரானார். மங்கல இசையுடன் தமிழ்மறை ஓத, சக்தி குழுமங்களின் தலைவர் நா.மகாலிங்கம் மங்கல நாண் எடுத்துக் கொடுக்க மணமகளுக்கு அதை அணிவித்தார் மணமகன்.மணமக்கள், தமிழறிஞர்கள் மா.ரா.போ.குருசாமி, இருசுப்பிள்ளை உள்ளிட்டோரிடம் ஆசிபெற்றனர்.தனது திருமணம் குறித்து ஒக்சானா கூறுகையில், இந்து முறைப்படி திருமணம் செய்து கொண்டது மகிழ்ச்சியாக இருக்கிறது. திருமண முறை நேர்த்தியாகவும், கலகலப்பாகவும் அமைந்திருந்தது என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக